பாடம்: 31. கல்வியில் சமநிலை பேணுதல்
عَنْ ابْنِ مَيْسَرَةَ قَالَ مَا رَأَيْتُ أَحَدًا مِنْ النَّاسِ الشَّرِيفُ وَالْوَضِيعُ عِنْدَهُ سَوَاءٌ غَيْرَ طَاوُسٍ وَهُوَ يَحْلِفُ عَلَيْهِ . 373
இப்னு மைசரா ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : மக்களுள் யாரையும் சிறப்பு வாய்ந்தவராகவும் தாழ்வானவராகவும் நான் கண்டதில்லை . தாவுஸ் - ரஹிமஹுல்லாஹ் - தவிர அனைவரும் சமமே . அவர் அதன்மீது சத்தியம் செய்வார் .
عَنْ الزُّهْرِيِّ قَالَ كُنَّا نَكْرَهُ كِتَابَةَ الْعِلْمِ حَتَّى أَكْرَهَنَا عَلَيْهِ السُّلْطَانُ فَكَرِهْنَا أَنْ نَمْنَعَهُ أَحَدًا . 374
அஸ்ஸுஹ்ரீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : கல்வியை எழுதி வைப்பதை நாங்கள் வெறுத்துவந்தோம் . அரசர் எங்களை அதற்காக நிர்ப்பந்திக்கின்ற வரை . பிறகு யாருக்கும் அதை ( கல்வியை ) நாங்கள் மறுத்துவிடுவதை வெறுத்தோம் .
عَنْ ابْنُ عَوْنٍ قَالَ كَلَّمُوا مُحَمَّدًا فِي رَجُلٍ يَعْنِي يُحَدِّثُهُ فَقَالَ لَوْ كَانَ رَجُلًا مِنْ الزِّنْجِ لَكَانَ عِنْدِي وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ فِي هَذَا سَوَاءً . 375
இப்னு அவ்ன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : முஹம்மது பின் சீரீன் அவர்களிடம் மக்கள் - அவருக்கு ஹதீஸ் அறிவிக்கிற - ஒரு மனிதரைப் பற்றிக் கேட்டனர் . அதற்கு அவர்கள் , “ ஹதீஸ் அறிவிக்கின்ற அவர் நீக்ரோ இனத்தைச் சார்ந்தவராக இருந்தாலும் அவரும் அப்துல்லாஹ் பின் முஹம்மது ஆகிய இருவரும் என்னிடம் இவ்விஷயத்தில் சமம்தான் ” என்று கூறினார்கள் .