பாடம்: 28. கல்வியை(க் கற்பிக்காமல்) மறைத்தல் குறித்து வந்துள்ளவை
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ سُئِلَ عَنْ عِلْمٍ فَكَتَمَهُ أَلْجَمَهُ اللَّهُ بِلِجَامٍ مِنْ نَارٍ يَوْمَ الْقِيَامَةِ . 367
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ( மார்க்கம் தொடர்பாகப் பயனளிக்கக்கூடிய ஒரு ) கல்வி குறித்துக் கேட்கப்படும்போது அவர் அதை ( த் தெரிந்திருந்தும் ) மறைக்கிறாரோ அல்லாஹ் அவருக்கு மறுமைநாளில் நெருப்பாலான கடிவாளம் இடுவான் .
عَنْ أَبي هُرَيْرَةَ يَقُولُ وَاللَّهِ لَوْلَا آيَتَانِ فِي كِتَابِ اللَّهِ تَعَالَى مَا حَدَّثْتُ عَنْهُ يَعْنِي عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا أَبَدًا لَوْلَا قَوْلُ اللَّهِ إِنَّ الَّذِينَ يَكْتُمُونَ مَا أَنْزَلَ اللَّهُ مِنْ الْكِتَابِ إِلَى آخِرِ الْآيَتَيْنِ . 368
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியுள்ளதாவது : அல்லாஹ்வுடைய வேதத்தில் இரண்டு வசனங்கள் மட்டும் இல்லையென்றால் , நான் எதையும் ஒருபோதும் அவர்களிடமிருந்து அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்திருக்க மாட்டேன் . ( அவை ) இன்னல்லதீன யக்த்துமூன மா அன்ஸ லல்லாஹு மினல் கித்தாபி ..... எனும் இரண்டு வசனங்கள் ( அல்பகரா : 174-175) ஆகும் . ( பொருள் : நாம் இறக்கிய தெளிவான வேதத்திலிருந்து எவர்கள் மறைக்கின்றார்களோ .... எனும் இரண்டு வசனங்கள் .