20-باب : من العلم قول : لا أعلم
பாடம் 20

பாடம்: 20. எனக்குத் தெரியாது என்று கூறுவதும் கல்வியே

ஹதீஸ் 345 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ مَسْعُودٍ قَالَ: إِنَّ الَّذِي يُفْتِي النَّاسَ فِي كُلِّ مَا يُسْتَفْتَى لَمَجْنُونٌ . 345

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : மக்களால் கேட்கப்படுகின்ற ( எதற்கும் தெரியாது எனக் கூறாமல் ) அனைத்திற்கும் மார்க்கத் தீர்ப்பு வழங்குபவன் பைத்தியக்காரன் ஆவான் .

Reference: ( தாரமீ : 176) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 346 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَجُلًا سَأَلَهُ عَنْ مَسْأَلَةٍ فَقَالَ لَا عِلْمَ لِي بِهَا فَلَمَّا أَدْبَرَ الرَّجُلُ قَالَ ابْنُ عُمَرَ نِعْمَ مَا قَالَ ابْنُ عُمَرَ سُئِلَ عَمَّا لَا يَعْلَمُ فَقَالَ لَا عِلْمَ لِي بِهِ . يعني : نفسه . 346

உர்வா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒருவர் ( ஏதோ ) ஒன்றைக் குறித்து இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேள்வி கேட்டார் . அதற்கு இப்னு உமர் , “ அது குறித்து எனக்குத் தெரியாது ” என்று கூறினார்கள் . ஆகவே அம்மனிதர் திரும்பிச் சென்றுவிட்டார் . ( அதன்பின் ) இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இப்னு உமர் நன்றாகவே சொன்னார் . அவர் அறியாதது குறித்துக் கேட்கப்பட்டார் . அதற்கு அவர் , “ தமக்கு அது குறித்துத் தெரியாது ” என்று கூறிவிட்டார் . ( அதாவது தம்மையே அவ்வாறு குறிப்பிட்டார்கள் .)

Reference: ( தாரமீ : 184, 186) இதன் அறிவிப்பாளர்தொடர் ` ஹஸன் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 347 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ الشَّعْبِيِّ قَالَ لَا أَدْرِي نِصْفُ الْعِلْمِ . 347

ஜஅபீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : எனக்குத் தெரியாது என்று கூறுவது கல்வியில் பாதியாகும் .

Reference: ( தாரமீ : 185) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .
ஹதீஸ் 348 அத்தியாயம் 8 பாடம் 20

عَنْ ابْنِ سِيرِينَ قَالَ مَا أُبَالِي سُئِلْتُ عَمَّا أَعْلَمُ أَوْ مَا لَا أَعْلَمُ لِأَنِّي إِذَا سُئِلْتُ عَمَّا أَعْلَمُ قُلْتُ مَا أَعْلَمُ وَإِذَا سُئِلْتُ عَمَّا لَا أَعْلَمُ قُلْتُ لَا أَعْلَمُ . 348

இப்னு சீரீன் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் அறிந்ததைப் பற்றி அல்லது நான் அறியாததைப் பற்றி என்னிடம் கேட்கப்பட்டால் நான் அது குறித்துக் கவலைப்பட மாட்டேன் . ஏனென்றால் நான் அறிந்தது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , நான் அறிந்ததைச் சொல்வேன் . நான் அறியாதது குறித்து என்னிடம் கேட்கப்பட்டால் , “ நான் அறியேன் ” என்று கூறிவிடுவேன் .

Reference: ( தாரமீ : 188) இதன் அறிவிப்பாளர் தொடர் ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்துள்ளது .