பாடம்: 19. தலைவிதியைப் பொய்யெனக் கூறுவோர் குறித்து வந்துள்ளவை
عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْقَدَرِيَّةُ مَجُوسُ هَذِهِ الْأُمَّةِ إِنْ مَرِضُوا فَلَا تَعُودُوهُمْ وَإِنْ مَاتُوا فَلَا تَشْهَدُوهُمْ . 291
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : கதரிய்யா இந்தச் சமுதாயத்தின் நெருப்பு வணங்கிகள் ஆவர் . அவர்கள் ( யாரேனும் ) நோயுற்றால் நலம் விசாரிக்கச் செல்லாதீர்கள் . அவர்கள் ( யாரேனும் ) மரணித்தால் அதில் நீங்கள் கலந்து கொள்ளாதீர்கள் .
عَنْ نَافِعٍ قَالَ كَانَ لِابْنِ عُمَرَ صَدِيقٌ مِنْ أَهْلِ الشَّامِ يُكَاتِبُهُ فَكَتَبَ إِلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ إِنَّهُ بَلَغَنِي أَنَّكَ تَكَلَّمْتَ فِي شَيْءٍ مِنْ الْقَدَرِ فَإِيَّاكَ أَنْ تَكْتُبَ إِلَيَّ فَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ سَيَكُونُ فِي أُمَّتِي أَقْوَامٌ يُكَذِّبُونَ بِالْقَدَرِ . 292
நாஃபிஉ ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு சிரியா நாட்டில் நண்பர் ஒருவர் இருந்தார் . அவர் இப்னு உமர் அவர்களோடு கடிதத் தொடர்பு கொண்டிருந்தார் . எனவே அப்துல்லாஹ் இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவருக்குக் கடிதம் எழுதினார்கள் : நீர் தலைவிதியைக் குறித்து ஏதோ பேசியதாக எனக்குத் தகவல் கிடைத்தது . ( இனி ) நீர் எனக்குக் கடிதம் எழுதுவதை எச்சரிக்கிறேன் . நிச்சயமாக நான் , “ அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைச் செவியுற்றுள்ளேன் : திண்ணமாக என் சமுதாயத்தில் விதியைப் பொய்யெனக் கூறுகின்ற மக்கள் தோன்றுவார்கள் .”
عَنْ طَاوُسٍ قَالَ : كُنْتُ عِنْدَ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، وَمَعَنَا رَجُلٌ مِنَ الْقَدَرِيَّةِ ، فَقُلْتُ : إِنَّ أُنَاسًا يَقُولُونَ : لَا قَدَرَ . قَالَ : أَوَفِي الْقَوْمِ أَحَدٌ مِنْهُمْ ؟ قُلْتُ : لَوْ كَانَ مَا كُنْتَ تَصْنَعُ بِهِ ؟ قَالَ : " لَوْ كَانَ فِيهِمْ أَحَدٌ مِنْهُمْ ، لَأَخَذْتُ بِرَأْسِهِ ، ثُمَّ قَرَأْتُ عَلَيْهِ آيَةَ كَذَا وَكَذَا : ( وَقَضَيْنَا إِلَى بَنِي إسْرائِيلَ فِي الْكِتَابِ لَتُفْسِدُنَّ فِي الْأَرْضِ مَرَّتَيْنِ وَلَتَعْلُنَّ عُلُوًّا كَبِيرًا ) . 293
தாவூஸ் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : நான் இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் இருந்தேன் . எங்களோடு கதரிய்யா கொள்கையைச் சார்ந்த ஒருவர் இருந்தார் . அப்போது நான் , “ விதி என ஏதும் இல்லை ” என்று மக்கள் ( சிலர் ) கூறுகின்றனர் ” என்றேன் . “ மக்களுள் அப்படி யாரேனும் இருக்கின்றாரா ( உமக்குத் தெரியுமா )?” என்று கேட்டார்கள் . அதற்கு நான் , “ அவ்வாறு இருந்தால் , அவரைத் தாங்கள் என்ன செய்வீர்கள் ?” என்று கேட்டேன் . அதற்கு அவர்கள் , அம்மக்களுள் யாரேனும் இரு ( ப்பது தெரி ) ந்தால் அவரின் தலை ( முடி ) யைப் பிடித்து , பிறகு இன்னின்ன இறைவசனங்களை ஓதிக்காட்டுவேன் : நாம் அந்த வேதத்தில் இஸ்ரவேலர்களிடம் , “ நிச்சயமாக நீங்கள் இந்தப் பூமியில் இரண்டு முறை குழப்பம் விளைவிப்பீர்கள் ; மேலும் நிச்சயமாக நீங்கள் பெரிய அளவில் அட்டூழியம் செய்வீர்கள் ” என்று அறிவித்திருந்தோம் . (17: 4)