கொள்கை
( ق) عَنِ ابْنِ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " بُنِيَ الإِسْلاَمُ عَلَى خَمْسٍ: شَهَادَةِ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَإِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالحَجِّ، وَصَوْمِ رَمَضَانَ 1
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இஸ்லாம் ஐந்து அம்சங்கள்மீது நிறுவப்பட்டுள்ளது . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது . 2. தொழுகையை நிலைநிறுத்துவது . 3. ( கடமையானோர் ) ஸகாத் வழங்குவது . 4. ( இயன்றோர் இறையில்லம் கஅபாவில் ) ஹஜ் செய்வது . 5. ரமளானில் நோன்பு நோற்பது .
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَأَصْبَحْتُ يَوْمًا قَرِيبًا مِنْهُ وَنَحْنُ نَسِيرُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ، وَيُبَاعِدُنِي مِنَ النَّارِ، قَالَ: «لَقَدْ سَأَلْتَ عَظِيمًا، وَإِنَّهُ لَيَسِيرٌ عَلَى مَنْ يَسَّرَهُ اللَّهُ عَلَيْهِ، تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا، وَتُقِيمُ الصَّلَاةَ، وَتُؤْتِي الزَّكَاةَ، وَتَصُومُ رَمَضَانَ، وَتَحُجَّ الْبَيْتَ» ثُمَّ قَالَ: " أَلَا أَدُلُّكَ عَلَى أَبْوَابِ الْخَيْرِ؟ الصَّوْمُ جُنَّةٌ، وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ النَّارَ الْمَاءُ، وَصَلَاةُ الرَّجُلِ مِنْ جَوْفِ اللَّيْلِ، ثُمَّ قَرَأَ {تَتَجَافَى جُنُوبُهُمْ عَنِ الْمَضَاجِعِ} [السجدة: 16] حَتَّى بَلَغَ {جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ} [السجدة: 17] " ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِرَأْسِ الْأَمْرِ، وَعَمُودِهِ، وَذُرْوَةِ سَنَامِهِ؟ الْجِهَادُ» ثُمَّ قَالَ: «أَلَا أُخْبِرُكَ بِمِلَاكِ ذَلِكَ كُلِّهِ؟» قُلْتُ: بَلَى، فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ: «تَكُفُّ عَلَيْكَ هَذَا» قُلْتُ: يَا نَبِيَّ اللَّهِ وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ قَالَ: «ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ وَهَلْ يُكِبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ فِي النَّارِ، إِلَّا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟» 2
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ( தபூக் போர் ) பயணத்தில் இருந்தேன் . ஒரு நாள் காலைப்பொழுதில் நாங்கள் பயணம் மேற்கொண்டிருந்தபோது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் இருந்தேன் . அப்போது நான் ( நபியவர்களிடம் ) " அல்லாஹ்வின் தூதரே ! என்னைச் சொர்க்கத்தில் நுழையச் செய்து , நரகத்திலிருந்து அப்புறப்படுத்தும் நற்செயல் ஒன்றை என்னிடம் தெரிவியுங்கள் !" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " நீ ஒரு பெரிய விஷயத்தைப் பற்றி என்னிடம் கேட்டிருக்கிறாய் . அது அல்லாஹ் எளிதாக்கி வைத்தவருக்கு நிச்சயமாக எளிதானது ஆகும் . ( அது யாதெனில் ,) நீ அல்லாஹ்வையே வழிபட வேண்டும் ; அவனுக்கு எதையும் இணையாக ஆக்கக் கூடாது ; தொழுகையைக் கடைப்பிடிக்க வேண்டும் ; ( ரமளானில் ) நோன்பு நோற்க வேண்டும் ; ( இயன்றால் ) இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்யவேண்டும் " என்று கூறிவிட்டு , " நன்மைகளின் வாசல்களைப் பற்றி உனக்கு அறிவிக்கட்டுமா ?" என்று கூறிவிட்டு , நோன்பு ( பாவங்களிலிருந்து காக்கின்ற ) கேடயமாகும் . தண்ணீர் நெருப்பை அணைப்பது போன்று தர்மம் செய்தல் குற்றங்களை அணைத்துவிடும் . ஒரு மனிதர் நடுநிசி நேரத்தில் ( இரவுத் தொழுகை ) தொழுவதும் ( இவ்வாறு குற்றங்களை அணைத்துவிடக்கூடியதுதான் )" என்று கூறினார்கள் . பிறகு " அச்சத்துடனும் எதிர்பார்ப்புடனும் தம் இறைவனைப் பிரார்த்தனை செய்ய அவர்களின் விலாப்புறங்கள் படுக்கையிலிருந்து விலகும் " ( எனும் 32:16-17) ஆகிய வசனங்களை முழுமையாக ஓதிக் காட்டினார்கள் . பிறகு " உனக்கு நான் அனைத்துச் செயல்களுக்கும் அடித்தளமாகவும் தூணாகவும் திமிலாகவும் ( உயர்ந்த பகுதியாகவும் ) திகழக்கூடியவற்றைப் பற்றிக் கூறட்டுமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( கூறுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று சொன்னேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அனைத்துச் செயல்களுக்கும் தலையாயது இஸ்லாம் ஆகும் . இஸ்லாத்தின் தூண் ( போன்றது ) தொழுகையாகும் . இஸ்லாத்தின் திமிலாகத் திகழ்வது அறப்போராகும் " என்று கூறினார்கள் . பிறகு " ஒட்டுமொத்தமாக இவை அனைத்தையும் உறுதிப்படுத்தக்கூடிய அடிப்படையை உனக்கு நான் அறிவிக்க வேண்டாமா ?" என்று கேட்டார்கள் . நான் " ஆம் ( அறிவியுங்கள் ), அல்லாஹ்வின் தூதரே !" என்று கூறினேன் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது நாவைப் பிடித்துக்கொண்டு , " இதை ( அவசியமற்ற பேச்சுகளிலிருந்து ) தடுத்து ( பாதுகாத்து ) க்கொள் !" என்று கூறினார்கள் . அப்போது நான் , " அல்லாஹ்வின் நபியே ! நாங்கள் பேசுகின்ற பேச்சுகளால் தண்டிக்கப்படுவோமா ?" என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " முஆதே ! உன்னை உன் தாய் இழக்கட்டும் ! மக்களை அவர்களது நாவுகள் அறுவடை செய்கின்றவற்றைத் தவிர வேறெதுவும் அவர்களது முகங்கள் மீது அல்லது மூக்குகள் மீது ( முகங்குப்புற ) விழச் செய்கின்றனவா ?" என்று மறுவினாத் தொடுத்தார்கள் .
عَنْ أَبِي أُمَامَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَأَلَهُ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِيمَانُ؟ قَالَ: «إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ» . فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ مَا الْإِثْمُ؟ قَالَ: «إِذَا حَاكَ فِي صَدْرِكَ شَيْءٌ فَدَعْهُ» 3
அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு மனிதர் , “ ஈமான் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “ நீ செய்கின்ற நன்மை உன்னை மகிழ்வித்து , நீ செய்கின்ற தீமை உன்னைத் துன்புறுத்தினால் நீ முஃமின் ( இறைநம்பிக்கையாளன் ) ஆவாய் ” என்று பதிலளித்தார்கள் . “ பாவம் என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்டார் . “( எதையேனும் ஒன்றைச் செய்கின்றபோது ) உன் உள்ளத்தில் ஏதேனும் நெருடல் ஏற்பட்டால் ( அதுதான் பாவம் எனவே ) அதை விட்டுவிடு ” என்றார்கள் .
( ق) عَنْ عُمَرَ بْنَ الخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَخْطُبُ قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «يَا أَيُّهَا النَّاسُ، إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّةِ، وَإِنَّمَا لِامْرِئٍ مَا نَوَى، فَمَنْ كَانَتْ هِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، فَهِجْرَتُهُ إِلَى اللَّهِ وَرَسُولِهِ، وَمَنْ هَاجَرَ إِلَى دُنْيَا يُصِيبُهَا [ص:23] أَوِ امْرَأَةٍ يَتَزَوَّجُهَا، فَهِجْرَتُهُ إِلَى مَا هَاجَرَ إِلَيْهِ» 4
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எண்ணத்தைப் பொருத்தே செயல்கள் அமைகின்றன . ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதுதான் கிடைக்கிறது . எனவே , எவரது ஹிஜ்ரத் ( நாடு துறத்தல் ) அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நோக்கமாகக் கொண்டு அமைகிறதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் அவ்வாறே ) அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் அமையும் . எவரது ஹிஜ்ரத் அவர் அடைய விரும்பும் உலக ( ஆதாய ) த்தை , அல்லது அவர் மணக்க விரும்பும் பெண்ணை நோக்கமாகக் கொண்டுள்ளதோ , அவரது ஹிஜ்ரத் ( தின் பலனும் ) அதுவாகத்தான் இருக்கும் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ 5
சுலைமான் பின் யஸார் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( ஒரு முறை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் மக்கள் ( கூடி , அவை ) கலைந்தபோது , சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர் , “ பெரியவரே ! அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , " ஆம் ( தெரிவிக்கிறேன் ). அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூறியதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள் : மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில் , இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார் . அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது , அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) உனக்காக நான் அறப்போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன் `` என்று பதிலளிப்பார் . இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( நீ எனக்காக உயிர்த்தியாகம் செய்யவில்லை .) மாறாக , " மாவீரன் ` என்று ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்குக் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான ( மார்க்க அறிஞர் ) ஒருவர் ( இறைவனிடம் ) கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்து கொள்வார் . பிறகு “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அவர் , “( இறைவா !) கல்வியை நானும் கற்று , பிறருக்கும் அதை நான் கற்பித்தேன் . உனக்காகவே குர்ஆனை ஓதினேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் . ( எனக்காக நீ கல்வியைக் கற்கவுமில்லை ; கற்பிக்கவுமில்லை .) " அறிஞர் ` என்று சொல்லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய் ; " குர்ஆன் அறிஞர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய் . அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது ( உனது நோக்கம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் . பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார் . அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான் . அவற்றை அவர் அறிந்துகொள்வார் . பிறகு , “ அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய் ?`` என்று இறைவன் கேட்பான் . அதற்கு அவர் , “ நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ , அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன் `` என்று பதிலளிப்பார் . அதற்கு இறைவன் , “( இல்லை ) நீ பொய் சொல்கிறாய் " இவர் ஒரு புரவலர் ` என ( மக்கள் மத்தியில் ) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு ( செலவு ) செய்தாய் . ( உன் எண்ணப்படி ) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது . ( உனது எண்ணம் நிறைவேறிவிட்டது )`` என்று கூறிவிடுவான் . பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு , அவர் நரகத்தில் எறியப்படுவார் .
عَنْ أَبِي كَبْشَةَ الْأَنْمَارِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَثَلُ هَذِهِ الْأُمَّةِ، كَمَثَلِ أَرْبَعَةِ نَفَرٍ، رَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا وَعِلْمًا، فَهُوَ يَعْمَلُ بِعِلْمِهِ فِي مَالِهِ، يُنْفِقُهُ فِي حَقِّهِ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ عِلْمًا، وَلَمْ يُؤْتِهِ مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " فَهُمَا فِي الْأَجْرِ سَوَاءٌ، وَرَجُلٌ آتَاهُ اللَّهُ مَالًا، وَلَمْ يُؤْتِهِ عِلْمًا، فَهُوَ يَخْبِطُ فِي مَالِهِ يُنْفِقُهُ فِي غَيْرِ حَقِّهِ، وَرَجُلٌ لَمْ يُؤْتِهِ اللَّهُ عِلْمًا، وَلَا مَالًا، فَهُوَ يَقُولُ: لَوْ كَانَ لِي مِثْلُ هَذَا، عَمِلْتُ فِيهِ مِثْلَ الَّذِي يَعْمَلُ "، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «فَهُمَا فِي الْوِزْرِ سَوَاءٌ» 6
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூகப்ஜா அல்அன்மாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : நான் அறுதியிட்டு மூன்று விஜயங்களை உங்களுக்குச் சொல்கிறேன் . மேலும் ( மற்றொரு ) செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் . ( அந்த மூன்று விஜயங்கள் வருமாறு ) 1. தானம் செய்வதால் ஓர் அடியாரின் செல்வம் குறைந்துவிடுவதில்லை . 2. ஓர் அடியார் அநீதிக்குள்ளாகும்போது அதைப் பொறுமையுடன் சகித்துக்கொள்வாரானால் அவருக்கு அல்லாஹ் கண்ணியத்தை அதிகமாக்காமல் இருப்பதில்லை . 3. ஓர் அடியான் யாசகத்தின் வாசலைத் திறந்தால் அவனுக்கு அல்லாஹ் வறுமையின் வாசலைத் திறக்காமல் இருப்பதில்லை . ( இவ்வாறுதான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லது இதைப் போன்று வேறொரு வார்த்தையைக் கூறினார்கள் .) மேலும் மற்றொரு செய்தியையும் உங்களுக்கு நான் தெரிவிப்பேன் . அதை நீங்கள் நினைவிலிருத்திக் கொள்ளுங்கள் என்று நான் கூறினேன் அல்லவா ? அந்தச் செய்தி வருமாறு : இந்தச் சமுதாயத்தின் உதாரணம் நான்கு நபர்களின் உதாரணத்தைப் போன்று உள்ளது . 1. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தையும் கல்வியையும் ( ஒருசேரக் ) கொடுத்தான் . அவர் தம் கல்விக்கேற்பத் தம் செல்வத்தைச் செலவு செய்கிறார் . அதை அதற்குரிய முறையில் செலவிடுகிறார் . 2. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியைக் கொடுத்தான் . அவருக்குச் செல்வத்தைக் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவருக்கு இருப்பதைப் போன்று எனக்கு இருந்திருந்தால் , அதை இவர் செலவு செய்வதைப் போன்றே நான் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இருவரும் சமமான கூலியைப் பெறுபவர்கள் ஆவர் 3. ஒருவருக்கு அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தான் . கல்வியைக் கொடுக்கவில்லை . அவர் தம் செல்வத்தைக் கண்டபடி செலவு செய்கிறார் . தேவையில்லாதவற்றில் அதைச் செலவிடுகிறார் . 4. ஒருவருக்கு அல்லாஹ் கல்வியையும் செல்வத்தையும் கொடுக்கவில்லை . அப்போது அவர் , இவரிடம் இருப்பதைப் போன்று எனக்கு வழங்கப்பட்டிருந்தால் இவர் செய்வதைப் போன்று நானும் செய்திருப்பேன் என்று கூறுகிறார் . ( எனவே ) இவ்விருவரும் பாவத்தில் சமமானவர்கள் ஆவர் .
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: أَرَأَيْتَ رَجُلًا غَزَا يَلْتَمِسُ الْأَجْرَ وَالذِّكْرَ، مَالَهُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» فَأَعَادَهَا ثَلَاثَ مَرَّاتٍ، يَقُولُ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا شَيْءَ لَهُ» ثُمَّ قَالَ: «إِنَّ اللَّهَ لَا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلَّا مَا كَانَ لَهُ خَالِصًا، وَابْتُغِيَ بِهِ وَجْهُهُ» 7
அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , நன்மையையும் புகழையும் எதிர்பார்த்துப் போராடிய மனிதருக்கு என்ன ( நன்மை அல்லாஹ்விடம் ) உண்டு ? என்று வினவினார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறினார்கள் . அவர் அதை மூன்று முறை திரும்பத் திரும்பக் கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவருக்கு ( அல்லாஹ்விடம் ) ஒன்றும் இல்லை ” எனக் கூறிவிட்டு , பிறகு “ திண்ணமாக அல்லாஹ் , அவனுடைய திருப்தியை நாடி அவனுக்காகவே செய்யப்பட்ட ( நல்ல ) செயல்பாட்டைத்தான் ஏற்றுக்கொள்வான் ” என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا يُبْعَثُ النَّاسُ عَلَى نِيَّاتِهِمْ» 8
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்கள் அவர்கள் தம் எண்ணப்படியே ( மறுமையில் ) எழுப்பப்படுவார்கள் .
عَنِ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ، رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:" إِنَّ اللَّهَ تَعَالَى يَقُولُ: أَنَا خَيْر شَرِيكٍ، مَنْ أَشْرَكَ بِي فَهُوَ لِشَرِيكِي، يَأَيُّهَا النَّاسُ أَخْلِصُوا أَعْمَالَكُمْ للَّهِ، فَإِنَّ اللَّهَ لا يَقْبَلُ مِنَ الْعَمَلِ إِلا مَا خَلُصَ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَالرَّحِمِ، فَإِنَّهُ لِلرَّحِمِ وَلَيْسَ للَّهِ مِنْهُ شَيْءٌ، وَلا تَقُولُوا: هَذَا للَّهِ وَلِوُجُوهِكُمْ، فَإِنَّمَا هُوَ لِوُجُوهِكُمْ، وَلَيْسَ للَّهِ فِيهِ شَيْءٌ " 9
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ளஹ்ஹாக் பின் கைஸ் அல்ஃபிஹ்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ் சொல்கிறான் : நானே சிறந்த கூட்டாளி ( தோழன் ). யார் என்னுடன் ஒரு கூட்டாளியைச் சேர்த்தானோ , அவன் என்னுடைய கூட்டாளிக்கு உரியவனாவான் . ( எனக்கு உரியவன் அன்று ). “ மக்களே ! மகத்துவமும் மாண்பும் உடைய அல்லாஹ்வுக்காக உங்களுடைய செயல்களை ஆக்கிக்கொள்ளுங்கள் . ஏனென்றால் திண்ணமாக அல்லாஹ் , அவனுக்காகவே செய்யப்பட்டதைத் தவிர ( மற்றவற்றை ) ஏற்றுக்கொள்ள மாட்டான் . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உறவுக்காகவும் ’ என்று சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உறவுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை . ‘ இது அல்லாஹ்வுக்காகவும் உங்களின் முகங்களுக்காகவும் ’ என்றும் சொல்லாதீர்கள் . ஏனென்றால் அது உங்களின் முகங்களுக்காக ( ச் செய்யப்பட்டதாக ) த்தான் ஆகும் . அதிலிருந்து அல்லாஹ்வுக்காக எதுவும் இல்லை .
( م ) عَنِ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ، قَالَ: حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ، وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ، يَبَكِي طَوِيلًا، وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ، فَجَعَلَ ابْنُهُ يَقُولُ: يَا أَبَتَاهُ، أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا؟ قَالَ: فَأَقْبَلَ بِوَجْهِهِ، فَقَالَ: إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللهِ، إِنِّي قَدْ كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ، لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي، وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدِ اسْتَمْكَنْتُ مِنْهُ، فَقَتَلْتُهُ، فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ، فَلَمَّا جَعَلَ اللهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقُلْتُ: ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ، فَبَسَطَ يَمِينَهُ، قَالَ: فَقَبَضْتُ يَدِي، قَالَ: «مَا لَكَ يَا عَمْرُو؟» قَالَ: قُلْتُ: أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ، قَالَ: «تَشْتَرِطُ بِمَاذَا؟» قُلْتُ: أَنْ يُغْفَرَ لِي، 10
அப்துர் ரஹ்மான் பின் ஜுமாஸா அல்மஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இறப்பின் நெருக்கத்தில் இருந்த அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் நாங்கள் சென்றோம் . அவர்கள் நீண்ட நேரம் அழுதார்கள் . பிறகு அவர்கள் சுவரை நோக்கித் தமது முகத்தைத் திருப்பிக்கொண்டார்கள் . அப்போது அவர்களுடைய புதல்வர் , “ அருமைத் தந்தையே ! தங்களுக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இன்னின்ன நற்செய்திகளைக் கூறவில்லையா ?`` என்று கேட்டார் . உடனே அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு தமது முகத்தை ( தம் புதல்வரை நோக்கி ) த் திருப்பி ( பின்வருமாறு ) கூறினார்கள் : " அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் ` என்றும் உறுதி கூறியதே நமது சேமிப்புகளில் சிறந்தது ஆகும் . நான் ( என் வாழ்நாளில் ) மூன்று கட்டங்களைக் கடந்து வந்திருக்கிறேன் . ( முதலாவது கட்டத்தில் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது கடுமையான வெறுப்புக் கொண்டவர் என்னைவிட வேறெவரும் இருக்கவில்லை என்றே நான் கருதினேன் . என்னால் இயன்றால் அவர்களைக் கொன்றுவிட வேண்டும் என்பதே எனக்கு மிகவும் விருப்பமான விஷயமாக இருந்தது . அந்தக் காலகட்டத்தில் மட்டும் நான் இறந்துவிட்டிருந்தால் நான் நரகவாசிகளில் ஒருவனாக ஆகியிருப்பேன் . ( இரண்டாவது கட்டத்தில் ) அல்லாஹ் என் உள்ளத்தில் இஸ்லாத்தை ஊட்டினான் . அப்போது நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்று “ உங்கள் வலக் கரத்தை நீட்டுங்கள் . நான் உங்களிடம் உறுதிப் பிரமாணம் ( பைஅத் ) அளிக்கிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது வலக்கரத்தை நீட்டினார்கள் . உடனே நான் எனது கையை இழுத்துக்கொண்டேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அம்ரே ! உமக்கு என்ன ஆயிற்று ?`` என்று கேட்டார்கள் . நான் , “ சில நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன் `` என்று கூறினேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்ன நிபந்தனை விதிக்கப்போகிறீர் ?`` என்று கேட்டார்கள் . “ என் ( முந்தைய ) பாவங்கள் மன்னிக்கப்பட வேண்டும் `` என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முந்தைய பாவங்களை இஸ்லாம் அழித்துவிடும் ; ஹிஜ்ரத்தும் (- மார்க்கத்திற்காக நாடுதுறத்தல் ) முந்தைய பாவங்களை அழித்துவிடும் ; ஹஜ்ஜும் முந்தைய பாவங்களை அழித்துவிடும் என்று உமக்குத் தெரியாதா ?`` என்று கேட்டார்கள் . ( பிறகு நான் இஸ்லாத்தைத் தழுவினேன் .) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைவிட மிகவும் பிரியமானவர் வேறெவரும் எனக்கு இருக்கவில்லை ; எனது பார்வைக்கு அவர்களைவிட மிகவும் கண்ணியமானவர் வேறெவரும் இருக்கவில்லை . அப்போது அவர்கள்மீது நான் வைத்திருந்த மரியாதையால் என் கண்கள் நிரம்ப அவர்களைப் பார்க்கக்கூட என்னால் முடியவில்லை . அவர்களை வர்ணித்துக் கூறும்படி நான் கேட்டுக்கொள்ளப்பட்டால் அதற்கும் என்னால் இயலாது . ஏனெனில் , நான் அவர்கள்மீது வைத்திருந்த மரியாதையின் காரணத்தால் என் கண்கள் நிரம்ப அவர்களை நான் பார்த்திருக்கவில்லை . அந்த நிலையில் நான் இறந்திருந்தால் சொர்க்கவாசிகளுள் ஒருவனாக ஆகியிருப்பேன் என்றே எதிர் பார்க்கிறேன் . பிறகு ( மூன்றாவது கட்டத்தில் ) பல்வேறு பொறுப்புகளை நாம் வகித்தோம் . அவற்றில் எனது நிலையென்ன என்பது எனக்குத் தெரியாது . எனவே , நான் இறந்துவிட்டால் ஒப்பாரி வைப்பவரோ நெருப்போ என் சடலத்தோடு இருக்கலாகாது . என்னை ( க் குழிக்குள் வைத்து ) நீங்கள் அடக்கம் செய்யும்போது என்மீது மண்ணைத் தள்ளுங்கள் . பிறகு ஓர் ஒட்டகத்தை அறுத்து அதன் இறைச்சியைப் பங்கிடும் நேரம் அளவுக்கு நீங்கள் அடக்கத்தலத்தைச் சுற்றி நில்லுங்கள் . உங்களால் நான் ஆசுவாசமடைவேன் ; என் இறைவனின் தூதர்க ( ளான வானவர்க ) ளிடம் நான் என்ன பதிலளிப்பது என்பதையும் கண்டுகொள்வேன் .
عَنْ أَنَسٍ، قَالَ: جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، مَا تَرَكْتُ حَاجَةً، وَلا دَاجَةً إِلا قَدْ أَتَيْتُ، قَالَ: " أَلَيْسَ تَشْهَدُ أَنْ لا إِلَهَ إِلا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولَ اللَّهِ، ثَلاث مَرَّاتٍ؟ "، قَالَ: نَعَمْ، قَالَ: " فَإِنَّ ذَلِكَ يَأْتِي عَلَى ذَلِكَ 11
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , அல்லாஹ்வின் தூதரே ! நான் சிறிய , பெரிய எந்தப் பாவத்தையும் செய்யாமல் விடவில்லை . ( என்னுடைய பாவங்கள் மன்னிக்கப்படுமா ) என்று கேட்டார் . “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்றும் நீ சாட்சி சொல்லவில்லையா ?” என்று கேட்டார்கள் . இவ்வாறு மூன்று முறை கேட்டார்கள் . அதற்கு அவர் , ஆம் ( நான் சாட்சி சொல்லியுள்ளேன் ) என்று கூறினார் . ( அப்படியானால் ) அது அவ்வாறே ( பாவங்களை அழித்துவிட்டு ) வரும் .
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ، وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ» 12
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : முஹம்மதின் உயிர் யாருடைய கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! இந்த ( இறுதி ) ச் சமுதாயத்திலுள்ள யூதரோ கிறிஸ்தவரோ யாரேனும் ஒருவர் என் ( மார்க்கத்தி ) னைப் பற்றிக் கேள்விப்பட்ட பிறகும்கூட நான் கொண்டுவந்த ( மார்க்கத் ) தை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால் , அவர் நரகவாசிகளுள் ஒருவராகவே இருப்பார் .
عَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قِيلَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَيُّ الْأَدْيَانِ أَحَبُّ إِلَى اللَّهِ؟ قَالَ: «الْحَنِيفِيَّةُ السَّمْحَةُ» 13
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மார்க்கங்களில் எது அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்கப்பட்டது . அதற்கவர்கள் , “ அசத்தியத்தை விட்டுச் சத்தியத்தில் நிலைத்து நிற்கின்ற இலகுவான ( இஸ்லாமிய ) மார்க்கமே ” எனக் கூறினார்கள் .
( ق) عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " أَتَانِي آتٍ مِنْ رَبِّي، فَأَخْبَرَنِي - أَوْ قَالَ: بَشَّرَنِي - أَنَّهُ: مَنْ مَاتَ مِنْ أُمَّتِي لاَ يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا دَخَلَ الجَنَّةَ " قُلْتُ: وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ؟ قَالَ: «وَإِنْ زَنَى وَإِنْ سَرَقَ» 14
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் இரட்சகனிடமிருந்து ஒரு ( வான ) வர் என்னிடம் வந்து ஒரு சுபச் செய்தியை அறிவித்தார் . அதாவது " என்னுடைய சமுதாயத்தில் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் இறந்துவிடுகின்றாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் " என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் , “ அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ ஈடுபட்டிருந்தாலுமா ?`` எனக் கேட்டேன் . அவர் விபச்சாரத்திலோ திருட்டிலோ - ஈடுபட்டிருந்தாலும்தான் `` என்று பதிலளித்தார்கள் .
( ق) حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمُعاذٌ رَدِيفُهُ عَلَى الرَّحْلِ، قَالَ: «يَا مُعَاذَ بْنَ جَبَلٍ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «يَا مُعَاذُ» ، قَالَ: لَبَّيْكَ يَا رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ ثَلاَثًا، قَالَ: «مَا مِنْ أَحَدٍ يَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، صِدْقًا مِنْ قَلْبِهِ، إِلَّا حَرَّمَهُ اللَّهُ عَلَى النَّارِ» ، قَالَ يَا رَسُولَ اللَّهِ: أَفَلاَ أُخْبِرُ بِهِ النَّاسَ فَيَسْتَبْشِرُوا؟ قَالَ: «إِذًا يَتَّكِلُوا» وَأَخْبَرَ بِهَا مُعَاذٌ عِنْدَ مَوْتِهِ تَأَثُّمًا 15
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு பயணத்தில் வாகனமொன்றில் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் முஆத் ரளியல்லாஹு அன்ஹு அமர்ந்திருந்தபோது , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ முஆத் பின் ஜபலே !`` என்று அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என்று முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . “ முஆதே !` என மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் ( கூறுங்கள் )`` என மீண்டும் முஆத் ரளியல்லாஹு அன்ஹு பதிலளித்தார்கள் . இவ்வாறு மூன்று முறை ( அழைப்பும் பதிலும் ) நடந்தது . பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும் , முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதராவார்கள் என்றும் உளப்பூர்வமாக உறுதிகூறும் எவருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடைசெய்துவிட்டான் `` என்று கூறினார்கள் . உடனே முஆத் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ? ( இதைக் கேட்டு ) அவர்கள் புளகாங்கிதம் அடைவார்களே !`` என்று கேட்டார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) இவ்வாறு நீர் அறிவித்தால் ( அதைக் கேட்டுவிட்டு ) அவர்கள் ( இது மட்டும் போதுமே என்று நல்லறங்களில் ஈடுபடாமல் ) அசட்டையாக இருந்து விடுவார்கள் `` என்று கூறினார்கள் . ( கல்வியை மறைத்த ) குற்றத்திலிருந்து தப்புவதற்காகத் தமது மரணத் தருவாயில் இந்த ஹதீஸை முஆத் ரளியல்லாஹு அன்ஹு ( மக்களுக்கு ) அறிவித்தார்கள் .
( ق) عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: بَيْنَا أَنَا رَدِيفُ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ إِلَّا أَخِرَةُ الرَّحْلِ، فَقَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، ثُمَّ سَارَ سَاعَةً ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، قَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ اللَّهِ عَلَى عِبَادِهِ أَنْ يَعْبُدُوهُ، وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا» ثُمَّ سَارَ سَاعَةً، ثُمَّ قَالَ: «يَا مُعَاذُ بْنَ جَبَلٍ» قُلْتُ: لَبَّيْكَ رَسُولَ اللَّهِ وَسَعْدَيْكَ، فَقَالَ: «هَلْ تَدْرِي مَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ إِذَا فَعَلُوهُ» قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَهُمْ» 16
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் ) இருந்துகொண்டிருந்தேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ( ஒட்டகச் ) சேணத்துடன் இணைந்த சாய்வுக் கட்டைதான் இருந்தது . ( அவ்வளவு நெருக்கத்தில் வந்து கொண்டிருந்தேன் .) அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஆதே !`` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . பிறகு சிறிது தூரம் சென்றபின் , “ முஆதே `` என்று ( மீண்டும் ) அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . சிறிது தூரம் சென்றபின் ( மீண்டும் ) “ முஆதே !` என்றார்கள் . ( அப்போதும் ) நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கூறுங்கள் )`` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள்மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று பதிலளித்தேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்கள் மீது அல்லாஹ்வுக்குள்ள உரிமை என்னவென்றால் , அவர்கள் அவனையே வணங்கிட வேண்டும் . அவனுக்கு எதனையும் ( எவரையும் ) இணைகற்பிக்கக் கூடாது என்பதாகும் `` என்றார்கள் . இன்னும் சிறிது தூரம் சென்றபின் “ முஆத் பின் ஜபலே `` என்று அழைத்தார்கள் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( சொல்லுங்கள் )`` என்று பதில் கூறினேன் . அவர்கள் , “ அவ்வாறு ( அல்லாஹ்வையே வணங்கி அவனுக்கு இணை வைக்காமல் ) செயல்பட்டுவரும் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமை என்ன என்பதை நீர் அறிவீரா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்றேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இத்தகைய ) மக்களை அவன் ( மறுமையில் ) வேதனைப்படுத்தாமல் இருப்பதுதான் மக்களுக்கு அல்லாஹ்வின் மீதுள்ள உரிமையாகும் `` என்று சொன்னார்கள் .
(م ) حَدَّثَنَا جَابِرُ بْنُ عَبْدِ اللهِ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللهَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ لَقِيَهُ يُشْرِكُ بِهِ دَخَلَ النَّارَ» 17
ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , "( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு விஷயங்கள் என்னென்ன ?`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் ; யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்று பதிலளித்தார்கள் .
عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «مَنْ لَقِيَ اللَّهَ، وَهُوَ لَا يُشْرِكُ بِهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَلَمْ تَضُرَّهُ مَعَهُ خَطِيئَةٌ، كَمَا لَوْ لَقِيَهُ وَهُوَ مُشْرِكٌ بِهِ دَخَلَ النَّارَ، وَلَمْ تَنْفَعْهُ مَعَهُ حَسَنَةٌ» 18
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ அவரோடு உள்ள பாவங்கள் அவருக்கு எந்த இடையூறும் ஏற்படுத்தாது . யார் அவனுக்கு இணைவைத்த நிலையில் இறந்துவிடுகின்றாரோ அவரோடு உள்ள நன்மைகள் அவருக்கு எந்தப் பயனையும் தராது ”. என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صلّى الله عليه وسلّم يَقُولُ: (مَنْ لَقِيَ اللهَ لاَ يُشْرِكُ بِهِ شَيْئاً، يُصَلِّي الخَمْسَ، وَيَصُومُ رَمَضَانَ، غُفِرَ لَهُ) ، قُلْتُ: أَفَلاَ أُبَشِّرُهُمْ يَا رَسُولَ اللهِ؟ قَالَ: (دَعْهُمْ يَعْمَلُوا). 19
முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணையாக்காமல் அவனைச் சந்திக்கின்றாரோ , ஐவேளைத் தொழுகையை நிறைவேற்றி , ரமளானில் நோன்பு நோற்கின்றாரோ அவருக்கு ( அவருடைய பாவங்கள் ) மன்னிக்கப்படுகின்றன ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! இந்தச் செய்தியை நான் மக்களுக்கு அறிவித்துவிடட்டுமா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( இல்லை ; வேண்டாம் ) அவர்களை விட்டுவிடுவீராக . ( இது தெரியாமல் இருந்தால்தான் ) அவர்கள் நல்லறங்கள் செய்வார்கள் `` என்று கூறினார்கள் .
( م ) عَنْ عَائِشَةَ، قَالَتْ: قُلْتُ: " يَا رَسُولَ اللَّهِ، ابْنُ جُدْعَانَ، كَانَ فِي الْجَاهِلِيَّةِ يَصِلُ الرَّحِمَ، وَيُطْعِمُ الْمِسْكِينَ، فَهَلْ ذَاكَ نَافِعُهُ؟ قَالَ: لَا يَنْفَعُهُ، إِنَّهُ لَمْ يَقُلْ يَوْمًا: رَبِّ اغْفِرْ لِي خَطِيئَتِي يَوْمَ الدِّينِ " 20
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இப்னு ஜுத்ஆன் அறியாமைக் காலத்தில் உறவுகளைப் பேணி நடப்பவராகவும் ஏழைகளுக்கு உணவளிப்பவராகவும் இருந்தாரே ! இவை அவருக்கு ( மறுமை நாளில் ) பயனளிக்குமா ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அவருக்குப் பயனளிக்கா ; அவர் ஒரு நாள்கூட " இறைவா ! விசாரணை நாளில் என் பாவத்தை மன்னித்தருள்வாயாக !` எனக் கேட்டதேயில்லை `` என்று பதிலளித்தார்கள் .
سَمِعْتُ مُعَاوِيَةَ يَخْطُبُ - وَكَانَ قَلِيلَ الْحَدِيثِ -، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: سَمِعْتُهُ يَخْطُبُ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «كُلُّ ذَنْبٍ عَسَى اللَّهُ أَنْ يَغْفِرَهُ، إِلَّا الرَّجُلُ يَقْتُلُ الْمُؤْمِنَ مُتَعَمِّدًا، أَوِ الرَّجُلُ يَمُوتُ كَافِرًا» 21
அபூஇத்ரீஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஆவியா ரளியல்லாஹு அன்ஹு உரையாற்றியபோது கூறியதை நான் செவியுற்றேன் . அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து மிகக் குறைவாகவே ஹதீஸை அறிவித்துள்ளார்கள் . அவர்கள் உரையாற்றியபோது நான் செவியுற்றதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரை வேண்டுமென்றே கொலை செய்தவனையும் , காஃபிராகவே மரணித்துவிடுபவனையும் தவிர எல்லாப் பாவங்களையும் அல்லாஹ் மன்னித்துவிடலாம் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(ق) عَنِ ابْنِ عُمَرَ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَشْهَدُوا أَنْ لاَ إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ، وَيُقِيمُوا الصَّلاَةَ، وَيُؤْتُوا الزَّكَاةَ، فَإِذَا فَعَلُوا ذَلِكَ عَصَمُوا مِنِّي دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّ الإِسْلاَمِ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ» 22
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் தூதர் என உறுதிமொழிந்து , ( கடமையான ) தொழுகையை நிலைநிறுத்தி , ஸகாத் ( எனும் ஏழைகளின் உரிமையை ) வழங்காத வரை ( இணைவைக்கும் ) மக்களுடன் போரிடும்படி நான் கட்டளையிடப்பட்டேன் . இவற்றை அவர்கள் செய்துவிடுவார்களானால் தம் உயிரையும் உடைமைகளையும் என்னிடமிருந்து அவர்கள் பாதுகாத்துக்கொள்ள முடியும் . ( மரண தண்டனைக்குரிய ) இஸ்லாத்தின் இதர உரிமைகளில் ( அவர்கள் வரம்பு மீறினாலே ) தவிர ! மேலும் ( இரகசியமாகக் குற்றமிழைத்தால் ) அவர்களின் விசாரணை அல்லாஹ்வின் பொறுப்பிலுள்ளது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : " ثَلَاثٌ إِذَا خَرَجْنَ لَا يَنْفَعُ نَفْسًا، إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ، أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَالدَّجَّالُ، وَدَابَّةُ الأَرْضِ " 23
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மூன்று அடையாளங்கள் தோன்றிவிட்டால் முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் இறைநம்பிக்கை பயனளிக்காது . ( அவை :) 1. மேற்கிலிருந்து சூரியன் உதயமாகுதல் . 2. தஜ்ஷால் ( தோன்றுதல் ). 3. பூமியிலிருந்து வெளிப்படும் ( அதிசயக் ) கால்நடை .
(ق) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «جَعَلَ اللَّهُ الرَّحْمَةَ مِائَةَ جُزْءٍ، فَأَمْسَكَ عِنْدَهُ تِسْعَةً وَتِسْعِينَ جُزْءًا، وَأَنْزَلَ فِي الأَرْضِ جُزْءًا وَاحِدًا، فَمِنْ ذَلِكَ الجُزْءِ يَتَرَاحَمُ الخَلْقُ، حَتَّى تَرْفَعَ الفَرَسُ حَافِرَهَا عَنْ وَلَدِهَا، خَشْيَةَ أَنْ تُصِيبَهُ» 24
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் அன்பை நூறாகப் பங்கிட்டான் . அதில் தொண்ணூற்று ஒன்பது பங்கைத் தன்னிடம் வைத்துக்கொண்டான் . ( மீதமுள்ள ) ஒன்றையே பூமியில் இறக்கினான் . இந்த ஒரு பங்கினால்தான் படைப்பினங்கள் ஒன்றுக்கொன்று பாசம் காட்டுகின்றன . எந்த அளவிற்கென்றால் , மிதித்துவிடுவோமோ என்ற அச்சத்தினால் குதிரை தனது குட்டியை விட்டுக் கால்குளம்பைத் தூக்கிக்கொள்கிறது .
( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَمَّا قَضَى اللَّهُ الخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ العَرْشِ إِنَّ رَحْمَتِي غَلَبَتْ غَضَبِي» 25
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ் படைப்புகளைப் படைத்தபோது தனது (" லவ்ஹுல் மஹ்ஃபூழ் ` என்னும் ) பதிவேட்டில் - அது அர்ஸுக்கு மேலே அவனிடம் உள்ளது - " என் கருணை என் கோபத்தை மிகைத்துவிட்டது `` என்று எழுதினான் .
(خ ) أَنَّ أَبَا هُرَيْرَةَ، قَالَ: قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي صَلاَةٍ وَقُمْنَا مَعَهُ، فَقَالَ أَعْرَابِيٌّ وَهُوَ فِي الصَّلاَةِ: اللَّهُمَّ ارْحَمْنِي وَمُحَمَّدًا، وَلاَ تَرْحَمْ مَعَنَا أَحَدًا. فَلَمَّا سَلَّمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِلْأَعْرَابِيِّ: «لَقَدْ حَجَّرْتَ وَاسِعًا» يُرِيدُ رَحْمَةَ اللَّهِ 26
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையில் நின்றார்கள் . அவர்களுடன் நாங்களும் நின்றோம் . அப்போது தொழுகையில் ஈடுபட்டிருந்த ஒரு கிராமவாசி , “ இறைவா ! எனக்கும் முஹம்மத் அவர்களுக்கும் ( மட்டும் ) அருள் புரிவாயாக ! எங்களுடன் வேறு யாருக்கும் அருள் புரியாதே !`` என்று பிரார்த்தனை செய்தார் . ( தொழுது முடித்து ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸலாம் கொடுத்தபோது அந்தக் கிராமவாசியிடம் , “ விசாலமானதை , அதாவது இறைவனின் அருளை நீ குறுக்கிவிட்டாயே !` என்று சொன்னார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ: مَرَّ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِهِ وَصَبِيٌّ فِي الطَّرِيقِ، فَلَمَّا رَأَتْ أُمُّهُ الْقَوْمَ خَشِيَتْ عَلَى وَلَدِهَا أَنْ يُوطَأَ، فَأَقْبَلَتْ تَسْعَى وَتَقُولُ: ابْنِي ابْنِي وَسَعَتْ فَأَخَذَتْهُ، فَقَالَ الْقَوْمُ: يَا رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَا كَانَتْ هَذِهِ لِتُلْقِيَ ابْنَهَا فِي النَّارِ. قَالَ: فَخَفَّضَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «وَلَاءُ اللَّهِ عَزَّ وَجَلَّ لَا يُلْقِي حَبِيبَهُ فِي النَّارِ» 27
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு தடவை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களுள் ஒரு குழுவினரோடு நடந்து சென்றார்கள் . வழியில் ஒரு சிறுவன் இருந்தான் . மக்கள் நடந்து வருவதைக் கண்ட அச்சிறுவனின் தாய் , அவர்கள் தன் பிள்ளையை மிதித்துவிடுவார்களோ என்று அஞ்சினாள் . “ என் மகன் , என் மகன் ” என்று கூறியவாறே முன்னோக்கி ஓடிவந்தாள் . விரைந்து வந்து அச்சிறுவனைத் தூக்கிக்கொண்டாள் . அதைப் பார்த்த ( தோழர்களான ) மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! இவள் தன் மகனை நரகத்தில் போட்டுவிடமாட்டாள் அல்லவா ?” என்றார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குமுன் தம் தலையைத் தாழ்த்தியவாறு , “ மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வும் தன்னுடைய நேசரை நரகத்தில் போட்டுவிடமாட்டான் ” என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ : قَالَ: «لِلَّهِ عَزَّ وَجَلَّ مِائَةُ رَحْمَةٍ، وَإِنَّهُ قَسَمَ رَحْمَةً وَاحِدَةً بَيْنَ أَهْلِ الْأَرْضِ، فَوَسِعَتْهُمْ إِلَى آجَالِهِمْ، وَذَخَرَ تِسْعَةً وَتِسْعِينَ رَحْمَةً لِأَوْلِيَائِهِ، وَاللَّهُ عَزَّ وَجَلَّ قَابِضٌ تِلْكَ الرَّحْمَةَ الَّتِي قَسَمَهَا بَيْنَ أَهْلِ الْأَرْضِ إِلَى التِّسْعِ وَالتِّسْعِينَ فَيُكَمِّلُهَا مِائَةَ رَحْمَةٍ لِأَوْلِيَائِهِ يَوْمَ الْقِيَامَةِ» 28
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்கு நூறு ( மடங்கு ) அன்பு உண்டு . நிச்சயமாக அவன் ( அவற்றுள் ) ஒன்றை நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்துவிட்டான் . எனவே அது அவர்களின் மரணம் வரை விசாலமாகி ( ப் பெருகி ) விட்டது . அவன் தன் நேசர்களுக்காகத் தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்பை வைத்துக்கொண்டான் . மேலும் : மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் நிலவாழ் மக்கள் மத்தியில் பங்கிட்டுக்கொடுத்த அந்த ( ஒரு மடங்கு ) அன்பை ( த் தன்னுடைய ) தொண்ணூற்றொன்பது ( மடங்கு ) அன்போடு சேர்த்துக் கைப்பற்றிக்கொள்வான் . ஆக மறுமையில் அவன் தன் நேசர்களுக்காக நூறு ( மடங்கு ) அன்பை முழுமையாக வைத்துக்கொள்வான் .
عَنْ أَبِي طَلْحَةَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ: لَا إِلَهَ إِلَّا اللَّهُ دَخَلَ الْجَنَّةَ وَوَجَبَتْ لَهُ الْجَنَّةُ، وَمَنْ قَالَ: سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ مِائَةُ كَتَبَ اللَّهُ لَهُ أَلْفَ حَسَنَةٍ وَأَرْبَعًا وَعِشْرِينَ حَسَنَةً " قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِذًا لَا يَهْلِكُ مِنَّا أَحَدٌ. قَالَ: «بَلَى إِنَّ أَحَدَكُمْ لَيَجِيءُ بِالْحَسَنَاتِ لَوْ وُضِعَتْ عَلَى جَبَلٍ أَثْقَلَتْهُ ثُمَّ تَجِيءُ النِّعَمُ فَتَذْهَبُ بِتِلْكَ ثُمَّ يَتَطَاوَلُ الرَّبُّ بَعْدَ ذَلِكَ بِرَحْمَتِهِ» 29
அபூதல்ஹா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ லாயிலாஹ இல்லல்லாஹ் என்று யார் சொல்கிறாரோ அவர் சொர்க்கத்தில் நுழைவார் . அவருக்குச் சொர்க்கம் ( கிடைப்பது ) கட்டாயமாகிவிடும் . சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி ( அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன் ) என நூறு தடவை யார் சொல்கிறாரோ அவருக்கு அல்லாஹ் ஆயிரத்து இருபத்து நான்கு நன்மைகளை எழுதுகிறான் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அப்படியானால் எங்களுள் ஒருவர்கூட அழிந்துவிட மாட்டார் அல்லவா ?” என்று கேட்டார்கள் . அதற்கவர்கள் , “ ஆம் ! உங்களுள் ஒருவர் ( தம் ) நன்மைகளைக் கொண்டுவருவார் . அவை ஒரு மலைமீது வைக்கப்பட்டாலும் அது ( அவற்றின் பாரம் தாங்க முடியாமல் ) கனத்துவிடும் . பின்னர் ( அல்லாஹ் இவ்வுலகில் அவருக்கு வழங்கிய ) அருட்கொடைகள் வரும் . அது அவற்றை அகற்றிவிடும் . ( அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்மைகள் பகரமாகிவிடும் ) பின்னர் ரப்பாகிய இறைவன் தன்னுடைய அன்பால் ( அவர்கள் அனைவரையும் ) அரவணைத்துக்கொள்வான் .
(م) عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إِلَّا مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» 30
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , வளமும் உயர்வும் மிக்க அல்லாஹ் பின்வருமாறு கூறியதாக அறிவித்தார்கள் : என் அடியார்களே ! அநீதியிழைப்பதை எனக்கு நானே தடை செய்துகொண்டேன் . அதை உங்கள் மத்தியிலும் தடை செய்யப்பட்டதாக ஆக்கிவிட்டேன் . ஆகவே , நீங்கள் ஒருவருக்கொருவர் அநீதியிழைக்காதீர்கள் . என் அடியார்களே ! உங்களில் யாரை நான் நல்வழியில் செலுத்தினேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் வழி தவறியவர்களே . ஆகவே , என்னிடமே நல்வழியில் செலுத்துமாறு கேளுங்கள் . உங்களை நான் நல்வழியில் செலுத்துவேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் உணவளித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் பசித்திருப்பவர்களே . ஆகவே , என்னிடமே வாழ்வாதாரத்தைக் கேளுங்கள் . நான் உங்களுக்கு வாழ்வாதாரம் அளிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களில் யாருக்கு நான் ஆடையணிவித்துள்ளேனோ அவர்களைத் தவிர மற்ற அனைவரும் நிர்வாணமானவர்களே . ஆகவே , என்னிடமே ஆடை கேளுங்கள் . நான் உங்களுக்கு ஆடையணிவிக்கிறேன் . என் அடியார்களே ! நீங்கள் இரவிலும் பகலிலும் பாவம் செய்கிறீர்கள் . நான் அனைத்துப் பாவங்களையும் மறைத்துக் கொண்டிருக்கிறேன் . ஆகவே , என்னிடமே பாவமன்னிப்புக் கோருங்கள் . நான் உங்கள் பாவங்களை மன்னிக்கிறேன் . என் அடியார்களே ! உங்களால் எனக்கு எவ்விதத் தீங்கும் அளிக்க முடியாது ; மேலும் , உங்களால் எனக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாது . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் உங்களில் மிகவும் இறையச்சமுடைய ஒரு மனிதரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் அதிகமாக்கி விடுவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் மிகவும் தீய மனிதர் ஒருவரைப் போன்று மாறிவிட்டாலும் அது எனது ஆட்சியில் எதையும் குறைத்துவிடப்போவதில்லை . என் அடியார்களே ! உங்களில் முற்காலத்தார் , பிற்காலத்தார் , மனிதர்கள் , ஜின்கள் ஆகிய அனைவரும் சேர்ந்து ஒரே திறந்த வெளியில் நின்று என்னிடத்தில் ( தத்தம் தேவைகளைக் ) கோரினாலும் ஒவ்வொரு மனிதருக்கும் அவர் கேட்பதை நான் கொடுப்பேன் . அது என்னிடத்தில் இருப்பவற்றில் எதையும் குறைத்துவிடுவதில்லை ; கடலில் நுழை ( த்து எடு ) க்கப்பட்ட ஊசி ( தண்ணீரைக் ) குறைப்பதைப் போன்றே தவிர ( குறைக்காது )! என் அடியார்களே ! நீங்கள் செய்துவரும் நல்லறங்களை நான் உங்களுக்காக எண்ணிக் கணக்கிடுகிறேன் . பிறகு அதன் நற்பலனை நான் முழுமையாக வழங்குவேன் . நல்லதைக் கண்டவர் அல்லாஹ்வைப் போற்றிப் புகழட்டும் ; அல்லதைக் கண்டவர் தம்மையே நொந்துகொள்ளட்டும் !
( م) عَنْ أَبِي مُوسَى، قَالَ: قَامَ فِينَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِخَمْسِ كَلِمَاتٍ، فَقَالَ: " إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ لَا يَنَامُ، وَلَا يَنْبَغِي لَهُ أَنْ يَنَامَ، يَخْفِضُ الْقِسْطَ وَيَرْفَعُهُ، يُرْفَعُ إِلَيْهِ عَمَلُ اللَّيْلِ قَبْلَ عَمَلِ النَّهَارِ، وَعَمَلُ النَّهَارِ قَبْلَ عَمَلِ اللَّيْلِ، حِجَابُهُ النُّورُ - وَفِي رِوَايَةِ أَبِي بَكْرٍ: النَّارُ - لَوْ كَشَفَهُ لَأَحْرَقَتْ سُبُحَاتُ وَجْهِهِ مَا انْتَهَى إِلَيْهِ بَصَرُهُ مِنْ خَلْقِهِ 31
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கள் மத்தியில் நின்று ஐந்து விஜயங்களைச் சொன்னார்கள் . ( அவை :) 1) மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ் உறங்க மாட்டான் ; உறங்குவது அவனுக்குத் தகாது . 2) அவன் தராசைத் தாழ்த்துகிறான் ; உயர்த்துகிறான் . 3) ( மனிதன் ) இரவில் புரிந்த செயல் , பகலில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 4) ( மனிதன் ) பகலில் புரிந்த செயல் , இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது . 5) ஒளியே ( அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும் ) அவனது திரையாகும் . - மற்றோர் அறிவிப்பில் " நெருப்பே அவனது திரையாகும் ` என்று காணப்படுகிறது .- அத்திரையை அவன் விலக்கிவிட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும் .
( ق) عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَحَدٌ أَصْبَرُ عَلَى أَذًى سَمِعَهُ مِنَ اللَّهِ، يَدَّعُونَ لَهُ الوَلَدَ، ثُمَّ يُعَافِيهِمْ وَيَرْزُقُهُمْ» 32
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மனவேதனைக்குள்ளாக்கும் செய்தி கேட்டும் ( உடனே தண்டித்துவிடாமல் ) மிகவும் பொறுமை காப்பவன் அல்லாஹ்வைவிட வேறு யாருமில்லை . மனிதர்கள் ( சிலர் ) அவனுக்குக் குழந்தை இருப்பதாகக் கூறுகின்றார்கள் . அதன் பிறகும் அவர்களுக்கு உடல் நலத்தையும் உணவு வளத்தையும் அவன் வழங்கிக்கொண்டிருக்கின்றான் .
حَدَّثَنِي النَّوَّاسُ بْنُ سَمْعَانَ الْكِلَابِيُّ، قَالَ: سَمِعْتُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " مَا مِنْ قَلْبٍ إِلَّا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ إِنْ شَاءَ أَقَامَهُ، وَإِنْ شَاءَ أَزَاغَهُ "، وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " يَا مُثَبِّتَ الْقُلُوبِ ثَبِّتْ قُلُوبَنَا عَلَى دِينِكَ "، قَالَ: " وَالْمِيزَانُ بِيَدِ الرَّحْمَنِ يَرْفَعُ أَقْوَامًا، وَيَخْفِضُ آخَرِينَ إِلَى يَوْمِ الْقِيَامَةِ " 33
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அந்நவ்வாஸ் பின் ஸம்ஆன் அல்கிலாபீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ( மனிதரின் ) எந்த உள்ளமும் ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே இல்லாமலில்லை . அவன் நாடினால் அதை நிலையாக நிற்கச் செய்கிறான் . அவன் நாடினால் அதை அசைத்து விடுகிறான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உள்ளங்களை நிலையாக வைப்பவனே , எங்களுடைய உள்ளங்களை உன் மார்க்கத்தில் நிலையாக வைப்பாயாக ! தராசு ரஹ்மான் ( ஆகிய அல்லாஹ்வின் ) உடைய கையில் இருக்கிறது . அவன் மறுமை நாள் வரை சிலரை உயர்த்துகிறான் ; சிலரைத் தாழ்த்துகிறான் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ» 34
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வைவிட அதிக ரோஷமுள்ளவர் யாருமில்லை . அதனால்தான் மானக்கேடான செயல்கள் அனைத்திற்கும் அவன் தடை விதித்துள்ளான் . அல்லாஹ்வைவிட மிகவும் புகழை விரும்புகின்றவர் வேறெவருமிலர் .
( ق) أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «إِنَّ اللَّهَ يَغَارُ، وَغَيْرَةُ اللَّهِ أَنْ يَأْتِيَ المُؤْمِنُ مَا حَرَّمَ اللَّهُ» 35
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் ரோஷம் கொள்கிறான் . அல்லாஹ்வின் ரோஷம் என்பது , அவன் தடைவிதித்துள்ள ஒன்றை ( தடையை மீறி ) இறைநம்பிக்கையாளர் செய்வதுதான் .
(ق) عن زيد بن خالد رضي الله عنه قال: صلى بنا رسول الله صلى الله عليه وسلم صلاة الصبح بالحديبية في إثر سماء كانت من الليل فلما انصرف أقبل على الناس فقال هل تدرون ماذا قال ربكم قالوا الله ورسوله أعلم قال قال أصبح من عبادي مؤمن بي وكافر فأما من قال مطرنا بفضل الله ورحمته فذلك مؤمن بي كافر بالكوكب وأما من قال مطرنا بنوء كذا وكذا فذلك كافر بي مؤمن بالكوكب. 36
ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " ஹுதைபியா ` எனுமிடத்தில் எங்களுக்கு ஸுப்ஹு தொழுகை தொழுவித்தார்கள் . அன்றிரவு மழை பெய்திருந்தது . தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி , “ உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு மக்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று கூறினர் . அப்போது “ என்னை நம்பக் கூடியவர்களும் ( என்னை ) மறுக்கக்கூடியவர்களுமாக என் அடியார்கள் ( இரு பிரிவினராக ) உள்ளனர் . ‘ அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது ` எனக் கூறியவர்களோ என்னை நம்பி , நட்சத்திரத்தை மறுத்தவர்களாவர் . இன்ன இன்ன நட்சத்திரத்தால்தான் ( எங்களுக்கு மழை பொழிந்தது ) எனக் கூறியவர்களோ என்னை மறுத்து , நட்சத்திரத்தை நம்பியவர்களாவர் ` என இறைவன் கூறினான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(ق) عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ الإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَ يُحِبُّهُ إِلاَّ لِلَّهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ. 37
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எவரிடம் மூன்று தன்மைகள் அமைந்து விட்டனவோ அவர் இறைநம்பிக்கையின் ( ஈமானின் ) சுவையை உணர்ந்தவராவார் . ( அவை :) 1. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒருவருக்கு மற்றெதையும்விட அதிக நேசத்திற்குரியோராவது . 2. ஒருவர் மற்றொருவரை அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது . 3. நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பது போன்று இறைமறுப்புக்கு மாறுவதை வெறுப்பது .
(م) عَنِ الْعَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ذَاقَ طَعْمَ الإِيمَانِ مَنْ رَضِيَ بِاللَّهِ رَبًّا وَبِالإِسْلاَمِ دِينًا وَبِمُحَمَّدٍ رَسُولاً 38
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் அல்லாஹ்வை இறைவனாகவும் இஸ்லாத்தை மார்க்கமாகவும் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறைத்தூதராகவும் மன நிறைவோடு ஏற்றுக்கொண்டாரோ அவர் இறைநம்பிக்கையின் சுவையை அடைந்துவிட்டார் .
( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ الإِيمَانُ بِضْعٌ وَسِتُّونَ شُعْبَةً، وَالْحَيَاءُ شُعْبَةٌ مِنَ الإِيمَانِ 39
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இறைநம்பிக்கை ( ஈமான் ) அறுபதுக்கும் அதிகமான கிளைகளைக் கொண்டதாகும் . நாணமும் இறைநம்பிக்கையின் ஒரு கிளையே .
(ق) عَنْ أَنَسٍ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ 40
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவருக்குத் தம்முடைய தந்தை , தம்முடைய பிள்ளை , ஏனைய மக்கள் அனைவரையும்விட நான் நேசத்திற்குரியவராக ஆகாத வரை அவர் ( உண்மையான ) இறைநம்பிக்கை ( ஈமான் ) கொண்டவர் ஆகமாட்டார் .
(خ) عن عَبْدَ اللَّهِ بْنَ هِشَامٍ، قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهْوَ آخِذٌ بِيَدِ عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقَالَ لَهُ عُمَرُ يَا رَسُولَ اللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ كُلِّ شَىْءٍ إِلاَّ مِنْ نَفْسِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ . فَقَالَ لَهُ عُمَرُ فَإِنَّهُ الآنَ وَاللَّهِ لأَنْتَ أَحَبُّ إِلَىَّ مِنْ نَفْسِي. فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم الآنَ يَا عُمَرُ. 41
அப்துல்லாஹ் பின் ஹிஜாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்துகொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் கையைப் பிடித்துக்கொண்டிருந்தார்கள் . அப்போது உமர் ரளியல்லாஹு அன்ஹு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னைத் தவிரவுள்ள எல்லாவற்றையும்விட நீங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ! என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! உம்மைவிடவும் நானே உமக்கு மிகப் பிரியமானவனாக ஆகும் வரை ( நீர் உண்மையான இறைநம்பிக்கையாளர் ஆக முடியாது )`` என்று கூறினார்கள் . உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நோக்கி உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ இப்போது அல்லாஹ்வின் மீதாணையாக ! என்னைவிடத் தாங்களே எனக்கு மிகவும் பிரியமானவர்கள் `` என்றார்கள் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இப்போதுதான் உமரே ! ( சரியாகச் சொன்னீர்கள் )`` என்று கூறினார்கள் .
(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مِنْ أَشَدِّ أُمَّتِي لِي حُبًّا نَاسٌ يَكُونُونَ بَعْدِي يَوَدُّ أَحَدُهُمْ لَوْ رَآنِي بِأَهْلِهِ وَمَالِهِ 42
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரில் என்னை ஆழமாக நேசிப்போருள் சிலர் எனக்குப்பின் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒருவர் என்னைப் பார்க்க வேண்டுமே என்பதற்காகத் தம் குடும்பத்தாரையும் செல்வத்தையும்கூடத் தியாகம் செய்ய விரும்புவார் .
عَنْ أَبِي ذَرٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّهُ أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ فَقَالَ : إِنِّي أُحِبُّكُمْ أَهْلَ الْبَيْتِ ، فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " قَالَ اللَّهَ ، قَالَ : " فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا فَإِنَّ الْفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنَا مِنَ السَّيْلِ مِنْ أَعْلَى الْأَكَمَةِ إِلَى أَسْفَلِهَا " . 43
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அஹ்லுல் பைத்தாகிய தங்களை நான் நேசிக்கிறேன் ” என்று கூறினேன் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வின் மீது சத்தியமாகவா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வின்மீது சத்தியமாக ” என்று கூறினேன் . “ அப்படியெனில் ஏழ்மையை எதிர்கொள்ளத் தயாராக இரு . ஏனென்றால் வெள்ளம் மேலிருந்து கீழ்நோக்கி விரைவாகப் பாய்ந்தோடுவதைப்போல் எங்களை நேசிப்போருக்கு வறுமை மிக வேகமாக வந்துசேரும் ” என்றார்கள் .
( خ ) عن النُّعْمَانَ بْنَ بَشِيرٍ ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الْقَائِمِ عَلَى حُدُودِ اللَّهِ وَالْوَاقِعِ فِيهَا كَمَثَلِ قَوْمٍ اسْتَهَمُوا عَلَى سَفِينَةٍ، فَأَصَابَ بَعْضُهُمْ أَعْلاَهَا وَبَعْضُهُمْ أَسْفَلَهَا، فَكَانَ الَّذِينَ فِي أَسْفَلِهَا إِذَا اسْتَقَوْا مِنَ الْمَاءِ مَرُّوا عَلَى مَنْ فَوْقَهُمْ فَقَالُوا لَوْ أَنَّا خَرَقْنَا فِي نَصِيبِنَا خَرْقًا، وَلَمْ نُؤْذِ مَنْ فَوْقَنَا. فَإِنْ يَتْرُكُوهُمْ وَمَا أَرَادُوا هَلَكُوا جَمِيعًا، وَإِنْ أَخَذُوا عَلَى أَيْدِيهِمْ نَجَوْا وَنَجَوْا جَمِيعًا ". 44
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் ( சட்ட ) வரம்புகளுக்குக் கட்டுப்பட்டு நடப்பவனுக்கும் அவற்றை மீறி நடப்பவனுக்கும் உவமை ஒரு சமுதாயத்தைப் போன்றதாகும் . அவர்கள் கப்பலில் ( தங்களுக்கு இடம் பிடிப்பதற்காகச் ) சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள் . ( அதன்படி ) அவர்களுள் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் சிலருக்குக் கீழ்த்தளத்திலும் இடம் கிடைத்தது . கீழ்த்தளத்தில் இருந்தவர்களுக்குத் தண்ணீர் தேவைப்பட்டபோது ( அதைக் கொண்டு வர ) அவர்கள் மேல் தளத்தில் இருப்பவர்களைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது . ( அதனால் மேலே இருந்தவர்களுக்குச் சிரமம் ஏற்பட்டது ). அப்போது , கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் ( தமக்குள் ) “ நாம் ( தண்ணீருக்காக ) நமது பங்கில் ( கீழ்த் தளத்தில் ) ஓட்டையிட்டுக் கொள்வோம் ; நமக்கு மேலே இருப்பவர்களைத் தொந்தரவு செய்யாமலிருப்போம் ” என்று பேசிக் கொண்டார்கள் . அவர்கள் விரும்பியபடி செய்துகொள்ள அவர்களை மேல் தளத்தில் உள்ளவர்கள் விட்டுவிட்டால் ( கப்பலில் இருப்பவர்கள் ) அனைவரும் அழிந்து போவார்கள் . ( ஓட்டையிட விடாமல் ) அவர்களுடைய கரத்தைப் பிடித்துக் கொள்வார்களாயின் அவர்களும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் ; ( அவர்களுடன் மற்ற ) அனைவரும் தப்பிப் பிழைத்துக் கொள்வார்கள் .
(م) عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ : أَوَّلُ مَنْ بَدَأَ بِالْخُطْبَةِ يَوْمَ الْعِيدِ قَبْلَ الصَّلاَةِ مَرْوَانُ فَقَامَ إِلَيْهِ رَجُلٌ فَقَالَ الصَّلاَةُ قَبْلَ الْخُطْبَةِ . فَقَالَ قَدْ تُرِكَ مَا هُنَالِكَ . 45
தாரிக் பின் ஷிஹாப் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முதன் முதலில் பெருநாள் தினத்தில் தொழுகைக்கு முன் சொற்பொழிவு ( குத்பா ) நிகழ்த்தியவர் மர்வான் பின் ஹகம் ஆவார் . ( அவ்வாறு அவர் சொற்பொழிவு நிகழ்த்திக்கொண்டிருந்தார் .) அப்போது அவரை நோக்கி ஒருவர் எழுந்து நின்று , “ சொற்பொழிவுக்கு முன்பே ( பெருநாள் தொழுகை ) தொழ வேண்டும் `` என்று கூறினார் . அதற்கு மர்வான் “ முன்பு நடைபெற்றது கைவிடப்பட்டுவிட்டது ( இப்போது அது நடைமுறையில் இல்லை )`` என்று கூறினார் . ( அப்போது அங்கிருந்த ) அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு , " இதோ இந்த மனிதர் தமது கடமையை நிறைவேற்றிவிட்டார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( பின்வருமாறு ) கூற நான் கேட்டுள்ளேன் : உங்களுள் ஒருவர் ஒரு தீமையை ( மார்க்கத்திற்கு முரணான ஒரு செயலை ) க் கண்டால் அவர் அதைத் தமது கரத்தால் தடுக்கட்டும் . முடியாவிட்டால் தமது நாவால் ( சொல்லித் தடுக்கட்டும் ). அதுவும் முடியாவிட்டால் தமது உள்ளத்தால் ( அதை வெறுத்து ஒதுக்கட்டும் ). இந்த ( இறுதி ) நிலையானது இறைநம்பிக்கையின் பலவீனமா ( ன நிலையா ) கும் .
( م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَا مِنْ نَبِيٍّ بَعَثَهُ اللَّهُ فِي أُمَّةٍ قَبْلِي إِلاَّ كَانَ لَهُ مِنْ أُمَّتِهِ حَوَارِيُّونَ وَأَصْحَابٌ يَأْخُذُونَ بِسُنَّتِهِ وَيَقْتَدُونَ بِأَمْرِهِ ثُمَّ إِنَّهَا تَخْلُفُ مِنْ بَعْدِهِمْ خُلُوفٌ يَقُولُونَ مَا لاَ يَفْعَلُونَ وَيَفْعَلُونَ مَا لاَ يُؤْمَرُونَ فَمَنْ جَاهَدَهُمْ بِيَدِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِلِسَانِهِ فَهُوَ مُؤْمِنٌ وَمَنْ جَاهَدَهُمْ بِقَلْبِهِ فَهُوَ مُؤْمِنٌ وَلَيْسَ وَرَاءَ ذَلِكَ مِنَ الإِيمَانِ حَبَّةُ خَرْدَلٍ " . 46
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : எனக்கு முந்தைய சமுதாயத்தார் மத்தியில் அல்லாஹ் அனுப்பிய ஒவ்வோர் இறைத் தூதருக்கும் அவருடைய சமுதாயத்திலேயே சிறப்பு உதவியாளர்களும் நண்பர்களும் இல்லாமல் இருந்ததில்லை . அவர்கள் அந்த இறைத்தூதரின் வழிமுறையைக் கடைப்பிடிப்பார்கள் ; அவரது உத்தரவைப் பின்பற்றி நடப்பார்கள் . அந்தத் தோழர்களுக்குப் பிறகு சிலர் வருவார்கள் . அவர்கள் தாம் செய்யாதவற்றைச் சொல்வார்கள் . தமக்குக் கட்டளையிடப்படாதவற்றைச் செய்வார்கள் . ஆகவே , யார் இ( த்தகைய ) வர்களுடன் தமது கரத்தால் போராடுவாரோ அவர் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது நாவால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர் ஆவார் . யார் இவர்களுடன் தமது உள்ளத்தால் போராடுவாரோ அவரும் இறைநம்பிக்கையாளர்தாம் . இவற்றுக்கப்பால் இறைநம்பிக்கை என்பது கடுகளவுகூடக் கிடையாது .
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَيُّهَا النَّاسُ ، مُرُوا بِالْمَعْرُوفِ ، وَانْهَوْا عَنِ الْمُنْكَرِ ، قَبْلَ أَنْ تَدْعُوا اللَّهَ فَلا يَسْتَجِيبَ لَكُمْ ، وَقَبْلَ أَنْ تَسْتَغْفِرُوهُ فَلا يَغْفِرَ لَكُمْ ، إِنَّ الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لا يَدْفَعُ رِزْقًا ، وَلا يُقَرِّبُ أَجَلا ، وَإِنَّ الأَحْبَارَ مِنَ الْيَهُودِ ، وَالرُّهْبَانَ مِنَ النَّصَارَى لَمَّا تَرَكُوا الأَمْرَ بِالْمَعْرُوفِ وَالنَّهْيَ عَنِ الْمُنْكَرِ لَعَنَهُمُ اللَّهُ عَلَى لِسَانِ أَنْبِيَائِهِمْ ، ثُمَّ عُمُّوا بِالْبَلاءِ " . 47
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மக்களே ! நீங்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தும் உங்களுக்குப் பதிலளிக்கப்படாமல் ஆவதற்கு முன்னரே , நீங்கள் பாவமன்னிப்புத் தேடியும் உங்களை அவன் மன்னிக்காதிருக்கும் முன்னரே நீங்கள் நன்மையை ஏவுங்கள் ; தீமையைத் தடுங்கள் . திண்ணமாக நன்மையை ஏவுவதும் தீமையைத் தடுப்பதும் வாழ்வாதாரத்தை நீக்கிவிடாது ; தவணையை நெருக்கமாக்காது . ( துரித மரணத்தைத் தடுக்கும் .) யூத மதத் தலைவர்களும் கிறிஸ்தவ மதத் துறவிகளும் நன்மையை ஏவுவதையும் தீமையைத் தடுப்பதையும் விட்டுவிட்டபோது அல்லாஹ் அவர்களை அவர்களின் நபிமார்கள் மூலம் சபித்தான் . பிறகு அவர்கள் அனைவர் மீதும் சோதனை பொதுவானதாக ஆக்கப்பட்டது .
( ق) عن أسامة بن زيد قال : سَمِعْتُهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم. يَقُولُ " يُجَاءُ بِالرَّجُلِ يَوْمَ الْقِيَامَةِ فَيُلْقَى فِي النَّارِ، فَتَنْدَلِقُ أَقْتَابُهُ فِي النَّارِ، فَيَدُورُ كَمَا يَدُورُ الْحِمَارُ بِرَحَاهُ، فَيَجْتَمِعُ أَهْلُ النَّارِ عَلَيْهِ، فَيَقُولُونَ أَىْ فُلاَنُ، مَا شَأْنُكَ أَلَيْسَ كُنْتَ تَأْمُرُنَا بِالْمَعْرُوفِ وَتَنْهَى عَنِ الْمُنْكَرِ قَالَ كُنْتُ آمُرُكُمْ بِالْمَعْرُوفِ وَلاَ آتِيهِ، وَأَنْهَاكُمْ عَنِ الْمُنْكَرِ وَآتِيهِ ". 48
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதாக உஸாமா பின் ஸைத் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : மறுமை நாளில் ஒரு மனிதர் கொண்டு வரப்பட்டு நரகத்தில் போடப்படுவார் . அப்போது அவருடைய குடல்கள் வேகமாக நரகத்தில் வந்து விழும் . கழுதை செக்கைச் சுற்றி வருவதைப் போல் அவர் சுற்றி வருவார் . அப்போது நரகவாசிகள் அவரைச் சுற்றி ஒன்றுகூடி , “ இன்னாரே ! உமக்கேன் இந்த நிலை ? நீர் ( உலக வாழ்வின்போது ) நற்செயல் புரியும்படி எங்களுக்குக் கட்டளையிட்டு , தீமை புரிய வேண்டாமென்று எங்களைத் தடுக்கவில்லையா ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவர் , “ நற்செயல் புரியும்படி உங்களுக்கு நான் கட்டளையிட்டேன் ; ஆனால் , அந்த நற்செயலை நான் செய்யவில்லை . தீமை புரிய வேண்டாமென்று உங்களை நான் தடுத்து வந்தேன் ; ஆனால் , அந்தத் தீமையை நானே செய்து வந்தேன் `` என்று கூறுவார் .
(م) عن عُمَرُ بْنُ الْخَطَّابِ قَالَ: بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ذَاتَ يَوْمٍ إِذْ طَلَعَ عَلَيْنَا رَجُلٌ شَدِيدُ بَيَاضِ الثِّيَابِ شَدِيدُ سَوَادِ الشَّعَرِ لاَ يُرَى عَلَيْهِ أَثَرُ السَّفَرِ وَلاَ يَعْرِفُهُ مِنَّا أَحَدٌ حَتَّى جَلَسَ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَسْنَدَ رُكْبَتَيْهِ إِلَى رُكْبَتَيْهِ وَوَضَعَ كَفَّيْهِ عَلَى فَخِذَيْهِ وَقَالَ يَا مُحَمَّدُ أَخْبِرْنِي عَنِ الإِسْلاَمِ . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " الإِسْلاَمُ أَنْ تَشْهَدَ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَتُقِيمَ الصَّلاَةَ وَتُؤْتِيَ الزَّكَاةَ وَتَصُومَ رَمَضَانَ وَتَحُجَّ الْبَيْتَ إِنِ اسْتَطَعْتَ إِلَيْهِ سَبِيلاً . قَالَ صَدَقْتَ . قَالَ فَعَجِبْنَا لَهُ يَسْأَلُهُ وَيُصَدِّقُهُ . قَالَ فَأَخْبِرْنِي عَنِ الإِيمَانِ . قَالَ " أَنْ تُؤْمِنَ بِاللَّهِ وَمَلاَئِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْيَوْمِ الآخِرِ وَتُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ " . قَالَ صَدَقْتَ . 49
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : என் தந்தை உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு என்னிடம் தெரிவித்தார்கள் : நாங்கள் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் இருந்தபோது தூய வெண்ணிற ஆடை அணிந்த , அடர் கறுப்பு நிறத்தில் தலைமுடி உடைய ஒரு மனிதர் வந்தார் . பயணத்தில் வந்த எந்த அடையாளமும் அவரிடம் காணப்படவில்லை ; எங்களுள் எவருக்கும் அவரை ( யார் என ) த் தெரியவில்லை . அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அருகில் ( சென்று ), தம் முழங்கால்களை நபியவர்களின் முழங்கால்களோடு இணைத்துக்கொண்டு ( நெருக்கமாக ) அமர்ந்தார் . அவர் தம் கைகளைத் தம் தொடைகள்மீது வைத் ( துப் பவ்வியமாக அமர்ந் ) தார் . பிறகு “ முஹம்மதே ! இஸ்லாம் ( அடிபணிதல் ) என்றால் என்னவென்று எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இஸ்லாம் என்பது , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும் முஹம்மத் ( ஆகிய நான் ) அல்லாஹ்வின் தூதர் என்றும் நீங்கள் உறுதி கூறுவதாகும் . மேலும் , தொழுகையைக் கடைப்பிடிப்பதும் , ஸகாத்தை வழங்கிவருவதும் , ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் , சென்றுவர இயன்றால் இறையில்லம் கஅபாவில் " ஹஜ் ` செய்வதும் ஆகும் `` என்று பதிலளித்தார்கள் . அதற்கு அந்த மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அவர் இவ்வாறு கூறியதைக் கேட்டு , அவரே கேள்வியும் கேட்டுவிட்டு அவரே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அளித்த பதிலை உறுதிப்படுத்தவும் செய்கிறாரே என்று நாங்கள் வியப்படைந்தோம் . அடுத்து அவர் , “ ஈமான் ( இறைநம்பிக்கை ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கூறினார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வையும் அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் இறுதி நாளையும் நீங்கள் நம்புவதாகும் ; நன்மை , தீமை அனைத்தும் விதியின்படியே நடக்கின்றன என்றும் நீங்கள் நம்புவதுமாகும் `` என்று கூறினார்கள் . அதற்கும் அம்மனிதர் “ உண்மைதான் `` என்றார் . அடுத்து அம்மனிதர் , “ இஹ்ஸான் ( அழகிய முறையில் செயலாற்றல் ) பற்றி எனக்குத் தெரிவியுங்கள் `` என்றார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( இஹ்ஸான் என்பது ,) அல்லாஹ்வை நீங்கள் பார்த்துக் கொண்டிருப்பதைப் போன்ற உணர்வுடன் வழிபடுவதாகும் . ஏனெனில் , அவனை நீங்கள் பார்க்கவில்லை என்றாலும் , அவன் உங்களைப் பார்க்கின்றான் `` என்று பதிலளித்தார்கள் . அம்மனிதர் , “ மறுமை ( உலக அழிவு ) நாளைப் பற்றி ( அது எப்போது வரும் என ) எனக்குத் தெரிவியுங்கள் `` என்று கேட்க , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கேள்வி கேட்கப்படுபவர் ( அதாவது நான் ), கேட்பவரைவிட ( அதாவது உங்களைவிட ) அதிகம் அறிந்தவர் அல்லர் . ( இது பற்றி எனக்கும் தெரியாது ; உங்களுக்கும் தெரியாது )`` என்று கூறினார்கள் . அம்மனிதர் , “ மறுமை நாளின் அடையாளங்களைப் பற்றி எனக்குத் தெரிவியுங்கள் !`` என்று கேட்டார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடிமைப் பெண் தன் உரிமையாளரைப் பெற்றெடுப்பதும் , காலில் செருப்பில்லாத , அரைகுறை ஆடைகளை அணிந்துள்ள ஏழைகளான ஆட்டு இடையர்கள் போட்டி போட்டுக்கொண்டு உயரமான கட்டடங்கள் கட்டுவதை நீங்கள் காண்பதும் ஆகும் `` என்று கூறினார்கள் . பிறகு அம்மனிதர் சென்றுவிட்டார் . நீண்ட நேரம் நான் ( அங்கேயே ) இருந்தேன் . பின்னர் என்னிடம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உமரே ! கேள்வி கேட்ட அந்த மனிதர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நான் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் `` என்று சொன்னேன் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்தாம் ( வானவர் ) ஜிப்ரீல் . உங்களுக்கு உங்களது மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்காக உங்களிடம் அவர் வந்தார் `` என்று சொன்னார்கள் .
عَنْ عَمْرِو بْنِ عَبَسَةَ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ مَا الْإِسْلَامُ قَالَ أَنْ يُسْلِمَ قَلْبُكَ لِلَّهِ عَزَّ وَجَلَّ وَأَنْ يَسْلَمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِكَ وَيَدِكَ قَالَ فَأَيُّ الْإِسْلَامِ أَفْضَلُ قَالَ الْإِيمَانُ قَالَ وَمَا الْإِيمَانُ قَالَ تُؤْمِنُ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ وَالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ قَالَ فَأَيُّ الْإِيمَانِ أَفْضَلُ قَالَ الْهِجْرَةُ قَالَ فَمَا الْهِجْرَةُ قَالَ تَهْجُرُ السُّوءَ قَالَ فَأَيُّ الْهِجْرَةِ أَفْضَلُ قَالَ الْجِهَادُ قَالَ وَمَا الْجِهَادُ قَالَ أَنْ تُقَاتِلَ الْكُفَّارَ إِذَا لَقِيتَهُمْ قَالَ فَأَيُّ الْجِهَادِ أَفْضَلُ قَالَ مَنْ عُقِرَ جَوَادُهُ وَأُهْرِيقَ دَمُهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ عَمَلَانِ هُمَا أَفْضَلُ الْأَعْمَالِ إِلَّا مَنْ عَمِلَ بِمِثْلِهِمَا حَجَّةٌ مَبْرُورَةٌ أَوْ عُمْرَةٌ 50
அம்ர் பின் அபஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் என்றால் என்ன ?” என்று ஒரு மனிதர் கேட்டார் . “ உமது உள்ளம் மகத்துவமும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்குப் பணிவதும் முஸ்லிம்கள் உமது நாவிலிருந்தும் கையிலிருந்தும் ( எந்த இடையூறுமின்றிப் ) பாதுகாப்புப் பெறுவதும் ஆகும் ” என்று விடையளித்தார்கள் . “ இஸ்லாமிய மார்க்கத்தில் எது சிறந்தது ?” என்று கேட்டார் . “ இறைநம்பிக்கை கொள்வது ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கை என்றால் என்ன ?” என்று கேட்டார் . அல்லாஹ்வையும் , அவனுடைய வானவர்களையும் அவனுடைய வேதங்களையும் அவனுடைய தூதர்களையும் மரணத்திற்குப் பின் உயிர்கொடுத்து எழுப்பப்படும் என்பதையும் நீர் நம்புவதாகும் ” என்று விடையளித்தார்கள் . “ இறைநம்பிக்கையில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ நாடு துறந்து செல்லுதல் ( ஹிஜ்ரத் )” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “ தீமையை வெறுத்தல் ஆகும் ” என்று கூறினார்கள் . “ ஹிஜ்ரத்தில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “( அல்லாஹ்வின் பாதையில் ) அறப்போர் புரிதல் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாத் என்றால் என்ன ?” என்று கேட்டார் . “( போர்க்களத்தில் ) இறைமறுப்பாளர்களை எதிர்கொண்டால் அவர்களோடு போராடுவதாகும் ” என்று கூறினார்கள் . “ ஜிஹாதில் சிறந்தது எது ?” என்று கேட்டார் . “ அவனுடைய குதிரையின் பின்னங்கால் வெட்டப்பட்டு , அவனுடைய இரத்தம் ஓட்டப்படுவதாகும் ” என்று விடையளித்தார்கள் . ( பின்னர் ) அல்லாஹ்வின் தூதர் கூறினார்கள் : பிறகு இரண்டு செயல்கள் உள்ளன . அவ்விரண்டும் மிகச் சிறந்த செயல்கள்-அவ்விரண்டைப்போன்று செய்தவரைத் தவிர . 1. ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ் , 2. அல்லது உம்ரா .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رضى الله عنه عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ تَجَاوَزَ عَنْ أُمَّتِي مَا حَدَّثَتْ بِهِ أَنْفُسَهَا، مَا لَمْ تَعْمَلْ أَوْ تَتَكَلَّمْ ". قَالَ قَتَادَةُ إِذَا طَلَّقَ فِي نَفْسِهِ فَلَيْسَ بِشَىْءٍ. 51
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தாரின் உள்ளங்களில் எழும் தீய எண்ணங்களை அவர்கள் அதன்படி செயல்படாத வரை , அல்லது அதை ( வெளிப்படுத்தி ) ப் பேசாத வரை அல்லாஹ் மன்னித்துவிட்டான் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ جَاءَ نَاسٌ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَأَلُوهُ إِنَّا نَجِدُ فِي أَنْفُسِنَا مَا يَتَعَاظَمُ أَحَدُنَا أَنْ يَتَكَلَّمَ بِهِ . قَالَ " وَقَدْ وَجَدْتُمُوهُ " . قَالُوا نَعَمْ . قَالَ " ذَاكَ صَرِيحُ الإِيمَانِ " . 52
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்களுள் சிலர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ எங்கள் உள்ளத்தில் சில ( குழப்பமான ) விஷயங்கள் எழுகின்றன . அவற்றை ( வெளிப்படுத்தி ) ப் பேசுவதைக்கூட நாங்கள் மிகப் பெரும் ( பாவ ) காரியமாகக் கருதுகிறோம் ( இது பற்றித் தாங்கள் என்ன கூறுகின்றீர்கள் ?)`` என்று கேட்டனர் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உண்மையிலேயே நீங்கள் அத்தகைய உணர்வுகளுக்கு உள்ளாகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நபித் தோழர்கள் , " ஆம் ` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அதுதான் ஒளிவுமறைவற்ற இறைநம்பிக்கை `` என்று கூறினார்கள் .
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَحَدَنَا يَجِدُ فِي نَفْسِهِ يُعَرِّضُ بِالشَّىْءِ لأَنْ يَكُونَ حُمَمَةً أَحَبُّ إِلَيْهِ مِنْ أَنْ يَتَكَلَّمَ بِهِ فَقَالَ " اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ اللَّهُ أَكْبَرُ الْحَمْدُ لِلَّهِ الَّذِي رَدَّ كَيْدَهُ إِلَى الْوَسْوَسَةِ " . قَالَ ابْنُ قُدَامَةَ " رَدَّ أَمْرَهُ " . مَكَانَ " رَدَّ كَيْدَهُ " . 53
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! எங்களுள் ஒருவர் தம் மனத்தில் ஏதேதோ ( எண்ணங்கள் ) தோன்றக் காண்கிறார் . அவற்றைப் பேசுவதைவிட அடுப்புக் கரி மிக விருப்பமானதாகத் தோன்றுகிறது ” என்றார் . அப்போது நபியவர்கள் , “ அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் , அல்லாஹு அக்பர் . அவனுடைய ( ஷைத்தான் உடைய ) சூழ்ச்சியை மனக்குழப்பமாக மாற்றிவிட்ட அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் ” என்று கூறினார்கள் .
(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ رضى الله عنه قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَأْتِي الشَّيْطَانُ أَحَدَكُمْ فَيَقُولُ مَنْ خَلَقَ كَذَا مَنْ خَلَقَ كَذَا حَتَّى يَقُولَ مَنْ خَلَقَ رَبَّكَ فَإِذَا بَلَغَهُ فَلْيَسْتَعِذْ بِاللَّهِ، وَلْيَنْتَهِ ". 54
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரிடம் ( அவர் மனத்திற்குள் ) ஷைத்தான் வந்து , “ இதைப் படைத்தவர் யார் ? இதைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்டுக்கொண்டே வந்து , இறுதியில் , “ உன் இறைவனைப் படைத்தவர் யார் ?`` என்று கேட்கின்றான் . இந்தக் ( கேள்வி கேட்கும் ) கட்டத்தை அவன் அடையும்போது அவர் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடட்டும் . ( இத்தகைய சிந்தனையிலிருந்து ) விலகிக்கொள்ளட்டும் .
(ق) عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ " إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً ". 55
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் ( பின்வருமாறு ) கூறினார்கள் : அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் ( அவை இன்னின்னவை என நிர்ணயித்து ) எழுதிவிட்டான் . பிறகு அதனை விவரித்தான் . அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என ( மனத்தில் ) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும் - அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால் , அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக , எழுநூறு மடங்காக , இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . ஆனால் , ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி , ( அல்லாஹ்வுக்கு அஞ்சி ) அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் . எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ , அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ ". 56
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( வானவர்களிடம் ) கூறுகின்றான் : என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள் . அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள் . அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள் . அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள் . அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் .
عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "الْأَعْمَالُ سِتَّةٌ، وَالنَّاسُ أَرْبَعَةٌ، فَمُوجِبَتَانِ، وَمِثْلٌ بِمِثْلٍ، وَحَسَنَةٌ بِعَشْرِ أَمْثَالِهَا، وَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، فَأَمَّا الْمُوجِبَتَانِ: فَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ، وَأَمَّا مِثْلٌ بِمِثْلٍ: فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ حَتَّى يَشْعُرَهَا قَلْبُهُ، وَيَعْلَمَهَا اللهُ مِنْهُ كُتِبَتْ لَهُ حَسَنَةً، وَمَنْ عَمِلَ سَيِّئَةً، كُتِبَتْ عَلَيْهِ سَيِّئَةً، وَمَنْ عَمِلَ حَسَنَةً فَبِعَشْرِ أَمْثَالِهَا، وَمَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ فَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، وَأَمَّا النَّاسُ، فَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مَقْتُورٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مُوَسَّعٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 57
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக குரைம் பின் ஃபாத்திக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நல்லறங்கள் ஆறு உள்ளன . மக்கள் நான்கு வகையினர் . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்றவை இரண்டு உள்ளன . பகரத்திற்குப் பகரமும் உண்டு . மேலும் ஒரு நன்மைக்குப் பத்து நன்மைகளும் , ஒரு நன்மைக்கு எழுநூறு ( மடங்கு ) நன்மைகளும் உண்டு . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு என்பது , யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் . யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்பதாகும் . பகரத்திற்குப் பகரம் என்பது , யார் ஒரு நன்மை செய்யவேண்டும் என்றெண்ணி அதை அவருடைய உள்ளம் உணர்ந்து , அல்லாஹ்வும் அதனை அவரிடமிருந்து அறிந்து கொள்கின்றானோ ( அதைச் செயல்படுத்தாவிட்டாலும் ) அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ ( அதற்குப் பகரமாக ) அவருக்கு ஒரு தீமை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போன்று பத்து ( மடங்கு ) நன்மைகள் வழங்கப்படுகின்றன . யார் ஒரு தடவை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை எழுநூறு மடங்காக வழங்கப்படுகிறது . மக்கள் ( நான்கு வகையினர் என்பது ) இவ்வுலகில் அவர் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) மறுமையில் அவர் ஏழையாகவும் இருப்பார் . இவ்வுலகில் ஏழையாகவும் மறுமையில் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் ஏழையாகவே இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் செல்வராகவே இருப்பார் .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الآخِرَةِ وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا حَتَّى إِذَا أَفْضَى إِلَى الآخِرَةِ لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا " . 58
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ( அவர் செய்த நற்செயலுக்கான ) நன்மையில் அநீதி இழைப்பதில்லை . அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும் . அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும் . ( ஏக ) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் ( மட்டும் ) அவருக்கு உணவளிக்கப்படும் . அவர் மறுமையை அடையும்போது , அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது .
(ق) عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ " مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ ". 59
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த (த) வற்றிற்காக ( மறுமையில் ) தண்டிக்கப்படுவோமா ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார் . " யார் இஸ்லாத்தில் இணைந்த பிறகு ( மீண்டும் இறைமறுப்பு எனும் ) தீமையைப் புரிகிறாரோ அவர் ( அறியாமைக் காலத்தில் செய்த ) முந்தைய தவறுகளுக்காகவும் , ( இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப் ) பிந்தைய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார் `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ وَصِلَةِ رَحِمٍ فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ ". 60
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நான் அறியாமைக் காலத்தில் , இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பு ‘ தர்மம் செய்தல் , அடிமைகளை விடுதலை செய்தல் , உறவினரைச் சேர் ( ந்து வாழ் ) தல் ’ போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன் . அவற்றிற்கு ( மறுமையில் எனக்கு ) நன்மை ஏதும் உண்டா ?`` என்று நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " நீர் முன்னர் செய்த நற்செயல் ( களுக்குரிய நற்பலன் ) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர் `` என்று பதிலளித்தார்கள் .
(ق)عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم " خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ". فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " وَصِيَامُ رَمَضَانَ ". قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ. قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ " لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ". قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ. قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " أَفْلَحَ إِنْ صَدَقَ ". 61
தல்ஹா பின் உபைதில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நஜ்த்வாசிகளுள் ஒருவர் தலைவிரி கோலத்துடன் ( பயணம் முடிந்த கையோடு ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . ( தூரத்திலிருந்து ) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது . ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை . அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் ( தாம் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம் )`` என்றார்கள் . அவர் “ இதைத் தவிர வேறு ( தொழுகை ) ஏதாவது என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) தொழுகையைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள் . மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே அவர் , “ இதைத் தவிர வேறு ஏதேனும் ( நோன்பு ) என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` எனக் கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பி நோற்கும் ( கூடுதலான ) நோன்பைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள் . அவர் , “ இதைத் தவிர வேறு ( ஸகாத் ) ஏதும் என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) வேறு தர்மத்தைத் தவிர `` என்றார்கள் . அந்த மனிதர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நான் இவற்றைவிடக் கூட்டவும் மாட்டேன் ; குறைக்கவும் மாட்டேன் ” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர் உண்மையாகவே ( இதைக் ) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்துவிட்டார் `` என்று சொன்னார்கள் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ الدِّينَ يُسْرٌ، وَلَنْ يُشَادَّ الدِّينَ أَحَدٌ إِلاَّ غَلَبَهُ، فَسَدِّدُوا وَقَارِبُوا وَأَبْشِرُوا، وَاسْتَعِينُوا بِالْغَدْوَةِ وَالرَّوْحَةِ وَشَىْءٍ مِنَ الدُّلْجَةِ ". 62
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : இந்த மார்க்கம் எளிதானது . இந்த மார்க்கத்தை எவரேனும் ( தம்மீது ) சிரமமானதாக ஆக்கிக்கொண்டால் , அது அவரை மிகைத்துவிடும் . எனவே , ( கூடுதலான வணக்கங்கள் உட்பட அனைத்துக் காரியங்களிலும் ) நடுநிலையையே கடைப்பிடியுங்கள் . இயன்றவற்றைச் செய்யுங்கள் ; நற்செய்தியையே சொல்லுங்கள் ; ( கூடுதல் வணக்கங்களை உற்சாகத்துடனும் நிரந்தரமாகவும் நிறைவேற்றிட ) காலையையும் மாலையையும் இரவில் சிறிது நேரத்தையும் ஒத்தாசையாக்கிக் கொள்ளுங்கள் .
(خ) عَنْ عَائِشَةَ، قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا أَمَرَهُمْ أَمَرَهُمْ مِنَ الأَعْمَالِ بِمَا يُطِيقُونَ قَالُوا إِنَّا لَسْنَا كَهَيْئَتِكَ يَا رَسُولَ اللَّهِ، إِنَّ اللَّهَ قَدْ غَفَرَ لَكَ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِكَ وَمَا تَأَخَّرَ. فَيَغْضَبُ حَتَّى يُعْرَفَ الْغَضَبُ فِي وَجْهِهِ ثُمَّ يَقُولُ " إِنَّ أَتْقَاكُمْ وَأَعْلَمَكُمْ بِاللَّهِ أَنَا ". 63
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நல்லவற்றை ( ச் செய்யுமாறு ) மக்களுக்குக் கட்டளையிட்டால் , அவர்களால் இயன்ற செயல்களையே கட்டளையிடுவார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அல்லாஹ் உங்கள் முன் பின் பாவங்களை மன்னித்துவிட்டான் . ( ஆனால் ) எங்கள் நிலையோ உங்கள் நிலையைப் போன்றதன்று ( நாங்கள் குறைந்த அளவில் நல்லறங்கள் புரிந்தால் போதாது ; அதிகமாகச் செய்ய வேண்டிய நிலையிலுள்ளோம் )`` என்று கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) உடன் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபமடைந்தார்கள் . எந்த அளவிற்கென்றால் கோபத்தின் அறிகுறி அவர்களது முகத்தில் காணப்பட்டது . பிறகு “ உங்கள் அனைவரைவிட நான் ( அல்லாஹ்வை ) நன்கு அஞ்சி நடப்பவனும் அல்லாஹ்வைப் பற்றி அறிந்தவனும் ஆவேன் `` என்று கூறினார்கள் .
عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ كَمَا يَكْرَهُ أَنْ تُؤْتَى مَعْصِيَتُهُ 64
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் அவனுக்கு ( அடியானால் ) மாறு செய்யப்படுவதை வெறுக்கிறான் .
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : إِنَّ اللَّهَ يُحِبُّ أَنْ تُؤْتَى رُخَصُهُ ، كَمَا يُحِبُّ أَنْ تُؤْتَى عَزَائِمُهُ . 65
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நிச்சயமாக அல்லாஹ் வாய்ப்புகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் . மேலும் ( அடியார்கள் ) உறுதியான தன்மைகள் கொடுக்கப்படுவதை விரும்புகிறான் .
عَنْ بُرَيْدَةَ الْأَسْلَمِيِّ ، قَالَ : خَرَجْتُ ذَاتَ يَوْمٍ لِحَاجَةٍ، فَإِذَا أَنَا بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَمْشِي بَيْنَ يَدَيَّ، فَأَخَذَ بِيَدِي، فَانْطَلَقْنَا نَمْشِي جَمِيعًا، فَإِذَا نَحْنُ بَيْنَ أَيْدِينَا بِرَجُلٍ يُصَلِّي، يُكْثِرُ الرُّكُوعَ وَالسُّجُودَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " أَتُرَاهُ يُرَائِي ؟ " فَقُلْتُ : اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، فَتَرَكَ يَدِي مِنْ يَدِهِ، ثُمَّ جَمَعَ بَيْنَ يَدَيْهِ، فَجَعَلَ يُصَوِّبُهُمَا وَيَرْفَعُهُمَا، وَيَقُولُ : " عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا ، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، عَلَيْكُمْ هَدْيًا قَاصِدًا، فَإِنَّهُ مَنْ يُشَادَّ هَذَا الدِّينَ يَغْلِبْهُ ". 66
புரைதா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் ஏதோ ஒரு தேவைக்காக வெளியே புறப்பட்டேன் . வழியில் எனக்கு முன்னால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நடந்து சென்றார்கள் . அப்போது அவர்கள் என் கையைப் பிடித்துக்கொண்டார்கள் . நாங்கள் இருவரும் நடந்துசென்றோம் . அப்போது எங்களுக்கு முன்னால் ஒரு மனிதர் தென்பட்டார் . அவர் ருகூஉவையும் சஜ்தாவையும் மிகுதியாகச் செய்தவாறு தொழுது கொண்டிருந்தார் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் , “ அவர் பிறருக்குக் காட்டுவதாக நீ கருதுகிறாயா ?” என்று கேட்டார்கள் . “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அறிவார்கள் ” என்றேன் . அப்போது அவர்கள் என் கையை விட்டுவிட்டு , பிறகு தம் இரண்டு கைகளையும் ஒன்றாகச் சேர்த்து , அவ்விரண்டையும் சமமாகச் சீராக்கி , உயர்த்தி , நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் ; நடுநிலையான வழியைக் கடைப்பிடியுங்கள் . ஏனென்றால் யார் இந்த மார்க்கத்தைக் கடுமையாக்கிக் கொள்கிறாரோ அவரை அது மிகைத்துவிடும் ” என்று கூறினார்கள் .
(ق) عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ. 67
ஷரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும் , ஸகாத் வழங்குவதாகவும் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி ( பைஅத் ) அளித்தேன் .
(م) عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " الدِّينُ النَّصِيحَةُ " قُلْنَا لِمَنْ قَالَ " لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ " . 68
தமீமுத் தாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மார்க்கம் ( தீன் ) என்பதே " நலம் நாடுவது`தான் `` என்று கூறினார்கள் . நாங்கள் , “ யாருக்கு ( நலம் நாடுவது )?`` என்று கேட்டோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வுக்கும் , அவனுடைய வேதத்துக்கும் , அவனுடைய தூதருக்கும் , முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் , அவர்களில் பொதுமக்களுக்கும் `` என்று பதிலளித்தார்கள் .
( خ ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ـ رضى الله عنهما ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ ". 69
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எவரது நாவு மற்றும் கையி ( ன் தொல்லைகளி ) லிருந்து பிற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெறுகிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யார் அல்லாஹ் தடை விதித்தவற்றிலிருந்து விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் ( துறந்தவர் ) ஆவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْمُسْلِمُ مَنْ سَلِمَ النَّاسُ مِنْ لِسَانِهِ وَيَدِهِ وَالْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ عَلَى دِمَائِهِمْ وَأَمْوَالِهِمْ " . 70
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யாரைக் குறித்து மக்கள் தம் உயிர்கள் , உடைமைகள் விஷயத்தில் அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) இறைநம்பிக்கையாளர் ( முஃமின் ) ஆவார் .
عَنْ أَنَسٍ قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْمُؤْمِنُ مَنْ أَمِنَهُ النَّاسُ، وَالْمُسْلِمُ مَنْ سَلِمَ الْمُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالْمُهَاجِرُ مَنْ هَجَرَ السُّوءَ. وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لَا يَدْخُلُ الْجَنَّةَ عَبْدٌ لَا يَأْمَنُ جَارُهُ بَوَائِقَهُ ". 71
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ யாரைக் குறித்து மக்கள் ( தம் உயிர்கள் , உடைமைகள் விஷயத்தில் ) அச்சமற்று இருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) இறைநம்பிக்கையாளர் ( முஃமின் ) ஆவார் . யாருடைய நாவிலிருந்தும் கரத்திலிருந்தும் மற்ற முஸ்லிம்கள் பாதுகாப்புப் பெற்றிருக்கிறார்களோ அவரே ( உண்மையான ) முஸ்லிம் ஆவார் . யார் தீமையைவிட்டு விலகிக்கொண்டாரோ அவரே முஹாஜிர் ( துறந்தவர் ) ஆவார் . எவனுடைய கையில் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது சத்தியமாக ! எந்த அடியாருடைய நாச வேலைகளிலிருந்து அவருடைய அண்டை வீட்டாருக்குப் பாதுகாப்பு உணர்வு ஏற்படவில்லையோ அந்த அடியார் சொர்க்கத்தில் நுழையமாட்டார் .
(م) عَنْ سُفْيَانَ بْنِ عَبْدِ اللَّهِ الثَّقَفِيِّ، قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ قُلْ لِي فِي الإِسْلاَمِ قَوْلاً لاَ أَسْأَلُ عَنْهُ أَحَدًا بَعْدَكَ - قَالَ " قُلْ آمَنْتُ بِاللَّهِ فَاسْتَقِمْ " . 72
சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் “ அல்லாஹ்வின் தூதரே ! இஸ்லாம் குறித்து ( சுருக்கமாக ) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள் . ‘ தங்களுக்குப் பிறகு யாரிடமும் ` அல்லது " தங்களைத் தவிர வேறு யாரிடமும் ` அது குறித்து நான் கேட்க வேண்டியதிருக்கலாகாது `` என்று வினவினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன் " எனக் கூறி , அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக !`` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لأَخِيهِ مَا يُحِبُّ لِنَفْسِهِ ". 73
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் .
سَمِعْتُ أَنَسًا يُحَدِّثُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ، وَحَتَّى يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ ". 74
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவர் தமக்கு விரும்புவதையே மக்களுக்கும் விரும்பாத வரை ( முழுமையான ) இறைநம்பிக்கை கொண்டவர் ஆக மாட்டார் . ( உங்களுள் ஒருவர் ) அல்லாஹ்வுக்காகவே தவிர ஒரு மனிதரை விரும்பாத வரை அவர் ( இறைநம்பிக்கை கொண்டவராக ) விரும்பியவராக ஆக மாட்டார் .
عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا يَبْلُغُ عَبْدٌ حَقِيقَةَ الْإِيمَانِ حَتَّى يُحِبَّ لِلنَّاسِ مَا يُحِبُّ لِنَفْسِهِ مِنَ الْخَيْرِ . 75
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் அடியார் தமக்கு விரும்புகிற நன்மையையே மக்களுக்கும் விரும்பாத வரை இறைநம்பிக்கையின் உண்மை நிலையை அடைந்துகொள்ள மாட்டார் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ". 76
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும் . அவன் பேசும்போது பொய் பேசுவான் ; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் ; அவனிடம் நம்பி ( ஏதேனுமொன்றை ) ஒப்படைத்தால் ( அதில் ) மோசடி செய்வான் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ " أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ". 77
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் ( முனாஃபிக் ) ஆவான் . எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும் . ( ஏதேனுமொன்றை ) நம்பி ஒப்படைக்கப்பட்டால் ( அதில் ) மோசடி செய்வதும் , பேசும்போது பொய் சொல்வதும் , ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும் , வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை ( நான்கும் ).
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ خَامَةِ الزَّرْعِ، يَفِيءُ وَرَقُهُ مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ تُكَفِّئُهَا، فَإِذَا سَكَنَتِ اعْتَدَلَتْ، وَكَذَلِكَ الْمُؤْمِنُ يُكَفَّأُ بِالْبَلاَءِ، وَمَثَلُ الْكَافِرِ كَمَثَلِ الأَرْزَةِ صَمَّاءَ مُعْتَدِلَةً حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ ". 78
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும் . காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும் . காற்று ( அடிப்பது ) நின்றுவிட்டால் நேராக நிற்கும் . இவ்வாறுதான் இறைநம்பிக்கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப்படுகின்றார் . ( எனினும் , அவர் பொறுமை காப்பார் .) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும் . தான் நாடும்போது அதை அல்லாஹ் ( ஒரேயடியாக ) உடைத்து ( சாய்த்து ) விடுகின்றான் .
(م) عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " مَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ الشَّاةِ الْعَائِرَةِ بَيْنَ الْغَنَمَيْنِ تَعِيرُ إِلَى هَذِهِ مَرَّةً وَإِلَى هَذِهِ مَرَّةً " . 79
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும் . ஒரு முறை இதனிடம் செல்கிறது ; மறுமுறை அதனிடம் செல்கிறது .
( خ ) وَقَالَ إِبْرَاهِيمُ التَّيْمِيُّ مَا عَرَضْتُ قَوْلِي عَلَى عَمَلِي إِلاَّ خَشِيتُ أَنْ أَكُونَ مُكَذَّبًا. 80
இப்ராஹீம் அத்தய்மீ ரஹிமஹுல்லாஹ் " எனது சொல்லை எனது செயலோடு ஒப்பிட்டபோதெல்லாம் , நான் ஒரு பொய்யனாக இருப்பேனோ என்று நான் அஞ்சாமல் இருந்ததில்லை `` என்றார்கள் . இப்னு அபீமுலைக்கா ( அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அல்குறஷி - ரஹிமஹுல்லாஹ் ) கூறியதாவது : நான் நபித் தோழர்களுள் முப்பது பேரைச் சந்தித்திருக்கின்றேன் . அவர்கள் ஒவ்வொருவரும் தமக்குள் நயவஞ்சகத்தனம் ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுபவர்களாகவே இருந்தனர் . அவர்களுள் எவரும் தமக்கு ஜிப்ரீல் , மீக்காயீல் - அலைஹிமஸ்ஸலாம் - ஆகியோரின் ஈமான் இருப்பதாகக் கூறியதில்லை . ஹஸன் அல்பஸரீ ரஹிமஹுல்லாஹ் , “ இறைநம்பிக்கையாளரைத் தவிர வேறெவரும் நயவஞ்சகத்தன்மையை அஞ்சுவதில்லை . நயவஞ்சகனைத் தவிர வேறெவரும் அது விஷயத்தில் அச்சமற்று ( அலட்சியமாக ) இருப்பதில்லை `` என்று கூறியதாக அறிவிக்கப்படுகிறது .
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ، قَالَ : جَاءَتْ أُمَيْمَةُ بِنْتُ رُقَيْقَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُبَايِعُهُ عَلَى الْإِسْلَامِ، فَقَالَ : " أُبَايِعُكِ عَلَى أَنْ لَا تُشْرِكِي بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقِي، وَلَا تَزْنِي، وَلَا تَقْتُلِي وَلَدَكِ، وَلَا تَأْتِي بِبُهْتَانٍ تَفْتَرِينَهُ بَيْنَ يَدَيْكِ وَرِجْلَيْكِ، وَلَا تَنُوحِي، وَلَا تَبَرَّجِي تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى ". 81
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஒப்பந்தம் செய்துகொள்ள உமைமா பின்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . அப்போது நபியவர்கள் , நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்றும் திருடக் கூடாது என்றும் விபச்சாரம் செய்யக்கூடாது என்றும் உன் குழந்தையைக் கொலை செய்யக்கூடாது என்றும் உங்களுடைய கை கால்கள் அறிய ( அதாவது : பொய்யெனத் தெரிந்தே ) கற்பனையாக அவதூறு கூறக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்றும் அறியாமைக்கால மக்கள் சுற்றித் திரிந்ததைப்போல் ( வீதிகளில் ) சுற்றித் திரியக் கூடாது என்றும் நான் உன்னிடம் ஒப்பந்தம் செய்கிறேன் ” என்று கூறினார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَافِحُ النِّسَاءَ فِي الْبَيْعَةِ. 82
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்தபோது முஸாஃபஹா ( கைகொடுத்துச் ) செய்ததில்லை .
عَنْ َ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ، قَالَ : مَا مَسِسْتُ فَرْجِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. 83
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்ததிலிருந்து எனது வலக்கையால் என் அந்தரங்க உறுப்பைத் தொட்டதில்லை .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " يَأْتِي عَلَى النَّاسِ زَمَانٌ الصَّابِرُ فِيهِمْ عَلَى دِينِهِ كَالْقَابِضِ عَلَى الْجَمْرِ " . 84
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் தீனில் பொறுமையாக ( நீடித்து ) இருப்பவர் கையில் நெருப்புக் கங்கைப் பிடித்துக்கொண்டிருப்பவரைப் போல் ஆவார் . ( அவ்வளவு சிரமமானது .)
عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمًا فَقَالَ " يَا غُلاَمُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوِ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوِ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلاَّ بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتِ الأَقْلاَمُ وَجَفَّتِ الصُّحُفُ " . 85
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின்னால் ( வாகனத்தில் அமர்ந்து ) இருந்தேன் . அப்போது அவர்கள் , “ பையா ! நான் உனக்குச் சில விஷயங்களைக் கற்றுத் தருகிறேன் . ( அவற்றை நீ நினைவில் வைத்துக்கொள் .) நீ அல்லாஹ் ( வின் உத்தர ) வைப் பேணிக்காத்திடு ! அவன் உன்னைப் பேணிக்காப்பான் . நீ அல்லாஹ்வை ( அவனுடைய கடமைகளை ) ப் பேணி நடந்துகொள் ! அவனை உனக்கு முன்பாக நீ காண்பாய் . நீ யாசித்தால் அல்லாஹ்விடமே யாசிப்பாயாக ! உதவி கோரினால் அல்லாஹ்விடமே உதவி கோருவாயாக . அறிந்துகொள் ! உனக்கு ஏதேனும் நன்மை செய்ய ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஒன்று சேர்ந்தாலும் உனக்கென அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்த நன்மையையும் அவர்களால் உனக்குச் செய்ய இயலாது . ( அவ்வாறே ) உனக்கு ஏதேனும் தீங்கிழைக்க அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டாலும் உனக்கெதிராக அல்லாஹ் எதை எழுதிவிட்டானோ அதைத் தவிர வேறெந்தத் தீங்கும் அவர்களால் உனக்கு இழைத்திட இயலாது . ( விதி எழுதிய பேனாக்கள் உயர்த்தப்பட்டுவிட்டன ; ( விதி எழுதப் பெற்ற ) ஏடுகள் உலர்ந்து விட்டன ” என்று கூறினார்கள் .
عَنْ سَهْلٍ، - يَعْنِي ابْنَ سَعْدٍ - عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " وَاللَّهِ لأَنْ يُهْدَى بِهُدَاكَ رَجْلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ " . 86
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸஹ்ல் பின் ஸஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்கள் வாயிலாக ஒரேயரு மனிதருக்கு நேர்வழியளிக்கப்படுவது ( அரபியர்களின் உயரிய செல்வமான ) சிவப்பு ஒட்டகங்களை ( தர்மம் செய்வதை ) விட உங்களுக்குச் சிறந்ததாகும் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ - : " إِنَّ الْإِيمَانَ لَيَخْلَقُ فِي جَوْفِ أَحَدِكُمْ كَمَا يَخْلَقُ الثَّوْبُ الْخَلِقُ ، فَاسْأَلُوا اللَّهَ أَنْ يُجَدِّدَ الْإِيمَانَ فِي قُلُوبِكُمْ " . 87
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இறைநம்பிக்கை உங்களுள் ஒருவரின் உள்ளத்தில் , கந்தல் துணி இற்றுப்போவதைப் போல் இற்றுப்போகிறது . எனவே உங்கள் உள்ளங்களில் இறைநம்பிக்கையைப் புதுப்பிக்குமாறு அல்லாஹ்விடம் கேளுங்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفَرَّقَتِ النَّصَارَى عَلَى إِحْدَى أَوْ ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً " . 88
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . கிறிஸ்தவர்கள் எழுபத்தொன்று அல்லது எழுபத்திரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் .
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " لَتَتَّبِعُنَّ سُنَّةَ مَنْ كَانَ قَبْلَكُمْ بَاعًا بِبَاعٍ وَذِرَاعًا بِذِرَاعٍ وَشِبْرًا بِشِبْرٍ حَتَّى لَوْ دَخَلُوا فِي جُحْرِ ضَبٍّ لَدَخَلْتُمْ فِيهِ " . قَالُوا يَا رَسُولَ اللَّهِ الْيَهُودُ وَالنَّصَارَى قَالَ " فَمَنْ إِذًا " . 89
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுக்கு முன் இருந்தோரின் வழிமுறையை நீங்கள் அடி அடியாக , முழம் முழமாக , சாண் சாணாகப் பின்பற்றுவீர்கள் . இறுதியில் அவர்கள் ஓர் உடும்புப் பொந்தில் நுழைந்தால் , நீங்களும் அதில் நுழைந்து விடுவீர்கள் . அப்போது , “ அல்லாஹ்வின் தூதரே ! யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா ( நீங்கள் குறிப்பிடுகின்றீர்கள் )?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ பிறகு யாரை ?” என்று மறுவினாத் தொடுத்தார்கள் .
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ـ " افْتَرَقَتِ الْيَهُودُ عَلَى إِحْدَى وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَسَبْعُونَ فِي النَّارِ وَافْتَرَقَتِ النَّصَارَى عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ فِرْقَةً فَإِحْدَى وَسَبْعُونَ فِي النَّارِ وَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَتَفْتَرِقَنَّ أُمَّتِي عَلَى ثَلاَثٍ وَسَبْعِينَ فِرْقَةً فَوَاحِدَةٌ فِي الْجَنَّةِ وَثِنْتَانِ وَسَبْعُونَ فِي النَّارِ " . قِيلَ يَا رَسُولَ اللَّهِ مَنْ هُمْ قَالَ " الْجَمَاعَةُ " . 90
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யூதர்கள் எழுபத்தொரு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபது பிரிவினர் நரகத்தில் இருப்பர் . கிறிஸ்தவர்கள் எழுபத்து இரண்டு பிரிவுகளாகப் பிரிந்தார்கள் . ( அவர்களுள் ) எழுபத்தொரு பிரிவினர் நரகத்தில் ( நுழைவார்கள் ). ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் இருப்பர் . யாருடைய கையில் முஹம்மதுடைய ஆன்மா உள்ளதோ அவன் மீதாணையாக ! திண்ணமாக என் சமுதாயம் எழுபத்து மூன்று பிரிவுகளாகப் பிரியும் . ( அவர்களுள் ) ஒரு பிரிவினர் சொர்க்கத்தில் ( நுழைவார்கள் ). எழுபத்து இரண்டு பிரிவினர் நரகத்தில் இருப்பர் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்கள் யாவர் ?” என்று வினவப்பட்டது . அதற்கவர்கள் , “ சமுதாயக் கூட்டமைப்பு ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَبِي عَلْقَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، فِيمَا أَعْلَمُ عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " إِنَّ اللَّهَ يَبْعَثُ لِهَذِهِ الأُمَّةِ عَلَى رَأْسِ كُلِّ مِائَةِ سَنَةٍ مَنْ يُجَدِّدُ لَهَا دِينَهَا " . 91
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதை அபூஅல்க்கமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக அல்லாஹ் ஒவ்வொரு நூற்றாண்டின் தொடக்கத்திலும் இச்சமுதாயத்தின் மார்க்கத்தை ( தீனை ) ப் புதுப்பிக்கின்ற ஒருவரை இந்தச் சமுதாயத்திற்கு அனுப்புகிறான் .
عَنْ أَبِي بَكْرَةَ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ : " إِنَّ اللَّهَ سَيُؤَيِّدُ هَذَا الدِّينَ بِأَقْوَامٍ لَا خَلَاقَ لَهُمْ 92
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக உயர்ந்தோனும் மகத்துவமிக்கோனுமாகிய அல்லாஹ் , ( இஸ்லாத்தில் ) எந்தப் பங்குமில்லாத மக்களைக் கொண்டு ( கூட ) இந்த மார்க்கத்தை வலுப்படுத்துவான் .
عَنْ أَبِي أُمَامَةَ الْبَاهِلِيِّ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ : " لَتُنْقَضَنَّ عُرَى الْإِسْلَامِ عُرْوَةً عُرْوَةً، فَكُلَّمَا انْتَقَضَتْ عُرْوَةٌ تَشَبَّثَ النَّاسُ بِالَّتِي تَلِيهَا، وَأَوَّلُهُنَّ نَقْضًا الْحُكْمُ، وَآخِرُهُنَّ الصَّلَاةُ ". 93
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா அல்பாஹிலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இஸ்லாத்தின் அடிப்படைகள் ஒவ்வொன்றாக உடைக்கப்படும் . ஓர் அடிப்படை உடைபடும்போதெல்லாம் மக்கள் மற்றதை இலேசாகக் கருதுவார்கள் . அவற்றுள் முதலாவதாக உடைபடுவது ஆட்சியதிகாரம் . அவற்றுள் கடைசியாக உடைபடுவது தொழுகை .
(ق) عَنْ أَنَسٍ ـ رضى الله عنه ـ قَالَ لأُحَدِّثَنَّكُمْ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يُحَدِّثُكُمْ بِهِ أَحَدٌ غَيْرِي، سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ مِنْ أَشْرَاطِ السَّاعَةِ أَنْ يُرْفَعَ الْعِلْمُ، وَيَكْثُرَ الْجَهْلُ وَيَكْثُرَ الزِّنَا، وَيَكْثُرَ شُرْبُ الْخَمْرِ، وَيَقِلَّ الرِّجَالُ، وَيَكْثُرَ النِّسَاءُ حَتَّى يَكُونَ لِخَمْسِينَ امْرَأَةً الْقَيِّمُ الْوَاحِدُ ". 94
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : என் அல்லாத வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கப் போகிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : கல்வி அகற்றப்பட்டுவிடுவதும் , அறியாமை மலிந்துவிடுவதும் , விபச்சாரம் அதிகரித்து விடுவதும் , மது அருந்துதல் அதிகரித்து விடுவதும் , ஐம்பது பெண்களுக்கு - அவர்களை நிர்வகிக்க ஒரே ஆண் என்ற நிலைமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுந்து , ஆண்கள் குறைந்துவிடுவதும் மறுமை நாளின் அடையாளங்களுள் அடங்கும் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ، وَتَكْثُرَ الزَّلاَزِلُ، وَيَتَقَارَبَ الزَّمَانُ، وَتَظْهَرَ الْفِتَنُ، وَيَكْثُرَ الْهَرْجُ ـ وَهْوَ الْقَتْلُ الْقَتْلُ ـ حَتَّى يَكْثُرَ فِيكُمُ الْمَالُ فَيَفِيضُ ". 95
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கல்வி கைப்பற்றப்படாத வரை , நில நடுக்கங்கள் நிறைந்துவிடாத வரை , காலம் சுருங்கிடாத வரை , குழப்பங்கள் வெளிப்படாத வரை , ஹர்ஜ் ( கொந்தளிப்பு ) மிகுதியாகாத வரை , - ஹர்ஜ் என்பது கொலையாகும் , கொலையாகும் . உங்கள் மத்தியில் செல்வம் நிரம்பி வழியாத வரை இறுதி நாள் ஏற்படாது .
(خ) عن عَوْفَ بْنَ مَالِكٍ، قَالَ أَتَيْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي غَزْوَةِ تَبُوكَ، وَهْوَ فِي قُبَّةٍ مِنْ أَدَمٍ فَقَالَ " اعْدُدْ سِتًّا بَيْنَ يَدَىِ السَّاعَةِ، مَوْتِي، ثُمَّ فَتْحُ بَيْتِ الْمَقْدِسِ، ثُمَّ مُوتَانٌ يَأْخُذُ فِيكُمْ كَقُعَاصِ الْغَنَمِ، ثُمَّ اسْتِفَاضَةُ الْمَالِ حَتَّى يُعْطَى الرَّجُلُ مِائَةَ دِينَارٍ فَيَظَلُّ سَاخِطًا، ثُمَّ فِتْنَةٌ لاَ يَبْقَى بَيْتٌ مِنَ الْعَرَبِ إِلاَّ دَخَلَتْهُ، ثُمَّ هُدْنَةٌ تَكُونُ بَيْنَكُمْ وَبَيْنَ بَنِي الأَصْفَرِ فَيَغْدِرُونَ، فَيَأْتُونَكُمْ تَحْتَ ثَمَانِينَ غَايَةً، تَحْتَ كُلِّ غَايَةٍ اثْنَا عَشَرَ أَلْفًا ". 96
அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : தபூக் போரின்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நான் சென்றேன் . அவர்கள் ஒரு தோல் கூடாரத்தில் இருந்தார்கள் . அப்போது அவர்கள் , “ இறுதி நாள் வருவதற்கு முன்பு ( அதற்குரிய ) ஆறு அடையாளங்கள் நிகழும் . அவற்றை எண்ணிக்கொள் : 1. எனது மரணம் . 2. பைத்துல் மக்திஸ் வெற்றி கொள்ளப்படுதல் . 3. ஆடுகளுக்கு வருகின்ற ( ஒரு வகை ) நோயைப் போன்று கொள்ளை நோய் ஒன்று வந்து உங்களைப் பீடிக்கும் . ( அதனால் ஏராளமானவர்கள் இறந்து போய் விடுவார்கள் ) 4. பிறகு செல்வம் பெருகி வழியும் . எந்த அளவிற்கென்றால் ஒருவருக்கு நூறு தீனார்கள் கொடுக்கப்பட்ட பின்பும் ( அதனை அற்பமாகக் கருதி ) அவர் அதிருப்தியுடனிருப்பார் . 5. பிறகு தீமையன்று தோன்றும் . அரபியர்களின் வீடுகளில் அது நுழையாத வீடு எதுவும் இருக்காது . 6. பிறகு ( உரோமர்களுக்கும் ) உங்களுக்குமிடையே சமாதான ஒப்பந்தம் ஒன்று ஏற்படும் ( அதை மதிக்காமல் ) அவர்கள் ( உங்களை ) மோசடி செய்து விடுவார்கள் . பிறகு உங்களை எதிர்த்துப் போரிடுவதற்காக எண்பது கொடிகளின் கீழே ( அணி வகுத்து ) அவர்கள் வருவார்கள் . ஒவ்வொரு கொடிக்கும் கீழே பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ " بَادِرُوا بِالأَعْمَالِ سِتًّا الدَّجَّالَ وَالدُّخَانَ وَدَابَّةَ الأَرْضِ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَأَمْرَ الْعَامَّةِ وَخُوَيِّصَةَ أَحَدِكُمْ " . 97
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆறு அடையாளங்கள் நடைபெறுவதவற்குமுன் விரைந்து நற்செயல் புரியுங்கள் . சூரியன் மேற்கிலிருந்து உதித்தல் , அல்லது புகை , அல்லது தஜ்ஜால் , அல்லது ( அதிசயப் ) பிராணி , அல்லது ஒட்டுமொத்தமாக ஏற்படும் ( யுக ) முடிவு , அல்லது தனிப்பட்ட முறையில் உங்களுக்கு ஏற்படும் மரணம் ,
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ حَفِظْتُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَدِيثًا لَمْ أَنْسَهُ بَعْدُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ " إِنَّ أَوَّلَ الآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَخُرُوجُ الدَّابَّةِ عَلَى النَّاسِ ضُحًى وَأَيُّهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا فَالأُخْرَى عَلَى إِثْرِهَا قَرِيبًا " . 98
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களுள் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் .
(م) عَنْ حُذَيْفَةَ بْنِ أَسِيدٍ الْغِفَارِيِّ، قَالَ اطَّلَعَ النَّبِيُّ صلى الله عليه وسلم عَلَيْنَا وَنَحْنُ نَتَذَاكَرُ فَقَالَ " مَا تَذَاكَرُونَ " . قَالُوا نَذْكُرُ السَّاعَةَ . قَالَ " إِنَّهَا لَنْ تَقُومَ حَتَّى تَرَوْنَ قَبْلَهَا عَشْرَ آيَاتٍ " . فَذَكَرَ الدُّخَانَ وَالدَّجَّالَ وَالدَّابَّةَ وَطُلُوعَ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا وَنُزُولَ عِيسَى ابْنِ مَرْيَمَ صلى الله عليه وسلم وَيَأْجُوجَ وَمَأْجُوجَ وَثَلاَثَةَ خُسُوفٍ خَسْفٌ بِالْمَشْرِقِ وَخَسْفٌ بِالْمَغْرِبِ وَخَسْفٌ بِجَزِيرَةِ الْعَرَبِ وَآخِرُ ذَلِكَ نَارٌ تَخْرُجُ مِنَ الْيَمَنِ تَطْرُدُ النَّاسَ إِلَى مَحْشَرِهِمْ . 99
அபூஸரீஹா ஹுதைஃபா பின் அஸீத் அல்ஃகிஃபாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அறைக்குக் கீழே ) பேசிக்கொண்டிருந்தோம் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களை எட்டிப்பார்த்து , “ எதைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கிறீர்கள் ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யுக முடிவு நாளைப் பற்றி ( ப் பேசிக்கொண்டிருக்கிறோம் )`` என்று கூறினார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீங்கள் ( பெரிய ) பத்து அடையாளங்களைக் காணாத வரை யுக முடிவு நாள் ஏற்படவே செய்யாது `` என்று கூறிவிட்டு , அந்த அடையாளங்களைப் பற்றிக் கூறினார்கள் : 1. புகை , 2. தஜ்ஷால் , 3. ( பேசும் ) பிராணி , 4. மேற்கிலிருந்து சூரியன் உதிப்பது , 5. மர்யமின் புதல்வர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறங்குதல் , 6. யஃஜூஜ் , மஃஜூஜ் , 7-9. மூன்று நில நடுக்கங்கள் . ஒன்று கிழக்கிலும் , மற்றொன்று மேற்கிலும் , இன்னொன்று அரபுத் தீபகற்பத்திலும் , 10. இறுதியாக யமன் நாட்டிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி மக்களை விரட்டிக்கொண்டு வந்து ஓரிடத்தில் ஒன்றுகூட்டும் .
عَنْ عِلْبَاءَ السُّلَمِيِّ قَالَ : إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ : " لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى حُثَالَةِ النَّاسِ 100
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இல்பா அஸ்ஸுலமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கெட்ட மக்கள் மீதுதான் ( அவர்கள் மட்டும் இருக்கும் போதுதான் ) மறுமை நாள் வரும் .
عَنْ عَبْدُ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: سَمِعْتُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : " إِنَّ أَوَّلَ الْآيَاتِ خُرُوجًا طُلُوعُ الشَّمْسِ مِنْ مَغْرِبِهَا، وَخُرُوجُ الدَّابَّةِ ضُحًى، فَأَيَّتُهُمَا مَا كَانَتْ قَبْلَ صَاحِبَتِهَا، فَالْأُخْرَى عَلَى أَثَرِهَا ". 101
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து ஒரு ஹதீஸை மனனமிட்டேன் . இதுவரை அதை நான் மறக்கவில்லை . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டேன் : ( மறுமை நாளின் அடையாளங்களில் ) முதலாவதாக வெளிப்படும் அடையாளம் , சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதும் , ( பூமியிலிருந்து ) ஒரு ( அதிசயப் ) பிராணி முற்பகல் நேரத்தில் வெளிப்படுவதும் ஆகும் . இவ்விரண்டில் எது முதலில் வெளிப்பட்டாலும் மற்றொன்றும் அதைத் தொடர்ந்து வெகுவிரைவில் வெளிப்பட்டுவிடும் . பிறகு அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : - அவர் வேதங்களைப் படித்திருந்தார் - சூரியன் மேற்கிலிருந்து உதயமாவதை அவற்றுள் முதலாவது அடையாளமாக எண்ணுகிறேன் . ஏனென்றால் அது ஒவ்வொரு நாளும் அர்ஷுக்குக் கீழ் மறையும் போதெல்லாம் ( அல்லாஹ்வுக்குத் ) தலை வணங்குகிறது . மீண்டும் செல்ல அனுமதி கோருகிறது . எனவே அது மீண்டும் செல்ல அனுமதி கொடுக்கப்படுகிறது . இறுதியில் சூரியன் மேற்கிலிருந்து உதயமாக வேண்டுமென அல்லாஹ்வுக்குத் தோன்றும்போது அது ஏற்கெனவே செய்து கொண்டிருந்ததைப் போல ( அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு ) மேற்கிலிருந்து உதயமாகும் . அது அர்ஷுக்குக் கீழ் வரும் ; ( அவனுக்குத் ) தலை வணங்கி , திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . பிறகு ( சிறிது நேரம் கழித்து ) திரும்பிச் செல்ல அனுமதி கோரும் ; அது திரும்பிச் செல்ல எந்த அனுமதியும் வழங்கப்படாது . அல்லாஹ் நாடிய அளவு இரவு நேரம் கழிந்துவிடும் . அதற்கு அனுமதி வழங்கப்பட்டாலும் கிழக்கை அடைய முடியாது என்று அது அறிந்துகொள்ளும் . பிறகு அது , “ என் இறைவா ! கிழக்கு எவ்வளவோ தூரம் இருக்கிறதே ! எனக்காக மக்களுக்கு யார் ( பொறுப்பேற்பார் )” என்று சொல்லும் . மேல்வானம் மாலையைப் போல மாறிவிடும் . திரும்பிச் செல்ல அனுமதி கோரும் . அப்போது அதனிடம் , “ நீ உன் இடத்திலிருந்தே உதித்துக்கொள் ” என்று சொல்லப்படும் . எனவே அது ( அதே இடத்திலிருந்து ) மேற்கிலிருந்தே மக்களுக்கு உதிக்கும் . பிறகு அப்துல்லாஹ் அவர்கள் பின்வரும் வசனத்தை ஓதினார்கள் : உங்கள் இறைவனின் பெரியதோர் அத்தாட்சி ( யாகிய இறுதி நாள் ) வருவதற்கு முன்னர் நம்பிக்கை கொள்ளாதிருந்து அல்லது நம்பிக்கை கொண்டிருந்தும் யாதொரு நற்செயலும் செய்யாதிருந்துவிட்டு அந்நாளில் அவர்கள் கொள்ளும் நம்பிக்கை யாதொரு பலனையும் அளிக்காது . (7: 158)
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُمْطَرَ النَّاسُ مَطَرًا لَا تُكِنُّ مِنْهُ بُيُوتُ الْمَدَرِ ، وَلَا تُكِنُّ مِنْهُ إِلَّا بُيُوتُ الشَّعَرِ . 102
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களுக்கு மிகப்பெரும் அளவில் ஒரு மழை பொழிகின்ற வரை மறுமை நாள் நிகழாது . களி மண்ணால் ஆன எந்த வீடும் அதிலிருந்து மறைக்கப்படாது . உரோமங்களால் ஆன வீடுகளைத் தவிர வேறு எந்த வீடும் அதிலிருந்து மறையாது .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " الْآيَاتُ خَرَزَاتٌ مَنْظُومَاتٌ فِي سِلْكٍ، فَإِنْ يُقْطَعِ السِّلْكُ يَتْبَعْ بَعْضُهَا بَعْضًا . 103
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளின் ) அடையாளங்கள் ஒரு நூலில் கோர்க்கப்பட்ட பாசிகளைப் போன்றவையாகும் . அந்த நூல் அறுக்கப்பட்டால் அதில் ஒன்று மற்றொன்றைப் பின்பற்றும் . ( ஒன்றன்பின் ஒன்றாக வேகமாக வரும் ).
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَسَافَدُوا فِي الطَّرِيقِ تَسَافُدَ الْحَمِيرِ ، قُلْتُ : إِنَّ ذَاكَ لَكَائِنٌ ؟ قَالَ : نَعَمْ لَيَكُونَنَّ. 104
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ கழுதைகள் உடலுறவு கொள்வதைப்போல் வழியில் ( மக்கள் ) உடலுறவு கொள்கின்ற வரை மறுமை நாள் நிகழாது ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது நான் , “ நிச்சயமாக அது நிகழுமா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஆம் ! நிச்சயமாக அது நிகழும் ” என்று கூறினார்கள் .
عَنْ خَارِجَةَ بْنِ الصَّلْتِ الْبُرْجُمِيِّ ، قَالَ : دَخَلْتُ مَعَ عَبْدِ اللَّهِ يَوْمًا الْمَسْجِدَ ، فَإِذَا الْقَوْمُ رُكُوعٌ ، فَرَكَعَ ، فَمَرَّ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ ، فَقَالَ عَبْدُ اللهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ ثُمَّ وَصَلَ إِلى الصَّفِ،فَلَمَّا فَرِغَ سَأَلْتُهُ عَنْ قَوْلِهِ : صَدَقَ اللَّهُ وَرَسُولُهُ؟ فَقَالَ : " إِنَّهُ كَانَ يَقُولُ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُتَّخَذَ الْمَسَاجِدُ طُرُقًا ، وَحَتَّى يُسَلِّمَ الرَّجُلُ عَلَى الرَّجُلِ بِالْمَعْرِفَةِ ، وَحَتَّى تَتْجَرَ الْمَرْأَةُ وَزَوْجُهَا ، وَحَتَّى تَغْلُو الْخَيْلُ وَالنِّسَاءُ ، ثُمَّ تَرْخُصَ فَلَا تَغْلُو إِلَى يَوْمِ الْقِيَامَةِ. عبد الله هو ابن مسعود. 105
காரிஜா பின் அஸ்ஸல்த் அல்புர்ஜுமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அப்துல்லாஹ் ( பின் மஸ்ஊத் ) அவர்களுடன் மஸ்ஜிதில் நுழைந்தேன் . அப்போது மக்கள் தொழுது கொண்டிருந்தார்கள் . எனவே அவரும் தொழுகச் சென்றார் . அச்சமயத்தில் ஒரு மனிதர் கடந்து சென்றபோது அப்துல்லாஹ்வுக்கு முகமன் கூறினார் . அப்போது அப்துல்லாஹ் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று கூறினார் . பிறகு ( தொழுகை ) அணியை அடைந் ( து தொழுது முடித் ) தார் . அவர் தொழுது முடித்தபோது , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையே உரைத்தனர் ” என்று அவர் கூறியது குறித்து நான் கேட்டேன் . அப்போது அவர் , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாகத் தெரிவித்ததாவது : மஸ்ஜிதுகள் பாதைகளாக ஆக்கப்படும் வரை , ஒரு மனிதர் தாம் அறிந்த மனிதருக்கு ( மட்டும் ) முகமன் சொல்லும் வரை , கணவனோடு சேர்ந்து மனைவியும் வியாபாரம் செய்யும் வரை , குதிரைகளும் பெண்களும் விலையுயர்ந்து , பின்னர் அவற்றின் மதிப்பு குறைந்து போகும் வரை மறுமை நாள் ஏற்படாது . ( பின்னர் ) மறுமை நாள் வரை அவர்களின் மதிப்பு உயராது .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَقْتَتِلَ فِئَتَانِ فَيَكُونَ بَيْنَهُمَا مَقْتَلَةٌ عَظِيمَةٌ دَعْوَاهُمَا وَاحِدَةٌ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُبْعَثَ دَجَّالُونَ كَذَّابُونَ قَرِيبًا مِنْ ثَلَاثِينَ كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ رَسُولُ اللَّهِ. 106
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரு குழுவினர் ஒருவரோடொருவர் போரிட்டுக் கொள்ளாத வரை உலக முடிவு நாள் வராது . அவ்விரு குழுக்களுக்குமிடையே பெரும் போர் நிகழும் . ஆனால் , அவ்விரண்டும் முன்வைக்கும் வாதம் ஒன்றாகவே இருக்கும் . பெரும் பொய்யர்களான “ தஜ்ஜால்கள் ’ ஏறத்தாழ முப்பது பேர் ( உலகில் ) தோன்றாத வரை இறுதி நாள் வராது . அவர்களுள் ஒவ்வொருவனும் தன்னை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவான் .
(م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ يَدَيْ السَّاعَةِ كَذَّابِينَ. 107
ஜாபிர் பின் ஸமுரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யுக முடிவு நாளுக்குமுன் பெரும் பொய்யர்கள் சிலர் வருவார்கள் `` என்று கூறியதை நான் செவியுற்றேன் .
عَنْ ثَوْبَانَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَلْحَقَ قَبَائِلُ مِنْ أُمَّتِي بِالْمُشْرِكِينَ، وَحَتَّى يَعْبُدُوا الْأَوْثَانَ، وَإِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي ثَلَاثُونَ كَذَّابُونَ، كُلُّهُمْ يَزْعُمُ أَنَّهُ نَبِيٌّ، وَأَنَا خَاتَمُ النَّبِيِّينَ لَا نَبِيَّ بَعْدِي. 108
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தைச் சேர்ந்த சில கோத்திரத்தார் இணைவைப்பாளர்களுடன் போய்ச்சேர்ந்து , சிலைகளை வழிபடாத வரை யுகமுடிவு நாள் வராது . என் சமுதாயத்தாரில் முப்பது பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள் . அவர்களுள் ஒவ்வொருவரும் தம்மை ‘ இறைத்தூதர் ’ என்று வாதிடுவர் . ஆனால் . நான்தான் இறைத்தூதர்களுள் இறுதியானவன் ஆவேன் . எனக்குப்பின் எந்த இறைத்தூதரும் வரமாட்டார் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِي أَيِّ شَيْءٍ قَتَلَ وَلَا يَدْرِي الْمَقْتُولُ عَلَى أَيِّ شَيْءٍ قُتِلَ؟ . 109
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த இறை ) வன்மீது சத்தியமாக ! மக்களுக்கு ஒரு காலம் நிச்சயமாக வரும் . ( அப்போது ) கொலை செய்தவனுக்குத் தான் எதற்காகக் கொன்றோம் என்பது தெரியாது . கொல்லப்பட்டவனுக்குத் தான் எதற்காகக் கொல்லப்பட்டோம் என்பது தெரியாது .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْقَتْلُ الْقَتْلُ . 110
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஹர்ஜ் பெருகாத வரை யுக முடிவு நாள் வராது `` என்று கூறினார்கள் . மக்கள் , “ ஹர்ஜ் என்றால் என்ன , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ கொலை ; கொலை `` என்று பதிலளித்தார்கள் .
(م) عَنْ أَبِي سَعِيدٍ وَجَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَا : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكُونُ فِي آخِرِ الزَّمَانِ خَلِيفَةٌ يَقْسِمُ الْمَالَ وَلَا يَعُدُّهُ . 111
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் , ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : இறுதிக் காலத்தில் ஒரு கலீஃபா வருவார் . அவர் செல்வத்தை ( மக்களிடையே ) பங்கிட்டுக் கொடுப்பார் ; எண்ணிக் கணக்குப் பார்க்க மாட்டார் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنَعَتْ الْعِرَاقُ دِرْهَمَهَا وَقَفِيزَهَا وَمَنَعَتْ الشَّأْمُ مُدْيَهَا وَدِينَارَهَا وَمَنَعَتْ مِصْرُ إِرْدَبَّهَا وَدِينَارَهَا وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ وَعُدْتُمْ مِنْ حَيْثُ بَدَأْتُمْ شَهِدَ عَلَى ذَلِكَ لَحْمُ أَبِي هُرَيْرَةَ وَدَمُهُ. 112
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இராக் , தனது ( நாணயமான ) திர்ஹமையும் ( அளவையான ) கஃபீஸையும் ( தர ) மறுக்கும் . ஷாம் , ( சிரியா ) தனது ( அளவையான ) " முத்யு`வையும் தீனாரையும் ( தர ) மறுக்கும் . மிஸ்ர் ( எகிப்து ), தனது ( அளவையான ) " இர்தப்பை`யும் தீனாரையும் ( தர ) மறுக்கும் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . ஆரம்ப நிலைக்கே நீங்கள் திரும்பிச் செல்வீர்கள் . இதை அறிவித்த அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ இதற்கு அபூஹுரைராவின் சதையும் இரத்தமும் சாட்சியமளிக்கின்றன `` என்றார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَخْرُجَ رَجُلٌ مِنْ قَحْطَانَ يَسُوقُ النَّاسَ بِعَصَاهُ . 113
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : கஹ்தான் குலத்திலிருந்து ஒரு மனிதர் மக்களைத் தம் கைத்தடியால் ஓட்டிச் செல்பவராகத் தோன்றாத வரை உலக முடிவு நாள் வராது .
( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 114
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை ( கப்ரை ) க் கடந்து செல்லும்போது , ” அந்தோ ! நான் இவரது இடத்தில் ( மண்ணறைக்குள் ) இருக்கக் கூடாதா ?`` என்று ( ஏக்கத்துடன் ) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது .
( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 115
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் ஒரு மனிதர் மண்ணறையிடம் வந்து , அதில் படுத்துக்கொண்டு , இன்னாருடைய இடத்தில் நான் இருந்திருக்கக் கூடாதா ? என்று அங்கலாய்ப்பார் . அ( வ்வாறு சொல்வ ) து அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டுமென்ற பிரியம் காரணமாக இல்லை ; மாறாக அக்காலத்தில் அவர் காணும் கடுமையான சோதனைக்காகவே ( அவ்வாறு சொல்வார் ).
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا الْيَهُودَ حَتَّى يَقُولَ الْحَجَرُ وَرَاءَهُ الْيَهُودِيُّ يَا مُسْلِمُ هَذَا يَهُودِيٌّ وَرَائِي فَاقْتُلْهُ. 116
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நீங்கள் யூதர்களுடன் போர்புரியாத வரை இறுதி நாள் வராது . எந்த அளவிற்கென்றால் கல்லின் பின்னால் யூதன் ஒருவன் ( ஒளிந்து கொண்டு ) இருப்பான் . அந்தக் கல் , “ முஸ்லிமே ! இதோ , என் பின்னே ஒரு யூதன் ( ஒளிந்துகொண்டு ) இருக்கின்றான் . அவனை நீ கொன்றுவிடு `` என்று கூறும் .
(ق) أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا التُّرْكَ صِغَارَ الْأَعْيُنِ حُمْرَ الْوُجُوهِ ذُلْفَ الْأُنُوفِ كَأَنَّ وُجُوهَهُمْ الْمَجَانُّ الْمُطْرَقَةُ وَلَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُقَاتِلُوا قَوْمًا نِعَالُهُمْ الشَّعَرُ. 117
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிறிய கண்களும் சிவந்த முகங்களும் குட்டையான ( சப்பை ) மூக்குகளும் கொண்ட துருக்கியர்களுடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதிநாள் ஏற்படாது . அவர்களுடைய முகங்கள் தோலால் மூடப்பட்ட கேடயங்களைப் போன்று இருக்கும் . முடியாலான செருப்புகளை அணிந்திருக்கும் ஒரு சமுதாயத்தினருடன் நீங்கள் போர் புரியாத வரை இறுதி நாள் ஏற்படாது .
(م) عَن الْمُسْتَوْرِدُ الْقُرَشِيُّ عِنْدَ عَمْرِو بْنِ الْعَاصِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ تَقُومُ السَّاعَةُ وَالرُّومُ أَكْثَرُ النَّاسِ فَقَالَ لَهُ عَمْرٌو أَبْصِرْ مَا تَقُولُ قَالَ أَقُولُ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَئِنْ قُلْتَ ذَلِكَ إِنَّ فِيهِمْ لَخِصَالًا أَرْبَعًا إِنَّهُمْ لَأَحْلَمُ النَّاسِ عِنْدَ فِتْنَةٍ وَأَسْرَعُهُمْ إِفَاقَةً بَعْدَ مُصِيبَةٍ وَأَوْشَكُهُمْ كَرَّةً بَعْدَ فَرَّةٍ وَخَيْرُهُمْ لِمِسْكِينٍ وَيَتِيمٍ وَضَعِيفٍ وَخَامِسَةٌ حَسَنَةٌ جَمِيلَةٌ وَأَمْنَعُهُمْ مِنْ ظُلْمِ الْمُلُوكِ. 118
உலைய்யு பின் ரபாஹ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஸ்தவ்ரித் பின் ஜத்தாத் அல்குறஷீ ரளியல்லாஹு அன்ஹு , அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உரோமின் மக்கள் தொகை அதிகமாக இருக்கும்போதே யுக முடிவு ஏற்படும் ` என்று கூறியதை நான் கேட்டுள்ளேன் `` என்றார்கள் . அப்போது அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் சொல்வதை யோசித்துக்கொள்ளும் `` என்று கூறினார்கள் . அதற்கு முஸ்தவ்ரித் ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றதையே நான் சொல்கிறேன் `` என்றார்கள் . அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு , “ நீர் இவ்வாறு கூறுவீராயின் அவர்களிடையே ( உரோமர்களிடையே ) நான்கு குணங்கள் இருக்கும் ( என்பதையும் அறிந்துகொள்க ” என்றார்கள் . ( அவையாவன :) 1. அவர்கள் சோதனையின்போது மக்களிலேயே மிகவும் நிதானத்தைக் கடைப்பிடிப்பவர்கள் ஆவர் . 2. சோதனைக்குப் பின்னர் மிக விரைவாக விழித்துக்கொள்பவர்கள் . 3. ( களத்திலிருந்து ) வெருண்டோடிய பின்னர் மிக விரைவாகத் திரும்பி வருபவர்கள் . 4. ஏழைகள் , அநாதைகள் , நலிந்தோர் ஆகியோருக்கு நல்லுதவிகள் புரிபவர்கள் . ஐந்தாவதாக அவர்களிடம் அழகிய குணம் ஒன்று உண்டு . ஆட்சியாளர்களின் அநீதியிலிருந்து ( மக்களைக் ) காப்பவர்கள் .
(ق)عَنْ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَضْطَرِبَ أَلَيَاتُ نِسَاءِ دَوْسٍ عَلَى ذِي الْخَلَصَةِ وَذُو الْخَلَصَةِ طَاغِيَةُ دَوْسٍ الَّتِي كَانُوا يَعْبُدُونَ فِي الْجَاهِلِيَّةِ. 119
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தவ்ஸ் குலப்பெண்களின் புட்டங்கள் " துல்கலஸா ` கடவுள் சிலையைச் சுற்றி அசையாத வரை மறுமை நாள் வராது . " துல்கலஸா ` என்பது அறியாமைக் காலத்தில் தவ்ஸ் குலத்தார் வழிபட்டுவந்த ஒரு சிலையாகும் .
(م) عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَذْهَبُ اللَّيْلُ وَالنَّهَارُ حَتَّى تُعْبَدَ اللَّاتُ وَالْعُزَّى فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنْ كُنْتُ لَأَظُنُّ حِينَ أَنْزَلَ اللَّهُ: هُوَ الَّذِي أَرْسَلَ رَسُولَهُ بِالْهُدَى وَدِينِ الْحَقِّ لِيُظْهِرَهُ عَلَى الدِّينِ كُلِّهِ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُونَ أَنَّ ذَلِكَ تَامًّا قَالَ إِنَّهُ سَيَكُونُ مِنْ ذَلِكَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ يَبْعَثُ اللَّهُ رِيحًا طَيِّبَةً فَتَوَفَّى كُلَّ مَنْ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةِ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَيَبْقَى مَنْ لَا خَيْرَ فِيهِ فَيَرْجِعُونَ إِلَى دِينِ آبَائِهِمْ. 120
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( அறியாமைக் கால கடவுள் சிலைகளான ) " லாத்`தும் " உஸ்ஸா`வும் வழிபாடு செய்யப்படாத வரை இரவும் பகலும் ( இல்லாமற் ) போகாது `` என்று கூறியதைச் செவியுற்றேன் . நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! இணை கற்பிப்போர் வெறுத்தபோதிலும் , எல்லா மார்க்கங்களைவிட மேலோங்கச் செய்வதற்காக நல்வழியுடனும் உண்மை மார்க்கத்துடனும் அவனே தன் தூதரை அனுப்பினான் `` (9:33; 61:9) என அல்லாஹ் அருளியபோது , இந்த மார்க்கம் முழுமையடையும் என்றே நான் எண்ணிக்கொண்டிருந்தேன் . ( ஆனால் , தாங்கள் வேறு விதமாகச் சொல்கிறீர்களே !)`` என்று கூறினேன் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( உண்மைதான் ) விரைவில் அல்லாஹ் நாடிய அளவு இது நடக்கும் . பிறகு அல்லாஹ் நல்ல காற்று ஒன்றை அனுப்புவான் . அது யாரது உள்ளத்தில் கடுகுமணியளவு இறைநம்பிக்கை ( ஈமான் ) உள்ளதோ அந்த ஒவ்வொருவரையும் கைப்பற்றிக்கொள்ளும் . பிறகு எந்த நன்மையும் இல்லாதவர்களே ( பூமியில் ) எஞ்சியிருப்பர் . அவர்கள் தம் மூதாதையரின் மார்க்கத்திற்குத் திரும்பிச் சென்றுவிடுவர் `` என்று கூறினார்கள் .
( م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ اللَّهَ يَبْعَثُ رِيحًا مِنْ الْيَمَنِ أَلْيَنَ مِنْ الْحَرِيرِ فَلَا تَدَعُ أَحَدًا فِي قَلْبِهِ قَالَ أَبُو عَلْقَمَةَ : مِثْقَالُ حَبَّةٍ وَقَالَ عَبْدُ الْعَزِيزِ مِثْقَالُ ذَرَّةٍ مِنْ إِيمَانٍ إِلَّا قَبَضَتْهُ. 121
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாள் நெருங்கும்போது ) யமன் நாட்டி ( ன் திசையி ) லிருந்து பட்டைவிட மென்மையான ஒரு காற்றை அல்லாஹ் அனுப்புவான் . எவரது உள்ளத்தில் " கடுகளவு ` அல்லது " அணுவளவு ` இறைநம்பிக்கை உள்ளதோ அவ ( ரது உயி ) ரை அது கைப்பற்றிக்கொள்ளும் .
( ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ كَنْزٍ مِنْ ذَهَبٍ فَمَنْ حَضَرَهُ فَلَا يَأْخُذْ مِنْهُ شَيْئًا. 122
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மேற்காசியாவில் பாயும் ) யூப்ரட்டீஸ் நதியானது தங்கப் புதையல் ஒன்றை வெளிப்படுத்த உள்ளது . அப்போது அங்கிருப்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுத்துவிட வேண்டாம் .
(م) عَنْ أُبَيِّ بْنِ كَعْبٍ قَالَ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوشِكُ الْفُرَاتُ أَنْ يَحْسِرَ عَنْ جَبَلٍ مِنْ ذَهَبٍ فَإِذَا سَمِعَ بِهِ النَّاسُ سَارُوا إِلَيْهِ فَيَقُولُ مَنْ عِنْدَهُ لَئِنْ تَرَكْنَا النَّاسَ يَأْخُذُونَ مِنْهُ لَيُذْهَبَنَّ بِهِ كُلِّهِ قَالَ فَيَقْتَتِلُونَ عَلَيْهِ فَيُقْتَلُ مِنْ كُلِّ مِائَةٍ تِسْعَةٌ وَتِسْعُونَ . 123
உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்வருமாறு கூறியதை நான் கேட்டுள்ளேன் : யூப்ரடீஸ் நதியானது வற்றி , தங்க மலை ஒன்றை வெளிப்படுத்தப் போகிறது . அதைப் பற்றி மக்கள் கேள்விப்படும்போது , அதை நோக்கிச் செல்வார்கள் . அப்போது அந்த மலை அருகில் இருப்பவர் , “ அதிலிருந்து சிறிதளவை எடுத்துக்கொள்ளட்டும் என மக்களை நாம் விட்டுவிட்டால் , முழுவதுமாகக் கொண்டு போய் விடுவார்கள் `` என்று கூறுவார் . எனவே , அதற்காகச் சண்டையிட்டுக் கொள்வார்கள் . அப்போது ஒவ்வொரு நூறு பேரிலிருந்தும் தொண்ணூற்றொன்பது பேர் கொல்லப்படுவார்கள் .
(ق) لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ حَتَّى يُهِمَّ رَبَّ الْمَالِ مَنْ يَقْبَلُ صَدَقَتَهُ وَحَتَّى يَعْرِضَهُ فَيَقُولَ الَّذِي يَعْرِضُهُ عَلَيْهِ لَا أَرَبَ لِيْ . 124
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களிடையே செல்வம் பெருகிக் கொழிக்காத வரை மறுமை நாள் ஏற்படாது . எந்தளவுக்கெனில் அந்நாளில் பொருளுடையவர் தமது தர்மத்தை யார்தாம் வாங்கப் போகிறார் என்று கவலை கொள்வார் . மேலும் யாரிடமாவது அதைக் கொடுக்க முனைந்தால் அவர் எனக்குத் தேவையில்லை என்று கூறுவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَعُودَ أَرْضُ الْعَرَبِ مُرُوجًا وَأَنْهَارًا وَحَتَّى يَسِيرَ الرَّاكِبُ بَيْنَ الْعِرَاقِ وَمَكَّةَ لَا يَخَافُ إِلَّا ضَلَالَ الطَّرِيقِ وَحَتَّى يَكْثُرَ الْهَرْجُ قَالُوا وَمَا الْهَرْجُ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: الْقَتْلُ 125
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரபு மண் மேய்ச்சல் நிலங்களாகவும் ( கரை புரண்டோடும் ) வாய்க்கால்களாகவும் மாறாத வரை ( யுகமுடிவு நாள் நிகழாது ). இராக்கிற்கும் மக்காவிற்கும் இடையே பயணிக்கக்கூடிய ஒரு பயணி வழிப்பறிக் கொள்ளையைத் தவிர எதையும் கண்டு அஞ்சமாட்டார் . ஹர்ஜ் அதிகமாகி விடுகிற வரை ( உலக முடிவு நாள் நிகழாது ). “ அல்லாஹ்வின் தூதரே ! ஹர்ஜ் என்றால் என்ன ?” என்று கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ கொலை ” என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الْإِبِلِ بِبُصْرَى . 126
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹிஷாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி , ( ஷாம் நாட்டின் ) புஸ்ரா ( ஹவ்ரான் ) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது .
عن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَخْرُجُ نَارٌ مِنْ حَضْرَمَوْتَ أَوْ مِنْ نَحْوِ بَحْرِ حَضْرَمَوْتَ قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ تَحْشُرُ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا قَالَ عَلَيْكُمْ بِالشَّامِ . 127
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,” யுகமுடிவு நாளுக்கு முன்னால் ` ஹள்ரமவ்த்திலிருந்து , அல்லது ` ஹள்ரமவ்த் கடலின் திசையிலிருந்து ஒரு ( பெரும் ) நெருப்பு கிளம்பி மக்களை ஒன்றுதிரட்டும் ” என்று கூறினார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! ( அப்போது என்ன செய்ய வேண்டுமென ) எங்களுக்குத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள் ? என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஷாம் ( சிரியா ) நாட்டைப் பற்றிக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் .
(ق) عَنْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَغْزُو جَيْشٌ الْكَعْبَةَ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ قَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ وَفِيهِمْ أَسْوَاقُهُمْ وَمَنْ لَيْسَ مِنْهُمْ قَالَ يُخْسَفُ بِأَوَّلِهِمْ وَآخِرِهِمْ ثُمَّ يُبْعَثُونَ عَلَى نِيَّاتِهِمْ . 128
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : “ ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள் ; வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும்போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை உயிருடன் பூமிக்குள் புதையுண்டு போவார்கள் !” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள் ? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள் ; கடைவீதிகளும் இருக்குமே !” என நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்களுள் முதலாமவர் முதல் , கடைசி நபர் வரை புதையுண்டு போகத்தான் செய்வார்கள் ; எனினும் ( அதற்குப் ) பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள் !” என்றார்கள் .
(م) عَنْ أُمِّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَعُوذُ عَائِذٌ بِالْبَيْتِ فَيُبْعَثُ إِلَيْهِ بَعْثٌ فَإِذَا كَانُوا بِبَيْدَاءَ مِنْ الْأَرْضِ خُسِفَ بِهِمْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَكَيْفَ بِمَنْ كَانَ كَارِهًا قَالَ يُخْسَفُ بِهِ مَعَهُمْ وَلَكِنَّهُ يُبْعَثُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى نِيَّتِهِ . 129
உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ஒருவர் இறையில்லம் கஅபா ( எல்லை ) க்குள் அபயம் தேடி வருவார் . அவரை நோக்கிப் படையன்று அனுப்பப்படும் . அப்படையினர் ஒரு சமவெளியில் இருக்கும்போது , பூமிக்குள் புதைந்துபோய்விடுவார்கள் `` என்று சொன்னார்கள் . உடனே நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! நிர்ப்பந்தமாகப் புறப்பட்டு வந்தவரின் நிலை என்ன ?`` என்று கேட்டேன் . “ அவர்களுடன் சேர்த்து அவரும் புதைந்துபோவார் . எனினும் , மறுமை நாளில் அவரது எண்ணத்திற்கேற்ப அவர் எழுப்பப்படுவார் `` என்று கூறினார்கள் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ مَسْعُوْدٍ قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَرْنَا بِصِبْيَانٍ فِيهِمْ ابْنُ صَيَّادٍ فَفَرَّ الصِّبْيَانُ وَجَلَسَ ابْنُ صَيَّادٍ فَكَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرِهَ ذَلِكَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرِبَتْ يَدَاكَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَقَالَ لَا بَلْ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . 130
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம் . அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான் . ( எங்களைக் கண்டதும் ) சிறுவர்கள் ஓடிவிட்டனர் . இப்னு ஸய்யாத் ( மட்டும் ) அப்படியே உட்கார்ந்து கொண்டான் . அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுத்ததைப் போன்றிருந்தது . ஆகவே , அவனிடம் , “ உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும் ! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அவன் , “ இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா ?`` என்று கேட்டான் . அப்போது உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னை விடுங்கள் . நான் அவனைக் கொன்றுவிடுகிறேன் `` என்று கூறினார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீர் கருதக்கூடிய ஒருவனாக ( தஜ்ஜாலாக ) இவன் இருந்தால் , உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்ல முடியாது . ( அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களே )`` என்று சொன்னார்கள் .
(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجْنَا حُجَّاجًا أَوْ عُمَّارًا وَمَعَنَا ابْنُ صَائِدٍ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ قَالَ وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ قَالَ فَفَعَلَ قَالَ فَرُفِعَتْ لَنَا غَنَمٌ فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ فَقَالَ اشْرَبْ أَبَا سَعِيدٍ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ مَا بِي إِلَّا أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ فَقَالَ أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلًا فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِي النَّاسُ يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الْأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ كَافِرٌ وَأَنَا مُسْلِمٌ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ عَقِيمٌ لَا يُولَدُ لَهُ وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ وَقَدْ أَقْبَلْتُ مِنْ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ . 131
அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ஹஜ்ஜுக்கு , அல்லது உம்ராவுக்குச் சென்றோம் . எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான் . ( வழியில் ) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம் . ( ஓய்வெடுப்பதற்காக ) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம் . அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன் . அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான் . அப்போது நான் , “ வெயில் கடுமையாக உள்ளது . அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே `` என்றேன் . அவ்வாறே அவன் செய்தான் . அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது . உடனே அவன் சென்று , ஒரு பெரிய கோப்பை ( நிறைய பால் ) உடன் என்னிடம் வந்து , " அபூஸயீதே ! பருகுவீராக `` என்றான் . நான் , “ வெயிலும் கடுமையாக உள்ளது . பாலும் சூடாக உள்ளது ” என்று - அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல் , அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல் - சொன்னேன் . அவன் , “ அபூஸயீதே ! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டித் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன் . என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம் . அபூஸயீதே ! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும் , அன்ஸாரிகளே ! உங்களுக்குத் தெரியாமல் போகாது . ( அபூஸயீதே !) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களுள் ஒருவரல்லவா ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ‘ அவன் ( தஜ்ஜால் ) இறைமறுப்பாளன் ` என்று சொல்லவில்லையா ? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் ( தஜ்ஜால் ) குழந்தை பாக்கியமற்ற மலடன் ` என்று கூறவில்லையா ? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது ` என்று கூறவில்லையா ? நானோ , மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன் `` என்று சொன்னான் . இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன் . பிறகு அவன் , “ அறிந்துகொள்க : அல்லாஹ்வின் மீதாணையாக ! தஜ்ஜாலை நான் அறிவேன் . அவனது பிறப்பையும் , இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன் `` என்றான் . அப்போது நான் “ காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும் `` என்று கூறி ( ச் சபித்து ) விட்டேன் .
( م) عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ عَنْ نَافِعِ بْنِ عُتْبَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةٍ قَالَ فَأَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَغْرِبِ عَلَيْهِمْ ثِيَابُ الصُّوفِ فَوَافَقُوهُ عِنْدَ أَكَمَةٍ فَإِنَّهُمْ لَقِيَامٌ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ قَالَ فَقَالَتْ لِي نَفْسِي ائْتِهِمْ فَقُمْ بَيْنَهُمْ وَبَيْنَهُ لَا يَغْتَالُونَهُ قَالَ ثُمَّ قُلْتُ لَعَلَّهُ نَجِيٌّ مَعَهُمْ فَأَتَيْتُهُمْ فَقُمْتُ بَيْنَهُمْ وَبَيْنَهُ قَالَ فَحَفِظْتُ مِنْهُ أَرْبَعَ كَلِمَاتٍ أَعُدُّهُنَّ فِي يَدِي قَالَ تَغْزُونَ جَزِيرَةَ الْعَرَبِ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ فَارِسَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الرُّومَ فَيَفْتَحُهَا اللَّهُ ثُمَّ تَغْزُونَ الدَّجَّالَ فَيَفْتَحُهُ اللَّهُ. 132
நாஃபிஉ பின் உத்பா பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ஒரு போரில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம் . அப்போது கம்பளியாடை அணிந்த ஒரு கூட்டத்தார் மேற்கிலிருந்து வந்து ஒரு குன்றின் அருகில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைச் சந்தித்தார்கள் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமர்ந்து கொண்டிருந்தார்கள் . அக்கூட்டத்தார் ( அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்கு அருகில் ) நின்று கொண்டிருந்தார்கள் . அப்போது என் மனம் , “ நீ சென்று அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதருக்குமிடையே நின்றுகொள் . அல்லாஹ்வின் தூதரை அவர்கள் திடீரெனத் தாக்கிவிட வேண்டாம் `` என்று சொன்னது . பிறகு நான் , “ அவர்களுடன் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதேனும் இரகசியம் பேசிக் கொண்டிருக்கலாம் `` என்று நினைத்தேன் . பிறகு அவர்களிடம் வந்து அவர்களுக்கும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் நடுவில் நின்றுகொண்டேன் . அப்போது என் கைவிரல்களில் எண்ணியபடி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நான்கு விஷயங்களை மனனமிட்டேன் . 1. நீங்கள் அரபுத் தீபகற்பம் முழுவதையும் போரிட்டு வெற்றி காணும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 2. பிறகு பாரசீகர்களை வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 3. பிறகு உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . 4. பிறகு நீங்கள் ( மகா குழப்பவாதியான ) தஜ்ஜாலுடன் போரிட்டு அவனையும் வெற்றி கொள்ளும் நிலையை அல்லாஹ் ஏற்படுத்துவான் . நாஃபிஉ பின் உத்பா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஜாபிரே ! உரோம ( பைஸாந்திய ) ர்களுடன் போரிட்டு வெற்றி கொள்ளும் வரை தஜ்ஜால் வெளியேறி வருவதை நாம் காண மாட்டோம் .
(ق) ابْنُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي النَّاسِ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ ذَكَرَ الدَّجَّالَ فَقَالَ إِنِّي لَأُنْذِرُكُمُوهُ وَمَا مِنْ نَبِيٍّ إِلَّا أَنْذَرَهُ قَوْمَهُ لَقَدْ أَنْذَرَ نُوحٌ قَوْمَهُ وَلَكِنِّي أَقُولُ لَكُمْ فِيهِ قَوْلًا لَمْ يَقُلْهُ نَبِيٌّ لِقَوْمِهِ تَعْلَمُونَ أَنَّهُ أَعْوَرُ وَأَنَّ اللَّهَ لَيْسَ بِأَعْوَرَ . 133
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்களிடையே எழுந்து நின்று அல்லாஹ்வை அவனுக்குத் தகுதியுள்ள பண்புகளைக் கொண்டு புகழ்ந்த பிறகு தஜ்ஜாலைப் பற்றிக் கூறினார்கள் . அப்போது , “ நான் உங்களை அவனைக் குறித்து எச்சரிக்கின்றேன் . எந்த இறைத்தூதரும் அவனைக் குறித்து தம் சமூகத்தாரை எச்சரிக்காமலிருந்ததில்லை . நூஹ் அவர்கள் தம் சமூகத்தாருக்கு ( அவனைக் குறித்து ) எச்சரித்திருக்கிறார்கள் . ஆனால் , நான் அவனைப் பற்றி ( இதுவரை ) எந்த இறைத்தூதரும் தம் சமூகத்தாருக்குக் கூறாத ஓர் அடையாளத்தை உங்களுக்குச் சொல்கிறேன் . அவன் ஒற்றைக் கண்ணன் . ஆனால் , அல்லாஹ் ஒற்றைக் கண்ணன் அல்லன் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும் `` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ عُقْبَةُ بْنُ عَمْرٍو أَبي مسعود الأَنصاري أَنه قال : لِحُذَيْفَةَ أَلَا تُحَدِّثُنَا مَا سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنِّي سَمِعْتُهُ يَقُولُ إِنَّ مَعَ الدَّجَّالِ إِذَا خَرَجَ مَاءً وَنَارًا فَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهَا النَّارُ فَمَاءٌ بَارِدٌ وَأَمَّا الَّذِي يَرَى النَّاسُ أَنَّهُ مَاءٌ بَارِدٌ فَنَارٌ تُحْرِقُ فَمَنْ أَدْرَكَ مِنْكُمْ فَلْيَقَعْ فِي الَّذِي يَرَى أَنَّهَا نَارٌ فَإِنَّهُ عَذْبٌ بَارِدٌ . 134
ரிப்யீ பின் ஹிராஷ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து நீங்கள் கேட்டதை எங்களுக்கு அறிவிக்கமாட்டீர்களா ?`` என்று கேட்டார் . ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு , “ தஜ்ஜால் வெளியே வரும்போது அவனுடன் தண்ணீரும் நெருப்பும் இருக்கும் . மக்கள் எதை " இது நெருப்பு ` என்று கருதுகின்றார்களோ அது ( உண்மையில் ) குளிர்ந்த நீராக இருக்கும் . மக்கள் எதை " இது குளிர்ந்த நீர் ` என்று கருதுகின்றார்களோ , அது ( உண்மையில் ) எரித்துக் கரித்துவிடும் நெருப்பாக இருக்கும் . அவனை உங்களுள் எவர் சந்திக்கின்றாரோ அவர் , தாம் நெருப்பாகக் கருதுவதில் விழட்டும் . ஏனெனில் , அது குளிர்ந்த சுவையான நீராகும் ’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கின்றேன் `` எனச் சொன்னார்கள் .
( م) عَنْ النَّوَّاسِ بْنِ سَمْعَانَ قَالَ ذَكَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الدَّجَّالَ ذَاتَ غَدَاةٍ فَخَفَّضَ فِيهِ وَرَفَّعَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَلَمَّا رُحْنَا إِلَيْهِ عَرَفَ ذَلِكَ فِينَا فَقَالَ مَا شَأْنُكُمْ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ ذَكَرْتَ الدَّجَّالَ غَدَاةً فَخَفَّضْتَ فِيهِ وَرَفَّعْتَ حَتَّى ظَنَنَّاهُ فِي طَائِفَةِ النَّخْلِ فَقَالَ غَيْرُ الدَّجَّالِ أَخْوَفُنِي عَلَيْكُمْ إِنْ يَخْرُجْ وَأَنَا فِيكُمْ فَأَنَا حَجِيجُهُ دُونَكُمْ وَإِنْ يَخْرُجْ وَلَسْتُ فِيكُمْ فَامْرُؤٌ حَجِيجُ نَفْسِهِ وَاللَّهُ خَلِيفَتِي عَلَى كُلِّ مُسْلِمٍ إِنَّهُ شَابٌّ قَطَطٌ عَيْنُهُ طَافِئَةٌ كَأَنِّي أُشَبِّهُهُ بِعَبْدِ الْعُزَّى بْنِ قَطَنٍ فَمَنْ أَدْرَكَهُ مِنْكُمْ فَلْيَقْرَأْ عَلَيْهِ فَوَاتِحَ سُورَةِ الْكَهْفِ إِنَّهُ خَارِجٌ خَلَّةً بَيْنَ الشَّأْمِ وَالْعِرَاقِ فَعَاثَ يَمِينًا وَعَاثَ شِمَالًا يَا عِبَادَ اللَّهِ فَاثْبُتُوا. 135
நவ்வாஸ் பின் சம்ஆன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு நாள் காலையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டார்கள் . அவன் தொடர்பாக ( ப் பேசியபோது ) அவர்கள் ( சில சமயம் குரலைத் ) தாழ்த்தவும் , ( சில சமயம் ) உயர்த்தவும் செய்தார்கள் . இறுதியில் அவன் , ( அருகிலுள்ள ) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினார்கள் . பின்னர் நாங்கள் ( மறுபடியும் ) மாலைப் பொழுதில் நபியவர்களிடம் வந்தோம் . அப்போது தஜ்ஜாலைக் குறித்த அச்சம் எங்கள் முகங்களில் இருப்பதை அவர்கள் அறிந்துகொண்டு , “ உங்களுக்கு என்ன நேர்ந்தது ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! தாங்கள் ( இன்று ) காலையில் தஜ்ஜாலைப் பற்றிக் குறிப்பிட்டீர்கள் . ( அப்போது ) அவனைப் பற்றி ( க் குரலை ) த் தாழ்த்தியும் உயர்த்தியும் பேசினீர்கள் . இறுதியில் அவன் , ( அருகிலுள்ள ) பேரீச்ச மரத் தோப்புகளுக்கிடையே இருக்கிறானோ என்று நாங்கள் எண்ணும் அளவுக்குப் பேசினீர்கள் ( அதுதான் எங்கள் அச்சத்திற்குக் காரணம் )`` என்று கூறினோம் . அப்போது நபியவர்கள் , “ நான் உங்கள் விஷயத்தில் பெரிதும் அஞ்சுவது தஜ்ஜாலைக் குறித்து அல்ல ; நான் உங்களிடையே ( உயிருடன் ) இருக்கும்போது அவன் தோன்றினால் அவனிடமிருந்து உங்களைக் காக்க நானே வாதாடுவேன் . நான் உங்களிடையே இல்லாத போது அவன் வெளிப்பட்டால் , அப்போது ஒவ்வொரு ( முஸ்லிமான ) மனிதரும் தமக்காக வாதாடிக்கொள்ள வேண்டும் ; அல்லாஹ் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் எனது சார்பில் பொறுப்பாளனாக இருப்பான் . தஜ்ஜால் சுருள்முடி கொண்ட ஓர் இளைஞன் ஆவான் ; அவனது கண் ஒரே குலையில் துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும் . உருவத்தில் அவன் அப்துல் உஸ்ஸா பின் கத்தன் என்பவனை ஒத்திருப்பான் . உங்களில் யார் அவனை அடைகிறாரோ அவர் அவனுக்கெதிராக " அல்கஹ்ஃப் ` அத்தியாயத்தின் (18) ஆரம்ப வசனங்களை ஓதிக்கொள்ளட்டும் . அவன் சிரியாவுக்கும் இராக்குக்கும் இடையே உள்ள ஒரு பகுதியிலிருந்து புறப்பட்டு வந்து , வலப்பக்கத்திலும் இடப்பக்கத்திலும் அக்கிரமங்களைக் கட்டவிழ்த்துவிடுவான் ; அல்லாஹ்வின் அடியார்களே ! அப்போது நீங்கள் உறுதியோடு இருங்கள் `` என்றார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அவன் பூமியில் எத்தனை நாட்கள் தங்கியிருப்பான் ?`` என்று கேட்டோம் . அதற்கு , " நாற்பது நாட்கள் ` என்று பதிலளித்த நபியவர்கள் , “ அன்றைய ஒரு நாள் ஓர் ஆண்டைப் போன்றும் , மறுநாள் ஒரு மாதத்தைப் போன்றும் , அதற்கு அடுத்த நாள் ஒரு வாரத்தைப் போன்றும் , மற்ற நாட்கள் உங்களின் ( சாதாரண ) நாட்களைப் போன்றும் இருக்கும் `` என்று குறிப்பிட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! ஓர் ஆண்டிற்குச் சமமாக இருக்கும் அந்த ஒரு நாளில் , வழக்கமாகத் தொழும் ( ஐவேளைத் ) தொழுகைகளைத் தொழுதால் போதுமா ?`` என்று கேட்டோம் . அதற்கு நபியவர்கள் ,” இல்லை ( போதாது ); அந்த ( நீண்ட ) நாளை , அதற்கேற்ப மதிப்பிட்டு ( த் தொழுது ) கொள்ளுங்கள் `` என்று பதிலளித்தார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! பூமியில் அவன் ( சுற்றித் திரியும் ) வேகம் எப்படி இருக்கும் ?`` என்று கேட்டோம் . அதற்கு நபியவர்கள் , “ பின்னாலிருந்து காற்று விரட்டிச் செல்லும் மேகம் போன்று ( அவன் வேகமாக பூமியைச் சுற்றிவருவான் )`` என்றார்கள் . மேலும் , நபியவர்கள் கூறினார்கள் : அவன் ஒரு சமுதாயத்தாரிடம் வந்து ( தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ) அவர்களுக்கு அழைப்பு விடுப்பான் . அவர்களும் அவன்மீது நம்பிக்கை கொண்டு அவனது அழைப்புக்குப் பதிலளிப்பார்கள் . உடனே வானத்திற்கு ( மழை பொழியுமாறு ) அவன் கட்டளையிட , மழை பொழியும் . பூமிக்கு ( த் தாவரங்களை முளைக்கச் செய்யுமாறு ) கட்டளையிட , அது முளையவைக்கும் . ( அவற்றை மேய்ந்து ) அவர்களின் கால்நடைகள் ஏற்கெனவே இருந்ததைவிட நீண்ட திமில்களைக் கொண்டவையாகவும் மடி கனத்தவையாகவும் வயிறு நிரம்பியவையாகவும் மாலையில் ( வீடு ) திரும்பும் . பின்னர் , அவன் மற்றொரு சமுதாயத்தாரிடம் வந்து , ( தன்னை இறைவன் என்று ஏற்றுக்கொள்ளுமாறு ) அவர்களுக்கும் அழைப்பு விடுப்பான் . ஆனால் , அவனது அழைப்பை அவர்கள் நிராகரித்து விடுவார்கள் . அவர்களிடமிருந்து அவன் திரும்பிச் சென்றுவிடுவான் . அதனால் , அவர்கள் பஞ்சத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்டவர்களாகக் காலைப் பொழுதை அடைவார்கள் . அவர்களின் கைகளில் அவர்களின் செல்வம் ஏதும் ( எஞ்சி ) இராது . அவன் பாழடைந்த இடமொன்றைக் கடந்து செல்வான் . அதைப் பார்த்து , “ உன்னிடம் இருக்கின்ற புதையல்களை வெளிப்படுத்து `` என்று கூறுவான் . அப்போது ( வெளிப்படும் ) அந்தப் புதையல்கள் , இராணித் தேனீக்களை ( பின்பற்றிச் செல்லும் தேனீக்களை ) ப் போன்று அவனைப் பின்தொடர்ந்து செல்லும் . பின்னர் , அவன் வாட்டசாட்டமான இளைஞர் ஒருவரை அழைத்து , அவரை வாளால் வெட்டி இரு துண்டுகளாக்கி , அம்பெய்யும் தூரத்திற்கு இடைவெளி விட்டு ( அவ்விரண்டையும் ) போடுவான் . பின்னர் அந்தச் சடலத்தை அழைப்பான் . உடனே அந்த இளைஞர் முகம் ஒளிர சிரித்துக்கொண்டே எழுந்து வருவார் . இதற்கிடையே , மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் ( பூமிக்கு ) அனுப்பி வைப்பான் . அவர் ( சிரியாவின் தலைநகர் ) " திமஷ்க் ` ( டமாஸ்கஸ் ) நகரின் கிழக்குப் பகுதியிலுள்ள வெள்ளைக் கோபுரத்திற்கு அருகில் இரு வானவர்களின் இறக்கைகள்மீது தம் கைகளை வைத்தவாறு இறங்குவார் . அப்போது அவர் குங்குமப்பூ நிறத்தில் இரண்டு ஆடைகளை அணிந்திருப்பார் . அவர் தமது தலையைத் தாழ்த்தினால் நீர்த்துளி சொட்டும் ; தலையை உயர்த்தினாலோ வெண் முத்தைப் போன்று நீர்த்துளி வழியும் . அவரது மூச்சுக் காற்றைச் சுவாசிக்கும் ( அதாவது அவரை நெருங்கும் ) எந்தவோர் இறைமறுப்பாளனும் சாகாமல் இருக்கமாட்டான் . அவர் விடும் மூச்சானது அவரது பார்வை எட்டும் தூரம்வரை செல்லும் . பின்னர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் தஜ்ஜாலைத் தேடிச் செல்வார்கள் . இறுதியில் , ( பாலஸ்தீனத்திலுள்ள ) " லுத் ` எனும் நகரத்தின் தலை வாயிலருகே அவனைக் கண்டு , அவனைக் கொன்றொழிப்பார்கள் . பின்னர் தஜ்ஜாலிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய ஒரு சமுதாயத்தார் மர்யமின் மைந்தர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வருவார்கள் . அவர்களின் முகங்களை ( ப் பரிவோடு ) அவர் தடவிக் கொடுத்துச் சொர்க்கத்தில் அவர்களுக்குக் கிடைக்கவிருக்கும் படித்தரங்கள் குறித்து அவர்களுக்குத் தெரிவிப்பார் . இதற்கிடையே , ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் , “ நான் என் அடியார்கள் சிலரை வெளிவரச் செய்துள்ளேன் . அவர்களுடன் போரிட யாருக்கும் ஆற்றல் கிடையாது . எனவே , ( முஸ்லிமான ) என் அடியார்களை ( சினாயிலுள்ள ) " தூர் ` மலைக்கு அழைத்துச் சென்று பாதுகாப்பாக வையுங்கள் `` என்று ( வஹீ ) அறிவிப்பான் . பின்னர் , அல்லாஹ் " யஃஜூஜ் ` " மஃஜூஜ் ` கூட்டத்தாரை அனுப்புவான் . அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக ( க் கீழே இறங்கி ) வருவார்கள் . அவர்களில் முதல் அணியினர் ( ஜோர்தானில் உள்ள ) " தபரிய்யா ` ஏரியைக் கடந்து செல்லும்போது , அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள் . அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது . “ முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும் `` என்று பேசிக்கொள்வார்கள் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் (" தூர் ` மலையில் ) முற்றுகையிடப்படுவார்கள் . அப்போது ( ஏற்படும் பட்டினியால் ) அவர்களில் ஒருவருக்குக் காளை மாட்டின் தலை கிடைப்பது , இன்று உங்களில் ஒருவருக்கு நூறு பொற்காசுகள் கிடைப்பதைவிடச் சிறந்ததாக இருக்கும் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ( அல்லாஹ்விடம் உதவி கேட்டுப் ) பணிந்து வேண்டுவார்கள் . அப்போது யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தாரின் பிடரிகளில் புழுக்களை அல்லாஹ் அனுப்புவான் . அதனால் அவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பலியாவார்கள் . பின்னர் இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் ( மலையிலிருந்து ) தரைக்கு இறங்கி வருவார்கள் . அப்போது பூமியின் எந்தவொரு சாண் அளவு இடமும் , யஃஜூஜ் , மஃஜூஜ் கூட்டத்தாரின் ( சடலங்களிலிருந்து வெளிவரும் ) கொழுப்பாலும் துர்நாற்றத்தாலும் நிரம்பியிருப்பதையே காண்பார்கள் . உடனே இறைத்தூதர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் அவர்களுடன் இருப்போரும் அல்லாஹ்விடம் ( அவற்றை அகற்றக் கோரிப் ) பணிந்து வேண்டுவார்கள் . அப்போது அல்லாஹ் ஒட்டகங்களின் கழுத்துகளைப் போன்று ( பெரியதாக உள்ள ) பறவைகளை அனுப்புவான் . அவை அந்தப் பிணங்களைத் தூக்கிச் சென்று அல்லாஹ் நாடிய இடத்தில் வீசியெறியும் . பின்னர் அல்லாஹ் மழை பொழியச் செய்வான் . அந்த மழை எந்த மண் வீட்டிலும் , எந்த முடி வீட்டிலும் படாமல் இருக்காது . இறுதியில் , பூமியைக் கழுவி , கண்ணாடி போன்று ( சுத்தமாக ) ஆக்கி விடும் . பின்னர் பூமிக்கு , " நீ உன் கனி வர்க்கங்களை முளைக்கச் செய்வாயாக ; உன்னிடமுள்ள வளங்களை மறுபடியும் தருவாயாக `` என்று உத்தரவு பிறப்பிக்கப்படும் . அன்றைய நாளில் ( எந்த அளவுக்கு வளம் கொழிக்குமெனில் ), ஒரு குழுவினர் சேர்ந்து ஒரேயரு மாதுளம் பழத்தை உண்பர் . அதன் தொலி அவர்கள் அனைவருக்கும் நிழல் அளிக்கும் . அவர்களுக்குப் பால் வளமும் கிட்டும் . எந்த அளவுக்கென்றால் , பால் தரும் ஓர் ஒட்டகம் ஒரு பெரும் கூட்டத்துக்கே போதுமானதாயிருக்கும் . பால் தரும் பசுவொன்று ஒரு குலத்தாருக்கே போதுமானதாயிருக்கும் . பால் தரும் ஆடொன்று உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கே போதுமானதாயிருக்கும் . இந்நிலையில் , அல்லாஹ் தூய காற்று ஒன்றை அனுப்புவான் . அது அவர்களின் அக்குள்களுக்குக் கீழே நுழைந்து அவர்களைப் பிடித்துக்கொள்ளும் . இறைநம்பிக்கை கொண்ட ஒவ்வொரு முஸ்லிமின் உயிரையும் அது கைப்பற்றும் . அதையடுத்து மக்களில் தீயவர்கள் ( மட்டுமே பூமியில் ) எஞ்சியிருப்பார்கள் . அவர்கள் கழுதைகளைப் போன்று ( வெட்ட வெளியில் வைத்துப் பகிரங்கமாக ) உடலுறவு கொள்வார்கள் . அவர்கள்மீதுதான் உலக முடிவு நாள் ஏற்படும் .
(م) عَنْ فَاطِمَةَ بِنْتَ قَيْسٍ أُخْتَ الضَّحَّاكِ بْنِ قَيْسٍ وَكَانَتْ مِنْ الْمُهَاجِرَاتِ الْأُوَلِ فَقَالَ سَمِعْتِيهِ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تُسْنِدِيهِ إِلَى أَحَدٍ غَيْرِهِ فَقَالَتْ لَئِنْ شِئْتَ لَأَفْعَلَنَّ فَقَالَ لَهَا أَجَلْ حَدِّثِينِي فَقَالَتْ نَكَحْتُ ابْنَ الْمُغِيرَةِ وَهُوَ مِنْ خِيَارِ شَبَابِ قُرَيْشٍ يَوْمَئِذٍ فَأُصِيبَ فِي أَوَّلِ الْجِهَادِ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا تَأَيَّمْتُ خَطَبَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَخَطَبَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى مَوْلَاهُ أُسَامَةَ بْنِ زَيْدٍ وَكُنْتُ قَدْ حُدِّثْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّنِي فَلْيُحِبَّ أُسَامَةَ فَلَمَّا كَلَّمَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ أَمْرِي بِيَدِكَ فَأَنْكِحْنِي مَنْ شِئْتَ فَقَالَ انْتَقِلِي إِلَى أُمِّ شَرِيكٍ وَأُمُّ شَرِيكٍ امْرَأَةٌ غَنِيَّةٌ مِنْ الْأَنْصَارِ عَظِيمَةُ النَّفَقَةِ فِي سَبِيلِ اللَّهِ يَنْزِلُ عَلَيْهَا الضِّيفَانُ فَقُلْتُ سَأَفْعَلُ فَقَالَ لَا تَفْعَلِي إِنَّ أُمَّ شَرِيكٍ امْرَأَةٌ كَثِيرَةُ الضِّيفَانِ فَإِنِّي أَكْرَهُ أَنْ يَسْقُطَ عَنْكِ خِمَارُكِ أَوْ يَنْكَشِفَ الثَّوْبُ عَنْ سَاقَيْكِ فَيَرَى الْقَوْمُ مِنْكِ بَعْضَ مَا تَكْرَهِينَ وَلَكِنْ انْتَقِلِي إِلَى ابْنِ عَمِّكِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو ابْنِ أُمِّ مَكْتُومٍ وَهُوَ رَجُلٌ مِنْ بَنِي فِهْرٍ فِهْرِ قُرَيْشٍ وَهُوَ مِنْ الْبَطْنِ الَّذِي هِيَ مِنْهُ فَانْتَقَلْتُ إِلَيْهِ فَلَمَّا انْقَضَتْ عِدَّتِي سَمِعْتُ نِدَاءَ الْمُنَادِي مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُنَادِي الصَّلَاةَ جَامِعَةً فَخَرَجْتُ إِلَى الْمَسْجِدِ فَصَلَّيْتُ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكُنْتُ فِي صَفِّ النِّسَاءِ الَّتِي تَلِي ظُهُورَ الْقَوْمِ. 136
ஆமிர் பின் ஷராஹீல் அஷ்ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ளஹ்ஹாக் பின் கைஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் சகோதரியும் , முந்திய முஹாஜிர்களுள் ஒருவருமான ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் , " நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் ஒன்றை எனக்கு அறிவியுங்கள் . அது ( நேரடியாக ) நீங்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து கேட்டதாக இருக்க வேண்டும் . பிறர் மூலம் கேட்டதாக இருக்க வேண்டாம் `` என்று கேட்டேன் . அப்போது ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா , “ நீங்கள் விரும்பினால் நிச்சயமாக அவ்வாறே செய்கிறேன் `` என்றார்கள் . நான் “ ஆம் ( அவ்வாறு தான் நான் விரும்புகிறேன் ); எனக்கு ஹதீஸ் அறிவியுங்கள் `` என்றேன் . ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : நான் அன்றைய குறைஷி இளைஞர்களில் சிறந்தவர்களுள் ஒருவரான முஃகீராவின் புதல்வருக்கு வாழ்க்கைப்பட்டிருந்தேன் . அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த முதல் போரில் காயப்படுத்தப்பட்ட ( வர் ஆவா ) ர் . ( அவர் என்னை மணவிலக்குச் செய்து ) நான் விதவையாயிருந்த போது , என்னை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் ஒரு குழுவினர் பெண் கேட்டார்கள் . அவர்களுள் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் ஒருவராவார் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தம்மால் விடுதலை செய்யப்பட்ட அடிமையின் புதல்வரான உஸாமா பின் ஸைத் அவர்களுக்காக என்னைப் பெண் கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்னை நேசிப்பவர் , உஸாமாவையும் நேசிக்கட்டும் `` என்று கூறிய செய்தியை நான் அறிந்திருந்தேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் பேசியபோது , “ என் காரியம் உங்கள் கையில் உள்ளது . நீங்கள் நாடியவருக்கு என்னை மணமுடித்து வையுங்கள் `` என்று கூறினேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீ உம்மு ஷரீக்கின் இல்லத்துக்குச் சென்று தங்கி இரு `` என்று சொன்னார்கள் - உம்மு ஷரீக் ரளியல்லாஹு அன்ஹா அன்ஸாரிகளில் வசதி படைத்த பெண்மணியாகவும் அல்லாஹ்வின் பாதையில் பெருமளவில் செலவு செய்யக்கூடியவராகவும் இருந்தார் . அவரது இல்லத்தில் விருந்தாளிகள் தங்குவார்கள் .- “ அவ்வாறே செய்கிறேன் `` என்று நான் கூறினேன் . பிறகு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( வேண்டாம் ;) அப்படிச் செய்யாதே ! உம்மு ஷரீக் ஏராளமான விருந்தாளிகளை உபசரிக்கும் ஒரு பெண்மணி ஆவார் . உன் முகத்திரையோ உன் கணைக்காலிலிருந்து ஆடையோ விலகியிருக்க , நீ விரும்பாத சிலவற்றை மக்கள் பார்க்கும் நிலை ஏற்படுவதை நான் விரும்பவில்லை . எனவே , நீ உன் தந்தையின் சகோதரரான ( அம்ர் - உம்மு மக்தூம் தம்பதியரின் புதல்வரான ) அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் அவர்களின் இல்லத்துக்குச் சென்று தங்கியிரு `` என்று கூறினார்கள் . ( அப்துல்லாஹ் பின் அம்ர் பின் உம்மி மக்தூம் குறைஷிக் குலத்திலுள்ள பனூ ஃபிஹ்ர் கிளையைச் சேர்ந்தவர் ஆவார் . அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஃபாத்திமா பின்த் கைஸ் இருந்தார் .) அவ்வாறே நான் அவரது இல்லத்திற்குச் சென்று தங்கினேன் . என் காத்திருப்புக் காலம் (" இத்தா `) முடிந்தபோது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொது அறிவிப்பாளர்களுள் ஒருவர் , “ கூட்டுத் தொழுகைக்கு வாருங்கள் `` என்று அறிவிப்புச் செய்வதை நான் செவியுற்றேன் . ஆகவே , நான் பள்ளிவாசலுக்குச் சென்றேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றினேன் . அப்போது நான் ஆண்களின் தொழுகை வரிசைக்குப் பின்னால் உள்ள பெண்களின் தொழுகை வரிசையில் இருந்தேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுகையை முடித்துச் சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீது சிரித்தபடியே அமர்ந்தார்கள் . “ ஒவ்வொருவரும் தாம் தொழுத இடத்தில் அப்படியே இருங்கள் `` என்று கூறினார்கள் . பிறகு , “ நான் உங்களை ஏன் ஒன்று கூட்டினேன் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` எனக் கேட்டார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்களுக்கு ஆர்வமூட்டுவதற்கோ அச்சுறுத்துவதற்கோ நான் உங்களை ஒன்றுகூட்டவில்லை . மாறாக , ( மற்றொரு தகவலைச் சொல்வதற்காகவே ) உங்களை ஒன்று கூட்டினேன் . கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமீமுத் தாரீ எனும் ஒரு மனிதர் ( என்னிடம் ) வந்து வாக்குறுதிப் பிரமாணம் அளித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டார் . அவர் என்னிடம் ஒரு செய்தியைச் சொன்னார் . அது ( பெருங்குழப்பவாதியான ) மஸீஹுத் தஜ்ஜால் குறித்து நான் உங்களிடம் தெரிவித்திருந்த செய்திக்கு ஒத்திருந்தது . அவர் என்னிடம் கூறினார் : நான் " லக்ம் `, " ஜுதாம் ` ஆகிய குலங்களைச் சேர்ந்த முப்பது பேருடன் ஒரு கப்பலில் கடல் பயணம் மேற்கொண்டேன் . அப்போது கடல் அலை ஒரு மாத காலம் எங்களைக் கடலில் அலைக்கழித்துவிட்டது . பிறகு நாங்கள் கடலில் சூரியன் அஸ்தமிக்கும் ( மேற்குத் ) திசையில் ஒரு தீவில் ஒதுங்கினோம் . பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து அங்கிருந்த தீவுக்குள் சென்றோம் . அங்கு ( உடல் முழுவதும் அடர்ந்த ) முடிகள் நிறைந்த ஒரு பிராணி எங்களைச் சந்தித்தது . அதன் முன்பகுதி எது , பின்பகுதி எது என்றே எங்களால் அறிய முடியவில்லை . ( உடல் முழுவதும் ) முடிகள் நிறைந்திருந்ததே அதற்குக் காரணம் . அப்போது நாங்கள் , “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . அதற்கு அந்தப் பிராணி “ நான் தான் ஜஸ்ஸாஸா `` என்று சொன்னது . “ ஜஸ்ஸாஸா என்றால் என்ன ?`` என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு அந்தப் பிராணி , “ கூட்டத்தாரே ! இந்த மண்டபத்திற்கு உள்ளே இருக்கும் மனிதரை நோக்கிச் செல்லுங்கள் . அவர் உங்களைப் பற்றிய செய்தி அறிய ஆவலாக உள்ளார் `` என்று சொன்னது . அந்தப் பிராணி ஒரு மனிதனைப் பற்றிக் குறிப்பிட்டதைக் கேட்டு அது ஷைத்தானாக இருக்குமோ என்று நாங்கள் பயந்துவிட்டோம் . உடனே நாங்கள் அந்த மனிதனை நோக்கி விரைந்து நடந்தோம் . நாங்கள் அந்த மண்டபத்தைச் சென்றடைந்தோம் . அங்கு மாபெரும் உருவமுடைய மனிதன் ஒருவன் இருந்தான் . அவனைப் போன்ற ஒரு படைப்பை நாங்கள் ஒருபோதும் கண்டதில்லை . அவன் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தான் . அவனுடைய கைகள் அவனது தோளோடு சேர்த்து வைத்து இறுகக் கட்டப்பட்டிருந்தன . அவனுடைய முழங்கால்கள் கணுக்கால்களோடு சேர்த்துச் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்தன . அவனிடம் நாங்கள் , “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . " என்னைப் பற்றிய தகவலை நிச்சயம் நீங்கள் அறிந்து கொள்வீர்கள் . ( முதலில் ) நீங்கள் யார் என்று கூறுங்கள் ?`` என்று கேட்டான் . “ நாங்கள் அரபு மக்கள் . நாங்கள் கப்பலொன்றில் கடல் பயணம் மேற்கொண்டோம் . கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு ஒரு மாதக் காலமாகக் கடல் அலை எங்களை அலைக்கழித்துவிட்டது . பிறகு நீ இருக்கும் இந்தத் தீவில் நாங்கள் கரை ஒதுங்கினோம் . பிறகு நாங்கள் சிறிய மரக்கலம் ஒன்றில் அமர்ந்து இந்தத் தீவுக்குள் நுழைந்தோம் . அப்போது உடல் முழுவதும் அடர்ந்த முடிகள் கொண்ட பிராணி ஒன்று எங்களைச் சந்தித்தது . உடல் முழுவதும் முடிகள் நிறைந்திருந்த காரணத்தால் அதன் முன்பகுதி எது , பின்பகுதி எது என்று அறிய முடியவில்லை . நாங்கள் “ உனக்குக் கேடுதான் . நீ யார் ?`` என்று கேட்டோம் . அது " நான்தான் ஜஸ்ஸாஸா `` என்று சொன்னது . “ ஜஸ்ஸாஸா என்றால் என்ன ?`` என்று கேட்டோம் . அதற்கு அது , “ இந்த மண்டபத்திலுள்ள இந்த மனிதரை நோக்கிச் செல்லுங்கள் . அவர் உங்களைப் பற்றிய செய்தியை அறிய பெரும் ஆவலுடன் இருக்கிறார் `` என்று கூறியது . ஆகவேதான் , நாங்கள் உன்னை நோக்கி விரைந்து வந்தோம் . அது ஷைத்தானாக இருக்கலாம் என்பதால் எங்களால் அச்சம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை `` என்று சொன்னோம் . அப்போது அவன் , “ பைசான் பேரீச்சந் தோட்டத்தைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்றான் . “ அந்தத் தோட்டத்தில் நீ எதைப் பற்றிக் கேட்கிறாய் ?`` என்று கேட்டோம் . அதற்கு அவன் , “ அந்தப் பேரீச்சந் தோட்டத்தின் மரங்கள் கனிகள் தருகின்றனவா என்பதைப் பற்றியே நான் கேட்கிறேன் `` என்றான் . நாங்கள் " ஆம் ` என்று பதிலளித்தோம் . அவன் , “ அறிந்து கொள்ளுங்கள் . அது கனியே தராத காலம் நெருங்கிக்கொண்டிருக்கிறது `` என்று கூறினான் . பிறகு “ தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்று கேட்டான் . “ அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய் ?`` என்று நாங்கள் கேட்டோம் . அதற்கு அவன் , “ அதில் தண்ணீர் இருக்கிறதா ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது `` என்று பதிலளித்தோம் . அவன் , “ அறிந்துகொள்ளுங்கள் : அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது `` என்று சொன்னான் . பிறகு , "( ஷாம் நாட்டிலுள்ள ) ஸுஃகர் நீரூற்றைப் பற்றி எனக்குச் சொல்லுங்கள் `` என்று கேட்டான் . நாங்கள் , “ அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய் ?`` என்றோம் . அதற்கு அவன் , “ அந்த ஊற்றில் தண்ணீர் உள்ளதா ? அந்த ஊற்றுத் தண்ணீரால் மக்கள் பயிர் செய்கிறார்களா ?`` என்று கேட்டான் . நாங்கள் “ ஆம் , அதில் தண்ணீர் அதிகமாக உள்ளது . அங்குள்ளவர்கள் அந்தத் தண்ணீரால் விவசாயம் செய்கிறார்கள் `` என்று சொன்னோம் . பிறகு அவன் , “ எழுத்தறிவற்ற மக்களின் இறைத்தூதர் பற்றி எனக்குச் சொல்லுங்கள் . அவர் ( இப்போது ) என்ன செய்கிறார் ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அவர் மக்காவிலிருந்து புறப்பட்டுச் சென்று யஸ்ரிபில் ( மதீனாவில் ) தங்கியிருக்கிறார் `` என்று பதிலளித்தோம் . அவன் , “ அவருக்கும் அரபியருக்குமிடையே போர் நடந்ததா ?`` என்று கேட்டான் . நாங்கள் , " ஆம் ` என்றோம் . அவன் , “ அவர்களை அவர் என்ன செய்தார் ?`` என்று கேட்டான் . நாங்கள் , “ அவர் , தம் அருகிலுள்ள அரபியரை வெற்றி கொண்டுவிட்டார் . அரபியர் அவருக்குக் கட்டுப்பட்டு விட்டனர் `` என்று சொன்னோம் . அதற்கு அவன் , " அப்படித்தான் நடந்ததா ?`` என்று கேட்டான் . நாங்கள் " ஆம் ` என்றோம் . அவன் , “ அறிந்துகொள்ளுங்கள் . அவருக்குக் கட்டுப்பட்டு நடப்பதே அவர்களுக்கு நல்லதாகும் . ( இனி ) நான் என்னைப் பற்றி உங்களுக்குச் சொல்கிறேன் : நான்தான் மஸீஹ் ( அத்தஜ்ஜால் ) ஆவேன் . நான் ( இங்கிருந்து ) புறப்பட அனுமதிக்கப்படும் நாள் நெருங்கிக் கொண்டிருக்கிறது . நான் புறப்பட்டு வந்து , நாற்பது நாட்களில் பூமியில் எந்த ஓர் ஊரையும் விட்டுவைக்காமல் பூமியெங்கும் பயணம் செய்வேன் ; மக்காவையும் தைபா ( மதீனா ) வையும் தவிர ! அவ்விரண்டிற்குள்ளேயும் நுழைய எனக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது . அவ்விரு நகரங்களில் ஏதேனும் ஒன்றில் நுழைய நான் நாடும் போதெல்லாம் என்னை நோக்கி வானவர் ஒருவர் வருவார் . அவரது கையில் உருவிய வாள் இருக்கும் . ( அதை வைத்து ) அதற்குள் நுழைய விடாமல் அவர் என்னைத் தடுத்துவிடுவார் . அதன் ஒவ்வொரு நுழைவாயிலிலும் வானவர் ஒருவர் இருந்து , அதைக் காவல் காத்துக்கொண்டிருப்பார் `` என்று கூறினான் . இதைக் கூறியபின் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , தம்மிடமிருந்த கைத்தடியால் சொற்பொழிவு மேடைமீது குத்தியவாறு இது - அதாவது மதீனா நகரம்-தான் தைபா ; இதுதான் தைபா ; இதுதான் தைபா `` என்று கூறிவிட்டு , “ இதைப் பற்றி நான் உங்களுக்கு ( முன்பே ) அறிவித்துள்ளேன் அல்லவா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ ஆம் ( அறிவித்தீர்கள் )`` என்று பதிலளித்தனர் . “ தமீமுத்தாரீ சொன்ன இந்தச் செய்தி , தஜ்ஜாலைப் பற்றியும் மதீனா மற்றும் மக்கா பற்றியும் நான் ஏற்கெனவே உங்களிடம் கூறியிருந்ததற்கு ஒப்பவே அமைந்திருக்கிறது `` என்று கூறினார்கள் . பிறகு அறிந்து கொள்ளுங்கள் : அ( ந்தத் தீவான ) து , ஷாம் நாட்டுக் கடலில் , அல்லது யமன் நாட்டுக் கடலில் உள்ளது . இல்லை ; அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது . அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது . அது கிழக்குப் பகுதிக் கடலில் உள்ளது `` என்று ( அறுதியிட்டுச் ) சொன்னார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைக் கூறியபோது கிழக்குத் திசையை நோக்கித் தமது கரத்தால் சைகை செய்தார்கள் . ஃபாத்திமா பின்த் கைஸ் ரளியல்லாஹு அன்ஹா கூறினார்கள் : இதை நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்தே மனனமிட்டேன் .
(ق) عَنْ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ . 137
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! மர்யமின் புதல்வர் ( ஈஸா ) உங்களிடம் நேர்மையான ( தீர்ப்பு சொல்லும் ) நீதிபதியாக இறங்கவிருக்கிறார் ! அவர் சிலுவையை உடைப்பார் ! பன்றியைக் கொல்வார் ! காப்புவரியை (- ஜிஸ்யா ) நீக்குவார் ! ( அந்நாளில் ) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் .
عَنْ مُجَمِّعَ ابْنَ جَارِيَةَ الْأَنْصَارِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَّالَ بِبَابِ لُدٍّ 138
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஜம்மிஉ பின் ஜாரியா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மர்யமின் மைந்தர் ( ஈஸா அலைஹிஸ்ஸலாம் ) தஜ்ஜாலை லுத் எனும் ஊரின் வாசலில் வைத்துக் கொலை செய்வார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ . 139
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எனக்கும் அவருக்கும் ( ஈஸா ) இடையே எந்த நபியும் இல்லை . திண்ணமாக அவர் இறங்கி வரக்கூடியவர் ஆவார் . நீங்கள் அவரைக் கண்டால் ( பின்வரும் அடையாளங்களை வைத்து ) அவரை அறிந்து கொள்ளுங்கள் . நடுநிலையான உயரமும் சிவப்பான உடலமைப்பும் கொண்டவர் . மஞ்சள் வண்ணம் கொண்ட இரண்டு ஆடைகள் அணிந்தவராக இருப்பார் . அவருடைய தலையில் ஈரம் இல்லாவிட்டாலும் துளித் துளியாய் நீர் சொட்டுவதைப் போன்று இருக்கும் . இஸ்லாமிய மார்க்கத்திற்காக மக்களிடம் போரிடுவார் . அவர் சிலுவையை உடைப்பார் ; பன்றியைக் கொல்வார் ; காப்புவரியை (- ஷிஸ்யா ) நீக்குவார் . அவருடைய காலத்தில் அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர ஏனைய எல்லா மதங்களையும் அழித்துவிடுவான் . மேலும் மஸீஹுத் தஜ்ஜாலைக் கொலை செய்வார் . ( பிறகு ) பூமியில் அவர் நாற்பது ஆண்டுகள் தங்கியிருப்பார் . பிறகு இறந்துவிடுவார் . ஆகவே அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடத்துவர் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا فَإِذَا طَلَعَتْ فَرَآهَا النَّاسُ آمَنُوا أَجْمَعُونَ فَذَلِكَ حِينَ لَا يَنْفَعُ نَفْسًا إِيمَانُهَا لَمْ تَكُنْ آمَنَتْ مِنْ قَبْلُ أَوْ كَسَبَتْ فِي إِيمَانِهَا خَيْرًا وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ نَشَرَ الرَّجُلَانِ ثَوْبَهُمَا بَيْنَهُمَا فَلَا يَتَبَايَعَانِهِ وَلَا يَطْوِيَانِهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ انْصَرَفَ الرَّجُلُ بِلَبَنِ لِقْحَتِهِ فَلَا يَطْعَمُهُ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَهُوَ يَلِيطُ حَوْضَهُ فَلَا يَسْقِي فِيهِ وَلَتَقُومَنَّ السَّاعَةُ وَقَدْ رَفَعَ أُكْلَتَهُ إِلَى فِيهِ فَلَا يَطْعَمُهَا . 140
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மேற்கிலிருந்து சூரியன் உதயமாகாத வரை மறுமை நாள் வராது . அவ்வாறு அது மேற்கிலிருந்து உதயமாகும்போது அதைப் பார்த்துவிட்டு மக்கள் அனைவரும் ஒட்டு மொத்தமாக இறைநம்பிக்கை கொள்வார்கள் . ஆனால் , முன்பே இறைநம்பிக்கை கொண்டிராத , அல்லது இறைநம்பிக்கை கொண்டிருந்தாலும் நன்மையேதும் செய்திராத எந்த மனிதருக்கும் அந்த நேரத்தில் கொள்ளும் நம்பிக்கை பயனளிக்காது . இரண்டு பேர் ( விற்பனைக்காகத் ) துணிகளை விரித்து ( ப் பார்த்து ) க் கொண்டிருப்பார்கள் . அதனை அவர்கள் விற்பனை செய்திருக்கவுமாட்டார்கள் ; சுருட்டிக்கூட வைத்திருக்கவுமாட்டார்கள் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . மேலும் , ஒரு மனிதர் மடிகனத்த தமது ஒட்டகத்தி ( ல் பால் கறந்து அப்போது தா ) ன் பாலுடன் ( வீடு ) திரும்பியிருப்பார் ; இன்னும் அதைப் பருகிக்கூட இருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . ஒருவர் தமது நீர்த் தொட்டியை ( அப்போதுதான் ) கல்வைத்துப் பூசியிருப்பார் ; இன்னும் அதில் நீர் இறைத்திருக்கமாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்துவிடும் . உங்களுள் ஒருவர் தமது உணவை ( அப்போதுதான் ) வாயருகில் கொண்டு சென்றிருப்பார் ; அதை உண்டிருக்க மாட்டார் . அதற்குள் மறுமை சம்பவித்து விடும் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ وَتَكُونَ السَّاعَةُ كَاحْتِرَاقِ السَّعَفَةِ الْخُوصَةِ . 141
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : காலம் சுருங்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது ஓர் ஆண்டு ஒரு மாதத்தைப் போன்றும் , ஒரு மாதம் ஒரு வாரத்தைப் போன்றும் . ஒரு வாரம் ஒரு நாள் போன்றும் , ஒரு நாள் ஒரு மணி நேரத்தைப் போன்றும் , ஒரு மணி நேரம் தீ பற்றவைக்கும் ( ஒரு நொடி ) நேரத்தைப் போன்றும் மாறிவிடும் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ . 142
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த ஏக இறை ) வன் மீதாணையாக ! மனிதர்களிடம் விலங்குகள் பேசுகின்ற நாள் வராமல் யுகமுடிவு நாள் ஏற்படாது . மேலும் ஒரு மனிதரிடம் அவரது சாட்டை முனையும் அவரது செருப்பின் வாரும் பேசாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது . அப்போது அவரது தொடை அவர் இல்லாதபோது அவருடைய வீட்டார் செய்ததை அவரிடம் எடுத்துரைக்கும் .
عَنْ أَبِي الطُّفَيْلِ ، قَالَ : كُنَّا جُلُوسًا عِنْدَ حُذَيْفَةَ فَذُكِرَتِ الدَّابَّةُ ، فَقَالَ حُذَيْفَةُ - رَضِيَ اللَّهُ عَنْهُ - : " إِنَّهَا تَخْرُجُ ثَلَاثَ خَرْجَاتٍ فِي بَعْضِ الْبَوَادِي ، ثُمَّ تَكْمُنُ ، ثُمَّ تَخْرُجُ فِي بَعْضِ الْقُرَى حَتَّى يُذْعَرُوا وَحَتَّى تُهَرِيقَ فِيهَا الْأُمَرَاءُ الدِّمَاءَ ، ثُمَّ تَكْمُنُ ، قَالَ : فَبَيْنَمَا النَّاسُ عِنْدَ أَعْظَمِ الْمَسَاجِدِ وَأَفْضَلِهَا وَأَشْرَفِهَا - حَتَّى قُلْنَا الْمَسْجِدَ الْحَرَامَ وَمَا سَمَّاهُ - إِذِ ارْتَفَعَتِ الْأَرْضُ وَيَهْرُبُ النَّاسُ ، وَيَبْقَى عَامَّةٌ مِنَ الْمُسْلِمِينَ يَقُولُونَ : إِنَّهُ لَنْ يُنْجِيَنَا مِنْ أَمْرِ اللَّهِ شَيْءٌ ، فَتَخْرُجُ فَتَجْلُو وُجُوهَهُمْ حَتَّى تَجْعَلَهَا كَالْكَوَاكِبِ الدُّرِّيَّةِ ، وَتَتْبَعُ النَّاسَ ، جِيرَانٌ فِي الرِّبَاعِ شُرَكَاءُ فِي الْأَمْوَالِ وَأَصْحَابٌ فِي الْإِسْلَامِ . 143
அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாங்கள் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தோம் . அப்போது நான் தாப்பத்து ( ல் அர்ள் எனும் அதிசயப் பிராணி ) குறித்து நினைவு கூர்ந்தேன் . அப்போது ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : சில நகர்ப்புறங்களில் இருந்து அது மூன்று தடவைகள் வெளியேறிவரும் . பிறகு மறைந்துவிடும் . பிறகு சில கிராமங்களில் இருந்து அது வெளியேறிவந்து அங்குள்ள செல்வர்களைக் கொன்றுபோடும் . பிறகு மறைந்துவிடும் . மேலும் கூறினார்கள் : மிக மகத்தான , மிகச் சிறந்த , சிறப்புவாய்ந்த மஸ்ஜிதில் மக்கள் இருக்கும்போது - என்று கூறி , அதன் பெயரைக் கூறவில்லை . அது மஸ்ஜிதுல் ஹராம் என்று நாங்கள் கூறிக்கொண்டோம் - நிலப்பகுதி உயர்ந்துவிடும் . மக்கள் வெருண்டோடுவார்கள் . ( ஆனால் ஈமானில் உறுதியான ) முஸ்லிம்கள் ( அதே இடத்திலேயே ) அப்படியே இருந்துகொண்டு , “ அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எந்த ஒன்றும் நம்மைக் காப்பாற்ற முடியாது ” என்று கூறுவார்கள் . அது வெளியேறிவந்து , அவர்களுடைய முகங்களை துர்ரிய்யா எனும் நட்சத்திரங்கள் ஒளிர்வதைப் போன்று ஒளிமயமாக்கிவிடும் . வீடுகளில் வசிக்கின்ற அண்டைவீட்டுக்காரர்கள் - அவர்கள் செல்வங்களில் கூட்டாளிகளாகவும் இஸ்லாமிய மார்க்கத்தில் தோழர்களாகவும் இருந்தவர்கள் - ( வெருண்டோடுகின்ற ) அந்த மக்களைப் பின்பற்றிச் செல்வார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَخْرُجُ الدَّابَّةُ وَمَعَهَا خَاتَمُ سُلَيْمَانَ بْنِ دَاوُدَ وَعَصَا مُوسَى بْنِ عِمْرَانَ عَلَيْهِمَا السَّلَام فَتَجْلُو وَجْهَ الْمُؤْمِنِ بِالْعَصَا وَتَخْطِمُ أَنْفَ الْكَافِرِ بِالْخَاتِمِ حَتَّى أَنَّ أَهْلَ الْحِوَاءِ لَيَجْتَمِعُونَ فَيَقُولُ هَذَا يَا مُؤْمِنُ وَيَقُولُ هَذَا يَا كَافِرُ . 144
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அதிசயப் பிராணி தோன்றும் . அதனுடன் சுலைமான் பின் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மோதிரமும் மூஸா பின் இம்ரான் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கைத்தடியும் வெளிப்படும் . அக்கைத்தடியால் அது இறைநம்பிக்கையாளரின் முகத்தை ஒளிரச் செய்யும் . அம்மோதிரத்தால் அது இறைமறுப்பாளரின் மூக்கைத் துண்டிக்கும் . அதற்குள் அங்கு வசிப்பவர்கள் ஒன்றிணைந்து விடுவார்கள் . அப்போது ஒருவர் , இறைநம்பிக்கையாளரே என்று அழைப்பார் . மற்றொருவர் , இறைமறுப்பாளனே என்று அழைப்பார் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تُفْتَحُ يَأْجُوجُ وَمَأْجُوجُ فَيَخْرُجُونَ كَمَا قَالَ اللَّهُ تَعَالَى وَهُمْ مِنْ كُلِّ حَدَبٍ يَنْسِلُونَ فَيَعُمُّونَ الْأَرْضَ وَيَنْحَازُ مِنْهُمْ الْمُسْلِمُونَ حَتَّى تَصِيرَ بَقِيَّةُ الْمُسْلِمِينَ فِي مَدَائِنِهِمْ وَحُصُونِهِمْ وَيَضُمُّونَ إِلَيْهِمْ مَوَاشِيَهُمْ حَتَّى أَنَّهُمْ لَيَمُرُّونَ بِالنَّهَرِ فَيَشْرَبُونَهُ حَتَّى مَا يَذَرُونَ فِيهِ شَيْئًا فَيَمُرُّ آخِرُهُمْ عَلَى أَثَرِهِمْ فَيَقُولُ قَائِلُهُمْ لَقَدْ كَانَ بِهَذَا الْمَكَانِ مَرَّةً مَاءٌ وَيَظْهَرُونَ عَلَى الْأَرْضِ فَيَقُولُ قَائِلُهُمْ هَؤُلَاءِ أَهْلُ الْأَرْضِ قَدْ فَرَغْنَا مِنْهُمْ وَلَنُنَازِلَنَّ أَهْلَ السَّمَاءِ حَتَّى إِنَّ أَحَدَهُمْ لَيَهُزُّ حَرْبَتَهُ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ مُخَضَّبَةً بِالدَّمِ فَيَقُولُونَ قَدْ قَتَلْنَا أَهْلَ السَّمَاءِ فَبَيْنَمَا هُمْ كَذَلِكَ إِذْ بَعَثَ اللَّهُ دَوَابَّ كَنَغَفِ الْجَرَادِ فَتَأْخُذُ بِأَعْنَاقِهِمْ فَيَمُوتُونَ مَوْتَ الْجَرَادِ يَرْكَبُ بَعْضُهُمْ بَعْضًا فَيُصْبِحُ الْمُسْلِمُونَ لَا يَسْمَعُونَ لَهُمْ حِسًّا فَيَقُولُونَ مَنْ رَجُلٌ يَشْرِي نَفْسَهُ وَيَنْظُرُ مَا فَعَلُوا فَيَنْزِلُ مِنْهُمْ رَجُلٌ قَدْ وَطَّنَ نَفْسَهُ عَلَى أَنْ يَقْتُلُوهُ فَيَجِدُهُمْ مَوْتَى فَيُنَادِيهِمْ أَلَا أَبْشِرُوا فَقَدْ هَلَكَ عَدُوُّكُمْ فَيَخْرُجُ النَّاسُ وَيَخْلُونَ سَبِيلَ مَوَاشِيهِمْ فَمَا يَكُونُ لَهُمْ رَعْيٌ إِلَّا لُحُومُهُمْ فَتَشْكَرُ عَلَيْهَا كَأَحْسَنِ مَا شَكِرَتْ مِنْ نَبَاتٍ أَصَابَتْهُ قَطُّ . 145
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ( உள்ள கதவு ) திறக்கப்படும் . அவர்கள் அதிலிருந்து வெளியேறி வருவார்கள் . உயர்ந்தோன் அல்லாஹ் அது பற்றிக் கூறுகின்றான் : அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலிருந்தும் பரவி வருவார்கள் . (21: 96) பூமியைச் சூழ்ந்துகொள்வார்கள் . அவர்களிலிருந்து முஸ்லிம்கள் வெருண்டோடிவிடுவார்கள் . எஞ்சியுள்ள முஸ்லிம்கள் தம்முடைய கால்நடைகளைத் தம்மோடு எடுத்துக்கொண்டு தங்களுடைய நகரங்களிலும் கோட்டைகளிலும் இருப்பார்கள் . ( யஃஜூஜ் மஃஜூஜ் செல்லும் வழியில் ) அவர்கள் நதியைக் கடந்து செல்வார்கள் . அதில் தண்ணீர் பருகுவார்கள் . அதில் எதையும் மிச்சம் வைக்கமாட்டார்கள் . அவர்களுள் கடைசியில் உள்ளவர் ( அவர்களுள் உள்ள ) கால் தடத்தைப் பின்பற்றிச் செல்வார் . அவர்களுள் ஒருவர் இந்த இடத்தில் ஒரு காலத்தில் தண்ணீர் இருந்தது . அது நிலத்தில் பரவியிருந்தது என்று கூறுவார் . அவர்களுள் ஒருவர் , இவர்கள் நிலவாசிகள் . இவர்களை நாங்கள் முடித்துவிட்டோம் . இப்போது நாம் வானத்திலுள்ளோரிடம் சண்டையிடுவோம் என்று கூறுவார் . ஆகவே அவர்களுள் ஒருவர் தம்முடைய அம்பை வானத்தை நோக்கி எறிவார் . அது இரத்தம் தோய்க்கப்பட்டதாகத் திரும்பிவரும் . அப்போது அவர்கள் , நாம் இப்போது வானத்திலுள்ளோரைக் கொன்றுவிட்டோம் என்று கூறுவார்கள் . ( ஆனால் ) அவர்களோ அவ்வாறே ( உயிருடன் ) இருப்பார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் வெட்டுக்கிளிக் கூட்டத்தைப்போல் பூச்சிகளை அனுப்பிவைப்பான் . அவை அவர்களின் கழுத்துகளைப் பிடித்துக்கொள்ளும் . எனவே அவர்கள் வெட்டுக்கிளிகளைப் போல இறந்துபோவார்கள் . அவர்களுள் ஒருவர் மற்றொருவர் மீது சாய்ந்து கிடப்பார் . காலையில் முஸ்லிம்கள் அவர்களைப் பற்றி எந்தச் சத்தத்தையும் செவியுறமாட்டார்கள் . ஆகவே முஸ்லிம்கள் , எவர் தம் ஆன்மாவை அல்லாஹ்வுக்காக விற்று ( அடைமானம் வைத்து ) அவர்கள் என்ன ஆனார்கள் என்று பார்த்துவருவார் ? எனக் கேட்பார்கள் . ( அது கேட்டு ) அவர்களுள் ஒருவர் இறங்குவார் . அவர் தம்மை அவர்கள் கொல்வார்கள் என்று தம்மைத் தயார்படுத்திக் கொண்டு செல்வார் . அவர்களோ இறந்து கிடப்பதைக் கண்டு முஸ்லிம்களை அழைத்து , நற்செய்தி பெறுங்கள் . உங்களுடைய எதிரிகள் அழிந்துவிட்டனர் என்று கூறுவார் . எனவே மக்கள் அனைவரும் வெளியேறி வந்து , தம்முடைய கால்நடைகளை ஓட்டிக்கொண்டு வருவார்கள் . அந்தக் கால்நடைகள் மேய்வதற்கு அவர்களுடைய இறைச்சிகளைத் தவிர வேறெதுவும் அங்கு இருக்காது . எனவே அவை அது வரை காணாத உணவான அந்த இறைச்சிகளைத் தின்று மிக அழகிய முறையில் கொழுத்துவிடும் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ يَأْجُوجَ وَمَأْجُوجَ يَحْفِرُونَ كُلَّ يَوْمٍ حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَنَحْفِرُهُ غَدًا فَيُعِيدُهُ اللَّهُ أَشَدَّ مَا كَانَ حَتَّى إِذَا بَلَغَتْ مُدَّتُهُمْ وَأَرَادَ اللَّهُ أَنْ يَبْعَثَهُمْ عَلَى النَّاسِ حَفَرُوا حَتَّى إِذَا كَادُوا يَرَوْنَ شُعَاعَ الشَّمْسِ قَالَ الَّذِي عَلَيْهِمْ ارْجِعُوا فَسَتَحْفِرُونَهُ غَدًا إِنْ شَاءَ اللَّهُ تَعَالَى وَاسْتَثْنَوْا فَيَعُودُونَ إِلَيْهِ وَهُوَ كَهَيْئَتِهِ حِينَ تَرَكُوهُ فَيَحْفِرُونَهُ وَيَخْرُجُونَ عَلَى النَّاسِ فَيُنْشِفُونَ الْمَاءَ وَيَتَحَصَّنُ النَّاسُ مِنْهُمْ فِي حُصُونِهِمْ فَيَرْمُونَ بِسِهَامِهِمْ إِلَى السَّمَاءِ فَتَرْجِعُ عَلَيْهَا الدَّمُ الَّذِي اجْفَظَّ فَيَقُولُونَ قَهَرْنَا أَهْلَ الْأَرْضِ وَعَلَوْنَا أَهْلَ السَّمَاءِ فَيَبْعَثُ اللَّهُ نَغَفًا فِي أَقْفَائِهِمْ فَيَقْتُلُهُمْ بِهَا . 146
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யஃஜூஜ் மஃஜூஜ் ஒவ்வொரு நாளும் சூரிய ஒளி தென்படுகின்ற வரை ( துளையிடுவதற்காகத் ) தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . நாம் நாளை தோண்டுவோம் என்று கூறுவார் . ( மறுநாள் ) அதைவிடக் கடினமாக அல்லாஹ் அதை மாற்றிவிடுவான் . அவர்களுடைய காலம் நெருங்கும் வரை அவன் இவ்வாறே செய்துகொண்டிருப்பான் . அவர்களை மக்களிடம் அனுப்ப அல்லாஹ் நாடுகின்றபோது , அவர்கள் சூரிய ஒளி தென்படுகின்ற வரை தோண்டுவார்கள் . ( அதன்பின் ) அவர்களுள் ஒருவர் , திரும்பிச் செல்லுங்கள் . இன்ஷா அல்லாஹ் நீங்கள் நாளை தோண்டுவீர்கள் என்று கூறுவார் . எனவே அவர்கள் ( அனைவரும் ) இன்ஷா அல்லாஹ் கூறுவார்கள் . ஆகவே அவர்கள் ( மறுநாள் ) திரும்ப வருவார்கள் . அப்போது அது அவர்கள் விட்டுச்சென்ற நிலையிலேயே இருக்கும் . எனவே அவர்கள் ( எளிதாகத் ) தோண்டிவிட்டு , மக்களை நோக்கி வெளியேறிவருவார்கள் . தண்ணீரை உறிஞ்சிக் குடிப்பார்கள் . மக்களெல்லாம் அவர்களிடமிருந்து பாதுகாப்புப் பெறும்பொருட்டு கோட்டைகளில் தங்கியிருப்பார்கள் . அவர்கள் தம் அம்புகளை வானத்தை நோக்கி எறிவார்கள் . அது தன்னில் இரத்தம் தோய்க்கப்பட்ட நிலையில் திரும்பவரும் . அப்போது அவர்கள் , நாம் பூமியில் உள்ளோரை அடக்கி , வானிலுள்ளோரை மேலோங்கிவிட்டோம் என்று கூறுவார்கள் . அச்சமயத்தில் அல்லாஹ் அவர்கள் மத்தியில் அவர்களின் பிடரிகளைக் கவ்வுகின்ற ஒரு பூச்சியினத்தை அனுப்பிவைப்பான் . அவற்றின் மூலம் அல்லாஹ் அவர்களைக் கொல்வான் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : எவன் கைவசம் என் ஆன்மா உள்ளதோ அவன்மீது ஆணையாக ! திண்ணமாக நிலத்திலுள்ள உயிரினங்கள் அவர்களின் இறைச்சிகளைத் தின்று நன்றாகக் கொழுத்துப் பெருக்கும் .
عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَوْ لَمْ يَبْقَ مِنْ الدُّنْيَا إِلَّا يَوْمٌ ِ لَطَوَّلَ اللَّهُ ذَلِكَ الْيَوْمَ حَتَّى يَبْعَثَ فِيهِ رَجُلًا مِنِّي أَوْ مِنْ أَهْلِ بَيْتِي يُوَاطِئُ اسْمُهُ اسْمِي وَاسْمُ أَبِيهِ اسْمُ أَبِي يَمْلَأُ الْأَرْضَ قِسْطًا وَعَدْلًا كَمَا مُلِئَتْ ظُلْمًا وَجَوْرًا . 147
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு நாளைத் தவிர உலக நாள் மீதி இல்லையென்றாலும் , என்னிலிருந்து அல்லது என் குடும்பத்திலிருந்து ஒருவரை அனுப்புகின்ற வரை அல்லாஹ் அதை நீடிக்கச் செய்வான் . அவருடைய பெயர் என் பெயரை ஒத்திருக்கும் . அவருடைய தந்தையின் பெயர் என் தந்தையின் பெயரை ஒத்திருக்கும் . பூமி முழுக்க அநியாயம் நிரம்பியிருந்ததைப்போல் அது நீதியாலும் நேர்மையாலும் நிரம்பும் .
عَنْ أُمِّ سَلَمَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: الْمَهْدِيُّ مِنْ عِتْرَتِي مِنْ وَلَدِ فَاطِمَةَ . 148
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா அறிவித்ததாவது : மஹ்தீ என் குடும்பத்திலிருந்து ஃபாத்திமாவின் வாரிசுகளுள் உள்ளவர் ஆவார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " يَخْرُجُ رَجُلٌ يُقَالُ لَهُ : السُّفْيَانِيُّ فِي عُمْقِ دِمَشْقَ ، وَعَامَّةُ مَنْ يَتَّبِعُهُ مِنْ كَلْبٍ ، فَيَقْتُلُ حَتَّى يَبْقُرَ بُطُونَ النِّسَاءِ ، وَيَقْتُلَ الصِّبْيَانَ ، فَتَجْمَعُ لَهُمْ قَيْسٌ فَيَقْتُلُهَا حَتَّى لَا يَمْنَعَ ذَنَبُ تَلْعَةٍ ، وَيَخْرُجُ رَجُلٌ مِنْ أَهْلِ بَيْتِي فِي الْحَرَّةِ فَيَبْلُغُ السُّفْيَانِيَّ ، فَيَبْعَثُ إِلَيْهِ جُنْدًا مِنْ جُنْدِهِ فَيَهْزِمُهُمْ ، فَيَسِيرُ إِلَيْهِ السُّفْيَانِيُّ بِمَنْ مَعَهُ حَتَّى إِذَا صَارَ بِبَيْدَاءَ مِنَ الْأَرْضِ خُسِفَ بِهِمْ ، فَلَا يَنْجُو مِنْهُمْ إِلَّا الْمُخْبِرُ عَنْهُمْ . 149
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : திமஷ்க்கின் முக்கியமான பகுதியில் சுஃப்யானீ எனும் மனிதன் புறப்பட்டுவருவான் . கல்ப் எனும் அரபுக் குலத்தினர் அவனைப் பின்பற்றி வருவார்கள் . பெண்களின் வயிறுகளைக் கிழித்துக் கொல்வான் ; சிறுவர்களைக் கொல்வான் . கைஸ் எனும் குலத்தினர் ( அவனுக்கெதிராக ) ஒன்று சேர்வார்கள் அவர்களையும் அவன் கொன்று சின்னாபின்னமாக ஆக்கிவிடுவான் . ஹர்ராவில் என் குடும்பத்திலிருந்து ஒரு மனிதர் புறப்பட்டுவருவார் . அவர் அந்த சுஃப்யானீயை அடைவார் . அவர் தம்முடைய படையினருள் ஒரு படையை அனுப்புவார் . அவர்களை அவன் தோற்கடித்துவிடுவான் . சுஃப்யானீ தன்னுடன் உள்ளவர்களோடு அவரை நோக்கி நடப்பான் . அவன் ஒரு பாலைவனப் பகுதிக்கு வருவான் . அதற்குள் அவர்கள் ( அனைவரும் ) பூமியில் செருகப்பட்டுவிடுவார்கள் . அவர்களைப் பற்றிய செய்தி அறிவிக்கின்ற ( ஒரு ) வனைத் தவிர அவர்களுள் யாரும் தப்பிக்க மாட்டார் .
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ ، قَالَ : " يَخْرُجُ فِي آخِرِ أُمَّتِي الْمَهْدِيُّ يَسْقِيهِ اللَّهُ الْغَيْثَ ، وَتُخْرِجُ الْأَرْضُ نَبَاتَهَا ، وَيُعْطِي الْمَالَ صِحَاحًا ، وَتَكْثُرُ الْمَاشِيَةُ وَتَعْظُمُ الْأُمَّةُ ، يَعِيشُ سَبْعًا أَوْ ثَمَانِيًا " يَعْنِي حِجَجًا . 150
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈதுல் குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவித்ததாவது : என் சமுதாயத்தின் கடைசிக் காலத்தில் மஹ்தீ புறப்பட்டு வருவார் . அல்லாஹ் அவருக்கு மழையைப் பொழியச் செய்வான் . பூமி தனது தாவரங்களை முளைக்கச் செய்யும் . அவர் பொருள்களைச் சரியான முறையில் வழங்குவார் . கால்நடைகள் பெருகும் . அச்சமுதாயம் பெருவளர்ச்சியடையும் . அவர் ஏழு அல்லது எட்டு ஆண்டுகள் வாழ்வார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ فِي أُمَّتِي خَسْفٌ وَمَسْخٌ وَقَذْفٌ . 151
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் சமுதாயத்தில் ( இறுதிக் காலத்தில் ) உருமாற்றம் , பூமிக்குள் புதைந்து போகுதல் , ( வானத்திலிருந்து ) கல்வீச்சு ஆகியவை ஏற்படுகின்ற வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : يُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ فَيُرْفَعُ إِلَى السَّمَاءِ ، فَلَا يُصْبِحُ فِي الْأَرْضِ آيَةٌ مِنَ الْقُرْآنِ وَلَا مِنَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَلَا الزَّبُورِ ، وَيُنْتَزَعُ مِنْ قُلُوبِ الرِّجَالِ فَيُصْبِحُونَ وَلَا يَدْرُونَ مَا هُوَ . 152
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதம் இரவோடு இரவாக வானத்திற்கு உயர்த்தப்படும் . காலையில் குர்ஆனிலிருந்து ஒரு வசனம் கூடப் பூமியில் இருக்காது . தவ்ராத்தும் இருக்காது ; இன்ஜீலும் இருக்காது ; ஸபூரும் இருக்காது . ஆண்களின் உள்ளங்களிலிருந்து ( அவை ) உருவி எடுக்கப்பட்டுவிடும் . அது என்னவென்றே அவர்கள் அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ . 153
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும் . ( அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்து விடுவர் .)
(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ . 154
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பூமியில் " அல்லாஹ் , அல்லாஹ் ` என்று சொல்லப்படாதபோது தான் மறுமை நாள் நிகழும் .
عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ أَسْعَدَ النَّاسِ بِالدُّنْيَا لُكَعُ ابْنُ لُكَعٍ . 155
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகின் செல்வங்களால் மனிதர்களிலேயே பெரிய ஆளாக ஆகாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا بَيْنَ النَّفْخَتَيْنِ أَرْبَعُونَ قَالَ أَرْبَعُونَ يَوْمًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ شَهْرًا قَالَ أَبَيْتُ قَالَ أَرْبَعُونَ سَنَةً قَالَ أَبَيْتُ قَالَ ثُمَّ يُنْزِلُ اللَّهُ مِنْ السَّمَاءِ مَاءً فَيَنْبُتُونَ كَمَا يَنْبُتُ الْبَقْلُ لَيْسَ مِنْ الْإِنْسَانِ شَيْءٌ إِلَّا يَبْلَى إِلَّا عَظْمًا وَاحِدًا وَهُوَ عَجْبُ الذَّنَبِ وَمِنْهُ يُرَكَّبُ الْخَلْقُ يَوْمَ الْقِيَامَةِ . 156
அபூசாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “( உலக முடிவு நாளில் அனைத்தையும் அழிப்பதற்காகவும் , பின்னர் அனைவரையும் எழுப்புவதற்காகவும் ஊதப்படும் ) இரு எக்காளத்திற்கும் ( ஸூர் ) இடையே ( இடைப்பட்டக் காலம் ) நாற்பது `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடைய நண்பர்கள் , “( அபூஹுரைரா அவர்களே !) நாட்களில் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “( நான் அறியாததற்கு பதிலளிப்பதிலிருந்து ) நான் விலகிக் கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . ( நண்பர்களான ) அவர்கள் , “ நாற்பது மாதங்களா ?`` என்று கேட்டனர் . அதற்கும் “ நான் விலகிக்கொள்கிறேன் `` என அபூஹுரைரா கூறினார்கள் . “ வருடங்கள் நாற்பதா ?`` என்று கேட்டனர் . அப்போதும் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ நான் விலகிக்கொள்கிறேன் `` என்று சொன்னார்கள் . பின்னர் , “ வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவான் . அப்போது ( மண்ணறைகளுக்குள் உக்கிப்போயிருக்கும் மனிதச் சடலங்கள் ) தாவரங்கள் முளைத்து எழுவதுபோல் எழுவார்கள் . மனிதனிலுள்ள ( உறுப்புகள் ) அனைத்துமே ( மண்ணுக்குள் ) உக்கிப்போகாமல் இருப்பதில்லை . ஆனால் , ஒரேயோர் எலும்பைத் தவிர ! அதுதான் ( முதுகந்தண்டின் வேர்ப் பகுதியிலிருக்கும் ) உள்வால் எலும்பின் ( அணுவளவு ) நுனியாகும் . அதை வைத்தே படைப்பினங்கள் ( மீண்டும் ) மறுமை நாளில் உருவாக்கப்படும் `` என்று மேலும் சொன்னார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصُّورُ قَرْنٌ يُنْفَخُ فِيهِ . 157
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் என்பது ஊதப்படும் ஊதுகொம்பு ஆகும் .
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ الْقَرْنِ قَدْ الْتَقَمَ الْقَرْنَ وَاسْتَمَعَ الْإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لَهُمْ قُولُوا حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا . 158
அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும் ? எக்காளம் ஊதுகின்ற ( வான ) வர் எக்காளத்தின் முனைப்பகுதியைத் தமது வாயில் வைத்துக்கொண்டு ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று காது தாழ்த்திக் காத்திருக்கிறாரே ” என்று கூறினார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ وَسَلَّمَ : " إِنَّ طَرْفَ صَاحِبِ الصُّورِ مُذْ وُكِّلَ بِهِ مُسْتَعِدٌّ يَنْظُرُ نَحْوَ الْعَرْشِ مَخَافَةَ أَنْ يُؤْمَرَ قَبْلَ أَنْ يَرْتَدَّ إِلَيْهِ طَرْفُهُ ، كَأَنَّ عَيْنَيْهِ كَوْكَبَانِ دُرِّيَّانِ . 159
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எக்காளம் ஊதுபவருடைய கண்பார்வை அவர் அதற்காக நியமிக்கப்பட்டதிலிருந்து தயாராக இருக்கிறது . அவர் தம் கண்பார்வையைச் சிமிட்டுவதற்குள் ஏவப்பட்டுவிடுவாரோ என்று அஞ்சியவராக அவர் அர்ஷையே பார்த்தவாறு இருக்கிறார் . அவருடைய இரண்டு கண்களும் மின்னக்கூடிய இரண்டு நட்சத்திரங்களைப் போன்று உள்ளன .
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الشَّمْسُ وَالْقَمَرُ مُكَوَّرَانِ يَوْمَ الْقِيَامَةِ . 160
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் சூரியனும் சந்திரனும் சுருட்டப்பட்டு ( ஒளியிழந்து ) விடும் .
(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقْبِضُ اللَّهُ الْأَرْضَ يَوْمَ الْقِيَامَةِ وَيَطْوِي السَّمَاءَ بِيَمِينِهِ ثُمَّ يَقُولُ أَنَا الْمَلِكُ أَيْنَ مُلُوكُ الْأَرْضِ . 161
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , மறுமை நாளில் பூமியைத் தனது கைப்பிடிக்குள் அடக்கிக்கொள்வான் ; வானத்தைத் தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான் ; பிறகு “ நானே அரசன் ; பூமியின் அரசர்கள் எங்கே ?`` என்று கேட்பான் .
(م) عَنْ عَائِشَةَ قَالَتْ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ قَوْلِهِ عَزَّ وَجَلَّ يَوْمَ تُبَدَّلُ الْأَرْضُ غَيْرَ الْأَرْضِ وَالسَّمَاوَاتُ فَأَيْنَ يَكُونُ النَّاسُ يَوْمَئِذٍ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ عَلَى الصِّرَاطِ . 162
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ அந்நாளில் பூமி , வேறு பூமியாகவும் வானங்களும் ( வேறு வானங்களாகவும் ) மாற்றப்படும் `` (14:48) எனும் இறைவசனத்தை ஓதிக்காட்டி , “ அல்லாஹ்வின் தூதரே ! அன்றைய நாளில் மக்கள் அனைவரும் எங்கே இருப்பார்கள் ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அஸ்ஸிராத் ( எனும் நரகப் பாலத்தின் ) மீது `` என்று பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُحْشَرُ النَّاسُ عَلَى ثَلَاثِ طَرَائِقَ رَاغِبِينَ رَاهِبِينَ وَاثْنَانِ عَلَى بَعِيرٍ وَثَلَاثَةٌ عَلَى بَعِيرٍ وَأَرْبَعَةٌ عَلَى بَعِيرٍ وَعَشَرَةٌ عَلَى بَعِيرٍ وَيَحْشُرُ بَقِيَّتَهُمْ النَّارُ تَقِيلُ مَعَهُمْ حَيْثُ قَالُوا وَتَبِيتُ مَعَهُمْ حَيْثُ بَاتُوا وَتُصْبِحُ مَعَهُمْ حَيْثُ أَصْبَحُوا وَتُمْسِي مَعَهُمْ حَيْثُ أَمْسَوْا . 163
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ( மறுமை நாள் ஏற்படுவதற்குச் சற்றுமுன் கிழக்கிலிருந்து மேற்கு நோக்கி ) மக்கள் மூன்று பிரிவினராக ஒன்று திரட்டப்படுவார்கள் . ( அதில் முதல் பிரிவினர் ) அச்சத்துடனும் ஆர்வத்துடனும் செல்வார்கள் . ( இரண்டாவது பிரிவினர் ) ( வாகனப் பற்றாக்குறையால் தாமதித்துப் பின்னர் ) ஒரே ஒட்டகத்தின் மீது இரண்டு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது மூன்று பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது நான்கு பேராக , ஒரே ஒட்டகத்தின் மீது பத்துப் பேராகச் செல்வார்கள் . அவர்களுள் எஞ்சியவர் ( களே மூன்றாவது பிரிவினராவர் . அவர் ) களை ( பூமியில் ஏற்படும் ஒரு பெரும் ) தீ ( விபத்து ) ஒன்று திரட்டும் . அவர்கள் மதிய ஓய்வெடுக்கும் போதும் , இரவில் ஓய்வெடுக்கும் போதும் , காலை நேரத்தை அடையும் போதும் , மாலை நேரத்தை அடையும் போதும் ( இப்படி எல்லா நேரங்களிலும் ) அந்தத் தீ அவர்களுடனேயே இருக்கும் .
(ق) عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ فَقَالَ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ . 164
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : " நீங்கள் மறுமைநாளில் செருப்பணியாதவர்களாக , நிர்வாணமானவர்களாக , விருத்த சேதனம் செய்யப்படாதவர்களாக ஒன்று திரட்டப்படுவீர்கள் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே நான் “ அல்லாஹ்வின் தூதரே ! ( நிர்வாணமான ) ஆண்களும் பெண்களும் ஒருவரை ஒருவர் பார்ப்பார்களே ?`` என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ அந்த எண்ணம் அவர்களுக்கு ஏற்படாத அளவுக்கு ( அங்குள்ள ) நிலைமை மிகக் கடுமையானதாக இருக்கும் `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا ثُمَّ قَرَأَ كَمَا بَدَأْنَا أَوَّلَ خَلْقٍ نُعِيدُهُ وَعْدًا عَلَيْنَا إِنَّا كُنَّا فَاعِلِينَ فَأَوَّلُ مَنْ يُكْسَى إِبْرَاهِيمُ . 165
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ நீங்கள் ( மறுமை நாளில் ) காலில் செருப்பணியாதவர்களாகவும் நிர்வாணமானவர்களாகவும் விருத்தசேதனம் செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள் `` என்று கூறிவிட்டு , பிறகு , “ எழுதப்பட்ட ஏடு சுருட்டப்படுவதைப் போல் நாம் வானத்தைச் சுருட்டும் அந்நாளில் , நாம் முதலில் எவ்வாறு படைக்கத் தொடங்கினோமோ அவ்வாறே நாம் மீட்போம் . இது நம்முடைய பொறுப்பிலுள்ள ஒரு வாக்குறுதியாகும் . அதனை நாம் நிறைவேற்றியே தீருவோம் `` என்னும் (21:104) இறைவசனத்தை ஓதினார்கள் . முதலாவதாக ஆடை அணிவிக்கப்படுப வர்கள் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் ஆவார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ مِقْدَارَ نِصْفِ يَوْمٍ مِنْ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ يُهَوِّنُ ذَلِكَ عَلَى الْمُؤْمِنِينَ كَتَدَلِّي الشَّمْسِ لِلْغُرُوبِ إِلَى أَنْ تَغْرُبَ . 166
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஐம்பதாயிரம் ஆண்டுகள் கொண்ட நாளில் அரை நாள் வரை அகிலங்களின் இறைவன் முன்னிலையில் மக்கள் நிற்பார்கள் . ( ஆனால் ) அது இறைநம்பிக்கையாளர்களுக்கு சூரியன் மறைவதற்காகத் தணிந்து அது மறையும் வரையுள்ள நேரத்தைப் போன்றதாக இருக்கும் .
(ق) عَنْ سَهْلَ بْنَ سَعْدٍ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لِأَحَدٍ . 167
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( உமியோ தவிடோ கலக்காத ) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான ( சம ) தளத்தின்மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் . இதன் அறிவிப்பாளரான சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , அல்லது மற்றொருவர் “ அந்த பூமியில் ( மலை , மடுவு , காடு , வீடு என ) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது `` என்று ( கூடுதலாக ) அறிவித்தார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ حَتَّى يَغِيبَ أَحَدُهُمْ فِي رَشْحِهِ إِلَى أَنْصَافِ أُذُنَيْهِ . 168
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “( அது ) அகிலத்தாரின் அதிபதி முன் மக்களெல்லாம் நிற்கும் நாள் `` எனும் (83:6ஆவது) இறைவசனத்தை ஓதிவிட்டு , “ அன்று தம் இரு காதுகளின் பாதி வரை தேங்கி நிற்கும் தமது வியர்வையில் அவர்களுள் ஒருவர் மூழ்கிப் போய்விடுவார் `` என்று கூறினார்கள்
(م)عَنْ سُلَيْمُ بْنُ عَامِرٍ حَدَّثَنِي الْمِقْدَادُ بْنُ الْأَسْوَدِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: تُدْنَى الشَّمْسُ يَوْمَ الْقِيَامَةِ مِنْ الْخَلْقِ حَتَّى تَكُونَ مِنْهُمْ كَمِقْدَارِ مِيلٍ 169
மிக்தாத் பின் அல்அஸ்வத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ மறுமை நாளில் சூரியன் படைப்பினங்களுக்கு அருகில் கொண்டுவரப்படும் . எந்த அளவுக்கென்றால் , அவர்களுக்கும் அதற்கும் இடையில் ஒரு மைல் தொலை தூரமே இருக்கும் . அப்போது மக்கள் தம் செயல்களுக்கேற்ப வியர்வையில் மூழ்குவார்கள் . சிலரது வியர்வை அவர்களின் கணுக்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை முழங்கால்கள் வரையிலும் , சிலரது வியர்வை இடுப்பு வரையிலும் , சிலரது வியர்வை வாய் வரையிலும் எட்டிவிடும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் கேட்டேன் . இதைக் கூறியபோது , அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தமது கையால் வாயை நோக்கிச் சைகை செய்தார்கள் . இதன் அறிவிப்பாளரான சுலைம் பின் ஆமிர் ரஹிமஹுல்லாஹ் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! " மைல் ` என்று பூமியின் தொலைதூர அளவைக் குறிப்பிட்டார்களா ? அல்லது கண்ணில் தீட்டப் பயன்படும் அஞ்சனக் கோலின் அளவைக் குறிப்பிட்டார்களா என்பது எனக்குத் தெரியவில்லை `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُتِيَ بِلَحْمٍ فَرُفِعَ إِلَيْهِ الذِّرَاعُ وَكَانَتْ تُعْجِبُهُ فَنَهَشَ مِنْهَا نَهْشَةً ثُمَّ قَالَ أَنَا سَيِّدُ النَّاسِ يَوْمَ الْقِيَامَةِ وَهَلْ تَدْرُونَ مِمَّ ذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ فِي صَعِيدٍ وَاحِدٍ يُسْمِعُهُمْ الدَّاعِي وَيَنْفُذُهُمْ الْبَصَرُ وَتَدْنُو الشَّمْسُ فَيَبْلُغُ النَّاسَ مِنْ الْغَمِّ وَالْكَرْبِ مَا لَا يُطِيقُونَ وَلَا يَحْتَمِلُونَ فَيَقُولُ النَّاسُ أَلَا تَرَوْنَ مَا قَدْ بَلَغَكُمْ أَلَا تَنْظُرُونَ مَنْ يَشْفَعُ لَكُمْ إِلَى رَبِّكُمْ فَيَقُولُ بَعْضُ النَّاسِ لِبَعْضٍ عَلَيْكُمْ بِآدَمَ . 170
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ( ஒரு விருந்தில் ) இறைச்சி கொண்டுவரப்பட்டது . அப்போது ( சமைக்கப்பட்ட ) புஜம் ( முன்கால் சப்பை ) ஒன்றை அவர்களிடம் நீட்டப்பட்டது . அது அவர்களுக்கு மிகவும் பிடித்தமானதாக இருந்து வந்தது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( அதை ) வாயாலேயே ( பற்களால் ) பற்றிக்கொண்டு அதிலிருந்து சிறிது உண்டார்கள் . பிறகு “ நான் மறுமை நாளில் மனிதர்களின் தலைவன் ஆவேன் . ( அந்நாளில் ) அல்லாஹ் ( மனிதர்களுள் ) முந்தியவர்களையும் பிந்தியவர்களையும் ஒரே சமவெளியில் எதன் மூலம் ஒன்று திரட்டுவான் என்பது உங்களுக்குத் தெரியுமா ? அழைப்பவர் எவரும் அந்த மக்களை அழைத்தால் அதனை அவர்கள் செவியேற்க முடியும் . ( பார்ப்போரின் ) பார்வை அவர்களை ( நன்கு ) சூழ்ந்து கொண்டிருக்கும் . சூரியன் ( அவர்களுக்கு ) அருகில் வரும் . அப்போது மனிதர்களிடம் , அவர்களால் தாங்கிக் கொள்ளவோ , பொறுத்துக் கொள்ளவோ முடியாத துன்பங்களும் துயரங்களும் வந்து சேரும் . அப்போது மனிதர்கள் ( சிலர் வேறு சிலரை நோக்கி ) ‘ உங்களுக்கு எத்தகைய ( ஆபத்தான ) நிலை நேர்ந்திருக்கிறது என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா ? உங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுபவரை ( த் தேடிப் ) பார்க்கமாட்டீர்களா ?` என்று கேட்பார்கள் . அப்போது மனிதர்களுள் சிலர் வேறு சிலரிடம் , "( உங்களுடைய ஆதி பிதா ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அணுகுங்கள் ( அவர் உங்களுக்காகப் பரிந்து பேசுவார் ) என்பர் . ஆகவே மனிதர்கள் , ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நீங்கள் மனித இனத்தின் தந்தையாவீர்கள் ; உங்களை அல்லாஹ் தன் கரத்தால் படைத்தான் . உங்களுக்குள் தன் ( னால் உருவாக்கப்பட்ட ) உயிரை ஊதினான் . வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியும்படி உத்தரவிட்டான் . அவ்வாறே அவர்கள் உங்களுக்குச் சிரம் பணிந்தார்கள் . நீங்கள் உங்கள் இறைவனிடம் எங்களுக்காகப் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையையும் , எங்களுக்கு நேர்ந்திருக்கும் ( துன்ப ) நிலையையும் நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் (" நான் செய்த தவற்றின் காரணத்தால் ) என் இறைவன் என் மீது இன்று ( கடும் ) கோபம் கொண்டிருக்கிறான் . இதற்கு முன் இதைப் போன்று அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒரு போதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . ( நான் நெருங்கக் கூடாத ஒரு ) மரத்திலிருந்து ( உண்ண வேண்டாமென்று ) என்னை அவன் தடுத்தான் . நான் அவனுக்கு மாறு செய்தேன் . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . என்னையே நான் காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ` என்று கூறிவிட்டு " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் . நீங்கள் ( இறைத்தூதர் ) நூஹிடம் செல்லுங்கள் `` என்று சொல்வார்கள் . உடனே மக்களும் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " நூஹே ! நீங்கள் பூமியில் வசிப்பவர்களுக்கு ( அனுப்பப்பெற்ற ) முதல் ( புதிய சட்ட அமைப்புடன் வருகை தந்த ) இறைத்தூதர் ஆவீர்கள் . உங்களை அல்லாஹ் நன்றியுள்ள அடியார் என்று குறிப்பிட்டுள்ளான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்க வில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு நூஹ் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என் மீது ( கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன் அவன் இதைப் போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் அவன் இதைப் போல் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . ( எல்லா நபிமார்களுக்கும் இருப்பது போல் விசேஷமான ) பிரார்த்தனை ஒன்று எனக்கு ( வழங்கப்பட்டு ) இருந்தது . அதை நான் என் சமுதாயத்தினருக்கு எதிராகப் பயன்படுத்திவிட்டேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது !` என்று கூறிவிட்டு , " நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; ( இறைவனின் உற்ற நண்பர் ) இப்ராஹீமிடம் செல்லுங்கள் ` என்பார்கள் . அவ்வாறே மக்களும் இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " இப்ராஹீமே ! நீங்கள் இறைத்தூதரும் பூமியில் வசிப்பவர்களுள் இறைவனின் உற்ற நண்பரும் ஆவீர்கள் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று என்மீது ( கடுங் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போன்று அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை . நான் மூன்று பொய்களைச் சொல்லியுள்ளேன் . - அம்மூன்றையும் அறிவிப்பாளர் அபூ ஹய்யான் ரஹிமஹுல்லாஹ் இந்த ஹதீஸில் குறிப்பிடுகிறார்கள் .- நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது . நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டியுள்ளது ! ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத் தூதர் ) மூஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று " மூஸாவே நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவீர்கள் . தன்னுடைய தூதுத்துவத்தை வழங்கியும் உங்களிடம் உரையாடியும் மக்கள் அனைவரையும்விட உங்களை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவார்கள் . அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் " இன்று என் இறைவன் ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்கு முன்பும் இதைப் போல் அவன் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பின்பும் இதைப்போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப் போவதுமில்லை . கொலை செய்யுமாறு எனக்கு ஆணையிடப்படாமலேயே நான் ஒரு மனித உயிரைக் கொலை செய்துவிட்டிருக்கிறேன் . நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக் கொள்ளவேண்டி யுள்ளது . ( ஆகவே ,) வேறெவரிடமாவது நீங்கள் செல்லுங்கள் . ( இறைத்தூதர் ) ஈஸாவிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அவ்வாறே மக்கள் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சென்று , " ஈஸாவே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதராக இருக்கிறீர்கள் . மர்யமிடம் இறைவனிட்ட அவனது வார்த்தையும் அவன் ( ஊதிய ) உயிரும் ஆவீர்கள் . நீங்கள் தொட்டிலில் சிறுவராய் இருந்தபோதே மனிதர்களிடம் பேசினீர்கள் . ( ஆகவே ,) எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கேட்பார்கள் . அதற்கு ஈஸா அலைஹிஸ்ஸலாம் , " என் இறைவன் இன்று ( என்மீது கடும் ) கோபம் கொண்டுள்ளான் . இதற்குமுன் அவன் இதைப்போல் கோபம் கொண்டதில்லை . இதற்குப் பிறகும் இதைப் போல் அவன் ஒருபோதும் கோபம் கொள்ளப்போவதுமில்லை .- ( தாம் புரிந்துவிட்டதாக ) எந்தப் பாவத்தையும் அவர்கள் குறிப்பிடாமல் - நான் என்னையே காப்பாற்றிக் கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! நான் என்னையே காப்பாற்றிக்கொள்ள வேண்டியுள்ளது ! ( ஆகவே ,) நீங்கள் வேறெவரிடமாவது செல்லுங்கள் ; நீங்கள் முஹம்மதிடம் செல்லுங்கள் ` என்று கூறுவார்கள் . அப்போது மக்கள் என்னிடம் வந்து " முஹம்மதே ! நீங்கள் அல்லாஹ்வின் தூதர் . இறைத்தூதர்களுள் இறுதியானவர் . உங்களது முன் பின் பாவங்களை இறைவன் மன்னித்து விட்டான் . எங்களுக்காக உங்கள் இறைவனிடம் பரிந்து பேசுங்கள் . நாங்கள் ( சிக்கிக்கொண்டு ) இருக்கும் ( அவல ) நிலையை நீங்கள் கவனிக்கவில்லையா ?` என்று கூறுவர் . அப்போது நான் நடந்து இறைவனின் அரியாசனத்திற்குக் கீழே சென்று , என் இறைவனுக்கு ( பணிந்து ) சஜ்தாவில் விழுவேன் . பிறகு இறைவன் எனக்கு முன் வேறெவருக்கும் ( உள்ளத்தில் ) உதிக்கச் செய்திராத இறைப் புகழ் மாலைகளையும் அழகிய தோத்திரங்களையும் எனக்கு உதிக்கச் செய்வான் . பிறகு " முஹம்மதே ! உங்கள் தலையை உயர்த்துங்கள் ! கேளுங்கள் ; அது உங்களுக்குத் தரப்படும் . பரிந்துரையுங்கள் ; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும் `` என்று சொல்லப்படும் . அப்போது நான் என் தலையை உயர்த்தி " இறைவா ! என் சமுதாயம் . இறைவா ! என் சமுதாயம் ` என்பேன் . அதற்கு " முஹம்மதே ! சொர்க்கத்தின் . வாசல்களில் வலப்பக்க வாசல் வழியாக எந்த விதக் கேள்வி கணக்கும் இல்லாமல் உங்கள் சமுதாயத்தார் சிலரை நுழையச் செய்யுங்கள் ; அவர்கள் மற்ற வாசல்களிலும் மக்களுடன் இணைந்து நுழைந்து கொள்ளலாம் ` என்று கூறப்படும் . என் உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்க வாசலின் இரு பக்கங்களுக்கிடையேயான தூரம் " மக்காவிற்கும் ( யமனிலுள்ள ) " ஹிம்யர் ` எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` அல்லது " மக்காவிற்கும் ( ஷாமிலுள்ள ) புஸ்ரா எனும் ஊருக்கும் இடையிலுள்ள ` தூரமாகும் `` என்று கூறினார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَفَاعَتِي لِأَهْلِ الْكَبَائِرِ مِنْ أُمَّتِي . 171
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய பரிந்துரை என் சமுதாயத்தில் பெரும் பாவம் செய்தவர்களுக்குத்தான் .
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَال :َ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَانِي آتٍ مِنْ عِنْدِ رَبِّي فَخَيَّرَنِي بَيْنَ أَنْ يُدْخِلَ نِصْفَ أُمَّتِي الْجَنَّةَ وَبَيْنَ الشَّفَاعَةِ فَاخْتَرْتُ الشَّفَاعَةَ وَهِيَ لِمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللَّهِ شَيْئًا . 172
அவ்ஃப் பின் மாலிக் அல்அஷ்ஜஈ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ என் இறைவன் இன்றிரவு எனக்கு எதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளச் சொன்னான் என்று உங்களுக்குத் தெரியுமா ?” என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வினவினார்கள் . அதற்கு நாங்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் ” என்றுரைத்தோம் . அப்போது அவர்கள் , “ திண்ணமாக அவன் என் சமுதாயத்தில் பாதிப்பேரைச் சொர்க்கத்தில் நுழைய வைத்தலுக்கும் பரிந்துரைக்கும் இடையே ( எதையேனும் ஒன்றைத் ) தேர்ந்தெடுத்துக் கொள்ளுமாறு வாய்ப்புக் கொடுத்தான் . அப்போது நான் பரிந்துரை செய்யும் உரிமையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே , அதற்குத் தகுதியானவர்களாக நாங்கள் ஆகுவதற்காகத் தாங்கள் பிரார்த்தனை செய்யுங்கள் ” என்று நாங்கள் கூறினோம் . “ அது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் உரியது ” என்றுரைத்தார்கள் .
( ق) عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ يَا آدَمُ فَيَقُولُ لَبَّيْكَ وَسَعْدَيْكَ وَالْخَيْرُ فِي يَدَيْكَ قَالَ يَقُولُ أَخْرِجْ بَعْثَ النَّارِ قَالَ وَمَا بَعْثُ النَّارِ قَالَ مِنْ كُلِّ أَلْفٍ تِسْعَ مِائَةٍ وَتِسْعَةً وَتِسْعِينَ فَذَاكَ حِينَ يَشِيبُ الصَّغِيرُ وَتَضَعُ كُلُّ ذَاتِ حَمْلٍ حَمْلَهَا وَتَرَى النَّاسَ سَكْرَى وَمَا هُمْ بِسَكْرَى وَلَكِنَّ عَذَابَ اللَّهِ شَدِيدٌ فَاشْتَدَّ ذَلِكَ عَلَيْهِمْ فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ أَيُّنَا ذَلِكَ الرَّجُلُ قَالَ أَبْشِرُوا فَإِنَّ مِنْ يَأْجُوجَ وَمَأْجُوجَ أَلْفًا وَمِنْكُمْ رَجُلٌ ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قَالَ فَحَمِدْنَا اللَّهَ وَكَبَّرْنَا ثُمَّ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنِّي لَأَطْمَعُ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ إِنَّ مَثَلَكُمْ فِي الْأُمَمِ كَمَثَلِ الشَّعَرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ الرَّقْمَةِ فِي ذِرَاعِ الْحِمَارِ . 173
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) அல்லாஹ் ( ஆதி மனிதரை நோக்கி ) " ஆதமே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறேன் . ( கட்டளையிடு .) நலம் அனைத்தும் உன் கரங்களில்தான் `` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் "( உங்கள் சந்ததிகளில் ) நரகத்திற்குச் செல்லவிருப்பவர்களை ( மற்றவர்களிலிருந்து ) தனியாகப் பிரித்திடுங்கள் `` என்று கூறுவான் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் “ எத்தனை நரகவாசிகளை ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அவன் “ ஓவ்வோர் ஆயிரம் பேரிலிருந்தும் தொள்ளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேரை ( த் தனியாகப் பிரித்திடுங்கள் )`` என்று பதிலளிப்பான் . ( அப்போதுள்ள பயங்கரமான சூழ்நிலையின் காரணத்தால் ) பாலகன்கூட நரைத்து ( மூப்படைந்து ) விடுகின்ற , கர்ப்பம் கொண்ட ஒவ்வொரு பெண்ணும் கர்ப்பத்தை ( ப் பீதியின் காரணத்தால் அரைகுறையாக ) ப் பிரசவித்து விடுகின்ற நேரம் இதுதான் . மக்களை ( அச்சத்தால் ) போதையுற்றவர்களாக நீங்கள் காண்பீர்கள் . ஆனால் , அவர்கள் ( உண்மையிலேயே மதுவால் ) போதையுற்றிருக்கமாட்டார்கள் . மாறாக , அல்லாஹ்வின் வேதனை கடுமையானதாகும் . இவ்வாறு நபியவர்கள் கூறியது மக்களுக்குச் சிரமமாக இருந்தது . எனவே , அவர்கள் " அல்லாஹ்வின் தூதரே ! ( ஒவ்வோர் ஆயிரத்திலும் நரகத்திற்குச் செல்லாமல் எஞ்சியிருக்கும் ) அந்த ஒரு நபர் எங்களுள் யார் ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( பயப்படாதீர்கள் ;) நற்செய்தி பெறுங்கள் . யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தாரில் ஆயிரம் பேர் என்றால் , உங்களுள் ஒருவர் ( நரகத்திற்குச் செல்ல தனியாகப் பிரிக்கப்பட்டோரில் ) இருப்பார் `` என்று கூறிவிட்டுப் பிறகு , “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் மூன்றில் ஒரு பங்கினராக இருக்க வேண்டும் என்று நான் பேராவல் கொள்கின்றேன் `` எனக் கூறினார்கள் . உடனே நாங்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து தக்பீர் ( அல்லாஹு அக்பர் ) முழக்கமிட்டோம் . பிறகு , நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீதாணையாக ! நீங்கள் சொர்க்கவாசிகளில் பாதிப் பேராக இருக்க வேண்டுமென நான் பேராவல் கொள்கின்றேன் . மற்ற சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலிலுள்ள வெள்ளை முடியைப் போன்று , அல்லது கழுதையின் காலிலுள்ள வெள்ளைச் சொட்டையைப் போன்று இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ أَبِي مُوسَى قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دَفَعَ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَى كُلِّ مُسْلِمٍ يَهُودِيًّا أَوْ نَصْرَانِيًّا فَيَقُولُ هَذَا فِكَاكُكَ مِنْ النَّارِ . 174
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூசா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் ஒவ்வொரு முஸ்லிமிடமும் ஒரு யூதரை அல்லது கிறிஸ்தவரை ஒப்படைத்து , " இவன்தான் உன்னை நரகத்திலிருந்து விடுவித்தான் `` என்று சொல்வான் .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ هَذِهِ الْأُمَّةَ مَرْحُومَةٌ عَذَابُهَا بِأَيْدِيهَا فَإِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ دُفِعَ إِلَى كُلِّ رَجُلٍ مِنْ الْمُسْلِمِينَ رَجُلٌ مِنْ الْمُشْرِكِينَ فَيُقَالُ هَذَا فِدَاؤُكَ مِنْ النَّارِ . 175
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக இந்தச் சமுதாயம் அருள்புரியப்பட்ட சமுதாயம் . ( இவ்வுலகில் ) அதனுடைய வேதனை அதன் கைகளில் உள்ளது . மறுமை நாளில் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இணைவைப்பாளர்களிலிருந்து ஓர் ஆள் கொடுக்கப்படும் . இவன்தான் நரகத்திலிருந்து உனக்கான பிணை என்று கூறப்படும் .
(ق) عَنْ صَفْوَانَ بْنِ مُحْرِزٍ الْمَازِنِيِّ قَالَ بَيْنَمَا أَنَا أَمْشِي مَعَ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا آخِذٌ بِيَدِهِ إِذْ عَرَضَ رَجُلٌ فَقَالَ كَيْفَ سَمِعْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي النَّجْوَى فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ يُدْنِي الْمُؤْمِنَ فَيَضَعُ عَلَيْهِ كَنَفَهُ وَيَسْتُرُهُ فَيَقُولُ أَتَعْرِفُ ذَنْبَ كَذَا أَتَعْرِفُ ذَنْبَ كَذَا فَيَقُولُ نَعَمْ أَيْ رَبِّ حَتَّى إِذَا قَرَّرَهُ بِذُنُوبِهِ وَرَأَى فِي نَفْسِهِ أَنَّهُ هَلَكَ قَالَ سَتَرْتُهَا عَلَيْكَ فِي الدُّنْيَا وَأَنَا أَغْفِرُهَا لَكَ الْيَوْمَ فَيُعْطَى كِتَابَ حَسَنَاتِهِ وَأَمَّا الْكَافِرُ وَالْمُنَافِقُونَ فَيَقُولُ الْأَشْهَادُ هَؤُلَاءِ الَّذِينَ كَذَبُوا عَلَى رَبِّهِمْ أَلَا لَعْنَةُ اللَّهِ عَلَى الظَّالِمِينَ . 176
ஸஃப்வான் பின் முஹ்ரிஸ் அல் மாஸினீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுடன் , அவர்களுடைய கையைப் பிடித்தபடி சென்று கொண்டிருந்த போது ஒரு மனிதர் குறுக்கிட்டு , "( மறுமை நாளில் அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையே நடைபெறும் ) இரகசியப் பேச்சு பற்றி அல்லாஹ்வின் தூதரிடமிருந்து என்ன செவியுற்றீர்கள் ?`` என்று கேட்டார் . அதற்கு இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹு தஆலா முஃமினைத் தன் பக்கம் நெருங்கச் செய்து , அவன்மீது தன் திரையைப் போட்டு அவனை மறைத்து விடுவான் . பிறகு அவனை நோக்கி , " நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ? நீ செய்த இன்ன பாவம் உனக்கு நினைவிருக்கிறதா ?` என்று கேட்பான் . அதற்கு அவன் , " ஆம் , என் இறைவா !` என்று கூறுவான் . ( இப்படி ஒவ்வொரு பாவமாக எடுத்துக் கூறி ) அவன் ( தான் செய்த ) எல்லாப் பாவங்களையும் ஒப்புக் கொள்ளச் செய்வான் . அந்த முஃமின் , " நாம் இத்தோடு ஒழிந்தோம் ` என்று தன்னைப் பற்றிக் கருதிக் கொண்டிருக்கும்போது இறைவன் , " இவற்றையெல்லாம் உலகில் நான் பிறருக்குத் தெரியாமல் மறைத்து வைத்திருந்தேன் . இன்று உனக்கு அவற்றை மன்னித்து விடுகிறேன் ` என்று கூறுவான் . அப்போது அவனது நற்செயல்களின் பதிவேடு அவனிடம் கொடுக்கப்படும் . நிராகரிப்பாளர்களையும் , நயவஞ்சகர்களையும் நோக்கி சாட்சியாளர்கள் , " இவர்கள்தாம் , தம் இறைவன்மீது பொய்யைப் புனைந்துரைத்தவர்கள் . எச்சரிக்கை ! இத்தகைய அக்கிரமக்காரர்கள்மீது இறைவனின் சாபம் உண்டாகும் ` என்பார்கள் ` (11: 18) என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூற நான் கேட்டிருக்கிறேன் `` என்று கூறினார்கள் .
