பாடம்: 9. மிகுதியாக வினாத் தொடுப்பது வெறுக்கத்தக்கது
(ق) عَنْ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ أَبِيهِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ أَعْظَمَ الْمُسْلِمِينَ جُرْمًا مَنْ سَأَلَ عَنْ شَيْءٍ لَمْ يُحَرَّمْ فَحُرِّمَ مِنْ أَجْلِ مَسْأَلَتِهِ . 316
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு , அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ دَعُونِي مَا تَرَكْتُكُمْ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِسُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ فَإِذَا نَهَيْتُكُمْ عَنْ شَيْءٍ فَاجْتَنِبُوهُ وَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَأْتُوا مِنْهُ مَا اسْتَطَعْتُمْ . 317
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் எதை ( செய்யுங்கள் என்றோ , செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல் ) உங்களு ( டைய முடிவு ) க்கு விட்டுவிட்டேனோ அதை ( ப் பற்றி எதுவும் கேட்காமல் ) நீங்களும் விட்டுவிடுங்கள் . உங்களுக்குமுன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்களிடம் ( அதிகமாகக் ) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான் . ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதிலிருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள் . ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் இயன்ற அளவிற்குச் செய்யுங்கள் .
(ق) عَنْ أَبِي مُوسَى قَالَ سُئِلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَشْيَاءَ كَرِهَهَا فَلَمَّا أُكْثِرَ عَلَيْهِ غَضِبَ ثُمَّ قَالَ لِلنَّاسِ سَلُونِي عَمَّا شِئْتُمْ قَالَ رَجُلٌ مَنْ أَبِي قَالَ أَبُوكَ حُذَافَةُ فَقَامَ آخَرُ فَقَالَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ فَقَالَ أَبُوكَ سَالِمٌ مَوْلَى شَيْبَةَ فَلَمَّا رَأَى عُمَرُ مَا فِي وَجْهِهِ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا نَتُوبُ إِلَى اللَّهِ عَزَّ وَجَلَّ . 318
அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் அவர்களுக்குப் பிடிக்காத பல விஷயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது . அவர்களிடம் ( இது போன்ற ) கேள்விகள் அதிகமாகக் கேட்கப்பட்டபோது ( அதைக் கேட்டு ) கோபப்பட்டார்கள் . பின்னர் மக்களிடம் “ நீங்கள் நாடிய எதைப் பற்றி வேண்டுமானாலும் என்னிடம் கேளுங்கள் !`` என்று கூறினார்கள் . அப்போது ஒரு மனிதர் , “ என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “ ஹுதாஃபாதான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . உடனே மற்றொருவர் எழுந்து “ என் தந்தை யார் , அல்லாஹ்வின் தூதரே ?” என்று கேட்க , “ உமது தந்தை ஷைபா என்பவரிடம் அடிமையாயிருந்த " சாலிம்`தான் `` என்றார்கள் . ( இம்மாதிரியான கேள்விகளால் ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் முகத்தில் தென்பட்ட ( கோபத் ) தைக் கண்ட உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் மெய்யாகவே வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறோம் `` என்றார்கள் .
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّمَا هَلَكَ مَنْ كَانَ قَبْلَكُمْ بِكَثْرَةِ سُؤَالِهِمْ وَاخْتِلَافِهِمْ عَلَى أَنْبِيَائِهِمْ لَا تَسْأَلُونِي عَنْ شَيْءٍ إِلَّا أَخْبَرْتُكُمْ بِهِ فَقَالَ عَبْدُ اللَّهِ بْنُ حُذَافَةَ مَنْ أَبِي يَا رَسُولَ اللَّهِ قَالَ أَبُوكَ حُذَافَةُ بْنُ قَيْسٍ فَرَجَعَ إِلَى أُمِّهِ فَقَالَتْ وَيْحَكَ مَا حَمَلَكَ عَلَى الَّذِي صَنَعْتَ فَقَدْ كُنَّا أَهْلَ جَاهِلِيَّةٍ وَأَهْلَ أَعْمَالٍ قَبِيحَةٍ فَقَالَ لَهَا إِنْ كُنْتُ لَأُحِبُّ أَنْ أَعْلَمَ مَنْ أَبِي مَنْ كَانَ مِنْ النَّاسِ . 319
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ உங்களுக்குமுன் வாழ்ந்தவர்கள் அழிந்ததெல்லாம் அவர்கள் அதிகமாகக் கேள்வி கேட்டு , தங்கள் இறைத்தூதர்களிடம் கருத்து வேறுபாடு கொண்டதன் காரணமாகத்தான் . நான் எதை உங்களுக்கு அறிவிக்கின்றேனோ அதைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னிடம் நீங்கள் கேட்காதீர்கள் ” என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அப்போது அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா , “ அல்லாஹ்வின் தூதரே ! என் தந்தை யார் ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் “‘ ஹுதாஃபா பின் கைஸ்’தான் உன் தந்தை `` என்று பதிலளித்தார்கள் . அதைக் கேட்டபின் அவர் தம் தாயிடம் சென்றார் . ( தாம் கேட்ட கேள்வியையும் அதற்கான பதிலையும் அவரிடம் சொன்னார் .) அதைக் கேட்ட அவர்தம் தாய் , “ உனக்கு வந்த கேடே ! நீ செய்த செயலைச் செய்யத் தூண்டியது எது ? நாம் அறியாமைக் காலத்தில் அசிங்கமான செயல்களைச் செய்பவர்களாகவா இருந்து வந்தோம் ?” என்று வினவினார் . அதற்கு அவர் , “ என் தந்தை மக்களுள் எத்தகையவராக இருந்தார் என்று தெரிந்து கொள்ளவே நான் விரும்பினேன் ( அதுவன்றி எந்தக் கெட்ட நோக்கமும் இல்லை )” என்று பதிலளித்தார் .