4-باب : خلق الآدمي في بطن أُمه
பாடம் 4

பாடம்: 4 மனிதன் தன்னுடைய தாயின் கருவறையில் படைக்கப்பட்டான்

ஹதீஸ் 260 அத்தியாயம் 7 பாடம் 4

(ق) عَنْ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ الصَّادِقُ الْمَصْدُوقُ إِنَّ أَحَدَكُمْ يُجْمَعُ خَلْقُهُ فِي بَطْنِ أُمِّهِ أَرْبَعِينَ يَوْمًا ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ عَلَقَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يَكُونُ فِي ذَلِكَ مُضْغَةً مِثْلَ ذَلِكَ ثُمَّ يُرْسَلُ الْمَلَكُ فَيَنْفُخُ فِيهِ الرُّوحَ وَيُؤْمَرُ بِأَرْبَعِ كَلِمَاتٍ بِكَتْبِ رِزْقِهِ وَأَجَلِهِ وَعَمَلِهِ وَشَقِيٌّ أَوْ سَعِيدٌ فَوَالَّذِي لَا إِلَهَ غَيْرُهُ إِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ فَيَدْخُلُهَا وَإِنَّ أَحَدَكُمْ لَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ النَّارِ حَتَّى مَا يَكُونُ بَيْنَهُ وَبَيْنَهَا إِلَّا ذِرَاعٌ فَيَسْبِقُ عَلَيْهِ الْكِتَابُ فَيَعْمَلُ بِعَمَلِ أَهْلِ الْجَنَّةِ فَيَدْخُلُهَا . 260

உண்மையே பேசியவரும் உண்மையே அறிவிக்கப்பட்டவருமான அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : உங்களுள் ஒருவரது கரு தம் தாயின் வயிற்றில் நாற்பது " பகல் ` அல்லது " இரவு ` சேமிக்கப்படுகிறது . பிறகு அதைப் போன்றே (40 நாள்கள் ) அது ( அட்டை போன்று கருப்பையின் சுவரைப் பற்றிப் பிடித்துத் தொங்கும் ) ஒரு கருக் கட்டியாக மாறுகிறது . பிறகு அதைப் போன்றே ( மேலும் 40 நாள்கள் மெல்லப்பட்ட சக்கை போன்ற ) ஒரு சதைப் பிண்டமாக மாறுகிறது . பிறகு அதனிடம் ஒரு வானவர் அனுப்பப்படுகிறார் . அந்த வானவருக்கு நான்கு கட்டளைகள் பிறப்பிக்கப்படுகின்றன : அவர் , ( கருவாக இருக்கும் ) அந்த மனிதனின் வாழ்வாதாரத்தையும் , அவனது வாழ்நாளையும் , செயல்பாட்டையும் , அவன் ( இறுதிக் கட்டத்தில் ) துர்பாக்கியசாலியா அல்லது நற்பாக்கியசாலியா என்பதையும் ( இறைவனின் கட்டளைப்படி ) பதிவு செய்கிறார் . பிறகு அவனுள் உயிர் ஊதப்படுகிறது . இதனால்தான் , உங்களுள் ஒருவர் சொர்க்கவாசிகளின் ( நற் ) செயல்களைச் செய்துகொண்டே செல்வார் . இறுதியில் சொர்க்கத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் ( இடைவெளி ) தான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ள அவர் நரகவாசிகளின் செயலைச் செய்து அதன் விளைவாக நரகம் புகுந்து விடுவார் . ( இதைப் போன்றே ) உங்களுள் ஒருவர் நரகவாசிகளின் செயலைச் செய்து கொண்டே செல்வார் . இறுதியில் நரகத்திற்கும் அவருக்குமிடையே ஒரு முழம் இடைவெளிதான் இருக்கும் . அதற்குள் அவரது விதி அவரை முந்திக்கொள்ளும் . அவர் சொர்க்கத்திற்குரியவர்களின் ( நற் ) செயல்களைச் செய்து அதன் பயனாகச் சொர்க்கம் புகுவார் .

Reference: ( புகாரீ : 7454, முஸ்லிம் : 2643)
ஹதீஸ் 261 அத்தியாயம் 7 பாடம் 4

(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ يَا رَبِّ عَلَقَةٌ يَا رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالْأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ . 261

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : வல்லமையும் மாண்பும் உடைய அல்லாஹ் ( பெண்ணின் ) கருவறைக்கென ஒரு வானவரை நியமித்துள்ளான் . ( அதனுள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டு பரிணாம மாற்றங்கள் ஏற்படும்போது ) அந்த வானவர் , “ என் இறைவா ! ( இது ஒரு துளி ) விந்து . என் இறைவா ! இது பற்றித் தொங்கும் கரு . என் இறைவா ! இது மெல்லப்பட்ட சக்கை போன்ற ) சதைத்துண்டு `` என்று கூறிக் கொண்டிருப்பார் . அதனை வாழ்விக்க அல்லாஹ் விரும்பும்போது அவ்வானவர் , “ என் இறைவா ! ( இது ) ஆணா அல்லது பெண்ணா ? துர்பாக்கியம் உடையதா ? நற்பாக்கியம் உடையதா ? ( இதன் ) வாழ்வாதாரம் எவ்வளவு ? ( இதன் ) ஆயுள் எவ்வளவு ?`` என்று கேட்பார் . ( அல்லாஹ்வால் இவையனைத்தும் நிர்ணயிக்கப்பட்டு ) அதன் தாயின் வயிற்றில் அது இருக்கும்போது எழுதப்படும் .

Reference: ( புகாரீ : 318, முஸ்லிம் : 2646)