பாடம்: 36. அறிஞர்களுடைய தன்மைகள் குறித்து வந்துள்ளவை
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ لَا تَكُونُ عَالِمًا حَتَّى تَكُونَ مُتَعَلِّمًا وَلَا تَكُونُ بِالْعِلْمِ عَالِمًا حَتَّى تَكُونَ بِهِ عَامِلًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُخَاصِمًا وَكَفَى بِكَ إِثْمًا أَنْ لَا تَزَالَ مُمَارِيًا وَكَفَى بِكَ كَاذِبًا أَنْ لَا تَزَالَ مُحَدِّثًا فِي غَيْرِ ذَاتِ اللَّهِ . 389
அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மாணவனாக ஆகும் வரை அறிஞராக ( ஆலிமாக ) ஆகமாட்டாய் . ( கற்ற கல்விப்படி செயல்படாமல் கல்வியின் மூலம் அறிஞராக ஆக முடியாது . நீ வாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ வாக்குவாதம் செய்பவனாக இருப்பதே பாவியாக இருப்பதற்குப் போதுமானது . நீ அல்லாஹ்வுடைய உள்ளமை ( தாத் ) அல்லாததைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பதே நீ பொய்யன் என்பதற்குப் போதுமானது .
عَنْ عِمْرَانَ الْمِنْقَرِيِّ قَالَ قُلْتُ لِلْحَسَنِ يَوْمًا فِي شَيْءٍ قَالَهُ يَا أَبَا سَعِيدٍ لَيْسَ هَكَذَا يَقُولُ الْفُقَهَاءُ فَقَالَ وَيْحَكَ وَرَأَيْتَ أَنْتَ فَقِيهًا قَطُّ إِنَّمَا الْفَقِيهُ الزَّاهِدُ فِي الدُّنْيَا الرَّاغِبُ فِي الْآخِرَةِ الْبَصِيرُ بِأَمْرِ دِينِهِ الْمُدَاوِمُ عَلَى عِبَادَةِ رَبِّهِ . 390
இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஹஸன் ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் ஒரு நாள் ஒரு விஷயம் குறித்துப் பேசினேன் . அபூசஈத் அவர்களே ! மார்க்கச் சட்ட அறிஞர்கள் ( ஃபுகஹாஉ ) இவ்வாறு கூறவில்லை என்று கூறினேன் . அதற்கு அவர்கள் , “ உனக்கு ஏற்பட்ட கேடே ! மார்க்கச் சட்ட அறிஞர் யாரையேனும் இதுவரை நீ பார்த்திருக்கிறாயா ? மார்க்கச் சட்ட அறிஞர் என்பவர் , உலகில் துறவியாகவும் மறுமையை விரும்புபவராகவும் தம் தீன் சார்ந்த செயல்களில் தீர்க்கமான பார்வையுடையவராகவும் தம் இறைவனை வழிபடுவதில் நீடித்திருப்பவராகவும் இருப்பார் ” என்றார்கள் .
