3-باب : (بلغوا عني ولو آية )
பாடம் 3

பாடம்: 3. என்னிடமிருந்து (நீங்கள் கேட்டது) ஒரு (சிறு) செய்தியாக இருந்தாலும் அதை எடுத்துரையுங்கள்

ஹதீஸ் 304 அத்தியாயம் 8 பாடம் 3

(خ ) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ. 304

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என்னிடமிருந்து ஒரேயரு ( சிறு ) செய்தி கிடைத்தாலும் சரி , அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரையுங்கள் . பனூ இஸ்ராயீல்களின் வாயிலாகக் கிடைத்த செய்திகளையும் அறிவியுங்கள் . அதனால் குற்றமில்லை . எவன் என் மீது ( நான் சொன்னதாக ) வேண்டு மென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும் .

Reference: ( புகாரீ : 3461)
ஹதீஸ் 305 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ نَضَّرَ اللَّهُ امْرَأً سَمِعَ مِنَّا حَدِيثًا فَحَفِظَهُ حَتَّى يُبَلِّغَهُ فَرُبَّ حَامِلِ فِقْهٍ إِلَى مَنْ هُوَ أَفْقَهُ مِنْهُ وَرُبَّ حَامِلِ فِقْهٍ لَيْسَ بِفَقِيهٍ . 305

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸைத் பின் ஸாபித் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நம்மிடமிருந்து ஒரு செய்தியைக் கேட்டு அதைப் பாதுகாத்து , பின்னர் அதை ( ப் பிறருக்கு ) எடுத்துரைத்தவனை அல்லாஹ் மகிழ்ச்சிப்படுத்துவானாக ! மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் அவரைவிட மிகவும் அறிந்தவரிடம் எடுத்துரைக்கிறார் . மார்க்கச் சட்ட அறிவைப் பெற்றிருக்கக்கூடிய எத்தனையோ பேர் மார்க்க அறிஞர் இல்லை .

Reference: ( அபூதாவூத் : 3660, திர்மிதீ : 2656, இப்னுமாஜா : 232, தாரமீ : 235) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 306 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ جَدِّهِ مُعَاوِيَةَ الْقُشَيْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا لِيُبَلِّغْ الشَّاهِدُ الْغَائِبَ . 306

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக முஆவியா அல்குஷைரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( ஹஜ்ஷிலிருந்து விடைபெறும்போது இங்கு ) வந்தவர் வராதவருக்கு எடுத்துரைக்கட்டும் .

Reference: ( இப்னுமாஜா : 230 / 234) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 307 அத்தியாயம் 8 பாடம் 3

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَسْمَعُونَ وَيُسْمَعُ مِنْكُمْ وَيُسْمَعُ مِمَّنْ سَمِعَ مِنْكُمْ . 307

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இப்போது என்னிடமிருந்து ) நீங்கள் செவியுறுகின்றீர்கள் ; ( பிற்காலத்தில் ) உங்களிடமிருந்து செவியுறப்படும் ; ( அதன்பின் ) உங்களிடம் கேட்டவர்களிடமிருந்து செவியுறப்படும் . ( இவ்வாறே இது தொடரும் ).

Reference: ( அபூதாவூத் : 3659) இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .