25-باب : الحكمة ضالة المؤمن
பாடம்
25
பாடம்: 25. ஞானம் ஓர் இறைநம்பிக்கையாளரின் காணாமல்போன சொத்து
ஹதீஸ் 358
அத்தியாயம் 8
பாடம் 25
عن أَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ يَقُولُ لَيْسَ هَدِيَّةٌ أَفْضَلَ مِنْ كَلِمَةِ حِكْمَةٍ تُهْدِيهَا لِأَخِيكَ . 358
அபூஅப்திர் ரஹ்மான் அல்ஹுபுலீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளதாவது : உன் சகோதரனுக்கு வழிகாட்டும் ஞானம் நிறைந்த வார்த்தைகளைவிடச் சிறந்த அன்பளிப்பு வேறொன்றும் இல்லை .
Reference: ( தாரமீ : 362) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 359
அத்தியாயம் 8
பாடம் 25
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْكَلِمَةُ الْحِكْمَةُ ضَالَّةُ الْمُؤْمِنِ فَحَيْثُ وَجَدَهَا فَهُوَ أَحَقُّ بِهَا . 359
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஞானம் நிறைந்த வார்த்தை ஓர் இறை நம்பிக்கையாளரின் காணாமல்போன சொத்தாகும் . அவர் அதை எங்குக் கிடைக்கப் பெறுகிறாரோ , அதை அடைந்துகொள்ள முற்றிலும் தகுதியானவர் .
Reference: ( திர்மிதீ : 2687, இப்னுமாஜா : 4159 / 4169) இது முற்றிலும் ` ளஈஃப் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .