37-باب : العمل بالعلم وحسن النية فيه
பாடம் 37

பாடம்: 37. கல்வியைக்கொண்டு செயல்படுதல், அதில் நல்லெண்ணம் கொள்ளுதல்

ஹதீஸ் 395 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ مَالِكِ بْنِ مِغْوَلٍ قَالَ قَالَ رَجُلٌ لِلشَّعْبِيِّ أَفْتِنِي أَيُّهَا الْعَالِمُ فَقَالَ الْعَالِمُ مَنْ يَخَافُ اللَّهَ . 395

மாலிக் பின் மிஃக்வல் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஆலிம் அவர்களே ! எனக்கு மார்க்கத் தீர்ப்பு வழங்குங்கள் என்று ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒருவர் கேட்டார் . அதற்கு அவர்கள் , “ ஆலிம் என்பவர் அல்லாஹ்வை அஞ்சிக்கொள்பவரே ஆவார் ” என்றார்கள் .

Reference: ( தாரமீ : 264) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 396 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ الْحَسَنِ قَالَ الْعِلْمُ عِلْمَانِ فَعِلْمٌ فِي الْقَلْبِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ وَعِلْمٌ عَلَى اللِّسَانِ فَذَلِكَ حُجَّةُ اللَّهِ عَلَى ابْنِ آدَمَ . 396

ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வி இரண்டு வகை . 1. உள்ளத்தில் பதிந்த கல்வி . அதுவே பயனுள்ள கல்வி . 2. நாவில் உள்ள கல்வி . அது ஆதமுடைய மகனுக்கு எதிராக அல்லாஹ்வுடைய ஆதாரமாகும் .

Reference: ( தாரமீ : 376) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹஸன் ரஹிமஹுல்லாஹ் ( மேற்கண்ட ) அதேபோன்று கூறியுள்ளார்கள் . இதன் அறிவிப்பாளர் தொடர் ` முர்ஸல் ஸஹீஹ் ` தரத்தில் உள்ளது . ( தாரமீ : 377).
ஹதீஸ் 397 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ قَالَ كَانَ يُقَالُ تَعَلَّمُوا الْعِلْمَ وَانْتَفِعُوا بِهِ وَلَا تَعَلَّمُوهُ لِتَتَجَمَّلُوا بِهِ فَإِنَّهُ يُوشِكُ إِنْ طَالَ بِكُمْ عُمُرٌ أَنْ يَتَجَمَّلَ ذُو الْعِلْمِ بِعِلْمِهِ كَمَا يَتَجَمَّلُ ذُو الْبِزَّةِ بِبِزَّتِهِ . 397

ஹபீப் பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள் . அதன்மூலம் பயன்பெறுங்கள் . ( மாறாக ) அதைக் கொண்டு அழகுபடுத்திக் கொள்வதற்காகக் கற்றுக் கொள்ளாதீர்கள் . ஏனென்றால் உங்களுக்கு வயது நீளமாக இருந்தால் ( நீங்கள் பார்க்கலாம் . அதாவது ) சீருடையாளர் தம் சீருடைமூலம் தம்மை அழகுபடுத்திக் கொள்வதைப்போல் கல்வியாளர் தம் கல்வியின் மூலம் தம்மை அழகுபடுத்திக்கொள்ளும் காலம் நெருங்கிவிட்டது என்று சொல்லப்பட்டு வந்தது .

Reference: ( தாரமீ : 381) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 398 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ هِشَامٍ عَنْ الْحَسَنِ قَالَ إِنْ كَانَ الرَّجُلُ لَيُصِيبُ الْبَابَ مِنْ الْعِلْمِ فَيَعْمَلُ بِهِ فَيَكُونُ خَيْرًا لَهُ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا لَوْ كَانَتْ لَهُ فَجَعَلَهَا فِي الْآخِرَةِ . 398

ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாக ஹிஷாம் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியின் வாசலை அடைந்துகொண்டு ( கற்றபடி ) செயல்பட்டால் , அது அவருக்கு இவ்வுலகத்தையும் அதில் உள்ளவற்றையும் விடச் சிறந்ததாக அமையும் . அவருக்கு அது அவ்வாறு ஆகிவிட்டால் அதனை மறுமைக்காக ஆக்கிக்கொள்வார் . ஹஸன் அல்பஸ்`ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : ஒரு மனிதர் கல்வியைத் தேட முற்பட்டுவிட்டால் அது அவருடைய பார்வையில் , பணிவில் , நாவில் , கையில் , உறவைப் பேணுவதில் , துறவில் காணப்படாமல் இருப்பதில்லை . முஹம்மது-பின் சீரீன் - ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இந்த ஹதீஸை யாரிடமிருந்து எடுக்கின்றீர்கள் ( பெறுகின்றீர்கள் ) என்பதைக் கூர்ந்து கவனியுங்கள் . ஏனென்றால் அதுதான் உங்களுடைய மார்க்கமாகும் .

Reference: ( தாரமீ : 398) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 399 அத்தியாயம் 8 பாடம் 37

عَنْ أَبِي مُسْلِمٍ الْخَوْلَانِيُّ قَالَ : الْعُلَمَاءُ ثَلَاثَةٌ : فَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَعَاشَ مَعَهُ النَّاسُ فِيهِ وَرَجُلٌ عَاشَ فِي عِلْمِهِ وَلَمْ يَعِشْ مَعَهُ فِيهِ أَحَدٌ وَرَجُلٌ عَاشَ النَّاسُ فِي عِلْمِهِ وَكَانَ وَبَالًا عَلَيْهِ . 399

அபூமுஸ்லிம் அல்கவ்லானீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அறிஞர்கள் மூவகை . 1. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி மக்களும் வாழ்ந்தனர் . 2. ஒருவர் தம் கல்வியின்படி வாழ்ந்தார் . அவரோடு அதன்படி ( மக்களுள் ) எவரும் வாழவில்லை . 3. ஒருவருடைய கல்வியின்படி மக்கள் வாழ்ந்தனர் . ( ஆனால் கல்வியைக் கற்றவர் அதன்படி செயல்படாமல் ) அவர் துர்பாக்கியசாலியாக ஆகிவிட்டார் .

Reference: ( தாரமீ : 373) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .