33-باب : من كره الرأي والقياس
பாடம் 33

பாடம்: 33. கருத்துக் கூறுவதையும் ஒப்பிடு செய்வதையும் வெறுத்தல்

ஹதீஸ் 378 அத்தியாயம் 8 பாடம் 33

عَنْ أَبُو بَكْرٍ الْهُذَلِيُّ عَنْ الشَّعْبِيِّ قَالَ شَهِدْتُ شُرَيْحًا وَجَاءَهُ رَجُلٌ مِنْ مُرَادٍ فَقَالَ يَا أَبَا أُمَيَّةَ مَا دِيَةُ الْأَصَابِعِ قَالَ عَشْرٌ عَشْرٌ قَالَ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ هَاتَانِ جَمَعَ بَيْنَ الْخِنْصِرِ وَالْإِبْهَامِ فَقَالَ شُرَيْحٌ يَا سُبْحَانَ اللَّهِ أَسَوَاءٌ أُذُنُكَ وَيَدُكَ فَإِنَّ الْأُذُنَ يُوَارِيهَا الشَّعْرُ وَالْكُمَّةُ وَالْعِمَامَةُ فِيهَا نِصْفُ الدِّيَةِ وَفِي الْيَدِ نِصْفُ الدِّيَةِ وَيْحَكَ إِنَّ السُّنَّةَ سَبَقَتْ قِيَاسَكُمْ فَاتَّبِعْ وَلَا تَبْتَدِعْ فَإِنَّكَ لَنْ تَضِلَّ مَا أَخَذْتَ بِالْأَثَرِ . 378

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடமிருந்து அபூபக்ர் அல்ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் ஜுரைஹ் என்பாரிடம் இருந்தேன் . அப்போது முராத் குலத்திலிருந்து ஒருவர் வந்து , அபூ உமய்யா அவர்களே ! விரல்களுக்கான தியத் ( இழப்பீட்டுத் ) தொகை எவ்வளவு ?” என்று கேட்டார் . அதற்கு அவர்கள் , “( ஒவ்வொரு விரலுக்கும் ) பத்து பத்து ” என்று பதிலளித்தார்கள் . அதற்கவர் , “ சுப்ஹானல்லாஹ் ! இவ்விரண்டும் சமம்தானா ?” என்று கேட்டுக்கொண்டே , தம் சுண்டு விரலையும் கட்டை விரலையும் ஒன்றாகக் காட்டினார் . அதற்கு ஜுரைஹ் அவர்கள் , “ சுப்ஹானல்லாஹ் ! உன் காதும் கையும் சமமா ? திண்ணமாகக் காது-அதனை முடி , தொப்பி , தலைப்பாகை ஆகியவை மறைத்துக்கொள்கின்றன . ( அப்படியிருக்க ) அதில் பாதி இழப்பீடும் , கைக்குப் பாதி இழப்பீடும் ( தானே ) உள்ளது ” என்று எதிர்வினா தொடுத்தார்கள் . “ உனக்குக் கேடுதான் ! நிச்சயமாக சுன்னத் உன் ஒப்பீட்டை ( கியாஸ் ) முந்திவிட்டது . எனவே அந்த சுன்னத்தையே ) பின்பற்று ; புதிதாக உண்டாக்காதே . திண்ணமாக நீ ஹதீஸை எடுத்துக்கொள்ளும் வரை ஒருபோதும் வழிதவற மாட்டாய் ” என்றும் கூறினார்கள் . அபூபக்ர் அல் ஹுதலீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : என்னிடம் ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் , “ ஹுதலீ ! உங்களுடைய அஹ்னஃப் ( பின் கைஸ் என்பவர் ) கொல்லப்பட்டால் - இந்தச் சிறுவன் தன் தொட்டிலில் உள்ள நிலையில் - அப்போது அவ்விரண்டு பேரின் இழப்பீட்டுத் தொகையும் சமமா ?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ ஆம் ( சமம்தான் )” என்றேன் . அதற்கு அவர்கள் , “( இப்போது ) உங்கள் ஒப்பீடு எங்கே ( போனது )?” என்று கேட்டார்கள் .

Reference: ( தாரமீ : 204) இதன் அறிவிப்பாளர் தொடர் ளஈஃப் ஆகும் .
ஹதீஸ் 379 அத்தியாயம் 8 பாடம் 33

عَنْ الشَّعْبِيِّ قَالَ وَاللَّهِ لَئِنْ أَخَذْتُمْ بِالْمَقَايِيسِ لَتُحَرِّمُنَّ الْحَلَالَ وَلَتُحِلُّنَّ الْحَرَامَ . 379

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அல்லாஹ்வின்மீது ஆணையாக ! ( ஹதீஸ்களை விட்டுவிட்டு ) ஒப்பீடுகள் மூலம் ( சட்டங்களை ) நீங்கள் எடுக்கத் தொடங்கிவிட்டால் , ஆகுமானதைத் தடைசெய்வீர்கள் ; தடை செய்யப்பட்டதை ஆகுமாக்குவீர்கள் . ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? நீங்கள் என்ன கருதுகிறீர்கள் ? என்று கேட்பதே என்னிடம் மிகவும் சினத்திற்குரியது . ஒருவர் தம் தோழரிடம் , நீர் என்ன கருதுகிறீர் ? என்று கேட்கிறார் . அவர் ஒப்பிட்டுப் பார்க்காதவராக இருந்தார் . ( அதாவது ஹதீஸை மட்டுமே பார்ப்பவராக இருந்தார் ). ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்களெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இருந்திருந்தால் , குர்ஆன் முழுக்க , “ உம்மிடம் கேட்கிறார்கள் ; உம்மிடம் கேட்கிறார்கள் ” என்றே இறங்கியிருக்கும் .

Reference: ( தாரமீ : 198, 199, 201) இதன் அறிவிப்பாளர் தொடர்கள் ‘ ஸஹீஹ் ’ தரத்தில் உள்ளவையாகும் .
ஹதீஸ் 380 அத்தியாயம் 8 பாடம் 33

وعنه قَالَ : مَا حَدَّثُوكَ هَؤُلَاءِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخُذْ بِهِ وَمَا قَالُوهُ بِرَأْيِهِمْ فَأَلْقِهِ فِي الْحُشِّ . 380

ஷஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்தவற்றை எடுத்துக்கொள் . ( அவற்றைச் செயல்படுத்து ). இவர்கள் தம் சிந்தனையால் ( சிந்தித்துக் ) கூறியவற்றைக் குப்பையில் போட்டுவிடு .

Reference: ( தாரமீ : 206) இதன் அறிவிப்பாளர் தொடர் ‘ ஸஹீஹ் ’ ஆகும் .