பாடம்: 34. மனவேட்கைகளைத் தவிர்ந்துகொள்ளுதல்
عَنْ الْأَوْزَاعِيِّ قَالَ قَالَ إِبْلِيسُ لِأَوْلِيَائِهِ مِنْ أَيِّ شَيْءٍ تَأْتُونَ بَنِي آدَمَ فَقَالُوا مِنْ كُلِّ شَيْءٍ قَالَ فَهَلْ تَأْتُونَهُمْ مِنْ قِبَلِ الِاسْتِغْفَارِ قَالُوا هَيْهَاتَ ذَاكَ شَيْءٌ قُرِنَ بِالتَّوْحِيدِ قَالَ لَأَبُثَّنَّ فِيهِمْ شَيْئًا لَا يَسْتَغْفِرُونَ اللَّهَ مِنْهُ قَالَ فَبَثَّ فِيهِمْ الْأَهْوَاءَ . 381
அவ்ஸாயீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்லீஸ் தன்னுடைய நண்பர்களிடம் , “ நீங்கள் மனிதர்களிடம் எதைக் கொண்டு வருகின்றீர்கள் ?” என்று கேட்டான் . “ எல்லாவற்றையும் கொண்டு வருகிறோம் ” என்றனர் . இஸ்திஃக்ஃபார் - பாவமன்னிப்புத் தேடுதல் ஊடாக அவர்களிடம் வருகின்றீர்களா ?” என்று கேட்டான் . அதற்கு அவர்கள் , “( அதுவோ இயலாத ) தூரமாகிவிட்டது . அதுவோ தவ்ஹீதோடு இணைக்கப்பட்டுள்ளதே ” என்றனர் . “ அவர்கள் அல்லாஹ்விடம் இஸ்திஃக்ஃபார்-பாவமன்னிப்புத் தேட முடியாத வகையிலான விஷயத்தை நிச்சயமாக நான் அவர்களிடம் பரப்பிவிடுவேன் ” என்று கூறினான் . ( பிறகு ) அவர்களிடம் மனவேட்கைகளைப் பரப்பிவிட்டான் .
عَنْ زِيَادِ بْنِ حُدَيْرٍ قَالَ قَالَ لِي عُمَرُ هَلْ تَعْرِفُ مَا يَهْدِمُ الْإِسْلَامَ قَالَ قُلْتُ لَا قَالَ يَهْدِمُهُ زَلَّةُ الْعَالِمِ وَجِدَالُ الْمُنَافِقِ بِالْكِتَابِ وَحُكْمُ الْأَئِمَّةِ الْمُضِلِّينَ . 382
ஸியாத் பின் ஹுதைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : “ இஸ்லாமிய மார்க்கத்தை இடித்துத் தள்ளும் விஷயத்தை நீ அறிவாயா ?” என்று உமர் ரளியல்லாஹு அன்ஹு கேட்டார்கள் . அதற்கு நான் , “ தெரியாது ” என்றேன் . அவர்கள் கூறினார்கள் : “ ஓர் ஆலிம் உடைய சருகுதல் , ( திருக்குர்ஆன் எனும் ) வேதத்தைக்கொண்டு நயவஞ்சகனிடம் தர்க்கம் செய்தல் , வழிகெடுக்கக்கூடிய தலைவர்கள் ஆட்சி செய்தல் ஆகியவை அதனை இடித்துத் தள்ளும் .
عَنْ أَبي قِلَابَةَ لَا تُجَالِسُوا أَهْلَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ فَإِنِّي لَا آمَنُ أَنْ يَغْمِسُوكُمْ فِي ضَلَالَتِهِمْ أَوْ يَلْبِسُوا عَلَيْكُمْ مَا كُنْتُمْ تَعْرِفُونَ . 383
அபூகிலாபா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் தம்முடைய வழிகேட்டில் உங்களையும் மூழ்கடிக்கச் செய்துவிடுவார்கள் அல்லது நீங்கள் அறிந்துள்ளவை குறித்து அவர்கள் உங்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திவிடுவார்கள் என்று நான் அஞ்சுகிறேன் .
عَنْ أَسْمَاءَ بْنِ عُبَيْدٍ قَالَ دَخَلَ رَجُلَانِ مِنْ أَصْحَابِ الْأَهْوَاءِ عَلَى ابْنِ سِيرِينَ فَقَالَا يَا أَبَا بَكْرٍ نُحَدِّثُكَ بِحَدِيثٍ قَالَ لَا قَالَا فَنَقْرَأُ عَلَيْكَ آيَةً مِنْ كِتَابِ اللَّهِ قَالَ لَا لِتَقُومَانِ عَنِّي أَوْ لَأَقُومَنَّ قَالَ فَخَرَجَا . 384
அஸ்மா பின் உபைத் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக்கூடிய இருவர் இப்னு சீரீன் அவர்களிடம் வந்து , “ அபூபக்ர் அவர்களே ! ஒரு ஹதீஸை நாங்கள் உங்களுக்கு அறிவிக்கட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ” என்றார்கள் . “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை நாங்கள் உங்களிடம் ஓதிக் காட்டட்டுமா ?” என்று வினவினார்கள் . அதற்கு அவர்கள் , “ வேண்டாம் ; நீங்கள் இருவரும் என்னிடமிருந்து எழுந்து செல்கின்றீர்களா ? அல்லது நான் எழுந்து செல்லட்டுமா ?” என்று கேட்டார்கள் . ( அதன்பின் ) அவர்கள் இருவரும் புறப்பட்டுவிட்டார்கள் . அதைக் கண்ட மக்கள் சிலர் , அபூபக்ர் அவர்களே ! “ அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஒரு வசனத்தை அவர்கள் உங்களிடம் ஓதிக் காட்டுவதில் உங்களுக்கு என்ன ( சிரமம் ) இருக்கிறது ?” என்று வினவினார்கள் . “ அவர்கள் என்னிடம் ஏதாவது ஓர் இறைவசனத்தை ஓதுவார்கள் . அ( தன் விளக்கத் ) தை மாற்றிக் கூறுவார்கள் . அது என் உள்ளத்தில் பதிந்துவிடும் . ( அது எனக்குச் சிரமத்தை ஏற்படுத்தும் )” என்று பதிலளித்தார்கள் .
عَنْ الْحَسَنِ وَابْنِ سِيرِينَ أَنَّهُمَا قَالَا لَا تُجَالِسُوا أَصْحَابَ الْأَهْوَاءِ وَلَا تُجَادِلُوهُمْ وَلَا تَسْمَعُوا مِنْهُمْ . 385
ஹஸன் , இப்னு சீரீன் ரஹிமஹுமல்லாஹ் இருவரும் கூறியதாவது : மனவேட்கைப்படிச் செயல்படக் கூடியவர்களோடு சேர்ந்து அமராதீர்கள் . அவர்களிடம் தர்க்கம் செய்யாதீர்கள் . அவர்களிடமிருந்து ( எதையும் ) செவியுறாதீர்கள் .