عَنْ كَعْبٍ قَالَ إِنِّي لَأَجِدُ نَعْتَ قَوْمٍ يَتَعَلَّمُونَ لِغَيْرِ الْعَمَلِ وَيَتَفَقَّهُونَ لِغَيْرِ الْعِبَادَةِ وَيَطْلُبُونَ الدُّنْيَا بِعَمَلِ الْآخِرَةِ وَيَلْبَسُونَ جُلُودَ الضَّأْنِ وَقُلُوبُهُمْ أَمَرُّ مِنْ الصَّبْرِ فَبِي يَغْتَرُّونَ أَوْ إِيَّايَ يُخَادِعُونَ فَحَلَفْتُ بِي لَأُتِيحَنَّ لَهُمْ فِتْنَةً تَتْرُكُ الْحَلِيمَ فِيهَا حَيْرَانَ . 391
இம்ரான் அல்மின்க்கரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஒரு சமுதாயத்தின் குணநலனை ( இவ்வாறு இருப்பதாக ) க் காண்கிறேன் . அவர்கள் செயல்படுவதற்கன்றிக் கற்றுக்கொள்கின்றார்கள் ; வழிபாட்டுக்கன்றி மார்க்கச் சட்டங்களைக் கற்றுக்கொள்கின்றார்கள் ; மறுமையின் செயல்பாடுகளை வைத்து இம்மையைத் தேடுகின்றார்கள் ; வெள்ளாட்டுத் தோல்களை அணிந்து கொள்கின்றார்கள் . அவர்களின் உள்ளங்கள் கற்றாழையைவிடக் கசப்பானது . என்னைக்கொண்டே பெருமை கொள்கின்றார்களா ? அல்லது என்னையே அவர்கள் ஏமாற்றுகின்றார்களா ? என்னைக் கொண்டே நான் சத்தியம் செய்கிறேன் : ஒரு பொறுமையாளனையே தடுமாற்றத்தில் விட்டுவிடும் வகையிலான குழப்பத்தை அவர்களுக்கு நான் நிச்சயமாகக் கொடுப்பேன் .
الشَّعْبِيَّ يَقُولُ إِنَّمَا كَانَ يَطْلُبُ هَذَا الْعِلْمَ مَنْ اجْتَمَعَتْ فِيهِ خَصْلَتَانِ الْعَقْلُ وَالنُّسُكُ فَإِنْ كَانَ نَاسِكًا وَلَمْ يَكُنْ عَاقِلًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا الْعُقَلَاءُ فَلَمْ يَطْلُبْهُ وَإِنْ كَانَ عَاقِلًا وَلَمْ يَكُنْ نَاسِكًا قَالَ هَذَا أَمْرٌ لَا يَنَالُهُ إِلَّا النُّسَّاكُ فَلَمْ يَطْلُبْهُ . 392
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டு பண்புகள் கொண்டவர்கள்தாம் இந்தக் கல்வியைத் தேடிக்கொண்டிருந்தனர் . அவர் துறவியாக இருந்து , பகுத்தறிவாளராக இல்லையென்றால் அவர் அதைத் தேடமாட்டார் . அவர் பகுத்தறிவாளராக இருந்து , துறவியாக இல்லையென்றால் - இது துறவிகள் தவிர மற்றவர்கள் பெறமுடியாத விஷயமாகும் - அவர் அதைத் தேடமாட்டார் . ( ஆனால் ) இன்று அதைத் தேடுபவருக்குப் பகுத்தறிவு , துறவுநிலை ஆகிய இரண்டினுள் எதுவும் இல்லை .
عَنْ الشَّعْبِيَّ قَالَ وَدِدْتُ أَنِّي نَجَوْتُ مِنْ عَمَلِي كَفَافًا لَا لِي وَلَا عَلَيَّ . 393
ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என் கல்வியின்மூலம் எனக்குச் சாதகமாகவோ எனக்கு எதிராகவோ எதுவுமின்றிப் போதுமான அளவு நான் வெற்றிபெற்றுவிட்டேன் என்று சொல்ல ஆசைப்பட்டேன் .
عَنْ الْحَسَنِ قَالَ أَدْرَكْتُ النَّاسَ وَالنَّاسِكُ إِذَا نَسَكَ لَمْ يُعْرَفْ مِنْ قِبَلِ مَنْطِقِهِ وَلَكِنْ يُعْرَفُ مِنْ قِبَلِ عَمَلِهِ فَذَلِكَ الْعِلْمُ النَّافِعُ . 394
ஹஸன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களை ( இவ்வாறு ) அடைந்துகொண்டேன் . வழிபாட்டில் ஈடுபடுபவர் வழிபாட்டில் ஈடுபட்டால் , அவர் தம் பேச்சின்மூலம் அறியப்படமாட்டார் . மாறாக அவர் தம் அமல்-செயல்பாடுகள் மூலம் அறியப்படுவார் . அதுதான் பயனுள்ள கல்வியாகும் .