12-باب : تعليم النساء
பாடம் 12

பாடம்: 12. பெண்களுக்குக் கற்பித்தல்

ஹதீஸ் 324 அத்தியாயம் 8 பாடம் 12

(ق) عَنْ أَبِي سَعِيدٍ، جَاءَتِ امْرَأَةٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ ذَهَبَ الرِّجَالُ بِحَدِيثِكَ، فَاجْعَلْ لَنَا مِنْ نَفْسِكَ، يَوْمًا نَأْتِيكَ فِيهِ تُعَلِّمُنَا مِمَّا عَلَّمَكَ اللَّهُ‏.‏ فَقَالَ ‏‏ اجْتَمِعْنَ فِي يَوْمِ كَذَا وَكَذَا فِي مَكَانِ كَذَا وَكَذَا ‏.‏ 324

அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து , “ அல்லாஹ்வின் தூதரே ! ( பெண்கள் ) உங்கள் உரைகளை ( க் கேட்க முடியாதவாறு ) ஆண்களே தட்டிச் சென்றுவிடுகின்றனர் . ஆகவே , நாங்கள் தங்களிடம் வந்து , அல்லாஹ் தங்களுக்குக் கற்றுக்கொடுத்தவற்றிலிருந்து எங்களுக்கு நீங்கள் போதித்திட எங்களுக்கென ஒரு நாளை நீங்களே நிர்ணயித்து விடுங்கள் `` என்று கூறினார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இன்ன நாளில் இன்ன இடத்தில் நீங்கள் ஒன்று கூடுங்கள் `` என்று சொன்னார்கள் . அவ்வாறே ( அந்த நாளில் அந்த இடத்தில் ) பெண்கள் ஒன்று திரண்டனர் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பெண்களிடம் சென்று , அல்லாஹ் தமக்குக் கற்றுக் கொடுத்தவற்றிலிருந்து அவர்களுக்குப் போதித்தார்கள் . பிறகு , “ உங்களுள் எந்தப் பெண் தனக்கு ( மரணம் வருவதற்கு ) முன்பாக , தன் குழந்தைகளுள் மூன்று பேரை இழந்துவிடுகின்றாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து காக்கும் திரையாக மாறிவிடுவார்கள் `` என்று சொன்னார்கள் . அப்போது அப்பெண்களுள் ஒருவர் , “ அல்லாஹ்வின் தூதரே ! இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலுமா ?`` என்று கேட்டார் . இதை அந்தப் பெண் இரண்டு முறை திரும்பத் திரும்பக் கேட்க , “ ஆம் ; இரண்டு குழந்தைகளை இழந்துவிட்டாலும்தான் `` என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மும்முறை பதிலளித்தார்கள் .

Reference: ( புகாரீ : 7310, முஸ்லிம் : 2633)