24-باب :القصص
பாடம்
24
பாடம்: 24. (நற்செயலைத் தூண்டும் வகையில்) கதைகள் கூறுதல்
ஹதீஸ் 356
அத்தியாயம் 8
பாடம் 24
عَنْ عَبْدِ الله بْنِ عَمْرٍو : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَقُصُّ عَلَى النَّاسِ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُرَاءٍ . 356
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஷுஐப் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பகட்டுக்காரர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .
Reference: ( இப்னுமாஜா : 3743 / 3753, தாரமீ : 2821) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 357
அத்தியாயம் 8
பாடம் 24
عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ الْأَشْجَعِيِّ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَقُصُّ إِلَّا أَمِيرٌ أَوْ مَأْمُورٌ أَوْ مُخْتَالٌ . 357
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அவ்ஃப் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்துள்ளதாவது : ஆட்சித் தலைவர் அல்லது ( தலைவரின் ) கட்டளையை ஏற்று நடப்பவர் அல்லது பெருமையடிப்பவர் தவிர ( யாரும் ) மக்களிடம் ( நற்செயலைத் தூண்டும் வகையில் ) கதை சொல்வதில்லை .
Reference: ( அபூதாவூத் : 3665) இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .