பாடம்: 4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்மீது பொய்யுரைப்பதன் தீமை
(ق) عَنْ علي قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : لَا تَكْذِبُوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجْ النَّارَ. 308
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அலீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நான் சொல்லாததைச் சொன்னதாக ) என் மீது பொய் சொல்லாதீர்கள் . ஏனெனில் , என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான் .
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ . 309
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் மீது வேண்டுமென்றே இட்டுக்கட்டிப் பொய் சொல்பவன் தனது இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக்கொள்ளட்டும் .
(م) عَنْ سَمُرَةَ بْنِ جُنْدَبٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ حَدَّثَ عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبَيْنِ . 310
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சமுரா பின் ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பொய்யெனத் தெரியும் என்னைப் பற்றிய ஒரு செய்தியை யார் அறிவிக்கிறாரோ அவரும் பொய்யர்கள் இருவருள் ஒருவர் ஆவார் .