பாடம்: 2. கல்வி கற்றல், கற்பித்தல் ஆகியவற்றின் சிறப்பு
(ق) عَنْ أَبِي مُوسَى عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ مِنْ الْهُدَى وَالْعِلْمِ كَمَثَلِ الْغَيْثِ الْكَثِيرِ أَصَابَ أَرْضًا فَكَانَ مِنْهَا نَقِيَّةٌ قَبِلَتْ الْمَاءَ فَأَنْبَتَتْ الْكَلَأَ وَالْعُشْبَ الْكَثِيرَ وَكَانَتْ مِنْهَا أَجَادِبُ أَمْسَكَتْ الْمَاءَ فَنَفَعَ اللَّهُ بِهَا النَّاسَ فَشَرِبُوا وَسَقَوْا وَزَرَعُوا وَأَصَابَتْ مِنْهَا طَائِفَةً أُخْرَى إِنَّمَا هِيَ قِيعَانٌ لَا تُمْسِكُ مَاءً وَلَا تُنْبِتُ كَلَأً فَذَلِكَ مَثَلُ مَنْ فَقُهَ فِي دِينِ اللَّهِ وَنَفَعَهُ مَا بَعَثَنِي اللَّهُ بِهِ فَعَلِمَ وَعَلَّمَ وَمَثَلُ مَنْ لَمْ يَرْفَعْ بِذَلِكَ رَأْسًا وَلَمْ يَقْبَلْ هُدَى اللَّهِ الَّذِي أُرْسِلْتُ بِهِ . 298
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் என்னை நேர்வழி மற்றும் ஞானத்துடன் அனுப்பியதற்கு உவமையாவது , நிலத்தில் விழுந்த பெருமழை போன்றதாகும் . அவற்றில் சில நிலங்கள் நீரை ஏற்றுக்கொண்டு ஏராளமான புற்களையும் பசுமையான செடி கொடிகளையும் முளைக்கச் செய்தன . மற்ற சில நிலங்கள் தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளும் தரிசு நிலங்களாகும் . அதனை இறைவன் மக்களுக்குப் பயன்படச் செய்தான் . அதனை மக்கள் அருந்தினர் ; ( தமது கால்நடைகளுக்கும் ) புகட்டினர் ; விவசாயமும் செய்தனர் . அந்தப் பெருமழை இன்னொரு வகை நிலத்திலும் விழுந்தது . அது ( ஒன்றுக்கும் உதவாத ) வெறும் கட்டாந்தரை . அது தண்ணீரைத் தேக்கி வைத்துக்கொள்ளவும் இல்லை ; புற்பூண்டுகளை முளைக்கச் செய்யவுமில்லை . இதுதான் அல்லாஹ்வின் மார்க்கத்தில் விளக்கம் பெற்று நான் கொண்டு வந்த தூதினால் பயனடைந்து , கற்றுத் தெரிந்து பிறருக்கும் கற்றுக் கொடுத்தவருக்கும் , நான் கொண்டு வந்த தூதை ஏறிட்டுப் பாராமலும் நான் கொண்டு வந்த அல்லாஹ்வின் நேர்வழியை ஏற்றுக்கொள்ளாமலும் வாழ்கிறவனுக்கும் உவமையாகும் .
عَنْ أَبِي الدَّرْدَاءِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ لَيَسْتَغْفِرُ لِلْعَالِمِ مَنْ فِي السَّمَاوَاتِ وَمَنْ فِي الْأَرْضِ حَتَّى الْحِيتَانِ فِي الْبَحْرِ . 299
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஒரு மார்க்க அறிஞருக்காக கடலில் உள்ள மீன்கள் உள்பட வானங்களில் உள்ளவையும் பூமியில் உள்ளவையும் பாவமன்னிப்புத் தேடுகின்றன .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْرُ مَا يُخَلِّفُ الرَّجُلُ مِنْ بَعْدِهِ ثَلَاثٌ وَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ وَصَدَقَةٌ تَجْرِي يَبْلُغُهُ أَجْرُهَا وَعِلْمٌ يُعْمَلُ بِهِ مِنْ بَعْدِهِ . 300
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அபீகத்தாதா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதரின் மரணத்திற்குப் பிறகு ( அவரைப் பின்தொடர்ந்து ) வரக்கூடிய நன்மைகள் மூன்றாகும் . அவருக்காகப் பிரார்த்தனை செய்யக்கூடிய குழந்தை , நிரந்தரமான தானதர்மம் . அதன் நற்கூலி அவரை அடைந்து கொண்டேயிருக்கும் , அவருக்குப் பிறகு செயல்படுத்தப்படுகின்ற கல்வி ஆகியனவாகும் .
عَنْ أَبِي أُمَامَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ غَدَا إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ كَانَ لَهُ أَجْرُ مُعْتَمِرٍ تَامِّ الْعُمْرَةِ ، فَمَنْ رَاحَ إِلَى الْمَسْجِدِ لَا يُرِيدُ إِلَّا لِيَتَعَلَّمَ خَيْرًا أَوْ يُعَلِّمَهُ فَلَهُ أَجْرُ حَاجٍّ تَامِّ الْحَجَّةِ . 301
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : யார் ஒருவர் காலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஓர் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் . யார் ஒருவர் மாலையில் , கற்றுக்கொள்ள வேண்டும் அல்லது கற்பிக்க வேண்டும் என்று கருதி மஸ்ஜிதுக்குச் செல்கிறாரோ அவருக்கு முழுமையான ஹஜ் செய்த நன்மை கிடைக்கும் .
عَنْ أَنَسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْهُومَانِ لَا يَشْبَعَانِ : مَنْهُومٌ فِي عِلْمٍ لَا يَشْبَعُ ، وَمَنْهُومٌ فِي دُنْيَا لَا يَشْبَعُ . 302
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இரண்டு பேராசைக்காரர்கள் திருப்தியுறமாட்டார்கள் . கல்வியைத் தேடுவதில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுற மாட்டான் . உலகத் தேடலில் பேராசையுடையவன் ( அதில் ) திருப்தியுறமாட்டான் .
عَنْ حُذَيْفَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : فَضْلُ الْعِلْمِ خَيْرٌ مِنْ فَضْلِ الْعِبَادَةِ ، وَخَيْرُ دِينِكُمُ الْوَرَعُ . 303
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வழிபாட்டின் சிறப்பைவிடக் கல்வியின் சிறப்பு சிறந்தது . உங்களின் தீனுக்குள் சிறந்தது ஒழுக்கம் பேணல் ஆகும் .