பாடம்: 9. ஒவ்வொரு பொருளும் விதியின்படியே
(م) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَتَبَ اللَّهُ مَقَادِيرَ الْخَلَائِقِ قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ بِخَمْسِينَ أَلْفَ سَنَةٍ قَالَ وَعَرْشُهُ عَلَى الْمَاءِ . 271
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , வானங்களையும் பூமியையும் படைப்பதற்கு ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே , படைப்பினங்களின் விதிகளை எழுதிவிட்டான் . ( அப்போது ) அவனது அரியணை ( அர்ஷ் ) தண்ணீரின் மேல் இருந்தது .
(م) عَنْ طَاوُسٍ أَنَّهُ قَالَ أَدْرَكْتُ نَاسًا مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُونَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ قَالَ وَسَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كُلُّ شَيْءٍ بِقَدَرٍ حَتَّى الْعَجْزِ وَالْكَيْسِ أَوْ الْكَيْسِ وَالْعَجْزِ . 272
தாவூஸ் பின் கைசான் ரஹிமஹுல்லாஹ் கூறியதாவது : " ஒவ்வொன்றும் விதியின் படியே `` என்று கூறிவந்த தோழர்களில் சிலரை நான் சந்தித்திருக்கிறேன் . அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு , “ ஒவ்வொரு பொருளும் விதியின் படியே . " இயலாமை , புத்திசாலித்தனம் ஆகியவை உள்பட ` அல்லது " புத்திசாலித்தனம் , இயலாமை ஆகியவை உள்பட `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் எனக் கூறியதைக் கேட்டுள்ளேன் .
عَنْ ابْنِ أَبِي خُزَامَةَ عَنْ أَبِيهِ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ رُقًى نَسْتَرْقِيهَا وَدَوَاءً نَتَدَاوَى بِهِ وَتُقَاةً نَتَّقِيهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ شَيْئًا فَقَالَ هِيَ مِنْ قَدَرِ اللَّهِ . 273
அபூகிஸாமா ரளியல்லாஹு அன்ஹு தம் தந்தையிடமிருந்து அறிவித்துள்ளதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் , நாங்கள் எங்களைத் தற்காத்துக்கொள்கின்ற தற்காப்புகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .
عَنْ أَنَسٍ قَالَ : خَدَمْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَشْرَ سِنِينَ فَمَا بَعَثَنِي فِي حَاجَةٍ لَمْ تَتَهَيَّأْ إِلَّا قَالَ : لَوْ قُضِيَ لَكَانَ ، أَوْ لَوْ قُدِّرَ لَكَانَ . 274
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன் . தயார்நிலையில் இல்லாத ஏதேனும் தேவைக்காக என்னை அனுப்பினால் , “ முடிவு செய்யப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ; அல்லது நிர்ணயிக்கப்பட்டிருந்தால் அது ( அவ்வாறே ) ஆகியிருக்கும் ” என்று கூறாமல் அனுப்பியதில்லை .
عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ قَالَ : قُلْتُ : يَا رَسُولَ اللَّهِ رُقًى كُنَّا نَسْتَرْقِي بِهَا وَأَدْوِيَةٌ كُنَّا نَتَدَاوَى بِهَا هَلْ تَرُدُّ مِنْ قَدَرِ اللَّهِ قَالَ : هُوَ مِنْ قَدَرِ اللَّهِ . 275
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் சிகிச்சைக்காக ஓதிப்பார்க்கின்ற மந்திரங்களும் , நாங்கள் சிகிச்சை பெறுகின்ற மருந்துகளும் அல்லாஹ்வுடைய விதியிலிருந்து எதையும் மாற்றிவிடுமா ?” என்று நான் கேட்டேன் . அதற்கவர்கள் , “ அவையும் அல்லாஹ்வுடைய விதிகளுள் உள்ளவையே ” என்று விடையளித்தார்கள் .