பாடம்: 11. அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதன் முறை
(ق) عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ . 322
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : நீர் வேதமுடையவர்களிடம் செல்கிறீர் . அவர்களிடம் சென்றடைந்துவிட்டால் , அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை ; முஹம்மத் அல்லாஹ்வின் தூதராவார் என்று ( ஏகத்துவத்திற்கு ) சாட்சியம் சொல்லும்படி அவர்களை அழைப்பீராக ! இதற்கு அவர்கள் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் , " அல்லாஹ் தினமும் ஐவேளை தொழுவதைக் கடமையாக்கியுள்ளான் ` என்பதை அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டுவிட்டால் " நிச்சயமாக அல்லாஹ் அவர்களில் செல்வர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு அவர்களில் ஏழைகளுக்குக் கொடுக்கப்படுகின்ற ஸகாத்தைக் கடமையாக்கியுள்ளான் ` என அவர்களுக்கு அறிவிப்பீராக ! அவர்கள் இதற்கும் ( இசைந்து ) உமக்குக் கட்டுப்பட்டால் அவர்களின் பொருட்களில் சிறந்தவற்றை வசூலிப்பது குறித்து உம்மை எச்சரிக்கிறேன் . அநீதி இழைக்கப்பட்டவனின் பிரார்த்தனைக்குப் பயந்துகொள்வீர் ! ஏனெனில் அவனுக்கும் இறைவனுக்கும் இடையே எந்தத் திரையுமில்லை . இதை முஆத் பின் ஜபல் ரளியல்லாஹு அன்ஹு அவர்களை யமனுக்கு ஆளுநராக அனுப்பியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள் .
عَنْ جُنْدُبِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كُنَّا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَنَحْنُ فِتْيَانٌ حَزَاوِرَةٌ فَتَعَلَّمْنَا الْإِيمَانَ قَبْلَ أَنْ نَتَعَلَّمَ الْقُرْآنَ ثُمَّ تَعَلَّمْنَا الْقُرْآنَ فَازْدَدْنَا بِهِ إِيمَانًا . 323
ஜுன்துப் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நாங்கள் வலிமை மிக்க இளைஞர்களாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் இருந்தபோது குர்ஆனைக் கற்றுக்கொள்வதற்கு முன் இறைநம்பிக்கையைக் கற்றுக்கொண்டோம் . பிறகு குர்ஆனை நாங்கள் கற்றோம் . அதன் மூலம் எங்கள் இறைநம்பிக்கையும் அதிகரித்தது .