பாடம்: 1. இறைச்செய்தி இறங்குதலும் அதற்கான கால அளவும்
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ الْأَنْبِيَاءِ نَبِيٌّ إِلَّا أُعْطِيَ مَا مِثْلهُ آمَنَ عَلَيْهِ الْبَشَرُ وَإِنَّمَا كَانَ الَّذِي أُوتِيتُ وَحْيًا أَوْحَاهُ اللَّهُ إِلَيَّ فَأَرْجُو أَنْ أَكُونَ أَكْثَرَهُمْ تَابِعًا يَوْمَ الْقِيَامَةِ . 423
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒவ்வோர் இறைத்தூதருக்கும் சில அற்புதங்கள் வழங்கப்பட்டே இருந்தன . அவற்றைக் காணும் மக்கள் நம்பித்தான் ஆகவேண்டிய நிலை இருந்தது . எனக்கு வழங்கப்பெற்ற அற்புதமெல்லாம் , அல்லாஹ் எனக்கு அருளிய வேத அறிவிப்பு ( வஹீ ) தான் . ஆகவே , நபிமார்களிலேயே மறுமை நாளில் , பின்பற்றுவோர் அதிகம் உள்ள நபியாக நான் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன் .
(ق) عَنْ أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ اللَّهَ تَعَالَى تَابَعَ عَلَى رَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْوَحْيَ قَبْلَ وَفَاتِهِ حَتَّى تَوَفَّاهُ أَكْثَرَ مَا كَانَ الْوَحْيُ ثُمَّ تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدُ. 424
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , தன் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறக்கும் வரையிலும் அவர்களுக்குத் தொடர்ந்து " வஹீ ` ( வேத அறிவிப்பை ) அருளினான் . அவர்கள் இறப்பதற்குச் சற்று முன்பு அருளப்பெற்ற வேத அறிவிப்பு ( மற்ற காலங்களில் அருளப்பெற்றதைவிட ) அதிகமாக இருந்தது . அதற்குப் பின்னரே , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்தார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَكَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمَكَّةَ ثَلَاثَ عَشْرَةَ وَتُوُفِّيَ وَهُوَ ابْنُ ثَلَاثٍ وَسِتِّينَ . 425
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( நபியாக்கப்பட்ட பின் ) மக்காவில் பதின் மூன்றாண்டுகள் தங்கியிருந்தார்கள் . தம் அறுபத்து மூன்றாம் வயதில் இறப்பெய்தினார்கள் .
(خ) عَنْ عَائِشَةَ وَابْنِ عَبَّاسِ رَضِيَ اللَّهُ عَنْهُمْ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَبِثَ بِمَكَّةَ عَشْرَ سِنِينَ يُنْزَلُ عَلَيْهِ الْقُرْآنُ وَبِالْمَدِينَةِ عَشْرًا . 426
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக்கொண்டிருந்த நிலையில் ( தம் பிறந்தகமான ) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள் ; ( ஹிஜ்ரத்துக்குப் பின் ) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا - ، فِي قَوْلِهِ - تَعَالَى - : إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ قَالَ : أُنْزِلَ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً فِي لَيْلَةِ الْقَدْرِ إِلَى السَّمَاءِ الدُّنْيَا ، وَكَانَ بِمَوْقِعِ النُّجُومِ ، وَكَانَ اللَّهُ يُنَزِّلُهُ عَلَى رَسُولِ اللَّهِ - صَلَى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - بَعْضَهُ فِي أَثَرِ بَعْضٍ ، قَالَ : وَقَالُوا : لَوْلَا نُزِّلَ عَلَيْهِ الْقُرْآنُ جُمْلَةً وَاحِدَةً كَذَلِكَ لِنُثَبِّتَ بِهِ فُؤَادَكَ وَرَتَّلْنَاهُ تَرْتِيلًا . 427
சஈத் பின் ஜுபைர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நிச்சயமாக , நாம் அதை ( குர்ஆனை ) கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் இறக்கினோம் (97: 1) என்று அல்லாஹ் கூறுவது குறித்து இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : கண்ணியமிக்க ( லைலத்துல் கத்ர் ) இரவில் ஒரே மொத்தமாக உலக வானிற்கு அருளப்பட்டது . ( பின்னர் ) அது நட்சத்திரங்கள் விழுமிடத்தில் இருந்தது . அல்லாஹ் அதனைத் தன் தூதருக்கு ( அவ்வப்போது ) கொஞ்சம் கொஞ்சமாக இறக்கினான் . ( நபியே !) எவர்கள் ( உங்களை ) நிராகரிக்கிறார்களோ அவர்கள் , “ இந்த வேதம் முழுவதும் ஒரே தடவையில் இறக்கப்படவேண்டாமா ?`` என்று கூறுகின்றனர் . ( இதனை ) இவ்வாறு நாம் கொஞ்சம் கொஞ்சமாக இறக்கி ( வரிசை முறைப்படி ) ஒழுங்குபடுத்துவதெல்லாம் உங்கள் உள்ளத்தைத் திடப்படுத்துவதற்காகவே ! ( அல்ஃபுர்கான் : 32) என்ற வசனத்தை ஓதிக்காட்டினார்கள் .