பாடம்: 15. நபியவர்களின் குடும்பத்தாருக்குத் தனிப்பட்ட முறையில் எந்தக் கல்வியும் வழங்கப்படவில்லை
(ق) عَنْ عَلِيٌّ رَضِيَ اللَّهُ عَنْهُ مَا عِنْدَنَا كِتَابٌ نَقْرَؤُهُ إِلَّا كِتَابُ اللَّهِ غَيْرَ هَذِهِ الصَّحِيفَةِ قَالَ فَأَخْرَجَهَا فَإِذَا فِيهَا أَشْيَاءُ مِنْ الْجِرَاحَاتِ وَأَسْنَانِ الْإِبِلِ قَالَ وَفِيهَا الْمَدِينَةُ حَرَمٌ مَا بَيْنَ عَيْرٍ إِلَى ثَوْرٍ فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا أَوْ آوَى مُحْدِثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَمَنْ وَالَى قَوْمًا بِغَيْرِ إِذْنِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ وَذِمَّةُ الْمُسْلِمِينَ وَاحِدَةٌ يَسْعَى بِهَا أَدْنَاهُمْ فَمَنْ أَخْفَرَ مُسْلِمًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالْمَلَائِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ لَا يُقْبَلُ مِنْهُ يَوْمَ الْقِيَامَةِ صَرْفٌ وَلَا عَدْلٌ . 329
யஸீத் பின் ஷரீக் அத்தைமீ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு , “ நாங்கள் ஓதி வருகின்ற அல்லாஹ்வுடைய வேதத்தையும் ( நபியவர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற ) இந்த ஏட்டையும் தவிர ( எழுத்து வடிவிலான மார்க்கச் சட்டம் ) வேறெதுவும் ( நபியின் குடும்பத்தாரான ) எங்களிடம் இல்லை `` என்று கூறிவிட்டு , அந்த ஏட்டை வெளியே எடுத்தார்கள் . அதில் காயங்களுக்கான தண்டனை குறித்தும் ( உயிரீட்டிற்காகவும் ஸகாத்தாகவும் வழங்கப்படும் ) ஒட்டகங்களின் வயது குறித்தும் எழுதப்பட்டிருந்தன . மேலும் , அதில் ( பின்வருமாறு குறிப்பிடப்பட்டு ) இருந்தது : மதீனா நகரம் " அய்ர் ` எனும் மலையிலிருந்து " ஸவ்ர் ` மலை வரை புனிதமானதாகும் . அதில் எவன் ( மார்க்கத்தின் பெயரால் ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றானோ , அல்லது ( அவ்வாறு ) புதிதாக ஒன்றை உருவாக்குகின்றவனுக்கு அடைக்கலம் அளிக்கின்றானோ அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான வழிபாடோ கூடுதலான வழிபாடோ எதுவுமே அவனிடமிருந்து ஏற்கப்படாது . தன்னை விடுதலை செய்த எசமானர்களின் அனுமதியின்றி வேறு யாரையேனும் வாரிசுகளாக ஆக்கிக் கொள்ளும் அடிமைமீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் புரிந்த கடமையான மற்றும் கூடுதலான வழிபாடுகள் எதுவும் அவனிடமிருந்து ஏற்கப்படாது . முஸ்லிம்களுள் யார் அடைக்கலம் கொடுத்தாலும் அது ஒன்றேயாகும் . ( மற்ற முஸ்லிம்கள் தரும் அடைக்கலத்திற்குச் சமமானதாகும் .) அவர்களுள் கீழ்நிலையில் உள்ளவர்கள்கூட அடைக்கலம் தர முன்வரலாம் . ஒரு முஸ்லிம் கொடுத்த அடைக்கலத்தை எவரேனும் முறித்தால் அவன்மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும் . மேலும் , அவன் செய்த கடமையான வழிபாடு , உபரியான வழிபாடு மற்றும் எதுவுமே மறுமை நாளில் ஏற்றுக் கொள்ளப்படாது .
(م) عَنْ أَبِي الطُّفَيْلِ قَالَ سُئِلَ عَلِيٌّ أَخَصَّكُمْ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ فَقَالَ مَا خَصَّنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ لَمْ يَعُمَّ بِهِ النَّاسَ كَافَّةً إِلَّا مَا كَانَ فِي قِرَابِ سَيْفِي هَذَا قَالَ فَأَخْرَجَ صَحِيفَةً مَكْتُوبٌ فِيهَا لَعَنَ اللَّهُ مَنْ ذَبَحَ لِغَيْرِ اللَّهِ وَلَعَنَ اللَّهُ مَنْ سَرَقَ مَنَارَ الْأَرْضِ وَلَعَنَ اللَّهُ مَنْ لَعَنَ وَالِدَهُ وَلَعَنَ اللَّهُ مَنْ آوَى مُحْدِثًا . 330
அபுத்துஃபைல் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் மட்டும் தனிப்பட்ட முறையில் ஏதேனும் விஷயத்தை ( இரகசியமாக ) ச் சொன்னார்களா ?`` என்று கேட்கப்பட்டது . அலீ ரளியல்லாஹு அன்ஹு , " அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்கள் அனைவருக்கும் பொதுவாகச் சொல்லாத எந்த விஷயத்தையும் எங்களிடம் தனிப்பட்ட முறையில் ( இரகசியமாகச் ) சொல்லவில்லை ; இதோ இந்த வாளுறையில் இருப்பதைத் தவிர `` என்று கூறிவிட்டு , ஓர் ஏட்டை வெளியில் எடுத்தார்கள் . அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது : அல்லாஹ் அல்லாத மற்றவர் பெயரில் ( பிராணியை ) அறுத்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் . பூமியின் அடையாளச் சின்னங்களைத் திருடியவனை அல்லாஹ் சபிக்கின்றான் . தன் தந்தையைச் சபித்தவனை அல்லாஹ்வும் சபிக்கின்றான் . ( மார்க்கத்தில் இல்லாத ) புதுமைகளை ( மார்க்கத்தின் பெயரால் ) ஏற்படுத்தியவனுக்கு அடைக்கலம் அளித்தவனை அல்லாஹ் சபிக்கின்றான் .
عَنْ قَيْسِ بْنِ عَبَّادٍ قَالَ قُلْتُ لِعَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَخْبِرْنَا عَنْ مَسِيرِكَ هَذَا أَعَهْدٌ عَهِدَهُ إِلَيْكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمْ رَأْيٌ رَأَيْتَهُ فَقَالَ مَا عَهِدَ إِلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِشَيْءٍ وَلَكِنَّهُ رَأْيٌ رَأَيْتُهُ . 331
கைஸ் பின் உபாத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் , “ உங்களுடைய இந்த நடை குறித்து எங்களுக்குச் சொல்லுங்கள் . இது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தமா ? அல்லது உங்களுடைய தனிப்பட்ட முடிவா ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதையும் என்னிடம் ஒப்பந்தம் செய்யவில்லை . எனினும் ( இது ) என்னுடைய தனிப்பட்ட முடிவாகும் ” என்றார்கள் .