(خ) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ حُبِسُوا بِقَنْطَرَةٍ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ فَيَتَقَاصُّونَ مَظَالِمَ كَانَتْ بَيْنَهُمْ فِي الدُّنْيَا حَتَّى إِذَا نُقُّوا وَهُذِّبُوا أُذِنَ لَهُمْ بِدُخُولِ الْجَنَّةِ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَأَحَدُهُمْ بِمَسْكَنِهِ فِي الْجَنَّةِ أَدَلُّ بِمَنْزِلِهِ كَانَ فِي الدُّنْيَا . 177
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : முஃமின்கள் நரகத்திலிருந்து தப்பி வரும்போது , சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையிலுள்ள ஒரு பாலத்தில் தடுத்து நிறுத்தப்படுவார்கள் . அப்போது உலகில் ( வாழ்ந்தபோது ) அவர்களுக்கிடையே நடந்த அநீதிகளுக்கு அந்தப் பாலத்திலேயே ஒருவருக்கொருவர் கணக்குத் தீர்த்துக் கொள்வார்கள் . இறுதியில் , அவர்கள் பாவங்களிலிருந்து நீங்கித் தூய்மையாகிவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் . முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன்மீது சத்தியமாக ! அவர்கள் சொர்க்கத்தில் உள்ள தம் வசிப்பிடத்தை , உலகில் அவர்களுக்கிருந்த இல்லத்தைவிட எளிதாக அடையாளம் கண்டு கொள்வார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَتَدْرُونَ مَا الْمُفْلِسُ ؟ قَالُوا : الْمُفْلِسُ فِينَا مَنْ لَا دِرْهَمَ لَهُ وَلَا مَتَاعَ فَقَالَ إِنَّ الْمُفْلِسَ مِنْ أُمَّتِي يَأْتِي يَوْمَ الْقِيَامَةِ بِصَلَاةٍ وَصِيَامٍ وَزَكَاةٍ وَيَأْتِي قَدْ شَتَمَ هَذَا وَقَذَفَ هَذَا وَأَكَلَ مَالَ هَذَا وَسَفَكَ دَمَ هَذَا وَضَرَبَ هَذَا فَيُعْطَى هَذَا مِنْ حَسَنَاتِهِ وَهَذَا مِنْ حَسَنَاتِهِ فَإِنْ فَنِيَتْ حَسَنَاتُهُ قَبْلَ أَنْ يُقْضَى مَا عَلَيْهِ أُخِذَ مِنْ خَطَايَاهُمْ فَطُرِحَتْ عَلَيْهِ ثُمَّ طُرِحَ فِي النَّارِ . 178
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( மக்களிடம் ), “ திவாலாகிப் போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் , “ யாரிடம் வெள்ளிக் காசோ ( திர்ஹம் ) பொருட்களோ இல்லையோ அவர்தாம் எங்களைப் பொருத்தவரை திவாலானவர் `` என்று பதிலளித்தார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் திவாலாகிப்போனவர் ஒருவராவார் . அவர் மறுமை நாளில் தொழுகை , நோன்பு , ஸகாத் ஆகியவற்றுடன் வருவார் . ( அதே நேரத்தில் ) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார் . ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார் . ஒருவரது பொருளை ( முறைகேடாக ) ப் புசித்திருப்பார் . ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார் . ஒருவரை அடித்திருப்பார் . ஆகவே , அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்படும் ; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும் . அவருடைய நன்மைகளிலிருந்து எடுத்துக் கொடுப்பதற்குமுன் நன்மைகள் தீர்ந்துவிட்டால் , ( அவரால் பாதிக்கப்பட்ட ) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு , இவர் மீது போடப்படும் . பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் ( அவரே திவாலாகிப் போனவர் )`` என்று கூறினார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَتُؤَدُّنَّ الْحُقُوقَ إِلَى أَهْلِهَا يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُقَادَ لِلشَّاةِ الْجَلْحَاءِ مِنْ الشَّاةِ الْقَرْنَاءِ . 179
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் உரிமைகளை உரியவர்களிடம் நிச்சயமாக நீங்கள் ஒப்படைப்பீர்கள் . எந்த அளவுக்கென்றால் , கொம்பில்லாத ஆட்டுக்காக ( அதை முட்டிய ) கொம்புள்ள ஆட்டிடம் பழிவாங்கப்படும் .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كُنَّا عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَضَحِكَ فَقَالَ هَلْ تَدْرُونَ مِمَّ أَضْحَكُ قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ مِنْ مُخَاطَبَةِ الْعَبْدِ رَبَّهُ يَقُولُ يَا رَبِّ أَلَمْ تُجِرْنِي مِنْ الظُّلْمِ قَالَ يَقُولُ بَلَى قَالَ فَيَقُولُ فَإِنِّي لَا أُجِيزُ عَلَى نَفْسِي إِلَّا شَاهِدًا مِنِّي قَالَ فَيَقُولُ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ شَهِيدًا وَبِالْكِرَامِ الْكَاتِبِينَ شُهُودًا قَالَ فَيُخْتَمُ عَلَى فِيهِ فَيُقَالُ لِأَرْكَانِهِ انْطِقِي قَالَ فَتَنْطِقُ بِأَعْمَالِهِ قَالَ ثُمَّ يُخَلَّى بَيْنَهُ وَبَيْنَ الْكَلَامِ قَالَ فَيَقُولُ بُعْدًا لَكُنَّ وَسُحْقًا فَعَنْكُنَّ كُنْتُ أُنَاضِلُ . 180
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அருகில் இருந்தோம் . அப்போது அவர்கள் சிரித்துவிட்டு , “ நான் சிரித்ததற்குக் காரணம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று சொன்னோம் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஓர் அடியான் தன் இறைவனுடன் ( மறுமை நாளில் ) உரையாடுவது குறித் ( து நினைத் ) தே ( சிரித்தேன் )`` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : அடியான் ( தன் இறைவனிடம் ), “ என் இறைவா ! நீ எனக்கு அநீதியிழைப்பதிலிருந்து பாதுகாப்பு வழங்குவாய் என உறுதியளிப்பாய் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு இறைவன் , ` ஆம் ` என்பான் . அடியான் , “ அவ்வாறாயின் , எனக்கெதிராக ( சாட்சியம் கூற ) என்னிலிருந்து தவிர வேறெந்தச் சாட்சியத்தையும் நான் அனுமதிக்கமாட்டேன் `` என்று கூறுவான் . அதற்கு இறைவன் , “ இன்றைய தினம் உனக்கெதிராகச் சாட்சியமளிக்க நீயும் கண்ணியமிக்க எழுத்தர் ( களான வானவர் ) களுமே போதும் `` என்பான் . பிறகு அவனது வாய்க்கு முத்திரையிடப்படும் . அவனுடைய உறுப்புகளிடம் , “ பேசுங்கள் `` என்று சொல்லப்படும் . உடனே அவை அந்த அடியான் செய்த செயல்களைப் பற்றி எடுத்துரைக்கும் . பிறகு அந்த அடியானும் உறுப்புகளும் தனியாகப் பேசுவதற்கு அனுமதியளிக்கப்படும் . அப்போது அந்த அடியான் , “ உங்களுக்கு நாசமுண்டாகட்டும் ! தொலைந்து போங்கள் . உங்களுக்காகத்தானே நான் ( இவ்வளவு நேரம் இறைவனிடம் ) வழக்காடினேன் `` என்று ( தன் உறுப்புகளிடம் ) சொல்வான் .
عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ . 181
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூபர்ஸா அல்அஸ்லமீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் ஓர் அடியானிடம் ( பின்வரும் விஷயங்கள் குறித்து ) விசாரணை செய்யப்படுவதற்கு முன் அவனுடைய பாதங்கள் ( நின்ற இடத்திலிருந்து ) நகர முடியாது . 1. அவன் வாழ்நாள்-அதை எவ்வாறு கழித்தான் ? 2. அவன் கற்ற கல்வி-அதைக் கொண்டு எவ்விதம் செயல்பட்டான் ? 3. அவன் பொருளாதாரம்-அதை எங்கிருந்து திரட்டினான் ? 4. அ( ப்பொருளாதாரத் ) தை எவ்வாறு செலவிட்டான் ? 5. அவன் உடல் - அதை எதில் ஈடுபடுத்தினான் ?
عَنْ أَنَسٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حُوسِبَ عُذِّبَ . 182
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( துருவித் துருவி ) கணக்கு கேட்கப்பட்டானோ அவன் வேதனை செய்யப்படுவான் .
عَنْ عَائِشَةَ تَقُولُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ الْحِسَابِ الْيَسِيرِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا الْحِسَابُ الْيَسِيرُ فَقَالَ الرَّجُلُ تُعْرَضُ عَلَيْهِ ذُنُوبُهُ ثُمَّ يُتَجَاوَزُ لَهُ عَنْهَا إِنَّهُ مَنْ نُوقِشَ الْحِسَابَ هَلَكَ وَلَا يُصِيبُ عَبْدًا شَوْكَةٌ فَمَا فَوْقَهَا إِلَّا قَاصَّ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهَا مِنْ خَطَايَاهُ . 183
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுவது குறித்துக் கேட்டேன் . “ அல்லாஹ்வின் தூதரே ! எளிமையான முறையில் கேள்வி கணக்கு கேட்கப்படுதல் என்றால் என்ன ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ ஒரு மனிதனிடம் அவனது பாவங்களெல்லாம் எடுத்துக் காட்டப்படும் . பிறகு அவனுக்கு அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படும் . நிச்சயமாக எவன் துருவித் துருவிக் கேட்கப்பட்டானோ அவன் அழிந்தான் . ஒரு மனிதருக்கு முள்ளோ அதற்கு மேலோ ( ஏதேனும் பொருள் ) தொல்லை கொடுத்தால் அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய பாவங்களுக்கு அதைப் பரிகாரமாக ஆக்காமல் இருப்பதில்லை ” என்று கூறினார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ أُنَاسٌ يَا رَسُولَ اللَّهِ هَلْ نَرَى رَبَّنَا يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ هَلْ تُضَارُّونَ فِي الشَّمْسِ لَيْسَ دُونَهَا سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ هَلْ تُضَارُّونَ فِي الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَيْسَ دُونَهُ سَحَابٌ قَالُوا لَا يَا رَسُولَ اللَّهِ قَالَ فَإِنَّكُمْ تَرَوْنَهُ يَوْمَ الْقِيَامَةِ كَذَلِكَ يَجْمَعُ اللَّهُ النَّاسَ فَيَقُولُ مَنْ كَانَ يَعْبُدُ شَيْئًا فَلْيَتَّبِعْهُ فَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الشَّمْسَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الْقَمَرَ وَيَتْبَعُ مَنْ كَانَ يَعْبُدُ الطَّوَاغِيتَ وَتَبْقَى هَذِهِ الْأُمَّةُ فِيهَا مُنَافِقُوهَا فَيَأْتِيهِمْ اللَّهُ فِي غَيْرِ الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ نَعُوذُ بِاللَّهِ مِنْكَ هَذَا مَكَانُنَا حَتَّى يَأْتِيَنَا رَبُّنَا فَإِذَا أَتَانَا رَبُّنَا عَرَفْنَاهُ فَيَأْتِيهِمْ اللَّهُ فِي الصُّورَةِ الَّتِي يَعْرِفُونَ فَيَقُولُ أَنَا رَبُّكُمْ فَيَقُولُونَ أَنْتَ رَبُّنَا فَيَتْبَعُونَهُ وَيُضْرَبُ جِسْرُ جَهَنَّمَ . 184
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களுள் சிலர் “ அல்லாஹ்வின் தூதரே ! மறுமையில் நாங்கள் எங்கள் இறைவனைக் காண்போமா ?`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார்கள் . அப்போது நபி அவர்கள் “ மேகம் மறைக்காத சூரியனைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ பௌர்ணமி இரவில் மேகம் மறைக்காத முழு நிலவைக் காண்பதில் உங்களுக்குச் சிரமம் உண்டா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “( சிரமம் ) இல்லை ; அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : இவ்வாறுதான் மறுமை நாளில் உங்கள் இறைவனை நீங்கள் காண்பீர்கள் . அல்லாஹ் மனிதர்களை ( மறுமை மன்றத்தில் ) ஒன்று கூட்டி “( உலகத்தில் ) யார் எதை வணங்கிக் கொண்டிருந்தார்களோ அதைப் பின் தொடர்ந்து செல்லட்டும் `` என்பான் . ஆகவே , சூரியனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( சூரியனைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . சந்திரனை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அதைப் ) பின்தொடர்ந்து செல்வார்கள் . ஷைத்தான்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் ( அவற்றைப் ) பின்பற்றிச் செல்வார்கள் . இறுதியில் இந்தச் சமுதாயத்தார் மட்டும் எஞ்சியிருப்பார்கள் . அவர்களிடையே நயவஞ்சகர்களும் இருப்பார்கள் . அப்போது இறைவன் , அவர்கள் அறிந்து கொள்ள முடியாத தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நான்தான் உங்கள் இறைவன் `` என்பான் . உடனே அவர்கள் “ உன்னிடமிருந்து அல்லாஹ்விடம் நாங்கள் பாதுகாப்புக் கோருகிறோம் . எங்கள் இறைவன் எங்களிடம் வரும் வரை நாங்கள் இங்கேயே இருப்போம் . எங்கள் இறைவன் எங்களிடம் வந்தால் அவனை நாங்கள் அறிந்து கொள்வோம் `` என்பர் . அப்போது இறைவன் அவர்கள் அறிந்து கொள்ளும் விதத்திலான தோற்றத்தில் அவர்களிடம் வந்து “ நானே உங்கள் இறைவன் `` என்பான் . அதற்கு அவர்கள் “ நீயே எங்கள் இறைவன் `` என்று கூறிவிட்டு அவனைப் பின்தொடர்ந்து செல்வார்கள் . அங்கு நரகத்தின் மீது பாலம் அமைக்கப்படும் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நானே ( அந்தப் பாலத்தைக் ) கடப்பவர்களுள் முதல் ஆளாக இருப்பேன் . அப்போதைய நிலையில் இறைத்தூதர்கள் . அனைவரின் பிரார்த்தனையும் “ அல்லாஹ்வே ! காப்பாற்று காப்பாற்று ” என்பதாகவே இருக்கும் . அந்தப் பாலத்தில் கொக்கிகள் மாட்டப்பட்டிருக்கும் . அவை கருவேல மரத்தின் முற்களைப் போன்றிருக்கும் . “ கருவேல மர முள்ளை நீங்கள் பார்த்த தில்லையா ?`` என்று கேட்டார்கள் . மக்கள் “ ஆம் ( பார்த்திருக்கிறோம் ) அல்லாஹ்வின் தூதரே !`` என்று பதிலளித்தார்கள் . ( தொடர்ந்து ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அந்தக் கொக்கிகள் கருவேல மரத்தின் முள்ளைப் போன்று இருக்கும் . ஆயினும் , அதன் பருமனை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள் . அப்போது அந்தக் கொக்கிகள் மக்களை அவர்களின் செயல்களுக்கேற்பக் கவ்விப் பிடிக்கும் . அவர்களுள் ( இறைமறுப்பு உள்ளிட்ட ) தன் ( தீய ) செயல்களால் அழிந்துபோனவரும் இருப்பார் . ( இறைநம்பிக்கை இருந்தாலும் பாவம் செய்த காரணத்தால் ) மூர்ச்சையாகிப் பிறகு பிழைத்துக் கொள்பவரும் இருப்பார் . இறுதியாக இறைவன் , தன் அடியார்களிடையே தீர்ப்பு வழங்கி முடித்தபின் , வணக்கத்திற்குரியவர் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறியவர்களில் தான் நாடிய சிலரை நரகத்திலிருந்து வெளியேற்ற விரும்புவான் . அப்போது அவர்களை வெளியேற்றுமாறு வானவர்களுக்கு ஆணையிடுவான் . வானவர்கள் அவர்களை சஜ்தாவின் ( சிரவணக்கத்தின் ) அடையாளங்களை வைத்து இனம் கண்டுகொள்வார்கள் . ( ஏனெனில் ,) அல்லாஹ் நரகத்திற்கு , மனிதனை அவனிலுள்ள சஜ்தாவின் அடையாளத்தில் தீண்டக் கூடாதெனத் தடை விதித்துள்ளான் . ஆகவே , வானவர்கள் அவர்களை ( நரகத்திலிருந்து ) வெளியேற்றுவார்கள் . அப்போது அவர்கள் ( நரக நெருப்பில் ) கரிக்கப்பட்டிருப்பார்கள் . எனவே , அவர்கள் மீது " மாஉல் ஹயாத் ` எனப்படும் ( ஜீவ ) நீர் ஊற்றப்படும் . உடனே அவர்கள் சேற்று வெள்ளத்தில் விதைபயிர் முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறி விடுவார்கள் . அவர்களுள் தமது முகத்தால் நரகத்தை முன்னோக்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதர் மட்டும் எஞ்சுவார் . அவர் “ என் இறைவா ! நரகத்தின் ( வெப்பக் ) காற்றால் எனக்கு மூச்சடைக்கிறது . அதன் ஜுவாலை என்னைக் கரித்துவிட்டது . ஆகவே , நரகத்தை விட்டு என் முகத்தை ( வேறு பக்கம் ) திருப்பி விடுவாயாக !`` என்று அல்லாஹ்விடம் பிரார்த்தித்துக் கொண்டேயிருப்பார் . அப்போது அல்லாஹ் “( உன் கோரிக்கையை ஏற்று ) இதை நான் உனக்கு வழங்கிவிட்டால் வேறொரு கோரிக்கையையும் நீ முன்வைக்கலாம் அல்லவா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் `` என்பார் . ஆகவே , இறைவன் அவரது முகத்தை நரகத்தைவிட்டு ( வேறு பக்கம் ) திருப்பிவிடுவான் . அதற்குப் பிறகு “ என் இறைவா ! சொர்க்கத்தின் வாசல் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக !`` என்பார் அவர் . அதற்கு இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ கூறவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உன்னுடைய ஏமாற்று வேலைதான் என்ன !`` என்பான் . ஆனால் , அவர் தொடர்ந்து வேண்டிக்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ நீ கேட்டதை உனக்கு நான் கொடுத்தால் இன்னொன்றையும் நீ என்னிடம் கேட்கக்கூடும் `` என்பான் . அதற்கு அவர் “ இல்லை ; உன் கண்ணியத்தின் மீதாணையாக ! இதுவல்லாத வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் `` என்று சொல்லிவிட்டு , வாக்குறுதிகளையும் உறுதிமொழிகளையும் அவர் இறைவனிடம் வழங்குவார் . இதையடுத்து இறைவன் அவரைச் சொர்க்கத்தின் வாசல் அருகே கொண்டு செல்வான் . சொர்க்கத்திற்குள் இருப்பவற்றைக் காணும்போது அல்லாஹ் நாடிய நேரம் வரை மௌனமாக இருப்பார் . பிறகு “ இறைவா ! என்னைச் சொர்க்கத்திற்கு அனுப்புவாயாக !`` என்று கூறுவார் . பின்னர் இறைவன் “ வேறெதையும் உன்னிடம் கேட்கமாட்டேன் என்று நீ சொல்லவில்லையா ? மனிதா ! உனக்குக் கேடுதான் . உனது ஏமாற்று வேலைதான் என்ன !`` என்று கேட்பான் . அதற்கு “ என் இறைவா ! என்னை உன் படைப்புகளிலேயே நற்கதியற்றவனாக ஆக்கிவிடாதே !`` என்று இறைவன் சிரிக்கும் வரை பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பார் . அவரைக் கண்டு இறைவன் சிரித்துவிடும்போது சொர்க்கத்தில் நுழைய அவருக்கு இறைவன் அனுமதி வழங்கிடுவான் . சொர்க்கத்திற்குள் அவர் நுழைந்த பின் , “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைப்படுவார் . பிறகு ( மீண்டும் ) “ நீ ( விரும்பிய ) இன்னதை ஆசைப்படலாம் `` என்று சொல்லப்படும் . அவ்வாறே அவரும் ஆசைகள் முழுதும் முற்றுப் பெறும்வரை ஆசைப்பட்டு ( தன் விருப்பங்களைத் தெரிவித்து ) க்கொண்டே இருப்பார் . அப்போது இறைவன் “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்பான் . அறிவிப்பாளர் அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இந்த மனிதர்தாம் சொர்க்கத்தில் நுழையும் இறுதி மனிதராவார் . அதாஉ பின் யஸீத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ( மேற்கண்ட ஹதீஸை ) அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு ( அறிவித்தபோது , அவர்கள் ) உடன் அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களும் அமர்ந்திருந்தார்கள் . அன்னார் இந்த ஹதீஸ் தொடர்பாக எந்த மாற்றத்தையும் தெரிவிக்கவில்லை . ஆனால் , “ இது உனக்குக் கிடைக்கும் ; இதைப் போன்று இன்னொரு மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று கூறியபோதுதான் , அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு , “ இதுவும் இதைப் போன்று பத்து மடங்கும் உனக்குக் கிடைக்கும் `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறக் கேட்டேன் `` என்றார்கள் . அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ இதைப் போன்று இன்னொரு மடங்கு `` என்றே நான் மனனமிட்டுள்ளேன் என்று கூறினார்கள் .
عَن أَنَسِ قَالَ : سَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَشْفَعَ لِي يَوْمَ الْقِيَامَةِ فَقَالَ أَنَا فَاعِلٌ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَيْنَ أَطْلُبُكَ قَالَ اطْلُبْنِي أَوَّلَ مَا تَطْلُبُنِي عَلَى الصِّرَاطِ قَالَ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عَلَى الصِّرَاطِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْمِيزَانِ قُلْتُ فَإِنْ لَمْ أَلْقَكَ عِنْدَ الْمِيزَانِ قَالَ فَاطْلُبْنِي عِنْدَ الْحَوْضِ فَإِنِّي لَا أُخْطِئُ هَذِهِ الثَّلَاثَ الْمَوَاطِنَ 185
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , “ மறுமை நாளில் எனக்காக நீங்கள் பரிந்துரை செய்வீர்களா ?” என்று கேட்டேன் . அதற்கு நபி ஸல் அவர்கள் , “ அவ்வாறே செய்கிறேன் ” என்று கூறினார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! அப்போது உங்களை நான் எங்கே தேடுவேன் ?” என்று வினவினேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என்னை நீ தேடுவதிலேயே முதலாவதாக அஸ்ஸிராத் பாலத்தின்மீது தேடு ” என்றார்கள் . “ அந்தப் பாலத்தின்மீது தங்களை நான் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . “ அப்போது ( மனிதர்களின் நன்மை தீமைகள் நிறுக்கப்படும் ) தராசு அருகில் தேடு ” என்றார்கள் . “ தராசின் அருகிலும் நான் தங்களைச் சந்திக்க முடியாவிட்டால் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அப்போது என்னை நீ ( அல்கவ்ஸர் எனும் ) தடாகத்தின் அருகில் தேடு ; ஏனெனில் இம்மூன்று இடங்களில் ( ஒன்றிலிருந்து ) நான் தவறிப்போக மாட்டேன் ” என்று கூறினார்கள் .
عن أَبي سَعِيدٍ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُوضَعُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَانَيْ جَهَنَّمَ عَلَى حَسَكٍ كَحَسَكِ السَّعْدَانِ ثُمَّ يَسْتَجِيزُ النَّاسُ فَنَاجٍ مُسَلَّمٌ وَمَخْدُوجٌ بِهِ ثُمَّ نَاجٍ وَمُحْتَبَسٌ بِهِ وَمَنْكُوسٌ فِيهَا . 186
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஸிராத் ( கடக்கும் பாதை ) சஅதான் மர முள்களைப் போன்ற முள்கள்மீது , நரகத்தின் இருபுறங்களுக்கிடையே அமைக்கப்படும் . பின்னர் மக்கள் அதைக் கடந்து செல்வார்கள் . ( அப்போது அவர்களுள் சிலர் ) நல்ல முறையில் கடந்து சென்றுவிடுவார்கள் . பின்னர் ( அவர்களுள் சிலர் ) கடந்து சென்று இடையில் நிற்பார்கள் . ( அவர்களுள் சிலர் அதனுள் ) தலைகீழாக விழுவார்கள் .
عَنْ أَبِي ذَرٍّ قَالَ : وَإِنَّ خَلِيلِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَهِدَ إِلَيَّ أَنَّ دُونَ جِسْرِ جَهَنَّمَ طَرِيقًا ذَا دَحْضٍ وَمَزَلَّةٍ ، وَإِنَّا نَأْتِي عَلَيْهِ وَفِي أَحْمَالِنَا اقْتِدَارٌ. 187
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னுடைய உற்ற தோழர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்னிடம் உறுதி கூறினார்கள் . நிச்சயமாக நரகத்தின் பாலத்தையன்றி ( வேறு ஒரு ) பாதை உள்ளது . அது வழுக்குப் பாதையாகும் . நிச்சயமாக நாம் - நம்முடைய சுமைகளில் நடுநிலையாக உள்ள நிலையில் - அதன்மீது வருவோம் . ( மற்றோர் அறிவிப்பில் , “ நம்முடைய சுமைகள் மென்மையாக உள்ள நிலையில் ” என்று உள்ளது ) நாம் கண்ணியவான்களாக உள்ள நிலையில் , அதன்மீது வருவதிலிருந்து தப்பிக்க நான் அதிகமாக முயற்சி செய்வேன் .
عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ ، فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ : يَسْعَى نُورُهُمْ بَيْنَ أَيْدِيهِمْ قَالَ : " يُؤْتَوْنَ نُورَهُمْ عَلَى قَدْرِ أَعْمَالِهِمْ مِنْهُمْ مَنْ نُورُهُ مِثْلُ الْجَبَلِ وَأَدْنَاهُمْ نُورًا مَنْ نُورُهُ عَلَى إِبْهَامِهِ يُطْفِي مَرَّةً وَيَقِدُ أُخْرَى . 188
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்களுடைய ஒளி அவர்களின் முன்னிலையில் ஓடும் . (57: 12) எனும் இறைவசனத்தை ஓதிவிட்டுச் சொன்னார்கள் : அவர்கள் தத்தம் நல்லறங்களுக்கு ஏற்ப ஒளி கொடுக்கப்படுவார்கள் . அவர்களுள் ஒருவருக்கு மலையளவு ஒளி இருக்கும் . அவர்களுள் மிகக் குறைவான ஒளியைப் பெறுபவருடைய ஒளி கட்டைவிரல் அளவு இருக்கும் . அது ஒரு தடவை அணையும் ; மறு தடவை ஒளிரும் .
(ق)عَنْ عَبْدُ اللَّهِ بْنُ عَمْرٍو قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَوْضِي مَسِيرَةُ شَهْرٍ مَاؤُهُ أَبْيَضُ مِنْ اللَّبَنِ وَرِيحُهُ أَطْيَبُ مِنْ الْمِسْكِ وَكِيزَانُهُ كَنُجُومِ السَّمَاءِ مَنْ شَرِبَ مِنْهَا فَلَا يَظْمَأُ أَبَدًا . 189
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : (" அல்கவ்ஸர் ` எனும் ) என் தடாகம் ஒரு மாத காலப் பயணத் தொலைதூரம் ( பரப்பளவு ) கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது . அதன் மணம் கஸ்தூரியைவிட நறுமணம் வாய்ந்தது . அதன் கூஜாக்கள் விண்மீன்கள் போன்றவை . யார் அதன் நீரை அருந்துகின்றார்களோ அவர்கள் ஒருபோதும் தாகமடையமாட்டார்கள் .
(ق) عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي عَلَى الْحَوْضِ حَتَّى أَنْظُرَ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ وَسَيُؤْخَذُ نَاسٌ دُونِي فَأَقُولُ يَا رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيُقَالُ هَلْ شَعَرْتَ مَا عَمِلُوا بَعْدَكَ وَاللَّهِ مَا بَرِحُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 190
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்மா பின்த் அபீபக்ர் ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : நான் (" அல்கவ்ஸர் `) தடாகத்தின் அருகில் இருந்தவாறு உங்களுள் யார் என்னிடம் வருகிறார்கள் என்பதை உற்றுப்பார்த்துக் கொண்டிருப்பேன் . அப்போது என்னை நெருங்கவிடாமல் சிலர் பிடிக்கப்படுவார்கள் . உடனே நான் " இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்பேன் . அதற்கு “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் செய்ததை நீங்கள் அறிவீர்களா ? அல்லாஹ்வின் மீதாணையாக ! இவர்கள் தங்கள் குதிகால்கள் மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பச் சென்று கெண்டேயிருந்தார்கள் `` என்று கூறப்படும் .
(م)عَنْ عَائِشَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ وَهُوَ بَيْنَ ظَهْرَانَيْ أَصْحَابِهِ إِنِّي عَلَى الْحَوْضِ أَنْتَظِرُ مَنْ يَرِدُ عَلَيَّ مِنْكُمْ فَوَاللَّهِ لَيُقْتَطَعَنَّ دُونِي رِجَالٌ فَلَأَقُولَنَّ أَيْ رَبِّ مِنِّي وَمِنْ أُمَّتِي فَيَقُولُ إِنَّكَ لَا تَدْرِي مَا عَمِلُوا بَعْدَكَ مَا زَالُوا يَرْجِعُونَ عَلَى أَعْقَابِهِمْ . 191
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்கள் முன்னிலையில் இருந்தபடி கூறினார்கள் : நான் எனது (" அல்கவ்ஸர் ` எனும் ) தடாகத்தினருகில் உங்களில் என்னிடம் வருபவர் யார் என்று எதிர்பார்த்துக் காத்திருப்பேன் . அல்லாஹ்வின் மீதாணையாக ! உங்களில் சிலர் என்னிடம் நெருங்க விடாமல் தடுக்கப்படுவர் . அப்போது நான் “ இறைவா ! ( இவர்கள் ) என்னைச் சேர்ந்தவர்கள் ; என் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் `` என்று கூறுவேன் . அதற்கு இறைவன் , “ இவர்கள் உமக்குப் பின்னால் செய்ததை நீர் அறியமாட்டீர் . இவர்கள் தம் குதிகால்கள்மீது ( தம் பழைய மதத்திற்கே ) திரும்பிச் சென்றுகொண்டேயிருந்தனர் `` என்று கூறுவான் .
(م) عَنْ أَبِي ذَرٍّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ مَا آنِيَةُ الْحَوْضِ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَآنِيَتُهُ أَكْثَرُ مِنْ عَدَدِ نُجُومِ السَّمَاءِ وَكَوَاكِبِهَا أَلَا فِي اللَّيْلَةِ الْمُظْلِمَةِ الْمُصْحِيَةِ آنِيَةُ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهَا لَمْ يَظْمَأْ آخِرَ مَا عَلَيْهِ يَشْخَبُ فِيهِ مِيزَابَانِ مِنْ الْجَنَّةِ مَنْ شَرِبَ مِنْهُ لَمْ يَظْمَأْ عَرْضُهُ مِثْلُ طُولِهِ مَا بَيْنَ عَمَّانَ إِلَى أَيْلَةَ مَاؤُهُ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ وَأَحْلَى مِنْ الْعَسَلِ . 192
அபூதர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் ( நபியவர்களிடம் ), “ அல்லாஹ்வின் தூதரே ! ( அல்கவ்ஸர் எனும் ) அத்தடாகத்தின் கோப்பைகள் என்ன ?`` என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ முஹம்மதின் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதன் கோப்பைகள் ( எண்ணிக்கையானது ), மேகமோ நிலவோ இல்லாத இரவில் காட்சியளிக்கும் விண்மீன்களின் எண்ணிக்கையைவிட அதிகமானதாகும் . அவையே சொர்க்கத்தின் கோப்பைகளாகும் . யார் அ( த்தடாகத் ) தில் அருந்துகிறாரோ அவருக்கு இறுதிவரை தாகமே ஏற்படாது . அதில் சொர்க்கத்திலிருந்து இரு வடிகுழாய்கள் வழியாக நீர் வந்துசேருகிறது . அதில் அருந்துபவருக்குத் தாகமே ஏற்படாது . அத்தடாகத்தின் அகலம் அதன் நீளத்தைப் போன்று ( சம அளவில் ) இருக்கும் . அதன் தொலைதூரம் ( அன்றைய ஷாம் நாட்டிலிருந்த ) " அம்மானு`க்கும் " அய்லா`வுக்கும் இடையேயுள்ள தொலை தூரத்தைக் கொண்டதாகும் . அதன் நீர் பாலைவிட வெண்மையானது ; தேனைவிட மதுரமானது `` என்று கூறினார்கள் .
عَنْ أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُعْرَضُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلَاثَ عَرَضَاتٍ فَأَمَّا عَرْضَتَانِ فَجِدَالٌ وَمَعَاذِيرُ وَأَمَّا الثَّالِثَةُ فَعِنْدَ ذَلِكَ تَطِيرُ الصُّحُفُ فِي الْأَيْدِي فَآخِذٌ بِيَمِينِهِ وَآخِذٌ بِشِمَالِهِ . 193
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் மக்கள் ( அல்லாஹ்வின் முன்னால் ) மூன்று ( தடவைகள் ) கட்டங்களில் முன்னிலைப் படுத்தப்படுவார்கள் . இரண்டு கட்டங்களில் முன்னிலைப்படுத்தப்படும்போது வாதங்களும் சாக்குப்போக்குகளுமாக இருக்கும் . மூன்றாவது தடவை முன்னிலைப்படுத்தப்படும்போது ( ஒவ்வொருவரின் ) வினைச்சுவடிகள் அவர்களின் கைகளை நோக்கிப் பறந்துவரும் . அதை ( ச் சிலர் ) வலக்கையால் எடுப்பர் . ( வேறு சிலர் ) இடக்கையால் எடுப்பர் .
عن عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ سَيُخَلِّصُ رَجُلًا مِنْ أُمَّتِي عَلَى رُءُوسِ الْخَلَائِقِ يَوْمَ الْقِيَامَةِ فَيَنْشُرُ عَلَيْهِ تِسْعَةً وَتِسْعِينَ سِجِلًّا كُلُّ سِجِلٍّ مِثْلُ مَدِّ الْبَصَرِ ثُمَّ يَقُولُ أَتُنْكِرُ مِنْ هَذَا شَيْئًا أَظَلَمَكَ كَتَبَتِي الْحَافِظُونَ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ أَفَلَكَ عُذْرٌ فَيَقُولُ لَا يَا رَبِّ فَيَقُولُ بَلَى إِنَّ لَكَ عِنْدَنَا حَسَنَةً فَإِنَّهُ لَا ظُلْمَ عَلَيْكَ الْيَوْمَ فَتَخْرُجُ بِطَاقَةٌ فِيهَا أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ فَيَقُولُ احْضُرْ وَزْنَكَ فَيَقُولُ يَا رَبِّ مَا هَذِهِ الْبِطَاقَةُ مَعَ هَذِهِ السِّجِلَّاتِ فَقَالَ إِنَّكَ لَا تُظْلَمُ قَالَ فَتُوضَعُ السِّجِلَّاتُ فِي كَفَّةٍ وَالْبِطَاقَةُ فِي كَفَّةٍ فَطَاشَتْ السِّجِلَّاتُ وَثَقُلَتْ الْبِطَاقَةُ فَلَا يَثْقُلُ مَعَ اسْمِ اللَّهِ شَيْءٌ . 194
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் என் சமுதாயத்திலிருந்து ஒரு மனிதரை அனைத்துப் படைப்பினங்களுக்கு முன்னிலையில் ( பெயர் கூறி ) கூவி அழைக்கப்படும் . அவருக்குத் தொண்ணூற்று ஒன்பது ஆவணங்கள் விரிக்கப்படும் . ஒவ்வோர் ஆவணமும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ( இருக்கும் ). பின்னர் மகத்துவமும் வல்லமையும் கொண்ட அல்லாஹ் , “ இதிலிருந்து எதையேனும் நீ மறுக்கின்றாயா ?” என்று வினவுவான் . “ இல்லை , என் இறைவா ” என்று கூறுவான் . “ என்னுடைய கண்காணிப்பு எழுத்தர்கள் உனக்கு அநியாயம் செய்து விட்டார்களா ?” என்று கேட்டுவிட்டு , பின்னர் , “ இவை தவிர உனக்கு நன்மை ஏதும் உள்ளதா ?” என்று கேட்பான் . அந்த மனிதன் பயந்துபோய் , “ இல்லை ” என்று கூறுவான் . அதற்கு அல்லாஹ் , “ ஆம் , உனக்காக நம்மிடம் நன்மைகள் உள்ளன . திண்ணமாக இன்றைய நாளில் உமக்கு எந்த அநியாயமும் இல்லை ” என்று கூறுவான் . ( பின்னர் ) அவனுக்காக ஓர் ஏடு வெளிக்கொணரப்படும் . அதில் , அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹ் வ அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு ( பொருள் : வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றும் திண்ணமாக முஹம்மத் அவனுடைய அடியாராகவும் அவனுடைய தூதராகவும் இருக்கின்றார்கள் என்றும் நான் சாட்சி கூறுகிறேன் ) என்று ( எழுதப்பட்டு ) இருக்கும் . அப்போது அவன் , “ என் இறைவா , இந்த ஆவணங்களோடு இது என்ன ஏடு ( வேறு )?” என்று வினவுவான் . அப்போது அல்லாஹ் , “ திண்ணமாக நீ அநியாயம் செய்யப்படமாட்டாய் ” என்று கூறுவான் . பிறகு அந்த ஆவணங்கள் ஒரு தட்டிலும் அந்த ஏடு ஒரு தட்டிலும் வைக்கப்படும் . அப்போது அந்த ஆவணங்கள் ( வலுவிழந்து ) மேலே சென்றுவிடும் . அந்த ஏடு ( கனத்தால் ) தாழும் .
عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَحْنُ آخِرُ الْأُمَمِ وَأَوَّلُ مَنْ يُحَاسَبُ يُقَالُ أَيْنَ الْأُمَّةُ الْأُمِّيَّةُ وَنَبِيُّهَا فَنَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ . 195
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நாம் கடைசிச் சமுதாயத்தினர் ஆவோம் . விசாரணை செய்யப்படுவோருள் முதன்மை ஆவோம் . “ உம்மி சமுதாயமும் அதன் நபியும் எங்கே ?“ என்று வினவப்படும் . எனவே நாம்தாம் கடைசியானவர்கள் ( அதே நேரத்தில் விசாரணையில் ) முதன்மையானவர்கள் .
عَنِ الْأَسْوَدِ بْنِ سَرِيعٍ أَنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعَةٌ يَوْمَ الْقِيَامَةِ رَجُلٌ أَصَمُّ لَا يَسْمَعُ شَيْئًا وَرَجُلٌ أَحْمَقُ وَرَجُلٌ هَرَمٌ وَرَجُلٌ مَاتَ فِي فَتْرَةٍ فَأَمَّا الْأَصَمُّ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَسْمَعُ شَيْئًا وَأَمَّا الْأَحْمَقُ فَيَقُولُ رَبِّ لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَالصِّبْيَانُ يَحْذِفُونِي بِالْبَعْرِ وَأَمَّا الْهَرَمُ فَيَقُولُ رَبِّي لَقَدْ جَاءَ الْإِسْلَامُ وَمَا أَعْقِلُ شَيْئًا وَأَمَّا الَّذِي مَاتَ فِي الْفَتْرَةِ فَيَقُولُ رَبِّ مَا أَتَانِي لَكَ رَسُولٌ فَيَأْخُذُ مَوَاثِيقَهُمْ لَيُطِيعُنَّهُ فَيُرْسِلُ إِلَيْهِمْ أَنْ ادْخُلُوا النَّارَ قَالَ فَوَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ لَوْ دَخَلُوهَا لَكَانَتْ عَلَيْهِمْ بَرْدًا وَسَلَامًا . 196
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அஸ்வத் பின் சரீஉ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு பேர் மறுமை நாளில் விசாரிக்கப்படுவர் . 1. செவிடன்-எதையும் செவியுறாதவன் . 2. ( நல்லது எது , கெட்டது எது என அறிய முடியாத ) முட்டாள் , 3. ( எதற்கும் இயலாத ) தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் , 4. ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் . செவிடர் சொல்வார் : என் இறைவா ! நான் எதையும் செவியுற முடியாத நிலையில் இருந்தபோது இஸ்லாமிய மார்க்கம் வந்தது . முட்டாள் சொல்வார் : என் இறைவா ! என்னைச் சிறுவர்கள் ( கேலி செய்து ) விட்டையால் அடித்துக் கொண்டிருந்த நிலையில் இஸ்லாம் வந்தது . தள்ளாடும் பருவத்தில் உள்ள முதியவர் கூறுவார் : “ என் இறைவா ! நான் எதையும் அறிந்து கொள்ள முடியாத நிலையில் இஸ்லாம் வந்தது .” ( எந்த இறைத்தூதரும் வராத ) இடைவெளிக் காலத்தில் வாழ்ந்தவர் சொல்வார் : “ என் இறைவா ! உன்னிடமிருந்து எந்தத் தூதரும் வரவில்லை .” ( அதன்பின் ) அவர்களுடைய வாக்குறுதிகளை எடுத்துக்கொள்வான் . அவர்கள் அவனுக்குப் பணிகின்றார்களா என்று சோதிப்பதற்காக , அவர்களிடம் “ நரகத்தில் நுழையுங்கள் ” என்று தூது அனுப்புவான் . முஹம்மதின் ஆன்மா எவன் கையில் உள்ளதோ அவன்மீது சத்தியமாக ! அதில் அவர்கள் நுழைந்தால் அது அவர்களுக்கு இதம் தரும் குளிர்ச்சியாக இருக்கும் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ . 197
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது . சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُفَّتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتْ النَّارُ بِالشَّهَوَاتِ . 198
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது . மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ فَقَالَ انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَجَاءَهَا وَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهِ قَالَ فَوَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَانْظُرْ إِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خِفْتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. 199
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்துவிட்டு ( வானவர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி , " அதையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ள ( கொடைகள் , இன்பங்கள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று சொன்னான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று சொர்க்கத்தையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளவற்றையும் பார்வையிட்டுவிட்டுத் திரும்பி வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதனுள் நுழைய ( முயலா ) மல் இருக்க மாட்டார்கள் " என்று கூறினார் . அப்போது அல்லாஹ் சிரமங்களால் சொர்க்கத்தைச் சூழச் செய்யுமாறு உத்தரவிட அவ்வாறே செய்யப்பட்டது . பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் " நீர் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்று அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயாரித்து வைத்துள்ளவற்றைப் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பிச் சென்றபோது சொர்க்கம் சிரமங்களால் சூழப்பெற்றிருந்தது . உடனே அவர்கள் அல்லாஹ்விடம் வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் யாரும் நுழையமாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் " என்று சொன்னார்கள் . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , " நீர் நரகத்திற்குச் சென்று , நரகத்தையும் அதில் நரகவாசிகளுக்காக நான் தயாரித்துள்ள ( வேதனைகள் தண்டனைகள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . ( ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று பார்த்தபோது ) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியின் மீது ஏறிப் பயணித்துக் கொண்டிருந்தது . உடனே அங்கிருந்து திரும்பிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதில் நுழையா ( மல் இருக்க முயற்சி செய்யாமல் இருக்க ) மாட்டார்கள் " என்று கூறினார்கள் . பிறகு அல்லாஹ் உத்தரவிட , மன இச்சைகளால் நரகம் சூழச் செய்யப்பட்டது . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , “ நீர் மறுபடியும் செல்வீராக ! ( அதைப் பார்வையிடுவீராக !)" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பி ( ச் சென்று பார்த்துவிட்டு ) வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் நுழையாமல் யாரும் தப்பிக்கப் போவதில்லை என நான் அஞ்சுகிறேன் " என்று கூறினார்கள் .
(خ ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ أَحَدٌ الْجَنَّةَ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ النَّارِ لَوْ أَسَاءَ لِيَزْدَادَ شُكْرًا وَلَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ إِلَّا أُرِيَ مَقْعَدَهُ مِنْ الْجَنَّةِ لَوْ أَحْسَنَ لِيَكُونَ عَلَيْهِ حَسْرَةً . 200
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் பாவம் புரிந்திருந்தால் நரகத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் சொர்க்கத்தில் நுழையமாட்டார் . அவர் அதிகமாக ( மகிழ்ச்சியடைந்து இறைவனுக்கு ) நன்றி செலுத்துவதற்காகவே ( இவ்வாறு காட்டப்படும் ). ( நரகவாசிகளுள் ) எவரும் , ( உலக வாழ்வில் ) தாம் நன்மை புரிந்திருந்தால் சொர்க்கத்தில் தமது இருப்பிடம் எதுவாக இருந்திருக்கும் என்று காட்டப்படாமல் நரகத்தில் நுழையமாட்டார் . இது அவருக்கு ( பெரும் ) துயரமாக அமைய வேண்டும் என்பதற்காகவே ( காட்டப்படுகிறது ).
(خ ) عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْجَنَّةُ أَقْرَبُ إِلَى أَحَدِكُمْ مِنْ شِرَاكِ نَعْلِهِ وَالنَّارُ مِثْلُ ذَلِكَ . 201
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கம் உங்களின் செருப்பு வாரைவிட உங்களுக்கு மிக அருகில் உள்ளது . நரகமும் அதைப் போன்றே ( மிக அருகில் உள்ளது ).
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأَيْتُ مِثْلَ النَّارِ نَامَ هَارِبُهَا وَلَا مِثْلَ الْجَنَّةِ نَامَ طَالِبُهَا. 202
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நரக நெருப்பைப் போன்று ( கடுமையான ) எதையும் கண்டதில்லை . அதிலிருந்து வெருண்டோட வேண்டியவன் உறங்கிக் கிடக்கிறான் . நான் சொர்க்கத்தைப் போன்று ( இன்பமான ) எதையும் கண்டதில்லை . அதைத் தேட வேண்டியவனும் உறங்கிக் கிடக்கிறான் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَحَاجَّتْ الْجَنَّةُ وَالنَّارُ فَقَالَتْ النَّارُ أُوثِرْتُ بِالْمُتَكَبِّرِينَ وَالْمُتَجَبِّرِينَ وَقَالَتْ الْجَنَّةُ مَا لِي لَا يَدْخُلُنِي إِلَّا ضُعَفَاءُ النَّاسِ وَسَقَطُهُمْ قَالَ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لِلْجَنَّةِ أَنْتِ رَحْمَتِي أَرْحَمُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَقَالَ لِلنَّارِ إِنَّمَا أَنْتِ عَذَابِي أُعَذِّبُ بِكِ مَنْ أَشَاءُ مِنْ عِبَادِي وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا مِلْؤُهَا فَأَمَّا النَّارُ فَلَا تَمْتَلِئُ حَتَّى يَضَعَ رِجْلَهُ فَتَقُولُ قَطْ قَطْ فَهُنَالِكَ تَمْتَلِئُ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ وَلَا يَظْلِمُ اللَّهُ عَزَّ وَجَلَّ مِنْ خَلْقِهِ أَحَدًا وَأَمَّا الْجَنَّةُ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُنْشِئُ لَهَا خَلْقًا . 203
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன . அப்போது நரகம் , “" பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக்காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் `` என்று சொன்னது . சொர்க்கம் , “ எனக்கு என்ன நேர்ந்ததோ ! மக்களுள் பலவீனர்களும் அவர்களுள் கீழ்நிலையினருமே ( அதிகமாக ) என்னுள் நுழைவார்கள் `` என்று கூறியது . அல்லாஹ் சொர்க்கத்திடம் , “ நீ எனது அருள் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் `` என்று கூறினான் . நரகத்திடம் “ நீ வேதனை ( க்காகத் ) தான் . உன் மூலமே என் அடியார்களுள் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் `` என்று கூறினான் . அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும் . ஆனால் , நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும் வரை வயிறு நிரம்பாது . இறைவன் காலை வைக்கும்போது நரகம் “ போதும் ! போதும் !`` என்று கூறும் . அப்போதுதான் அதற்கு வயிறு நிரம்பும் . மேலும் , ( நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை ; மாறாக ,) அதில் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் . அல்லாஹ் தன்னுடைய படைப்புகளுள் யாருக்கும் அநியாயம் செய்யமாட்டான் . ஆனால் , வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ் , சொர்க்கத்திற்கென்றே ( புதிதாகச் ) சிலரைப் படை ( த்து அதை நிறை ) ப்பான் .
(ق) عَنْ أُسَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : قُمْتُ عَلَى بَابِ الْجَنَّةِ فَكَانَ عَامَّةَ مَنْ دَخَلَهَا الْمَسَاكِينُ وَأَصْحَابُ الْجَدِّ مَحْبُوسُونَ غَيْرَ أَنَّ أَصْحَابَ النَّارِ قَدْ أُمِرَ بِهِمْ إِلَى النَّارِ وَقُمْتُ عَلَى بَابِ النَّارِ فَإِذَا عَامَّةُ مَنْ دَخَلَهَا النِّسَاءُ . 204
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உசாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் சொர்க்கத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . அதில் நுழைவோருள் பெரும்பாலானோர் ஏழைகளாகவே இருந்தனர் . செல்வர்கள் ( சொர்க்கத்தின் வாசலில் விசாரணைக்காகத் ) தடுத்து நிறுத்தப்பட்டிருந்தனர் . எனினும் , ( அவர்களுள் ) நரகவாசிகள் ( எனத் தீர்மானிக்கப்பட்டோர் ஏற்கெனவே ) நரகத்திற்கு அனுப்பப்பட்டு விட்டனர் . நான் நரகத்தின் வாசலில் நின்று கொண்டிருந்தேன் . அதில் நுழைவோருள் பெரும்பாலானோர் பெண்களாகவே இருந்தனர் .
( خ ) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اطَّلَعْتُ فِي الْجَنَّةِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا الْفُقَرَاءَ وَاطَّلَعْتُ فِي النَّارِ فَرَأَيْتُ أَكْثَرَ أَهْلِهَا النِّسَاءَ . 205
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் ( மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது ) சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன் . அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன் . நரகத்தையும் எட்டிப் பார்த்தேன் . அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாகப் பெண்களைக் கண்டேன் .
(م) عَنْ عِيَاضِ بْنِ حِمَارٍ الْمُجَاشِعِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ذَاتَ يَوْمٍ فِي خُطْبَتِهِ أَلَا إِنَّ رَبِّي أَمَرَنِي أَنْ أُعَلِّمَكُمْ مَا جَهِلْتُمْ مِمَّا عَلَّمَنِي يَوْمِي هَذَا كُلُّ مَالٍ نَحَلْتُهُ عَبْدًا حَلَالٌ وَإِنِّي خَلَقْتُ عِبَادِي حُنَفَاءَ كُلَّهُمْ وَإِنَّهُمْ أَتَتْهُمْ الشَّيَاطِينُ فَاجْتَالَتْهُمْ عَنْ دِينِهِمْ وَحَرَّمَتْ عَلَيْهِمْ مَا أَحْلَلْتُ لَهُمْ وَأَمَرَتْهُمْ أَنْ يُشْرِكُوا بِي مَا لَمْ أُنْزِلْ بِهِ سُلْطَانًا وَإِنَّ اللَّهَ نَظَرَ إِلَى أَهْلِ الْأَرْضِ فَمَقَتَهُمْ عَرَبَهُمْ وَعَجَمَهُمْ إِلَّا بَقَايَا مِنْ أَهْلِ الْكِتَابِ . 206
இயாள் பின் ஹிமார் அல்முஜாஷிஈ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒரு நாள் உரையாற்றியபோது பின்வருமாறு கூறினார்கள் : அறிந்து கொள்ளுங்கள் : என் இறைவன் இன்றைய நாள் எனக்குக் கற்றுத் தந்தவற்றிலிருந்து நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுத்தருமாறு எனக்குக் கட்டளையிட்டான் . ( இறைவன் கூறினான் :) நான் ஓர் அடியானுக்கு வெகுமதியாக வழங்கியுள்ள அனைத்துப் பொருட்களும் அவனுக்கு அனுமதிக்கப்பட்டவையே ஆகும் . நான் என் அடியார்கள் அனைவரையும் ( இயற்கையிலேயே ) உண்மை வழி நின்றவர்களாகவே படைத்தேன் . ( ஆயினும் ) அவர்களிடம் ஷைத்தான் வந்து அவர்களது இயற்கை நெறியிலிருந்து அவர்களைப் பிறழச் செய்துவிட்டான் . நான் அவர்களுக்கு அனுமதித்துள்ளவற்றைத் தடை செய்யப்பட்டவையாக ஆக்கிவிட்டான் ; நான் எனக்கு இணை கற்பிப்பதற்கு எந்தச் சான்றையும் இறக்காத நிலையில் எனக்கு இணை கற்பிக்குமாறு அவர்களுக்குக் கட்டளையிட்டுவிட்டான் . அல்லாஹ் பூமியில் வசித்துக்கொண்டிருப்போரைப் பார்த்து , அவர்களில் அரபியர் , அரபியரல்லாதோர் அனைவர்மீதும் ( அவர்கள் இணை கற்பித்துக்கொண்டிருந்ததால் ) கடுங்கோபம் கொண்டான் ; வேதக்காரர்களில் ( இணைவைக்காமல் ) எஞ்சியிருந்தோரைத் தவிர ! மேலும் ( என்னிடம் ) இறைவன் , நான் உம்மைச் சோதிப்பதற்கும் உம்மைக் கொண்டு ( பிறரைச் ) சோதிப்பதற்குமே உம்மை நான் அனுப்பினேன் . ( வெள்ள ) நீரில் அழிந்துபோய் விடாத வேதத்தையும் உமக்கு நான் அருளினேன் . அதை உறங்கும்போதும் விழித்திருக்கும் நிலையிலும் நீர் ஓதுகின்றீர் `` என்று கூறினான் . மேலும் , என் இறைவன் குரைஷியரை எரித்துவிடுமாறு எனக்குக் கட்டளையிட்டான் . அப்போது நான் “ என் இறைவா ! அவர்கள் என் தலையை நொறுக்கி ஒரு ரொட்டியைப் போன்று ஆக்கிவிடுவார்களே ?`` என்று கூறினேன் . இறைவன் , “ உம்மை ( உமது பிறந்தகத்திலிருந்து ) அவர்கள் வெளியேற்றியதைப் போன்று அவர்களை நீர் வெளியேற்றி விடுவீராக . அவர்களிடம் அறப்போர் புரிவீராக . உமக்கு நாம் உதவுவோம் . ( நல்வழியில் ) நீர் செலவிடுவீராக . உமக்கு நாம் செலவிடுவோம் . ( அவர்களை நோக்கி ) ஒரு படையை அனுப்புவீராக . அதைப் போன்று ஐந்து மடங்கு படையை நாம் அனுப்புவோம் . உமக்குக் கீழ்ப்படிபவர்களுடன் சேர்ந்து உமக்கு மாறு செய்வோருடன் நீர் போரிடுவீராக `` என்று கூறினான் . மேலும் , சொர்க்கவாசிகள் மூவர் ஆவர் . ஒருவர் , நீதிநெறி வழுவாமல் வாரி வழங்கி நல்லறம் புரிய வாய்ப்பளிக்கப்படும் அரசர் . இரண்டாமவர் உறவினர்களிடமும் மற்ற முஸ்லிம்களிடமும் அன்புடனும் இரக்கத்துடனும் நடந்து கொள்பவர் . மூன்றாமவர் குழந்தை குட்டிகள் இருந்தும் ( தவறான வழியில் பொருளீட்டிவிடாமல் ) தன்மானத்துடனும் சுயமரியாதையுடனும் வாழ்கின்ற மனிதர் . நரகவாசிகள் ஐவர் ஆவர் . முதலாமவர் , புத்தி சாதுர்யம் இல்லாத பலவீனர் . அவர் ( சுய காலில் நிற்காமல் ) உங்களையே பின்தொடர்வார் . தமக்கெனக் குடும்பத்தையோ செல்வத்தையோ தேடிக்கொள்ள மாட்டார் . இரண்டாமவர் , எந்த ஆசையையும் விட்டுவைக்காத மோசடிக்காரர் . அற்பமானதே ஆனாலும் மோசடி செய் ( தாவது அதை அடை ) யாமல் விடமாட்டார் . மூன்றாமவர் , காலையிலும் மாலையிலும் உம்முடைய வீட்டார் விஷயத்திலும் உமது செல்வம் விஷயத்திலும் உமக்குத் துரோகமிழைப்பவர் . ( நரகவாசிகளின் குணங்களில் நான்காவதாகக் ) கருமித்தனத்தை அல்லது பொய்யைக் கூறினார்கள் . ஐந்தாமவன் , “ அதிகமாக அருவருப்பாகப் பேசுகின்ற ஒழுங்கீனன் `` என்று குறிப்பிட்டார்கள் . மற்றோர் அறிவிப்பாளர் தொடரில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாவது : “ பணிவாக நடந்துகொள்ளுங்கள் . உங்களுள் ஒருவர் மற்றவரிடம் பெருமையடிக்க வேண்டாம் . ஒருவர் மற்றவரிடம் எல்லை மீற வேண்டாம் `` என்று இறைவன் எனக்கு அறிவித்தான் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِأَنْعَمِ أَهْلِ الدُّنْيَا مِنْ أَهْلِ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ فَيُصْبَغُ فِي النَّارِ صَبْغَةً ثُمَّ يُقَالُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ هَلْ مَرَّ بِكَ نَعِيمٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ وَيُؤْتَى بِأَشَدِّ النَّاسِ بُؤْسًا فِي الدُّنْيَا مِنْ أَهْلِ الْجَنَّةِ فَيُصْبَغُ صَبْغَةً فِي الْجَنَّةِ فَيُقَالُ لَهُ يَا ابْنَ آدَمَ هَلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ هَلْ مَرَّ بِكَ شِدَّةٌ قَطُّ فَيَقُولُ لَا وَاللَّهِ يَا رَبِّ مَا مَرَّ بِي بُؤْسٌ قَطُّ وَلَا رَأَيْتُ شِدَّةً قَطُّ . 207
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இவ்வுலகில் செல்வச் செழிப்புடன் வாழ்ந்த நரகவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டு வரப்பட்டு , நரகத்தில் ஒரு முறை அழுத்தி எடுக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ( மனிதா )! எப்போதேனும் ( உலக வாழ்வில் ) நல்லதைப் பார்த்தாயா ? எப்போதேனும் அருட்கொடை ( இன்பம் ) ஏதும் உனக்குக் கிடைத்ததா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக , இல்லை என் இறைவா !`` என்று பதிலளிப்பார் . அவ்வாறே , இவ்வுலகில் கடுமையான துன்பத்தில் வாழ்ந்த சொர்க்கவாசிகளுள் ஒருவர் மறுமை நாளில் கொண்டுவரப்பட்டு , சிறிது நேரம் சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார் . பிறகு அவரிடம் , “ ஆதமின் மகனே ! ( உலகில் ) எப்போதேனும் சிரமத்தைக் கண்டாயா ? எப்போதேனும் துன்பம் ஏதும் உமக்கு ஏற்பட்டதா ?`` என்று கேட்கப்படும் . அதற்கு அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! இல்லை , என் இறைவா ! ஒருபோதும் எனக்கு எந்தத் துன்பமும் ஏற்பட்டதில்லை . ஒருபோதும் நான் சிரமத்தைக் கண்டதுமில்லை `` என்று கூறுவார் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ فَيُنَادِي مُنَادٍ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ ثُمَّ يُنَادِي يَا أَهْلَ النَّارِ فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ فَيَقُولُ هَلْ تَعْرِفُونَ هَذَا فَيَقُولُونَ نَعَمْ هَذَا الْمَوْتُ وَكُلُّهُمْ قَدْ رَآهُ فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ يَا أَهْلَ الْجَنَّةِ خُلُودٌ فَلَا مَوْتَ وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلَا مَوْتَ ثُمَّ قَرَأَ وَأَنْذِرْهُمْ يَوْمَ الْحَسْرَةِ إِذْ قُضِيَ الْأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ وَهَؤُلَاءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا وَهُمْ لَا يُؤْمِنُونَ . 208
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் ) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டு வரப்படும் . அப்போது அறிவிப்புச் செய்யும் ( வானவர்களுள் ) ஒருவர் , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அறிவிப்புச் செய்பவர் , “ இதை ( இந்த ஆட்டை ) நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ! இதுதான் மரணம் `` என்று பதிலளிப்பார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்திருக்கிறார்கள் . பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி : “ நரகவாசிகளே !` என்று அழைப்பார் . அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள் . அவர் “ இதை நீங்கள் அறிவீர்களா ?`` என்று கேட்பார் . அவர்கள் , “ ஆம் ( அறிவோம் ); இதுதான் மரணம் `` என்று பதில் சொல்வார்கள் . அவர்கள் அனைவரும் அதை ( முன்பே ) பார்த்துள்ளனர் . உடனே அது ( ஆட்டின் உருவத்திலுள்ள மரணம் ) அறுக்கப்பட்டுவிடும் . பிறகு அவர் , “ சொர்க்கவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணமே இல்லை . நரகவாசிகளே ! நிரந்தரம் ; இனி மரணம் என்பதே இல்லை `` என்று கூறுவார் . இதை அறிவித்த அபூசஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள் : இதைக் கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( நபியே !) நியாயத் தீர்ப்பளிக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி நீங்கள் அவர்களை எச்சரியுங்கள் ! எனினும் , ( இன்று உலக வாழ்வில் ) இவர்கள் கவலையற்றிருக்கின்றனர் . ஆதலால் இவர்கள் நம்பிக்கை கொள்ளவே மாட்டார்கள் `` எனும் (19:39ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் . மேலும் , “ இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று , அசட்டையாக உள்ளனர் . ஆகவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள் `` என்றும் சொன்னார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا لَهُ مَنْزِلَانِ مَنْزِلٌ فِي الْجَنَّةِ وَمَنْزِلٌ فِي النَّارِ فَإِذَا مَاتَ فَدَخَلَ النَّارَ وَرِثَ أَهْلُ الْجَنَّةِ مَنْزِلَهُ فَذَلِكَ قَوْلُهُ تَعَالَى أُولَئِكَ هُمْ الْوَارِثُونَ . 209
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வீடுகள் இல்லாமலில்லை . சொர்க்கத்தில் ஒரு வீடு ; நரகத்தில் ஒரு வீடு . ஒருவன் இறந்து நரகத்தில் நுழைந்துவிட்டால் , அவனுடைய வீட்டைச் சொர்க்கவாசி வாரிசாகப் பெற்றுக்கொள்வார் . அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான் : “ அவர்கள்தாம் வாரிசுதாரர்கள் .” (23: 10)
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ نَارُكُمْ جُزْءٌ مِنْ سَبْعِينَ جُزْءًا مِنْ نَارِ جَهَنَّمَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ إِنْ كَانَتْ لَكَافِيَةً قَالَ فُضِّلَتْ عَلَيْهِنَّ بِتِسْعَةٍ وَسِتِّينَ جُزْءًا كُلُّهُنَّ مِثْلُ حَرِّهَا . 210
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உங்கள் ( உலக ) நெருப்பு , நரக நெருப்பின் எழுபது பாகங்களிலிருந்து ஒரு பாகமேயாகும் `` என்று கூறினார்கள் . உடனே , “ அல்லாஹ்வின் தூதரே ! இந்த ( உலக ) நெருப்பே ( பாவம் செய்தவர்களை எரித்து வேதனைப்படுத்தப் ) போதுமானதாயிற்றே `` என்று கேட்கப்பட்டது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “( அப்படியல்ல .) உலக நெருப்பைவிட நரக நெருப்பு அறுபத்தொன்பது பாகங்கள் அதிகப்படுத்தப்பட்டுள்ளது . இவற்றில் ஒவ்வொரு பாகமும் உலக நெருப்பின் வெப்பத்திற்குச் சமமானதாகும் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤْتَى بِجَهَنَّمَ يَوْمَئِذٍ لَهَا سَبْعُونَ أَلْفَ زِمَامٍ مَعَ كُلِّ زِمَامٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ يَجُرُّونَهَا . 211
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கிலிகளால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும் . ஒவ்வொரு சங்கிலியுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து , இழுத்து வருவார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ سَمِعَ وَجْبَةً فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَدْرُونَ مَا هَذَا قَالَ قُلْنَا اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ قَالَ هَذَا حَجَرٌ رُمِيَ بِهِ فِي النَّارِ مُنْذُ سَبْعِينَ خَرِيفًا فَهُوَ يَهْوِي فِي النَّارِ الْآنَ حَتَّى انْتَهَى إِلَى قَعْرِهَا . 212
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் இருந்தோம் . அப்போது , ஏதோ விழுந்த சத்தத்தை அவர்கள் கேட்டார்கள் . ( நாங்களும் கேட்டோம் .) அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது என்ன ( சத்தம் ) என்று உங்களுக்குத் தெரியுமா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் , “ அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் `` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இது எழுபது ஆண்டுகளுக்கு முன்னர் நரகத்திற்குள் தூக்கியெறியப்பட்ட ஒரு கல்லாகும் . அது இந்த நேரம் வரை நரகத்திற்குள் சென்று இப்போதுதான் அதன் ஆழத்தை எட்டியது `` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ وَعِزَّتِكَ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ . 213
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள் . நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால் ) “ இன்னும் இருக்கிறதா ?`` என்று கேட்டுக்கொண்டேயிருக்கும் . இறுதியில் கண்ணியத்தின் அதிபதி ( யான இறைவன் ) தமது பாதத்தை அதில் வைப்பான் . அப்போது அது “ போதும் ! போதும் ! உன் கண்ணியத்தின் மீதாணையாக !`` என்று கூறும் . நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضِرْسُ الْكَافِرِ أَوْ نَابُ الْكَافِرِ مِثْلُ أُحُدٍ وَغِلَظُ جِلْدِهِ مَسِيرَةُ ثَلَاثٍ . 214
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நரகத்தில் ) இறைமறுப்பாளனின் " கடைவாய்ப் பல் ` அல்லது " கோரைப் பல் ` உஹுத் மலையைப் போன்றிருக்கும் . அவனது தோலின் பருமன் மூன்று நாள் பயணத் தொலைவுடையதாக இருக்கும் .
(ق) عَنْ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ يَخْطُبُ وَهُوَ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَهْوَنَ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَرَجُلٌ تُوضَعُ فِي أَخْمَصِ قَدَمَيْهِ جَمْرَتَانِ يَغْلِي مِنْهُمَا دِمَاغُهُ . 215
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிகவும் இலேசாக வேதனை செய்யப்படுபவர் ஒரு மனிதராவார் . அவருடைய உள்ளங்கால்களின் நடுவில் ( நரக ) நெருப்புக் கங்கு வைக்கப்படும் . அதனால் அவரது மூளை கொதிக்கும் .
(ق) عَنْ أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَقُولُ اللَّهُ تَعَالَى لِأَهْوَنِ أَهْلِ النَّارِ عَذَابًا يَوْمَ الْقِيَامَةِ لَوْ أَنَّ لَكَ مَا فِي الْأَرْضِ مِنْ شَيْءٍ أَكُنْتَ تَفْتَدِي بِهِ فَيَقُولُ نَعَمْ فَيَقُولُ أَرَدْتُ مِنْكَ أَهْوَنَ مِنْ هَذَا وَأَنْتَ فِي صُلْبِ آدَمَ أَنْ لَا تُشْرِكَ بِي شَيْئًا فَأَبَيْتَ إِلَّا أَنْ تُشْرِكَ بِي . 216
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் நரகவாசிகளிலேயே மிக இலேசான வேதனை அளிக்கப்படுபவரிடம் “ பூமியிலிருக்கும் பொருள்களெல்லாம் உனக்கே சொந்தம் என்றிருந்தால் நீ அவற்றை பிணைத் தொகையாகத் தர ( வும் அதன் மூலம் இந்த வேதனையிலிருந்து விடுதலை பெறவும் ) நீ முன்வருவாய் அல்லவா ?`` என்று அல்லாஹ் கேட்பான் . அதற்கு அவர் " ஆம் ` என்று பதிலளிப்பார் . அப்போது அல்லாஹ் “ நீ ( மனிதர்களின் தந்தை ) ஆதமின் முதுகந்தண்டில் ( அணுவாக ) இருந்தபோது இதைவிட இலேசான ஒன்றை-எனக்கு எதையும் இணை கற்பிக்கலாகாது என்பதைத்தான் உன்னிடமிருந்து எதிர்பார்த்தேன் . ஆனால் ( பூமிக்கு உன்னை அனுப்பியபோது ) எனக்கு இணை கற்பிப்பதைத் தவிர வேறெதற்கும் நீ ஒப்புக்கொள்ளவில்லையே !`` என்று கூறுவான் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ فَقُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ وَمَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى ثُمَّ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ قُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ مَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى فَلَا أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ . 217
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உறங்கிக் கொண்டிருந்தேன் . அப்போது ( கனவில் ) நான் ( அல்கவ்ஸர் தடாகத்தினருகில் ) நின்று கொண்டிருக்கிறேன் . அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ( வான ) வர் தோன்றி ( அந்தக் குழுவினரை நோக்கி ) " வாருங்கள் ` என்று அழைக்கிறார் . உடனே நான் ( அவரிடம் ) “ எங்கே ( இவர்களை அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்கு `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்றேன் . அவர் “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்று விட்டார்கள் `` என்றார் . பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்கு மிடையே ஒரு ( வான ) வர் தோன்றி , " வாருங்கள் ` என ( அவர்களிடம் ) கூறுகிறார் . நான் “( இவர்களை ) எங்கே ( அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்குத்தான் `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்று கேட்டேன் . அவர் " இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள் `` என்று பதிலளித்தார் . அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை .
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا لَسَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ . 218
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள் . ( இப்போது நான் நிற்கிற ) இந்த இடத்தில் அவர்கள் இருந் ( து கூறியிரு ) திருந்தால் அதைச் சந்தையிலுள்ளோர் செவியுற்றிருப்பர் . ( அதைச் சொன்னபோது ) அவர்கள் மீதிருந்த போர்வை அவர்களுடைய காலடியில் விழுந்துவிட்டது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَا أَكْثَرُ الْأَنْبِيَاءِ تَبَعًا يَوْمَ الْقِيَامَةِ وَأَنَا أَوَّلُ مَنْ يَقْرَعُ بَابَ الْجَنَّةِ . 219
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நானே மறுமை நாளில் இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன் ; நானே சொர்க்கத்தின் வாசலை முதன் முதலில் தட்டுபவன் ஆவேன் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ثُمَّ قَرَأَ: فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ . 220
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உயர்வான அல்லாஹ் , " என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத , எந்தக் காதும் கேட்டிராத , எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன் . ( சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து ) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை , ( அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே ) சொற்பமானவையே ஆகும் ` எனக் கூறுகின்றான் `` என்று சொல்லிவிட்டு , பிறகு , “ அவர்கள் செய்துகொண்டிருந்த ( நற் ) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் `` எனும் (32:17ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் .
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَشَجَرَةً يَسِيرُ الرَّاكِبُ فِي ظِلِّهَا مِائَةَ عَامٍ لَا يَقْطَعُهَا . 221
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு மரம் உள்ளது . அதன் நிழலில் பயணிப்பவர் நூறு வருடங்கள் பயணித்தாலும் அதைக் கடந்து செல்ல முடியாது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ لَسُوقًا يَأْتُونَهَا كُلَّ جُمُعَةٍ فَتَهُبُّ رِيحُ الشَّمَالِ فَتَحْثُو فِي وُجُوهِهِمْ وَثِيَابِهِمْ فَيَزْدَادُونَ حُسْنًا وَجَمَالًا فَيَرْجِعُونَ إِلَى أَهْلِيهِمْ وَقَدْ ازْدَادُوا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُ لَهُمْ أَهْلُوهُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا فَيَقُولُونَ وَأَنْتُمْ وَاللَّهِ لَقَدْ ازْدَدْتُمْ بَعْدَنَا حُسْنًا وَجَمَالًا . 222
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ( மக்கள் ஒன்றுகூடும் ) சந்தை ஒன்று உண்டு . அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள் . அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் ( கஸ்தூரி மண்ணை ) வாரிப் போடும் . உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள் . பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார்கள் . அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர் , “ எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே !`` என்று கூறுவர் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தாம் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள் `` என்று கூறுவர் .
(ق) عَنْ أبو موسى الأشعري: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ خَيْمَةً مِنْ لُؤْلُؤَةٍ مُجَوَّفَةٍ عَرْضُهَا سِتُّونَ مِيلًا فِي كُلِّ زَاوِيَةٍ مِنْهَا أَهْلٌ مَا يَرَوْنَ الْآخَرِينَ يَطُوفُ عَلَيْهِمْ الْمُؤْمِنُونَ وَجَنَّتَانِ مِنْ فِضَّةٍ آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَجَنَّتَانِ مِنْ كَذَا آنِيَتُهُمَا وَمَا فِيهِمَا وَمَا بَيْنَ الْقَوْمِ وَبَيْنَ أَنْ يَنْظُرُوا إِلَى رَبِّهِمْ إِلَّا رِدَاءُ الْكِبْرِ عَلَى وَجْهِهِ فِي جَنَّةِ عَدْنٍ . 223
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது . அதன் அகலம் அறுபது மைல்களாகும் . அதன் ஒவ்வொரு மூலையிலும் ( இறைநம்பிக்கையாளருக்கு ) துணைவியர் இருப்பார்கள் . ஒரு மூலையிலுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது . இறைநம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர் . மேலும் , இரு சொர்க்கங்கள் உள்ளன . அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியால் ஆனவை . ( வேறு ) இரு சொர்க்கங்கள் உள்ளன . அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை . " அத்ன் ` எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் , தங்கள் இறைவனைக் காண்பதற்கு , அவன் மீதுள்ள " பெருமை ` எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது .
(م ) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَيْحَانُ وَجَيْحَانُ وَالْفُرَاتُ وَالنِّيلُ كُلٌّ مِنْ أَنْهَارِ الْجَنَّةِ . 224
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சைஹான் , ஜைஹான் , ஃபுராத் , நீல் ( நைல் ) ஆகியவை சொர்க்க நதிகளில் உள்ளவையாகும் .
(خ) عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا عُرِجَ بِالنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى السَّمَاءِ قَالَ أَتَيْتُ عَلَى نَهَرٍ حَافَتَاهُ قِبَابُ اللُّؤْلُؤِ مُجَوَّفًا فَقُلْتُ مَا هَذَا يَا جِبْرِيلُ قَالَ هَذَا الْكَوْثَرُ . 225
தாம் அழைத்துச் செல்லப்பட்ட விண்ணுலகப் பயணம் குறித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் ஓர் ஆற்றின் அருகே சென்றேன் . அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன . அப்போது நான் , “ ஜிப்ரீலே , இது என்ன ?`` என்று கேட்டேன் . “ இது அல்கவ்ஸர் `` என்று ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் பதிலளித்தார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الرَّيَّانِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ . 226
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் ஒரு ஜோடிப் பொருட்களைச் செலவு செய்தால் அவர் சொர்க்கத்தின் வாசல்களிலிலிருந்து , “ அல்லாஹ்வின் அடியாரே ! இது ( பெரும் ) நன்மையாகும் ! ( இதன் வழியாக நுழையுங்கள் !)” என்று அழைக்கப்படுவார் . ( தமது உலக வாழ்வின் போது ) தொழுகையாளிகளாய் இருந்தவர்கள் தொழுகையின் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; அறப்போர் புரிந்தவர்கள் " ஜிஹாத் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; நோன்பாளிகளாய் இருந்தவர்கள் " ரய்யான் ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் ; தர்மம் செய்தவர்கள் " ஸதகா ` எனும் வாசல் வழியாக அழைக்கப்படுவர் !`` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூபக்ர் ரளியல்லாஹு அன்ஹு “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் ! இந்த வாசல்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படும் ஒருவருக்கு எந்தத் துயரும் இல்லையே ! எனவே , எவரேனும் அனைத்து வாசல்கள் வழியாகவும் அழைக்கப்படுவாரா ?`` என்று கேட்டார்கள் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ! நீரும் அவர்களுள் ஒருவராவீர் என்று நான் நம்புகிறேன் !`` என்றார்கள் .
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَوَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ فَأَسْرَعَ وَبَذَرَ فَتَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ وَتَكْوِيرُهُ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ يَا رَسُولَ اللَّهِ لَا تَجِدُ هَذَا إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ فَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ رَسُولُ اللَّهِ . 227
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கிராமவாசி ஒருவர் தம்மிடம் அமர்ந் திருக்க ( பின்வரும் நிகழ்ச்சியை ) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள் : சொர்க்கவாசிகளுள் ஒரு மனிதர் , தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார் . அதற்கு இறைவன் அவரிடம் , “ நீ விரும்பிய ( இன்பமான ) நிலையில் ( இப்போது ) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் , “ ஆம் . ( நான் விரும்பியபடியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் .) ஆனால் , நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் `` என்று கூறுவார் . ( இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான் .) அந்த மனிதர் விதை தூவி விடுவார் . கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும் ; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும் . அப்போது இறைவன் , “ எடுத்துக் கொள் , ஆதமின் மகனே ! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது `` என்று கூறுவான் . ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற ) அந்தக் கிராமவாசி , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! அந்த மனிதர் குறைஷியாகவோ ( மக்கா வாசியாகவோ ) அன்ஸாரியாகவோ ( மதீனாவாசியாகவோ ) தான் இருக்க முடியும் . அவர்கள் தாம் விவசாயிகள் . நாங்களோ விவசாயிகள் அல்லர் `` என்று கூறினார் . இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்து விட்டார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتْفِلُونَ وَلَا يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمْ الذَّهَبُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَمَجَامِرُهُمْ الْأَلُوَّةُ الْأَنْجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمْ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ . 228
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ( ஒளி வீசும் ) சந்திரனைப் போன்று ( பிரகாசமாகவும் அழகாகவும் ) தோற்றமளிப்பார்கள் . பிறகு , அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள் . அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள் ; எச்சில் துப்பவும் மாட்டார்கள் ; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள் . அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை . அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும் . அவர்களுடைய ( நறுமணப் புகை போடும் ) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப் படும் . அகில் என்பது நறுமணக் குச்சியாகும் . அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர் . ( சொர்க்கவாசிகளான ) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள் . அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தில் வானத்தில் ( முட்டும் விதத்தில் ) அறுபது முழம் உயரமிருப்பார்கள் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي زُمْرَةٌ هُمْ سَبْعُونَ أَلْفًا تُضِيءُ وُجُوهُهُمْ إِضَاءَةَ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ وَقَالَ أَبُو هُرَيْرَةَ فَقَامَ عُكَّاشَةُ بْنُ مِحْصَنٍ الْأَسَدِيُّ يَرْفَعُ نَمِرَةً عَلَيْهِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ قَالَ اللَّهُمَّ اجْعَلْهُ مِنْهُمْ ثُمَّ قَامَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ أَنْ يَجْعَلَنِي مِنْهُمْ فَقَالَ سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ . 229
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் கொண்ட ஒரு கூட்டம் , பௌர்ணமி இரவில் சந்திரன் பிரகாசிப்பதைப் போன்று முகங்கள் பிரகாசித்தபடி ( விசாரணையின்றிச் சொர்க்கத்துக்குள் ) நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . உடனே உக்காஷா பின் மிஹ்ஸன் அல்அசதீ ரளியல்லாஹு அன்ஹு தம் மீதிருந்த கோடுபோட்ட சால்வையை உயர்த்தியவாறு எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வே ! இவரையும் அவர்களுள் ஒருவராக ஆக்குவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . பிறகு அன்ஸாரிகளுள் ஒருவர் எழுந்து “ அல்லாஹ்வின் தூதரே ! அவர்களுள் ஒருவனாக என்னையும் ஆக்கும்படி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் `` என்று சொன்னார் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ இந்த விஷயத்தில் உக்காஷா உம்மை முந்திவிட்டார் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ مِنْ أُمَّتِي سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ قَالُوا مَنْ هُمْ يَا رَسُولَ اللَّهِ قَالَ هُمْ الَّذِينَ لَا يَسْتَرْقُونَ وَلَا يَتَطَيَّرُونَ وَلَا يَكْتَوُونَ وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ . 230
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ என் சமுதாயத்தாரில் எழுபதாயிரம் பேர் விசாரணையின்றிச் சொர்க்கத்தில் நுழைவார்கள் `` என்று கூறினார்கள் . மக்கள் , “ அவர்கள் யார் , அல்லாஹ்வின் தூதரே ?`` என்று கேட்டார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர்கள் எத்தகையவர்கள் எனில் , ஓதிப்பார்க்க மாட்டார்கள் ; பறவை சகுனம் பார்க்க மாட்டார்கள் ; ( நோய்க்காகச் ) சூடிட்டுக்கொள்ள மாட்டார்கள் ; தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைப்பார்கள் `` என்று கூறினார்கள் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ فِي قُبَّةٍ فَقَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا رُبُعَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا ثُلُثَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ أَتَرْضَوْنَ أَنْ تَكُونُوا شَطْرَ أَهْلِ الْجَنَّةِ قُلْنَا نَعَمْ قَالَ وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ إِنِّي لَأَرْجُو أَنْ تَكُونُوا نِصْفَ أَهْلِ الْجَنَّةِ وَذَلِكَ أَنَّ الْجَنَّةَ لَا يَدْخُلُهَا إِلَّا نَفْسٌ مُسْلِمَةٌ وَمَا أَنْتُمْ فِي أَهْلِ الشِّرْكِ إِلَّا كَالشَّعْرَةِ الْبَيْضَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَسْوَدِ أَوْ كَالشَّعْرَةِ السَّوْدَاءِ فِي جِلْدِ الثَّوْرِ الْأَحْمَرِ . 231
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் ( சுமார் நாற்பது பேர் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஒரு ( தோல் ) கூடாரத்தினுள் இருந்து கொண்டிருந்தோம் . அப்போது அவர்கள் " சொர்க்கவாசிகளுள் நான்கில் ஒரு பகுதியினராக இருக்க நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " சொர்க்கவாசிகளுள் மூன்றில் ஒரு பகுதியினராக நீங்கள் இருக்க வேண்டுமென விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . அவர்கள் “ சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக நீங்கள் இருக்க வேண்டும் என்று விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . நாங்கள் " ஆம் ` என்று சொன்னோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ முஹம்மதின் உயிர் எவனது கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! சொர்க்கவாசிகளுள் பாதிப் பேராக ( என் சமுதாயத்தாரான ) நீங்கள் இருக்க வேண்டும் என நான் எதிர்பார்க்கிறேன் . அதற்குக் காரணம் , சொர்க்கத்தில் முஸ்லிமானவரைத் தவிர வேறெவரும் நுழைய முடியாது . இணை வைப்பவர்களை ஒப்பிடும்போது நீங்கள் கறுப்புக் காளை மாட்டின் தோலில் உள்ள வெள்ளை முடியைப் போன்றுதான் ; அல்லது செவலைக் காளை மாட்டிலுள்ள கறுப்பு முடியைப் போன்றுதான் இருக்கிறீர்கள் `` என்று சொன்னார்கள் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: "إِنَّ أَهْلَ الْجَنَّةِ يَتَرَاءَيُونَ أَهْلَ الْغُرَفِ مِنْ فَوْقِهِمْ كَمَا يَتَرَاءَيُونَ الْكَوْكَبَ الدُّرِّيَّ الْغَابِرَ فِي الْأُفُقِ مِنَ الْمَشْرِقِ أَوِ الْمَغْرِبِ، لِتَفَاضُلٍ مَا بَيْنَهُمْ". قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، تِلْكَ مَنَازِلُ الْأَنْبِيَاءِ لَا يَبْلُغُهَا غَيْرُهُمْ قَالَ: "بَلَى وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، رِجَالٌ آمَنُوا بِاللَّهِ وَصَدَّقُوا الْمُرْسَلِينَ . 232
அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : " சொர்க்கவாசிகள் தங்களுக்கு மேலேயுள்ள சிறப்பு அறைகளில் வசிப்பவர்களை , அடிவானில் கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ பயணிக்கின்ற ஒளியுமிழும் நட்சத்திரத்தைப் பார்ப்பதைப் போன்று ( ஆர்வத்துடன் ) பார்ப்பார்கள் . ( அந்தஸ்தில் ) தமக்கும் அவர்களுக்குமிடையேயுள்ள ஏற்றத் தாழ்வைக் கண்டு ( ஏக்கம் கொண்டுதான் ) அப்படிப் பார்ப்பார்கள் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . ( இதைக் கேட்ட ) நபித்தோழர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! அவை நபிமார்கள் தங்குமிடங்கள்தாமே ? அவற்றை மற்றவர்கள் அடைய முடியாதல்லவா ?`` என்று கேட்டனர் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை . என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக ! அ( ங்கே தங்குப ) வர்கள் அல்லாஹ்வின் மீது ( உறுதியான ) நம்பிக்கை கொண்டு இறைத்தூதர்களை உண்மையாளர்கள் என ஏற்றுக்கொண்டவர்களே ஆவர் `` என்று பதிலளித்தார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ فِي الْجَنَّةِ غُرْفَةً يُرَى ظَاهِرُهَا مِنْ بَاطِنِهَا وَبَاطِنُهَا مِنْ ظَاهِرِهَا فَقَالَ أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ لِمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ لِمَنْ أَلَانَ الْكَلَامَ وَأَطْعَمَ الطَّعَامَ وَبَاتَ لِلَّهِ قَائِمًا وَالنَّاسُ نِيَامٌ . 233
அப்துல்லா ஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ திண்ணமாகச் சொர்க்கத்தில் ஓர் அறை உண்டு . அதன் வெளிப்புறம் உட்புறத்திலிருந்து காணப்படும் . அதன் உட்புறம் வெளிப்புறத்திலிருந்து காணப்படும் ” என்று அல்லாஹ்வின் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு , “ அது யாருக்கு அல்லாஹ்வின் தூதரே !” என்று கேட்டார்கள் . “ யார் மென்மையாகப் பேசி , ( பசித்தவருக்கு உணவு கொடுத்து , மக்கள் தூங்கும் வேளையில் அல்லாஹ்வுக்காக நின்று வழிபட்டாரோ அவருக்குரியது ” என்று கூறினார்கள் .
(م) عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ أَهْلُ الْجَنَّةِ فِيهَا وَيَشْرَبُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَبُولُونَ وَلَكِنْ طَعَامُهُمْ ذَاكَ جُشَاءٌ كَرَشْحِ الْمِسْكِ يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالْحَمْدَ كَمَا تُلْهَمُونَ النَّفَسَ 234
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள் ; பருகுவார்கள் . மலம் கழிக்கமாட்டார்கள் . மூக்குச் சிந்தவுமாட்டார்கள் . சிறுநீர் கழிக்கவு மாட்டார்கள் . அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று ஏப்பமாக வெளியேறும் . மூச்சு விடுமாறு அகத் தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும் .
(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ وَأَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يُنَادِي مُنَادٍ إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ وَنُودُوا أَنْ تِلْكُمْ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ . 235
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசஈத் அல்குத்ரீ , அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹுமா அறிவிப்பதாவது : ( சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்த பின்னர் ) பொது அறிவிப்பாளர் ஒருவர் , “( இனி ) நீங்கள் ஆரோக்கியத்துடனேயே இருப்பீர்கள் ; ஒருபோதும் நோய் காணமாட்டீர்கள் . நீங்கள் உயிருடன்தான் இருப்பீர்கள் ; ஒருபோதும் இறந்துபோய் விடமாட்டீர்கள் . இளமையோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் முதுமையடைய மாட்டீர்கள் . நீங்கள் இன்பத்தோடுதான் இருப்பீர்கள் ; ஒருபோதும் துன்பம் காணமாட்டீர்கள் `` என்று அறிவிப்புச் செய்வார் . இதையே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் , “ இதுதான் சொர்க்கம் ; நீங்கள் ( உலகில் ) நற்செயல் புரிந்து கொண்டிருந்ததற்காக இது உங்களுக்கு உடைமையாக்கப்பட்டுள்ளது என்று அவர்களிடம் எடுத்துச் சொல்லப்படும் `` (7:43) எனக் கூறுகின்றான் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ الْجَنَّةَ أَقْوَامٌ أَفْئِدَتُهُمْ مِثْلُ أَفْئِدَةِ الطَّيْرِ . 236
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் மக்கள் சிலர் நுழைவார்கள் . அவர்களுடைய உள்ளங்கள் பறவைகளின் உள்ளத்தைப் போன்றிருக்கும் .
(خ ) عِمْرَانُ بْنُ حُصَيْنٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ قَوْمٌ مِنْ النَّارِ بِشَفَاعَةِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَدْخُلُونَ الْجَنَّةَ يُسَمَّوْنَ الْجَهَنَّمِيِّينَ . 237
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இந்த ) முஹம்மதின் பரிந்துரையால் ஒரு கூட்டம் நரகத்திலிருந்து வெளியேறிச் சொர்க்கம் செல்வார்கள் . அவர்கள் " ஜஹன்னமிய்யூன் ` ( நரக விடுதலை பெற்றோர் ) என்று அழைக்கப்படுவார்கள் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ تَعَالَى : مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ ، فَيَخْرُجُونَ قَدِ امْتَحَشُوا ، وَعَادُوا حُمَمًا ، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ، أَلَمْ تَرَوْا أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً . 238
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் விசாரணை முடிந்தபின் ) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் “ எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் ( இறைநம்பிக்கை ) உள்ளதோ அவரை ( நரகத்திலிருந்து ) வெறியேற்றி விடுங்கள் `` என்று கூறுவான் . உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள் . அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள் . பின்னர் அவர்கள் " நஹ்ருல் ஹயாத் ` எனும் ( ஜீவ ) நதியில் போடப்படுவார்கள் . உடனே அவர்கள் " சேற்று வெள்ளத்தில் ` அல்லது " வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் ` விதை முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறிவிடுவார்கள் . அந்த வித்து ( விலிருந்து வரும் புற்பூண்டுகள் ) மஞ்சள் நிறத்தில் ( பார்ப்பதற்கு அழகாகவும் , காற்றில் ) அசைந்தாடியதாக ( வும் ) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா ?
عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَمِنُوا فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ فِي الدُّنْيَا بِأَشَدَّ مُجَادَلَةً لَهُ مِنْ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمْ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ . 239
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுப் பாதுகாப்பாக இருந்தால் , இந்த உலகில் சத்தியத்தின் மீதிருந்து நரகத்தில் நுழைந்துவிட்ட தங்கள் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை . அவர்கள் ( பின்வருமாறு ) கூறுவார்கள் : “ எங்கள் இறைவா ! எங்கள் சகோதரர்கள் எங்களுடன் தொழுதார்கள் , எங்களுடன் நோன்பு நோற்று , எங்களுடன் ஹஜ் செய்தார்கள் , ( அப்படியிருக்கையில் ) நீ ( எவ்வாறு ) அவர்களை நரகத்தில் நுழையச் செய்தாய் ?” அப்போது அவன் சொல்வான் : “ நீங்கள் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள் ,” அவர்கள் அவர்களிடம் வந்து அவர்களின் தோற்றங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் , அவர்களின் தோற்றங்களை நெருப்பு எரிக்காது , அவர்களுள் சிலரை நரக நெருப்பு அவர்களின் கெண்டைக்கால்கள் வரை உண்டிருக்கும் . அவர்களுள் சிலரை அவர்கள்தம் கணுக்கால்கள் வரை உண்டிருக்கும் . எனவே அவர்கள் அவர்களை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு , “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ” என்று சொல்வார்கள் . பின்னர் அவன் கூறுவான் : “ எவரது உள்ளத்தில் தீனார் எடை அளவு ஈமான் இருக்கிறதோ அவர்களை வெளியே எடுங்கள் . பின்னர் யாருடைய உள்ளத்தில் அரை தீனாரின் எடை அளவுக்கு ஈமான் உள்ளதோ ( அவர்களை வெளியே எடுங்கள் ).” இறுதியில் “ எவரது உள்ளத்தில் அணுவின் எடை அளவு ( ஈமான் உள்ளதோ அவர்களை வெளியே எடுங்கள் )” என்று கூறுவான் . அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இதை நம்பாதவர் ( பின்வரும் ) இந்த வசனத்தைப் படிக்கட்டும் : திண்ணமாக அல்லாஹ் அணுவின் எடை அளவுக்கும் அநீதி இழைக்க மாட்டான் , மேலும் ஒரு நல்ல செயல் இருந்தால் , அவன் அதை இரட்டிப்பாக்கிவிடுவான் . அவன் தன்னிடமிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கிறான் . (4: 40) அறிவிப்பாளர் கூறினார் : “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ; சிறிதளவு நன்மை உள்ள எவரும் நரகத்தில் இல்லை ” என்று சொல்வார்கள் . பின்னர் அல்லாஹ் : “ வானவர்கள் பரிந்துரை செய்தார்கள் ; நபிமார்கள் பரிந்துரை செய்தார்கள் ; இறைநம்பிக்கையாளர்கள் பரிந்துரை செய்தார்கள் ; இரக்கமுள்ளவர்களில் மிகவும் இரக்கமுள்ளவன் ( ஆகிய நான் ) எஞ்சியிருக்கிறேன் என்று கூறியவாறு , நரக நெருப்பிலிருந்து ஒரு கைப்பிடி ( அல்லது இரண்டு கைப்பிடி ) தொகையினரை எடுத்துக்கொள்வான் . அவர்கள் இறைவனுக்காகச் சிறிதளவும் ஒருபோதும் நன்மை செய்யாதவர்கள் , அவர்கள் கரிக்கட்டைகளாக மாறிப்போயிருப்பார்கள் . ஜீவநீர் என்று அழைக்கப்படுகிற தண்ணீருக்கு அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் , அது அவர்கள்மீது ஊற்றப்படும் . அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று வளர்வார்கள் , அவை முத்துக்கள் போல அவர்களின் உடலிலிருந்து வெளியேறும் , மேலும் அவர்களின் கழுத்தில் ஒரு மோதிரம் இருக்கும் : அவர்கள்தாம் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்பட்டவர்கள் , மேலும் அறிவிப்பாளர் கூறினார் : “ சொர்க்கத்தில் நுழையுங்கள் ” என்று அவர்களிடம் கூறப்படும் , அப்போது “ நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அல்லது பார்த்தீர்களோ , அது இதைவிட உங்களுக்குச் சிறந்தது ” என்று அல்லாஹ் கூறுவான் . அதற்கு அவர்கள் , “ எங்கள் இறைவா , இதைவிடச் சிறந்தது என்ன ?” என்று கேட்பார்கள் : “ நான் உங்கள்மீது திருப்தி அடைகிறேன் ; நான் ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் ” என்று அல்லாஹ் கூறுவான் .
(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ رَجُلٌ يَخْرُجُ مِنْ النَّارِ حَبْوًا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا أَوْ إِنَّ لَكَ عَشَرَةَ أَمْثَالِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي أَوْ أَتَضْحَكُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ قَالَ فَكَانَ يُقَالُ ذَاكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً . 240
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு ) கூறினார்கள் : நரகவாசிகளுள் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் , சொர்க்கவாசிகளுள் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன் . நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர் . அவரிடம் அல்லாஹ் “ நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்பான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . உடனே அவர் திரும்பி வந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அல்லாஹ் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்று ( மீண்டும் ) சொல்வான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . ஆகவே , அவர் திரும்பிவந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அவன் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் . ஏனெனில் , " உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு ` அல்லது " உலகத்தைப் போன்று பத்து மடங்கு ` ( இடம் சொர்க்கத்தில் ) உனக்கு உண்டு `` என்று சொல்வான் . அதற்கு அவர் " அரசனாகிய நீ என்னைப் " பரிகாசம் செய்கிறாயா ?` அல்லது " என்னை நகைக்கின்றாயா ?` என்று கேட்பார் . ( இதைக் கூறியபோது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன் . அறிவிப்பாளர்களுள் ஒருவர் கூறுகிறார் : இவரே சொர்க்கவாசிகளுள் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டு வந்தது .
(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللَّهِ فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ أَيْ رَبِّ إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا فَلَا تُعِدْنِي فِيهَا فَيُنْجِيهِ اللَّهُ مِنْهَا . 241
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறுதிக் கட்டத்தில் ) நான்கு பேர் ( நரக ) நெருப்பிலிருந்து வெளியேறுவார்கள் . அந்நால்வரும் அல்லாஹ்வின்முன் நிறுத்தப்படுவார்கள் . அப்போது அவர்களுள் ஒருவர் ( நரகத்தை நோக்கித் ) திரும்பி , “ இறைவா ! இ( ந்தக் கொடிய நரகத் ) திலிருந்து என்னை நீ வெளியேற்றிய பின் மீண்டும் அதற்குள் என்னை அனுப்பிவிடாதே !`` என்று கூறுவார் . அதையடுத்து அல்லாஹ் அதிலிருந்து அவரைக் காப்பாற்றுவான் .
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا . 242
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( மறுமையில் ) சொர்க்கவாசிகளை நோக்கி , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “ எங்கள் அதிபதியே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் `` என்று பதிலளிப்பார்கள் . அப்போது அல்லாஹ் " திருப்தி அடைந்தீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “ உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்கியிராத ( அருட்செல்வங்கள் , இன்பங்கள் ஆகிய ) வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா ?`` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் “ அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன் `` என்பான் . அவர்கள் “ அதிபதியே ! அதைவிடச் சிறந்தது எது ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அல்லாஹ் “ உங்கள்மீது என் திருப்தியை அருளுகிறேன் . இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் `` என்று கூறுவான் .
(م) عَنْ صُهَيْبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ قَالَ يَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى تُرِيدُونَ شَيْئًا أَزِيدُكُمْ فَيَقُولُونَ أَلَمْ تُبَيِّضْ وُجُوهَنَا أَلَمْ تُدْخِلْنَا الْجَنَّةَ وَتُنَجِّنَا مِنْ النَّارِ قَالَ فَيَكْشِفُ الْحِجَابَ فَمَا أُعْطُوا شَيْئًا أَحَبَّ إِلَيْهِمْ مِنْ النَّظَرِ إِلَى رَبِّهِمْ عَزَّ وَجَلَّ . 243
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுஹைப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்துவிடும்போது ( அவர்களிடம் ) அல்லாஹ் , “ உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “( இறைவா !) நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா ? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் நுழையச் செய்யவில்லையா ( இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும் )?`` என்று கேட்பார்கள் . அப்போது அல்லாஹ் , ( தன்னைச் சுற்றிலும் இருக்கும் ) திரையை விலக்கி ( அவர்களுக்கு தரிசனம் தந்தி ) டுவான் . அப்போது தம் இறைவனைக் ( காணும் அவர்களுக்கு அவனைக் ) காண்பதைவிட மிகவும் விருப்பமானது வேறெதுவும் வழங்கப்பட்டிராது .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ مِائَةُ عَامٍ . 244
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் ( தரஜா ) உள்ளன . ஒவ்வொரு படித்தரத்திற்கும் இடையே நூறாண்டுகள் ( தொலைதூரம் ) உள்ளது .
عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْجَنَّةِ مِائَةُ دَرَجَةٍ مَا بَيْنَ كُلِّ دَرَجَتَيْنِ كَمَا بَيْنَ الْأَرْضِ وَالسَّمَاءِ وَالْفِرْدَوْسُ أَعْلَاهَا دَرَجَةً وَمِنْهَا تُفَجَّرُ أَنْهَارُ الْجَنَّةِ الْأَرْبَعَةُ وَمِنْ فَوْقِهَا يَكُونُ الْعَرْشُ فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ فَسَلُوهُ الْفِرْدَوْسَ . 245
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நூறு படித்தரங்கள் உள்ளன . ( அவற்றில் ) ஒவ்வோர் இரண்டு படித்தரங்களுக்கு இடையேயும் பூமிக்கும் வானுக்கும் இடையிலுள்ளதைப் போன்ற தொலைதூரம் உள்ளது . ஃபிர்தவ்ஸ் என்பது ( சொர்க்கத்தின் படித்தரங்களில் ) மிக உயர்ந்த படித்தரமாகும் . அதிலிருந்தே நான்கு சொர்க்க ஆறுகள் பாய்கின்றன ; அதற்கு மேலேதான் அர்ஷ் ( இறையாசனம் ) இருக்கிறது . எனவே , நீங்கள் அல்லாஹ்விடம் கோரினால் , அவனிடம் ஃபிர்தவ்ஸ் எனும் அந்தச் சொர்க்கத்தையே கோருங்கள் .
عن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ مَا يُقِلُّ ظُفُرٌ مِمَّا فِي الْجَنَّةِ بَدَا لَتَزَخْرَفَتْ لَهُ مَا بَيْنَ خَوَافِقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَوْ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَ فَبَدَا أَسَاوِرُهُ لَطَمَسَ ضَوْءَ الشَّمْسِ كَمَا تَطْمِسُ الشَّمْسُ ضَوْءَ النُّجُومِ . 246
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்திலுள்ள அருட்கொடைகளில் ஒரு நகம் சுமக்கும் அளவிலான ( மிகச் சிறிய ) ஒன்று ( இவ்வுலகில் ) வெளிப்பட்டால்கூட , அதனால் வானங்களுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள பகுதிகள் எழிலாகிவிடும் . ( அவ்வாறே ,) சொர்க்கவாசிகளுள் ஒருவர் ( பூமியை ) எட்டிப்பார்க்க , அவருடைய அணிகலன்கள் தென்படுமானால் , விண்மீன்களின் ஒளியைச் சூரியன் மங்கச்செய்வதைப் போன்று . சூரிய ஒளியையே அவை மங்கச் செய்துவிடும் .
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا . 247
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் ( கிடைத்துவிட்டால் ) அது இந்தப் பூமியையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தது .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُبْعَثُ أَهْلُ الْجَنَّةِ عَلَى صُورَةِ آدَمَ فِي مِيلَادِ ثَلَاثَةٍ وَثَلَاثِينَ سَنَةً ، جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ ، ثُمَّ يُذْهَبُ بِهِمْ إِلَى شَجَرَةٍ فِي الْجَنَّةِ ، فَيُكْتَبُونَ فِيهَا ، لَا تَبْلَى ثِيَابُهُمْ ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ . 248
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் ஆதமின் தோற்றத்தில் எழுப்பப்படுவார்கள் . அவர்கள் தம் உடலில் உரோமங்களற்ற , கண்களில் அஞ்சனம் தீட்டப்பெற்ற , முப்பத்து மூன்று வயதுடைய இளவல்களாகச் சொர்க்கத்திற்குள் நுழைவார்கள் . பிறகு அவர்கள் சொர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள் . அங்கே “ அவர்களுடைய ஆடைகள் இற்றுப்போகா ; அவர்களுடைய இளமைப்பருவம் முடிந்துபோகாது ” என்று எழுதப்படும் .
عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِالْقَدَرِ خَيْرِهِ وَشَرِّهِ حَتَّى يَعْلَمَ أَنَّ مَا أَصَابَهُ لَمْ يَكُنْ لِيُخْطِئَهُ وَأَنَّ مَا أَخْطَأَهُ لَمْ يَكُنْ لِيُصِيبَهُ . 249
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அவர்கள் நன்மையும் தீமையும் விதியின் படியே நடக்கின்றன என்று நம்பாத வரை ஓர் அடியார் இறைநம்பிக்கை கொண்டவராக மாட்டார் . எந்த அளவுக்கென்றால் , தமக்குக் கிடைத்த ஒன்று , கிடைத்திருக்கக் கூடாதது அல்ல என்றும் , தமக்குக் கிடைக்காத ஒன்று கிடைத்திருக்க வேண்டியது அல்ல என்றும் அவர் அறிந்துகொள்ள வேண்டும் . ( அதாவது கிடைக்கக் கூடியதுதான் கிடைத்திருக்கிறது ; கிடைக்கக் கூடாததுதான் கிடைக்காமல் போயிருக்கிறது என்று அறிதல் வேண்டும் .)
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يُؤْمِنُ عَبْدٌ حَتَّى يُؤْمِنَ بِأَرْبَعٍ يَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ بَعَثَنِي بِالْحَقِّ وَيُؤْمِنُ بِالْمَوْتِ وَبِالْبَعْثِ بَعْدَ الْمَوْتِ وَيُؤْمِنُ بِالْقَدَرِ . 250
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு விஷயங்கள்மீது நம்பிக்கை கொள்ளாத வரை எந்த அடியாரும் இறைநம்பிக்கையாளராக ஆகமாட்டார் . 1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஆவேன் ; என்னை அவன் சத்திய ( மார்க்க ) த்துடன் அனுப்பிவைத்தான் என உறுதிமொழிவது . 2. மரணம் உண்டு என நம்புவது , 3. ( அனைவரும் ) இறந்தபின் ( உயிர் கொடுத்து ) எழுப்பப்படும் என்பதை நம்புவது 4. விதியை நம்புவது .
عَنْ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنْ الْقَدَرِ فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يُذْهِبَهُ مِنْ قَلْبِي قَالَ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا لَدَخَلْتَ النَّارَ . 251
அப்துல்லாஹ் பின் ஃபைரூஸ் அத்தைலமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ( தலை ) விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயப்பாடு எழுந்தது . எங்கே அது என் மார்க்க நம்பிக்கையையும் என் ( மற்ற ) விவகாரங்களையும் பாழாக்கிவிடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , நான் ( நபித்தோழர் ) உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று , " அபுல் முன்திர் ! இந்த விதி தொடர்பாக என் மனதுக்குள் ஐயம் உள்ளது . அது எங்கே என் மார்க்க நம்பிக்கையையும் என் ( இதர ) விவகாரங்களையும் பாழாக்கி விடுமோ என நான் அஞ்சினேன் . ஆகவே , இது குறித்து ஏதேனும் ( நபிமொழியைக் ) கூறுங்கள் ! அதன் மூலம் அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக்கூடும் `` என்று சொன்னேன் . அப்போது உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : அல்லாஹ் தனது வானத்திலும் பூமியிலும் உள்ள அனைவரையும் வேதனைப் படுத்தினால் அல்லாஹ் அவர்களை வேதனைப்படுத்தியதற்காக அவன் அநீதி இழைத்தவனாக ஆகமாட்டான் . அவன் அவர்கள் அனைவர் மீதும் கருணை காட்டினால் அவர்கள் ( இவ்வுலகில் ) புரிந்த நல்லறங்களை விடச் சிறந்ததாகவே அது இருக்கும் . உன்னிடம் " உஹுத் மலையளவு தங்கம் ` அல்லது " உஹுத் மலையளவு செல்வம் ` இருந்து அவற்றை இறைவழியில் நீ ஈந்தாலும் நீ விதி தொடர்பாக நம்பிக்கை கொள்ளாத வரை அவை உன்னிடமிருந்து ஏற்கப்படாது . அறிந்துகொள் ! உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல் போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ). இதற்கு மாறான நம்பிக்கையில் நீ இறந்துபோனால் நரகத்தில்தான் நீ நுழைவாய் `` என்று கூறிவிட்டு , “ இது குறித்து நீ என் சகோதரர் அப்துல்லாஹ் பின் மஸ்ஊதிடம் வினவினால் எந்தப் பிரச்சனையுமில்லை `` என்று கூறினார்கள் . அவ்வாறே நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினேன் . அப்போது அவரும் உபை பின் கஅப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் “ நீ ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று இது குறித்து வினவினால் எந்தப் பிரச்சனையும் இல்லை `` என்றார்கள் . அவ்வாறே நான் ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) வினவினேன் . அவர்களும் அவ்விருவரும் கூறியதைப் போன்றே கூறினார்கள் . மேலும் " நீ ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று ( இது குறித்து ) கேள் !`` என்றார்கள் அவ்வாறே நான் ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் சென்று வினவினேன் . அப்போது அவர்கள் நபியவர்கள் கூறியதாக மேற்கண்டவாறே கூறினார்கள் :
عُبَادَةُ بْنُ الصَّامِتِ لِابْنِهِ يَا بُنَيَّ إِنَّكَ لَنْ تَجِدَ طَعْمَ حَقِيقَةِ الْإِيمَانِ حَتَّى تَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَمَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَوَّلَ مَا خَلَقَ اللَّهُ الْقَلَمَ فَقَالَ لَهُ اكْتُبْ قَالَ رَبِّ وَمَاذَا أَكْتُبُ قَالَ اكْتُبْ مَقَادِيرَ كُلِّ شَيْءٍ حَتَّى تَقُومَ السَّاعَةُ يَا بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ مَاتَ عَلَى غَيْرِ هَذَا فَلَيْسَ مِنِّي . 252
உபாதா பின் அஸ்ஸாமித் ரளியல்லாஹு அன்ஹு தம் மகனுக்குக் கூறியதாவது : “ என்னருமை மகனே ! நிச்சயமாக நீ , உனக்குக் கிடைத்துள்ள ஒன்று , உனக்குக் கிடைக்காதென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை ; உனக்குக் கிடைக்காமல்போன ஒன்று உனக்குக் கிடைக்குமென ( விதியில் எழுதப்பட்டதாக ) இருக்கவுமில்லை . ( உனக்குக் கிடைக்குமென விதியில் இருந்ததே கிடைத்தது ; கிடைக்காதென விதியில் இருந்ததே உனக்குக் கிடைக்கவில்லை ) என்பதை நீ அறியும் வரை நீ உண்மையான ஈமானின் சுவையை ஒருபோதும் சுவைக்க முடியாது . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் : அல்லாஹ் முதன் முதலில் எழுதுகோலைப் படைத்தான் . அதனிடம் , “ நீ எழுது ” என்றான் . “ என் இறைவா ! நான் எதை எழுதுவேன் ?“ என்றது . அதற்கு அவன் , “ இறுதி நாள் வரையுள்ள எல்லாப் பொருள்களின் விதிகளையும் எழுது ” என்றான் . “ என்னருமை மகனே ! யார் இது அல்லாத நிலையில் ( விதியை நம்பாமல் ) இறந்துவிட்டாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதை நான் செவியுற்றேன் .
(م) عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلِقَتْ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ . 253
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர் . " ஜின்`கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர் . ( ஆதி மனிதர் ) ஆதம் , உங்களுக்கு ( குர்ஆனில் ) கூறப்பட்டுள்ளதைப் போன்று ( களிமண்ணால் ) படைக்கப்பட்டார் .
(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا صَوَّرَ اللَّهُ آدَمَ فِي الْجَنَّةِ تَرَكَهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَتْرُكَهُ فَجَعَلَ إِبْلِيسُ يُطِيفُ بِهِ يَنْظُرُ مَا هُوَ فَلَمَّا رَآهُ أَجْوَفَ عَرَفَ أَنَّهُ خُلِقَ خَلْقًا لَا يَتَمَالَكُ . 254
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்தில் ( களிமண்ணால் ) படைத்து , தான் நாடிய காலம் வரை அப்படியே விட்டுவிட்டான் . இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான் . வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது “ தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ( கட்டுப்பாடற்ற ) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது `` என அவன் அறிந்துகொண்டான் .
(م) عن أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ مِنْ قَبْضَةٍ قَبَضَهَا مِنْ جَمِيعِ الْأَرْضِ فَجَاءَ بَنُو آدَمَ عَلَى قَدْرِ الْأَرْضِ جَاءَ مِنْهُمْ الْأَحْمَرُ وَالْأَبْيَضُ وَالْأَسْوَدُ وَبَيْنَ ذَلِكَ وَالسَّهْلُ وَالْحَزْنُ وَالْخَبِيثُ وَالطَّيِّبُ . 255
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எடுத் ( துவரச் செய் )த ஒரு கைப்பிடி மண்ணிலிருந்தே படைத்தான் . ஆகவேதான் , ஆதமின் மக்கள் ( மனிதர்கள் ) பூமியின் தன்மைக்கேற்பவே உள்ளனர் . இதனாலேயே அவர்களில் சிவப்பரும் வெள்ளையரும் கருப்பரும் இவற்றுக்கு இடைப்பட்ட நிறம் கொண்டோரும் , மெல்லிய இயல்பாளரும் முரடரும் நல்லோரும் தீயோரும் இருக்கின்றனர் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ . 256
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்களுக்குள் உயிரை ஊதியபோது ஆதம் அவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது . அப்போது அவர்கள் , ` அல்ஹம்து லில்லாஹ் ( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே )` என்று சொல்ல நினைத்தார்கள் . பிறகு அல்லாஹ்வின் உத்தரவின்படியே (` அல்ஹம்து லில்லாஹ் ` என்று ) அவனைப் புகழ்ந்தார்கள் . அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களிடம் , ` ஆதமே ! அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக . நீர் அந்த வானவர்களிடம் - அதாவது அவர்களில் அமர்ந்திருக்கும் அந்தப் பிரமுகர்களிடம் - சென்று , ` அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் )` என்று ( முகமன் ) கூறுவீராக ` என்றான் . ( அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் சென்று முகமன் கூறினார்கள் .) அப்போது வானவர்கள் , ` வஅலைக்கஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் ` ( தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும் )` என்று ( பதில் ) சொன்னார்கள் . பிறகு ஆதம் அலைஹிஸ்ஸலாம் தம் இறைவனிடம் திரும்பி வந்தார்கள் . அப்போது அல்லாஹ் , `( ஆதமே !) இதுதான் உமது முகமனும் உம்முடைய சந்ததிகள் தங்களுக்கிடையே கூறும் முகமனும் ஆகும் ` என்று சொன்னான் . பின்னர் அல்லாஹ் தன் இரு கைகளையும் மடக்கி வைத்துக்கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , ` இவ்விரண்டில் நீர் விரும்பியதைத் தேர்வு செய்வீராக ` என்றான் . ஆதம் அவர்கள் , ` நான் என் இறைவனின் வலக்கரத்தைத் தேர்வு செய்துகொண்டேன் ` என்றார்கள் . என் இறைவனின் இரு கரங்களுமே வளமிக்க வலக்கரம் தான் . பிறகு இறைவன் தனது வலக்கரத்தை விரித்தான் . அதில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தோற்றமும் , அவர்களின் சந்ததிகளுடைய தோற்றங்களும் இருந்தன . ஆதம் அவர்கள் , ` இறைவா ! இவர்களெல்லாம் யார் ?` என்று கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர்களெல்லாம் உம் சந்ததிகளாவார்கள் என்று பதிலளித்தான் . அவர்கள் ஒவ்வொருவரின் இரு கண்களுக்கிடையே அவரது ஆயுட்காலம் எழுதப்பட்டிருந்தது . ` மிகவும் பிரகாசமிக்க ஒருவர் ` அல்லது ` மிகவும் பிரகாசமிக்கோருள் ஒருவர் ` அவர்களில் காணப்பட்டார் . ` இறைவா ! இவர் யார் ?` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர் உம் மகன் தாவூத் ஆவார் . இவரது ஆயுட்காலம் நாற்பது ஆண்டுகள் என எழுதியுள்ளேன் ` என்று கூறினான் . ` இறைவா ! அவரது ஆயுட்காலத்தை இன்னும் அதிகப்படுத்துவாயாக ` என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள் . அதற்கு இறைவன் , `( இல்லை ;) அதுதான் அவருக்கு நான் எழுதிய அளவாகும் ` என்று கூறிவிட்டான் . ` இறைவா ! ( அப்படியானால் ) எனது ஆயுட்காலத்தில் அறுபது வருடங்களை அவருக்கு நான் கொடுத்துவிட்டேன் ` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற , `( அப்படியானால் ) அது உனது விருப்பம் ` என இறைவன் பதிலளித்தான் . பின்னர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் நாடிய காலம் வரை சொர்க்கத்தில் தங்கவைக்கப்பட்டார்கள் . பிறகு அங்கிருந்து ( பூமிக்கு ) இறக்கப்பட்டார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டுக்கொண்டே வந்தார்கள் . ( அவர்களது ஆயுளில் தொள்ளாயிரத்து நாற்பது ஆண்டுகள் முடிவுற்றபோது ) ` மலக்குல் மவ்த் ` ( உயிரைக் கைப்பற்றிச்செல்ல வரும் வானவர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்தார் . அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் மலக்குல் மவ்த்திடம் , ` நீங்கள் சீக்கிரமாக வந்துவிட்டீர்கள் ; எனது ஆயுட்காலம் ஆயிரம் வருடம் என எழுதப்பட்டுள்ளது ` என்றார்கள் . அதற்கு அந்த வானவர் , ` ஆம் ! ( நீர் கூறுவது சரிதான் .) எனினும் , நீர் உன் மகன் தாவூதுக்கு அறுபது வருடங்களைக் கொடுத்துவிட்டீர் ` என்று கூறினார் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறுத்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறுத்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறந்தார்கள் . அன்றிலிருந்துதான் ( கொடுக்கல் வாங்கலை ) எழுதிவைக்குமாறும் , அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்துமாறும் ( மக்களுக்கு ) உத்தரவிடப்பட்டது .
(م) عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ . 257
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இப்லீஸ் , தனது சிம்மாசனத்தை ( கடல் ) நீரின்மீது அமைக்கிறான் . பிறகு தன் பட்டாளங்களை ( மக்களிடையே ) அனுப்புகிறான் . அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ( ஷைத்தான் எவனோ அ) வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான் . அவனிடம் ஷைத்தான்களுள் ஒருவன் ( திரும்பி ) வந்து “ நான் இன்னின்னவாறு செய்தேன் `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , “( சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ) நீ எதையும் செய்யவில்லை `` என்று கூறுவான் . பிறகு அவர்களுள் மற்றொருவன் வந்து , “ நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , அவனை அருகில் வரச் செய்து , “ நீதான் சரி ( யான ஆள் )`` என்று ( பாராட்டிக் ) கூறுவான் .
(م) عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ . 258
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான் . எனினும் , அவர்களிடையே பிளவை உருவாக்குவ ( தில் வெற்றி கண்டு விட்டா ) ன் .
عَنْ سَبْرَةَ بْنِ أَبِي فَاكِهٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ فَقَالَ تُسْلِمُ وَتَذَرُ دِينَكَ وَدِينَ آبَائِكَ وَآبَاءِ أَبِيكَ فَعَصَاهُ فَأَسْلَمَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ فَقَالَ تُهَاجِرُ وَتَدَعُ أَرْضَكَ وَسَمَاءَكَ وَإِنَّمَا مَثَلُ الْمُهَاجِرِ كَمَثَلِ الْفَرَسِ فِي الطِّوَلِ فَعَصَاهُ فَهَاجَرَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ فَقَالَ تُجَاهِدُ فَهُوَ جَهْدُ النَّفْسِ وَالْمَالِ فَتُقَاتِلُ فَتُقْتَلُ فَتُنْكَحُ الْمَرْأَةُ وَيُقْسَمُ الْمَالُ فَعَصَاهُ فَجَاهَدَ. 259
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸப்ரா பின் அபீஃபாகிஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஷைத்தான் ஆதமுடைய மகனுக்காக ( அவன் செல்லும் ) பல பாதைகளில் ( அவனைத் தடுப்பதற்காக ) அமர்ந்தான் . இஸ்லாமிய மார்க்கத்தின் பாதையில் அமர்ந்துகொண்டு , நீ உன்னுடைய மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையர் மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையரின் பெற்றோருடைய மார்க்கத்தையும் விட்டுவிட்டு முஸ்லிமாகிறாயா ? என்று கேட்டான் . அதற்கவன் , அவனுக்கு மாறு செய்துவிட்டு முஸ்லிமானான் . பின்னர் அவன் ஹிஜ்ரத் செய்யும் வழியில் அமர்ந்தான் . உன்னுடைய பூமியையும் வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்கிறாயா ? திண்ணமாக ஹிஜ்ரத் செய்பவர் நீண்ட கயிற்றிலுள்ள குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறினான் . அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ஹிஜ்ரத் செய்தான் . அவன் ( அல்லாஹ்விற்காகப் ) போராடும் பாதையில் அமர்ந்தான் . பொருளையும் உயிரையும் வருத்திக்கொண்டு நீ போராடப் போகின்றாயா ? நீ போராடினால் கொல்லப்படுவாய் . ( உன் ) மனைவி ( வேறொருவனுக்கு ) மணமுடிக்கப்படுவாள் . ( உன்னுடைய ) பொருட்செல்வம் ( உறவினர்களுக்குப் ) பங்கிடப்படும் என்று கூறி ( அச்சமூட்டி ) னான் . ( அப்போதும் ) அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ப் போராடினான் . " யார் இவ்வாறு செய்தாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( போரில் கலந்துகொள்ளும்போது ) கொல்லப்பட்டாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( தண்ணீரில் ) மூழ்கிவிட்டாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யாரை அவருடைய வாகனம் கீழே தள்ளிவிட்டதோ ( அதன்மூலம் அவர் இறந்துவிட்டாரோ ) அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது .``
(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا . 260
உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது " பகல் ` அல்லது " இரவு ` சேமிக்கப்படுகிறது . பிறகு அதைப் போன்றே (40 நாள்கள் ) அது ( அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும் ) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது . பிறகு அதைப் போன்றே ( மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற ) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது . பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார் . அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன : அவர் , ( கருவாக இருக்கும் ) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும் , அவனது வாழ்நாளையும் , செயல்பாட்டையும் , அவன் ( இறுதிக் கட்டத்தில் ) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் ( இறைவனின் கட்டளைப்படி ) பதிவு செய்கிறார் . பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது . இதனால்தான் , உங்களுள் ஒருவர் சொர்க்கவாசிகளின் ( நற் ) செயல்களைச் செய்துகொண்டே செல்வார் . இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் ( இடைவெளி ) தான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார் . ( இதைப் போன்றே ) உங்களுள் ஒருவர் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே செல்வார் . இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும் . அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் ( நற் ) செயல்களைச் செய்து அதன் பயனாகச் சொர்க்கம் புகுவார் .
(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ يَا رَبِّ عَلَقَةٌ يَا رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالْأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ . 261
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் ( பெண்ணின் ) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான் . ( அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது ) அந்த வானவர் , “ என் இறைவா ! ( இது ஒரு துளி ) விந்து . என் இறைவா ! இது பற்றித் தொங்கும் கரு . என் இறைவா ! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற ) சதைத்துண்டு `` என்று கூறிக் கொண்டிருப்பார் . அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர் , “ என் இறைவா ! ( இது ) ஆணா அல்லது பெண்ணா ? துர்பாக்கியம் உடையதா ? நற்பாக்கியம் உடையதா ? ( இதன் ) வாழ்வாதாரம் எவ்வளவு ? ( இதன் ) ஆயுள் எவ்வளவு ?`` என்று கேட்பார் . ( அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு ) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَتْ أُمُّ حَبِيبَةَ اللَّهُمَّ مَتِّعْنِي بِزَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِأَبِي أَبِي سُفْيَانَ وَبِأَخِي مُعَاوِيَةَ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّكِ سَأَلْتِ اللَّهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ وَآثَارٍ مَوْطُوءَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَا يُعَجِّلُ شَيْئًا مِنْهَا قَبْلَ حِلِّهِ وَلَا يُؤَخِّرُ مِنْهَا شَيْئًا بَعْدَ حِلِّهِ وَلَوْ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعَافِيَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ وَعَذَابٍ فِي الْقَبْرِ لَكَانَ خَيْرًا لَكِ . 262
அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் துணைவியார் உம்மு ஹபீபா ரளியல்லாஹு அன்ஹா , “ இறைவா ! என் கணவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , என் தந்தை அபூசுஃப்யான் , என் சகோதரர் முஆவியா ஆகியோர் ( நீண்ட நாள்கள் வாழ்வதன் ) மூலம் எனக்குப் பயனளிப்பாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீ ( ஏற்கெனவே ) நிர்ணயிக்கப்பட்டுவிட்ட ஆயுளையும் குறிக்கப்பட்டுவிட்ட ( வாழ் ) நாள்களையும் பங்கிடப்பட்டுவிட்ட வாழ்வாதாரத்தையும் அல்லாஹ்விடம் கேட்டிருக்கிறாய் . அல்லாஹ் அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்திற்கு முன்பே ஒருபோதும் கொண்டுவந்துவிடவு மாட்டான் ; அவற்றில் எதையும் , அதற்குரிய நேரத்தைவிட்டுத் தாமதப்படுத்தவு மாட்டான் . நரக நெருப்பின் வேதனையிலிருந்து அல்லது மண்ணறையின் வேதனையிலிருந்து உன்னைக் காக்கும்படி நீ அல்லாஹ்விடம் வேண்டியிருந்தால் நன்றாகவும் சிறந்ததாகவும் இருந்திருக்கும் `` என்று சொன்னார்கள் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் குரங்குகள் பற்றிப் பேசப்பட்டது . - பன்றிகளாக உருமாற்றப்பட்ட ( பனூ இஸ்ராயீல் சமுதாயத்த ) வர்கள் பற்றியும் பேசப்பட்டது என்று அல்கமா ரஹிமஹுல்லாஹ் கூறியதாகவே நான் கருதுகிறேன் என அறிவிப்பாளர் மிஸ்அர் ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள் . - அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ் ஊருமாற்றிய எந்தச் சமுதாயத்தாருக்கும் சந்ததிகளையோ வழித்தோன்றல்களையோ அவன் ஏற்படுத்தியதில்லை . குரங்குகளும் பன்றிகளும் அதற்கு முன்பே இருந்தன `` என்று சொன்னார்கள் .
(ق ) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ كَانَ يُحَدِّثُ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مَوْلُودٍ إِلَّا يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ أَوْ يُنَصِّرَانِهِ أَوْ يُمَجِّسَانِهِ كَمَا تُنْتَجُ الْبَهِيمَةُ بَهِيمَةً جَمْعَاءَ هَلْ تُحِسُّونَ فِيهَا مِنْ جَدْعَاءَ ثُمَّ يَقُولُ أَبُو هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ فِطْرَةَ اللَّهِ الَّتِي فَطَرَ النَّاسَ عَلَيْهَا الْآيَةَ . 263
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல , எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான ( மார்க்கத் ) தில்தான் பிறக்கின்றன . விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா ? ( முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல் ) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை ( இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி ) யூதர்களாகவோ கிறிஸ்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் .” பிறகு அபூஹ§ரைரா ரளியல்லாஹு அன்ஹு , “ எ( ந்த மார்க்கத் ) தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய ( நிலையான ) இயற்கை மார்க்கமாகும் ; அல்லாஹ்வின் படைத்தலில் மாற்றம் இல்லை ; அதுவே நிலையான மார்க்கமாகும் `` என்ற (30:30ஆம்) வசனத்தை ஓதிக் காட்டினார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ قَالَ سُئِلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَوْلَادِ الْمُشْرِكِينَ فَقَالَ اللَّهُ إِذْ خَلَقَهُمْ أَعْلَمُ بِمَا كَانُوا عَامِلِينَ . 264
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இணைவைப்போரின் குழந்தைகள் ( இறந்துவிட்டால் அவர்களின் முடிவு யாது ? என்பது ) பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவப்பட்டது . அதற்கவர்கள் “ அவர்களைப் படைத்த அல்லாஹ் , அவர்கள் ( உயிருடனிருந்திருந்தால் ) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை நன்கறிந்தவன் `` எனக் கூறினார்கள் .
(ق) عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُعْرَفُ أَهْلُ الْجَنَّةِ مِنْ أَهْلِ النَّارِ قَالَ نَعَمْ قَالَ فَلِمَ يَعْمَلُ الْعَامِلُونَ قَالَ كُلٌّ يَعْمَلُ لِمَا خُلِقَ لَهُ أَوْ لِمَا يُسِّرَ لَهُ . 265
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் “ அல்லாஹ்வின் தூதரே ! சொர்க்கவாசிகள் யார் ? நரகவாசிகள் யார் ? என்று ( முன்பே அல்லாஹ்வுக்குத் ) தெரியுமா ?`` எனக் கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஆம் ( தெரியும் )`` என்று சொன்னார்கள் . அவர் “ அவ்வாறாயின் ஏன் நற்செயல் புரிகின்றவர்கள் நற்செயல் புரிய வேண்டும் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஒவ்வொருவரும் ‘ எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ ` அல்லது " எ( தை அடைவ ) தற்கு வாய்ப்பளிக்கப்பட்டார்களோ ` அதற்காகச் செயல்படுகிறார்கள் `` என்று பதிலளித்தார்கள் .
(م) عَنْ أَبِي الْأَسْوَدِ الدِّيلِيِّ قَالَ قَالَ لِي عِمْرَانُ بْنُ الْحُصَيْنِ أَرَأَيْتَ مَا يَعْمَلُ النَّاسُ الْيَوْمَ وَيَكْدَحُونَ فِيهِ أَشَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ مِنْ قَدَرِ مَا سَبَقَ أَوْ فِيمَا يُسْتَقْبَلُونَ بِهِ مِمَّا أَتَاهُمْ بِهِ نَبِيُّهُمْ وَثَبَتَتْ الْحُجَّةُ عَلَيْهِمْ فَقُلْتُ بَلْ شَيْءٌ قُضِيَ عَلَيْهِمْ وَمَضَى عَلَيْهِمْ قَالَ فَقَالَ أَفَلَا يَكُونُ ظُلْمًا قَالَ فَفَزِعْتُ مِنْ ذَلِكَ فَزَعًا شَدِيدًا وَقُلْتُ كُلُّ شَيْءٍ خَلْقُ اللَّهِ وَمِلْكُ يَدِهِ فَلَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ . 266
அபுல்அஸ்வத் அத்தியலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் இம்ரான் பின் அல்ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு , “ மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயலாற்றுவதும் ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலை நிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , நடந்துமுடிந்த ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று சொன்னேன் . அதற்கு இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ இது அநீதியாகாதா ?`` என்று கேட்டார்கள் . அதைக் கேட்டு நான் கடுமையாக அதிர்ந்துவிட்டேன் . மேலும் , “ அனைத்தும் அல்லாஹ்வின் படைப்பே ; அவனது அதிகாரத்துக்குட்பட்டவையே . அவன் செய்வது குறித்து யாரும் கேள்வி கேட்க முடியாது . ஆனால் , மனிதர்கள் விசாரிக்கப்படுவார்கள் `` என்று சொன்னேன் . அப்போது இம்ரான் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ் உங்களுக்கு அருள் புரியட்டும் . உங்கள் அறிவைப் பரிசோதிப்பதற்காகவே நான் கேள்வி கேட்டேனே தவிர , வேறெதற்கும் நான் கேள்வி கேட்கவில்லை `` என்று கூறிவிட்டுப் பின்வருமாறு சொன்னார்கள் : " முஸைனா ` குலத்தைச் சேர்ந்த இரண்டு பேர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! மனிதர்கள் இன்று நற்செயல் புரிவதும் அதற்காக முனைந்து செயல்படுவதும் ஏற்கெனவே தீர்மானிக்கப்பட்ட , முன்பே முடிவு செய்யப்பட்டுவிட்ட விதியின் அடிப்படையிலா ? அல்லது அவர்களுக்கெதிரான ஆதாரத்தை நிலைநிறுத்தும் வகையில் , அவர்களுடைய இறைத்தூதர்கள் அவர்களிடம் கொண்டுவந்துள்ளவற்றை ஏற்றுச் செயல்படுத்துவதன் அடிப்படையிலா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை ; ஏற்கெனவே அவர்கள்மீது தீர்மானிக்கப்பட்டுவிட்ட , அவர்கள் விஷயத்தில் முடிவாகிவிட்ட ( விதியின் ) அடிப்படையில்தான் `` என்று கூறிவிட்டு இதை உண்மைப்படுத்தும் சான்று வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளது எனக் கூறி , பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள் : உயிரின் மீதும் , அதை வடிவமைத்து , அதன் நன்மையையும் தீமையையும் அதற்கு அறிவித்தவன்மீதும் சத்தியமாக ! (91: 7-8)
(م) عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ قَالَتْ دُعِيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى جَنَازَةِ صَبِيٍّ مِنْ الْأَنْصَارِ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ طُوبَى لِهَذَا عُصْفُورٌ مِنْ عَصَافِيرِ الْجَنَّةِ لَمْ يَعْمَلْ السُّوءَ وَلَمْ يُدْرِكْهُ قَالَ أَوَ غَيْرَ ذَلِكَ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ خَلَقَ لِلْجَنَّةِ أَهْلًا خَلَقَهُمْ لَهَا وَهُمْ فِي أَصْلَابِ آبَائِهِمْ . 267
இறைநம்பிக்கையாளர்களின் அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா கூறியதாவது : அன்ஸாரிகளில் ஒரு குழந்தை இறந்தபோது , அதன் பிரேத நல்லடக்கத்திற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைக்கப்பட்டார்கள் . அப்போது நான் , “ அல்லாஹ்வின் தூதரே ! அக்குழந்தைக்கு நல் வாழ்த்துகள் ! அது சொர்க்கத்தின் சிட்டுக் குருவிகளில் ஒரு சிட்டுக்குருவி . அது எந்தத் தீமையையும் செய்யவில்லை . அதற்கான பருவத்தையும் அது அடையவில்லை `` என்று சொன்னேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ வேறு ஏதேனும் உண்டா , ஆயிஷா ? அல்லாஹ் சொர்க்கத்திற்கென்றே சிலரைப் படைத்துள்ளான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களை அவன் படைத்துவிட்டான் ; நரகத்திற்கென்றே சிலரைப் படைத்தான் . அவர்கள் தம் பெற்றோரின் முதுகுத்தண்டுகளில் இருந்தபோதே அதற்காக அவர்களைப் படைத்துவிட்டான் `` என்று கூறினார்கள் .
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ خَلَقَ خَلْقَهُ فِي ظُلْمَةٍ فَأَلْقَى عَلَيْهِمْ مِنْ نُورِهِ فَمَنْ أَصَابَهُ مِنْ ذَلِكَ النُّورِ اهْتَدَى وَمَنْ أَخْطَأَهُ ضَلَّ فَلِذَلِكَ أَقُولُ جَفَّ الْقَلَمُ عَلَى عِلْمِ اللَّ . 268
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தனது படைப்பினங்களை இருளில்தான் படைத்தான் . பிறகு தனது ஒளிச் சுடரிலிருந்து சிறிதை அவற்றின்மீது பாய்ச்சினான் . அந்த ஒளிச்சுடர் பட்டவர் நல்வழி கண்டார் . அந்த ஒளிச்சுடர் படாதவர் வழிதவறிச் சென்றார் . ஆகவேதான் நான் கூறுகிறேன் : ( ஏற்கெனவே ) அல்லாஹ் அறிந்துள்ளதன் படியே ( விதி எழுதிய ) எழுதுகோல் உலர்ந்துவிட்டது .
عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ لَمَّا نَزَلَتْ هَذِهِ الْآيَةَ فَمِنْهُمْ شَقِيٌّ وَسَعِيدٌ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ يَا نَبِيَّ اللَّهِ فَعَلَى مَا نَعْمَلُ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ أَوْ عَلَى شَيْءٍ لَمْ يُفْرَغْ مِنْهُ قَالَ بَلْ عَلَى شَيْءٍ قَدْ فُرِغَ مِنْهُ وَجَرَتْ بِهِ الْأَقْلَامُ يَا عُمَرُ وَلَكِنْ كُلٌّ مُيَسَّرٌ لِمَا خُلِقَ لَهُ . 269
உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : "( மறுமை நாளில் ) அவர்களில் நற்பேறற்றவர்களும் இருப்பர் ; நற்பேறுள்ளவர்களும் இருப்பர் ’’ (11:105) என்ற இந்த வசனம் அருளப்பெற்றபோது நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் , " அல்லாஹ்வின் தூதரே ! எதன்படி நாம் செயல்படுவோம் ? ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்ட ஒன்றின்படி செயல்படுவோமா ? அல்லது ( இது வரை ) முடிவுசெய்யப்படாத ஒன்றின்படி செயல்படுவோமா ? எனக் கேட்டேன் . ( அப்போது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " உமரே ! ( அவ்வாறன்று .) மாறாக , ( ஏற்கெனவே ) முடிவுசெய்யப்பட்டு , எழுதுகோல்கள் பதிவுசெய்த ஒன்றின்படியே நாம் செயல்படுவோம் . எனினும் ஒவ்வொருவரும் எ( தை அடைவ ) தற்காகப் படைக்கப்பட்டார்களோ அதற்கு வாய்ப்பளிக்கப்படுகிறார்கள் ’’ என்று பதிலளித்தார்கள் .
عَنْ عَائِشَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ النَّارِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّهُ لَمَكْتُوبٌ فِي الْكِتَابِ مِنْ أَهْلِ الْجَنَّةِ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَهَا . 270
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : ஒரு மனிதன் சொர்க்கவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் நரகவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் நரகவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் நரகத்தில் நுழைவான் . ஒரு மனிதன் நரகவாசிகளின் செயலைச் செய்தவண்ணமிருப்பான் ஆனால் அவன் சொர்க்கவாசி என்று விதியில் எழுதப்பட்டிருக்கும் . அப்போது . ( எதிர்பாராவிதமாக ) மரணம் ஏற்படுவதற்குமுன் அவனை விதி மாற்றிவிடும் . எனவே அவன் சொர்க்கவாசிக்குரிய அமல்களைச் செய்யத் தொடங்கி , பின்னர் இறந்து விடுவான் . எனவே அவன் சொர்க்கத்தில் நுழைவான் .
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ قَالَ وَعَرْشُهُ عَلَى الْمَاءِ . 271
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான் . ( அப்போது ) அவனது அரியணை ( அர்ஷ் ) தண்ணீரின் மேல் இருந்தது .
(م) عَنْ طَاوُسٍ أَنَّهُ قَالَ أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ أَوْ الْكَيْسِ وَالْعَجْزِ . 272
தாவூஸ் பின் கைசான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " ஒவ்வொன்றும் விதியின் படியே `` என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன் . அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ ஒவ்வொரு பொருளும் விதியின் படியே . " இயலாமை , புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட ` அல்லது " புத்திசாலித்தனம் , இயலாமை ஆகியவை உள்பட `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் எனக் கூறியதைக் கேட்டுள்ளேன் .
عَنْ ابْنِ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا فَقَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ . 273
அபூகிஸாமா ரளியல்லாஹு அன்ஹு தம் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் , நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்கின்ற தற்காப்புகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا بَعَثَنِي فِي حَاجَةٍ لَمْ تَتَهَيَّأْ إِلَّا قَالَ : لَوْ قُضِيَ لَكَانَ ، أَوْ لَوْ قُدِّرَ لَكَانَ . 274
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன் . தயார்நிலையில் இல்லாத ஏதேனும் தேவைக்காக என்னை அனுப்பினால் , “ முடிவு செய்யப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ; அல்லது நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ” என்று கூறாமல் அனுப்பியதில்லை .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ رُقًى كُنَّا نَسْتَرْقِي بِهَا وَأَدْوِيَةٌ كُنَّا نَتَدَاوَى بِهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ قَالَ : هُوَ مِنْ قَدَرِ اللَّهِ . 275
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .
(م) عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرِو بْنِ الْعَاصِ يَقُولُ أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ قُلُوبَ بَنِي آدَمَ كُلَّهَا بَيْنَ إِصْبَعَيْنِ مِنْ أَصَابِعِ الرَّحْمَنِ كَقَلْبٍ وَاحِدٍ يُصَرِّفُهُ حَيْثُ يَشَاءُ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اللَّهُمَّ مُصَرِّفَ الْقُلُوبِ صَرِّفْ قُلُوبَنَا عَلَى طَاعَتِكَ . 276
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஆதமின் மக்களின் ( மனிதர்களின் ) உள்ளங்கள் அனைத்தும் அளவற்ற அருளாளனின் இரு விரல்களுக்கிடையே ஒரேயோர் உள்ளத்தைப் போன்று உள்ளன . அதைத் தான் நாடிய முறையில் அவன் மாற்றுகிறான் `` என்று கூறிவிட்டு , “ இறைவா ! உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! எங்கள் உள்ளங்களை உனக்குக் கீழ்ப்படிவதற்குத் திருப்புவாயாக !`` என்று பிரார்த்தனை செய்தார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُكْثِرُ أَنْ يَقُولَ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِي عَلَى دِينِكَ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ آمَنَّا بِكَ وَبِمَا جِئْتَ بِهِ فَهَلْ تَخَافُ عَلَيْنَا قَالَ نَعَمْ إِنَّ الْقُلُوبَ بَيْنَ أُصْبُعَيْنِ مِنْ أَصَابِعِ اللَّهِ يُقَلِّبُهَا كَيْفَ يَشَاءُ . 277
அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : உள்ளங்களைத் திருப்புகின்றவனே ! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் நிலைத்திருக்கச் செய்வாயாக என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாகக் கூறுபவர்களாக இருந்தார்கள் . “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் உங்களையும் நீங்கள் கொண்டுவந்ததையும் ( உண்மையென ) நம்பிக்கை கொண்டிருக்கிறோம் . ( இந்நிலையிலும் ) நீங்கள் எங்களின் நிலையைக் கண்டு அஞ்சுகின்றீர்களா ?” என்று வினவினேன் . அதற்கவர்கள் , “ ஆம் ! திண்ணமாக ( மனித ) உள்ளங்கள் அல்லாஹ்வின் விரல்களுள் இரண்டு விரல்களுக்கிடையே உள்ளன . அவன் ( நாடியவாறு ) அவற்றைப் புரட்டுகின்றான் ” என்று விடையளித்தார்கள் .
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ . 278
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான் . அதை மனிதன் அடைந்தே தீருவான் . ( மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல ; கண்ணும் நாவும்கூட விபச்சாரம் செய்கின்றன .) கண் செய்யும் விபச்சாரம் ( தவறான ) பார்வையாகும் . நாவு செய்யும் விபச்சாரம் ( பாலுணர்வைத் தூண்டும் ) பேச்சாகும் . மனம் ஏங்குகிறது ; இச்சை கொள்கிறது . மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது . அல்லது பொய்யாக்குகிறது .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ احْتَجَّ آدَم ُ وَمُوسَى فَقَالَ لَهُ مُوسَى يَا آدَم ُ أَنْتَ أَبُونَا خَيَّبْتَنَا وَأَخْرَجْتَنَا مِنْ الْجَنَّةِ قَالَ لَهُ آدَم ُ يَا مُوسَى اصْطَفَاكَ اللَّهُ بِكَلَامِهِ وَخَطَّ لَكَ بِيَدِهِ أَتَلُومُنِي عَلَى أَمْرٍ قَدَّرَهُ اللَّهُ عَلَيَّ قَبْلَ أَنْ يَخْلُقَنِي بِأَرْبَعِينَ سَنَةً فَحَجَّ آدَم ُ مُوسَى فَحَجَّ آدَم ُ مُوسَى ثَلَاثًا . 279
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறைத்தூதர்களான ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் தர்க்கம் செய்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் மூஸா அலைஹிஸ்ஸலாம் “ ஆதம் அவர்களே ! எங்கள் தந்தையான நீங்கள் ( உங்கள் பாவத்தின் காரணத்தால் ) எங்களை இழப்புக்குள்ளாக்கி விட்டீர்கள் ; சொர்க்கத்திலிருந்து எங்களை வெளியேற்றி விட்டீர்கள் `` என்று சொன்னார்கள் . அதற்கு ஆதம் அலைஹிஸ்ஸலாம் , “ மூஸாவே ! அல்லாஹ் தன்னுடன் உரையாடுவதற்கு உம்மையே தேர்ந்தெடுத்தான் ; அவன் தன் கரத்தால் ( வல்லமையால் ) உமக்காக ( தவ்ராத் எனும் வேதத்தை ) வரைந்தான் . ( இத்தகைய ) நீங்கள் , அல்லாஹ் என்னைப் படைப்பதற்கு நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே என்மீது அவன் விதித்துவிட்ட ஒரு விஷயத்திற்காக என்னைப் பழிக்கின்றீர்களா ?`` என்று கேட்டார்கள் . ( இந்த பதில் மூலம் ) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை ஆதம் அலைஹிஸ்ஸலாம் தோற்கடித்து விட்டார்கள் ; தோற்கடித்து விட்டார்கள் என மூன்று முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் .
(ق) عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْتَقَى هُوَ وَالْمُشْرِكُونَ فَاقْتَتَلُوا فَلَمَّا مَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى عَسْكَرِهِ وَمَالَ الْآخَرُونَ إِلَى عَسْكَرِهِمْ وَفِي أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ لَا يَدَعُ لَهُمْ شَاذَّةً إِلَّا اتَّبَعَهَا يَضْرِبُهَا بِسَيْفِهِ فَقَالُوا مَا أَجْزَأَ مِنَّا الْيَوْمَ أَحَدٌ كَمَا أَجْزَأَ فُلَانٌ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ مِنْ أَهْلِ النَّارِ . 280
சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இணை வைப்போரும் ( கைபர் போர்க்களத்தில் ) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர் . நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்றுவிட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர் . அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார் . அவர் ( எதிரிகளின் ) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர் , படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் ( அதாவது எதிர்த்து நிற்பவர் , பணிந்து செல்பவர் என்று ) எவரையும் நபித்தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று ( மூர்க்கமாகப் போரிட்டுக் ) கொண்டிருந்தார் . ( அவரது துணிச்சலான போரைக் கண்ட ) நபித் தோழர்கள் , “ இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை `` என்று ( வியந்து ) கூறினார்கள் . இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவரோ நரகவாசியாவார் `` என்று கூறினார்கள் . அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர் , “ நான் அவருடன் இருக்கிறேன் ( அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு )`` என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார் . அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார் . அவர் விரைந்தால் இவரும் விரைந்தார் . ( ஒரு கட்டத்தில் ) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . அதனால் சீக்கிரமாக மரணித்துவிட விரும்பி , தம் வாளின் ( கைப்பிடியுள்ள ) முனையை பூமியில் ஊன்றி , அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து , அந்த வாளின்மீது தம் உடலை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார் . ( இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு ) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று , “ தாங்கள் அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதற்கு நான் சாட்சியம் அளிக்கிறேன் `` என்று சொன்னார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " என்ன விஷயம் ?`` என்று கேட்டார்கள் . அவர் , “ சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி " அவர் நரகவாசி ` என்று கூறினீர்கள் அல்லவா ? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர் . நான் ( மக்களிடம் ), “ உங்களுக்காக ( அவரது நிலைகளை அறிந்து வர ) நான் அவருடன் போய் வருகிறேன் `` என்று கூறிவிட்டு , அவரைத் தேடிப் புறப்பட்டேன் . அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார் . உடனே , அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி , வாளின் பிடிமுனையை பூமியில் நட்டு , அதன் கூர்முனையைத் தம் இரு மார்புகளுக்கிடையே வைத்து , அதன்மீது தம்மை அழுத்திக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார் `` என்று கூறினார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய ( நற் ) செயலைச் செய்து வருவார் . ஆனால் , அவர் ( உண்மையில் ) நரகவாசியாக இருப்பார் . மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார் . ஆனால் , ( உண்மையில் ) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் `` என்று சொன்னார்கள் .
(م) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ النَّارِ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الزَّمَنَ الطَّوِيلَ بِعَمَلِ أَهْلِ النَّارِ ثُمَّ يُخْتَمُ لَهُ عَمَلُهُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ . 281
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் நீண்ட காலம் சொக்கவாசிகளின் ( நற் ) செயலைச் செய்து கொண்டே வருவார் . பிறகு அவரது செயல் நரகவாசிகளின் செயலாக முடிக்கப்படும் . ஒரு மனிதர் நீண்ட காலம் நரகவாசிகளின் ( தீய ) செயலைச் செய்துகொண்டே வருவார் . பிறகு அவரது செயல் சொர்க்கவாசிகளின் செயலாக முடிக்கப்படும் .
عَنْ أَنَسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ الْجَنَّةَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ عَمَلَ أَهْلِ النَّارِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ وَإِنَّ الرَّجُلَ لَيَعْمَلُ الْبُرْهَةَ مِنْ عُمُرِهِ بِالْعَمَلِ الَّذِي لَوْ مَاتَ عَلَيْهِ دَخَلَ النَّارَ فَإِذَا كَانَ قَبْلَ مَوْتِهِ تَحَوَّلَ فَعَمِلَ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَمَاتَ فَدَخَلَ الْجَنَّةَ . 282
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு நல்லறங்கள் செய்வார் . அவர் இறந்துவிட்டால் சொர்க்கத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( நல்லறங்கள் செய்வார் ). மேலும் அவரது மரணத்திற்குமுன் அவர் மாற்றப்பட்டால் , அவர் நரகவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) அவர் இறந்து விடுவார் ; பின்னர் அவர் நரகத்தில் நுழைவார் , ஒருவர் தமது வாழ்நாளின் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குச் செயல்படுவார் . அவர் இறந்துவிட்டால் நரகத்தில் நுழைவார் எனுமளவிற்கு ( செயல்படுவார் ). மேலும் அவரது மரணத்திற்கு முன் அவர் மாற்றப்பட்டால் , அவர் சொர்க்கவாசிகளின் செயல்களைச் செய்து , ( அந்நிலையிலேயே ) இறந்துவிடுவார் ; பின்னர் அவர் சொர்க்கத்தில் நுழைவார் .
عَنْ مَطَرِ بْنِ عُكَامِسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَضَى اللَّهُ لِعَبْدٍ أَنْ يَمُوتَ بِأَرْضٍ جَعَلَ لَهُ إِلَيْهَا حَاجَةً . 283
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக மத்தர் பின் உகாமிஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதன் ஒரு குறிப்பிட்ட நிலத்தில் இறந்துபோக வேண்டுமென அல்லாஹ் தீர்மானித்திருந்தால் , அம்மனிதனுக்கு அந்த இடத்தை நோக்கி ஏதேனும் ஒரு தேவையை அவன் ஆக்குவான் .
عَنْ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَعَادَةِ ابْنِ آدَمَ رِضَاهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ تَرْكُهُ اسْتِخَارَةَ اللَّهِ وَمِنْ شَقَاوَةِ ابْنِ آدَمَ سَخَطُهُ بِمَا قَضَى اللَّهُ لَهُ . 284
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகன் ( மனிதன் ) தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை மனநிறைவோடு ஏற்றுக்கொள்வதானது அவனது நற்பேற்றில் அடங்கும் . நல்லதைத் தனக்காகத் தேர்வு செய்யுமாறு அல்லாஹ்விடம் கோராமலிருப்பது ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் . மேலும் தனக்காக அல்லாஹ் விதியில் எழுதியதை வெறுப்பதும் ஆதமின் மகனுடைய துர்ப்பேற்றில் அடங்கும் .
عَنْ سَلْمَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرُدُّ الْقَضَاءَ إِلَّا الدُّعَاءُ وَلَا يَزِيدُ فِي الْعُمْرِ إِلَّا الْبِرُّ . 285
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சல்மான் அல்ஃபாரிஸீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : தலைவிதியைப் பிரார்த்தனை தவிர வேறு எதுவும் மாற்றிவிடாது . நல்லறம் தவிர வேறு எதுவும் ஆ யுளை அதிகமாக்கிவிடாது .
عَنِ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ : لَا يَنْفَعُ الْحَذَرُ مِنَ الْقَدْرِ ، وَلَكِنَّ اللَّهَ يَمْحُو بِالدُّعَاءِ مَا يَشَاءُ مِنَ الْقَدَرِ . 286
இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : விதியிலிருந்து எச்சரிக்கையாக இருப்பது எந்தப் பயனுமளிக்காது . எனினும் அல்லாஹ் ( நாம் செய்யும் ) பிரார்த்தனை மூலம் அவன் நாடிய விதியை அழிப்பான் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مُثِّلَ ابْنُ آدَمَ وَإِلَى جَنْبِهِ تِسْعٌ وَتِسْعُونَ مَنِيَّةً إِنْ أَخْطَأَتْهُ الْمَنَايَا وَقَعَ فِي الْهَرَمِ حَتَّى يَمُوتَ . 287
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அஷ்ஜிக்கீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஆதமின் மகனுக்கு ( மனிதனுக்கு ) அருகில் தொண்ணூற்றொன்பது மரண ( த்திற்கான காரண ) ங்கள் இருக்கவே அவன் படைக்கப்பட்டுள்ளான் . அந்த மரண ( த்திற்கான காரண ) ங்கள் அவனைவிட்டுத் தவறிவிட்டாலும் அவன் தள்ளாமையில் விழவே செய்கிறான் . இறுதியில் இறந்து போகிறான் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ خَرَجَ عَلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ نَتَنَازَعُ فِي الْقَدَرِ فَغَضِبَ حَتَّى احْمَرَّ وَجْهُهُ حَتَّى كَأَنَّمَا فُقِئَ فِي وَجْنَتَيْهِ الرُّمَّانُ فَقَالَ أَبِهَذَا أُمِرْتُمْ أَمْ بِهَذَا أُرْسِلْتُ إِلَيْكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ حِينَ تَنَازَعُوا فِي هَذَا الْأَمْرِ عَزَمْتُ عَلَيْكُمْ أَلَّا تَتَنَازَعُوا فِيهِ . 288
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஒரு நாள் ) எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் புறப்பட்டு வந்தார்கள் அப்போது நாங்கள் ‘ தலைவிதி ` குறித்து விவாதம் செய்து கொண்டிருந்தோம் . அதைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் . எந்த அளவுக்கென்றால் , அவர்களின் கன்னங்களில் மாதுளையைப் பிளந்து வைத்ததைப் போன்று அவர்களின் முகம் ( கடுமையாகச் ) சிவந்துவிட்டது . அப்போது அவர்கள் , “ இ( வ்வாறு விதி குறித்து விவாதிப்ப ) தற்குத்தான் உங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதா ? அல்லது இதற்காகத்தான் உங்களுக்கு நான் தூதராக அனுப்பப்பட்டுள்ளேனா ? உங்களுக்கு முன்னிருந்தோர் அழிந்ததெல்லாம் இவ்விஷயத்தில் சண்டையிட்டுக்கொண்டபோதுதான் . இது தொடர்பாக நீங்கள் விவாதம் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் உறுதியாகச் சொல்லிக் கொள்கிறேன் ” என்றார்கள் .
عَنْ عبدِ اللهِ بنِ عَمْرٍو قَالَ : خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى أَصْحَابِهِ وَهُمْ يَخْتَصِمُونَ فِي الْقَدَرِ فَكَأَنَّمَا يُفْقَأُ فِي وَجْهِهِ حَبُّ الرُّمَّانِ مِنْ الْغَضَبِ فَقَالَ بِهَذَا أُمِرْتُمْ أَوْ لِهَذَا خُلِقْتُمْ تَضْرِبُونَ الْقُرْآنَ بَعْضَهُ بِبَعْضٍ بِهَذَا هَلَكَتْ الْأُمَمُ قَبْلَكُمْ . 289
அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு நாள் ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் தோழர்களிடம் புறப்பட்டு வந்தார்கள் . அப்போது தோழர்கள் விதி தொடர்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர் . இதைக் கண்டவுடன் மாதுளம் பழத்தின் வித்துகளைப் பிளந்து ( அல்லது பிழிந்து ) வைத்ததைப் போன்று கோபத்தால் அவர்களது முகம் நிறமாறிவிட்டது . அப்போது அவர்கள் , இதற்காகத்தான் நீங்கள் பணிக்கப்பட்டுள்ளீர்களா ? அல்லது படைக்கப்பட்டுள்ளீர்களா ? நீங்கள் குர்ஆன் வசனங்களில் ஒன்றை மற்றொன்டோடு மோதவிடுகிறீர்களா ? இதன் காரணமாகவே உங்களுக்கு முந்தைய சமுதாயங்கள் அழிக்கப்பட்டனர் `` என்று கூறினார்கள் . நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஓர் அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என எண்ணியதில்லை . ஆனால் , இந்த அவையில் கலந்து கொள்ளாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நான் எண்ணினேன் ( அந்த அளவுக்கு அந்த அவையில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கோபப்பட்டார்கள் .)
عَنْ ابْنَ عَبَّاسٍ أَنَّهُ قَالَ وَهُوَ عَلَى الْمِنْبَرِقاَلَ : رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ أَمْرُ هَذِهِ الْأُمَّةِ مُوَائِمًا - أَوْ مُقَارِبًا - مَا لَمْ يَتَكَلَّمُوا فِي الْوِلْدَانِ وَالْقَدَرِ . 290
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு சொற்பொழிவு மேடை ( மிம்பர் ) மீதிருந்து கூறியதாவது : இந்தச் சமுதாயத்தின் விஷயம் ( இணைவைப்பாளர்களின் ) குழந்தைகள் குறித்தும் தலைவிதி குறித்தும் மக்கள் பேசாத வரை சீராக இருந்துகொண்டே இருக்கும் .
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ إِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ وَإِنْ مَاتُوا فَلَا تَشْهَدُوهُمْ . 291
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கதரிய்யா இந்தச் சமுதாயத்தின் நெருப்பு வணங்கிகள் ஆவர் . அவர்கள் ( யாரேனும் ) நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள் . அவர்கள் ( யாரேனும் ) மரணித்தால் அதில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள் .
عَنْ نَافِعٍ قَالَ كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنْ الْقَدَرِ فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ . 292
நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சிரியா நாட்டில் நண்பர் ஒருவர் இருந்தார் . அவர் இப்னு உமர் அவர்களோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் . எனவே அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவருக்குக் கடிதம் எழுதினார்கள் : நீர் தலைவிதியைக் குறித்து ஏதோ பேசியதாக எனக்குத் தகவல் கிடைத்தது . ( இனி ) நீர் எனக்குக் கடிதம் எழுதுவதை எச்சரிக்கிறேன் . நிச்சயமாக நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைச் செவியுற்றுள்ளேன் : திண்ணமாக என் சமுதாயத்தில் விதியைப் பொய்யெனக் கூறுகின்ற மக்கள் தோன்றுவார்கள் .”
عَنْ طَاوُسٍ قَالَ : كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، وَمَعَنَا رَجُلٌ مِنَ الْقَدَرِيَّةِ ، فَقُلْتُ : إِنَّ أُنَاسًا يَقُولُونَ : لَا قَدَرَ . قَالَ : أَوَفِي الْقَوْمِ أَحَدٌ مِنْهُمْ ؟ قُلْتُ : لَوْ كَانَ مَا كُنْتَ تَصْنَعُ بِهِ ؟ قَالَ : " لَوْ كَانَ فِيهِمْ أَحَدٌ مِنْهُمْ ، لَأَخَذْتُ بِرَأْسِهِ ، ثُمَّ قَرَأْتُ عَلَيْهِ آيَةَ كَذَا وَكَذَا : ( وَقَضَيْنَا إِلَى بَنِي إسْرائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا ) . 293
தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தேன் . எங்களோடு கதரிய்யா கொள்கையைச் சார்ந்த ஒருவர் இருந்தார் . அப்போது நான் , “ விதி என ஏதும் இல்லை ” என்று மக்கள் ( சிலர் ) கூறுகின்றனர் ” என்றேன் . “ மக்களுள் அப்படி யாரேனும் இருக்கின்றாரா ( உமக்குத் தெரியுமா )?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அவ்வாறு இருந்தால் , அவரைத் தாங்கள் என்ன செய்வீர்கள் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அம்மக்களுள் யாரேனும் இரு ( ப்பது தெரி ) ந்தால் அவரின் தலை ( முடி ) யைப் பிடித்து , பிறகு இன்னின்ன இறைவசனங்களை ஓதிக்காட்டுவேன் : நாம் அந்த வேதத்தில் இஸ்ரவேலர்களிடம் , “ நிச்சயமாக நீங்கள் இந்தப் பூமியில் இரண்டு முறை குழப்பம் விளைவிப்பீர்கள் ; மேலும் நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் அட்டூழியம் செய்வீர்கள் ” என்று அறிவித்திருந்தோம் . (17: 4)