பாடம்: 3 ஜைத்தான் மக்கள் மத்தியில் குழப்பம் செய்தல்
(م) عَنْ جَابِرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ إِبْلِيسَ يَضَعُ عَرْشَهُ عَلَى الْمَاءِ ثُمَّ يَبْعَثُ سَرَايَاهُ فَأَدْنَاهُمْ مِنْهُ مَنْزِلَةً أَعْظَمُهُمْ فِتْنَةً يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ فَعَلْتُ كَذَا وَكَذَا فَيَقُولُ مَا صَنَعْتَ شَيْئًا قَالَ ثُمَّ يَجِيءُ أَحَدُهُمْ فَيَقُولُ مَا تَرَكْتُهُ حَتَّى فَرَّقْتُ بَيْنَهُ وَبَيْنَ امْرَأَتِهِ قَالَ فَيُدْنِيهِ مِنْهُ وَيَقُولُ نِعْمَ أَنْتَ . 257
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : இப்லீஸ் , தனது சிம்மாசனத்தை ( கடல் ) நீரின்மீது அமைக்கிறான் . பிறகு தன் பட்டாளங்களை ( மக்களிடையே ) அனுப்புகிறான் . அவர்களில் மிகப் பெரும் குழப்பத்தை ஏற்படுத்துகின்ற ( ஷைத்தான் எவனோ அ) வனே இப்லீஸிடம் மிகவும் நெருங்கிய அந்தஸ்தைப் பெறுகிறான் . அவனிடம் ஷைத்தான்களுள் ஒருவன் ( திரும்பி ) வந்து “ நான் இன்னின்னவாறு செய்தேன் `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , “( சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ) நீ எதையும் செய்யவில்லை `` என்று கூறுவான் . பிறகு அவர்களுள் மற்றொருவன் வந்து , “ நான் ஒரு மனிதனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இடையே பிரிவை ஏற்படுத்தாமல் அவனை நான் விட்டுவைக்கவில்லை `` என்று கூறுவான் . அப்போது இப்லீஸ் , அவனை அருகில் வரச் செய்து , “ நீதான் சரி ( யான ஆள் )`` என்று ( பாராட்டிக் ) கூறுவான் .
(م) عَنْ جَابِرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَدْ أَيِسَ أَنْ يَعْبُدَهُ الْمُصَلُّونَ فِي جَزِيرَةِ الْعَرَبِ وَلَكِنْ فِي التَّحْرِيشِ بَيْنَهُمْ . 258
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அரேபிய தீபகற்பத்தில் தொழுகையாளர்கள் தன்னை வணங்குவார்கள் என்ற நம்பிக்கையை ஷைத்தான் இழந்துவிட்டான் . எனினும் , அவர்களிடையே பிளவை உருவாக்குவ ( தில் வெற்றி கண்டு விட்டா ) ன் .
عَنْ سَبْرَةَ بْنِ أَبِي فَاكِهٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ الشَّيْطَانَ قَعَدَ لِابْنِ آدَمَ بِأَطْرُقِهِ فَقَعَدَ لَهُ بِطَرِيقِ الْإِسْلَامِ فَقَالَ تُسْلِمُ وَتَذَرُ دِينَكَ وَدِينَ آبَائِكَ وَآبَاءِ أَبِيكَ فَعَصَاهُ فَأَسْلَمَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْهِجْرَةِ فَقَالَ تُهَاجِرُ وَتَدَعُ أَرْضَكَ وَسَمَاءَكَ وَإِنَّمَا مَثَلُ الْمُهَاجِرِ كَمَثَلِ الْفَرَسِ فِي الطِّوَلِ فَعَصَاهُ فَهَاجَرَ ثُمَّ قَعَدَ لَهُ بِطَرِيقِ الْجِهَادِ فَقَالَ تُجَاهِدُ فَهُوَ جَهْدُ النَّفْسِ وَالْمَالِ فَتُقَاتِلُ فَتُقْتَلُ فَتُنْكَحُ الْمَرْأَةُ وَيُقْسَمُ الْمَالُ فَعَصَاهُ فَجَاهَدَ. 259
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக ஸப்ரா பின் அபீஃபாகிஹ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : திண்ணமாக ஷைத்தான் ஆதமுடைய மகனுக்காக ( அவன் செல்லும் ) பல பாதைகளில் ( அவனைத் தடுப்பதற்காக ) அமர்ந்தான் . இஸ்லாமிய மார்க்கத்தின் பாதையில் அமர்ந்துகொண்டு , நீ உன்னுடைய மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையர் மார்க்கத்தையும் உன்னுடைய மூதாதையரின் பெற்றோருடைய மார்க்கத்தையும் விட்டுவிட்டு முஸ்லிமாகிறாயா ? என்று கேட்டான் . அதற்கவன் , அவனுக்கு மாறு செய்துவிட்டு முஸ்லிமானான் . பின்னர் அவன் ஹிஜ்ரத் செய்யும் வழியில் அமர்ந்தான் . உன்னுடைய பூமியையும் வானத்தையும் விட்டுவிட்டு நீ ஹிஜ்ரத் செய்கிறாயா ? திண்ணமாக ஹிஜ்ரத் செய்பவர் நீண்ட கயிற்றிலுள்ள குதிரையைப் போன்றவர் ஆவார் என்று கூறினான் . அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ஹிஜ்ரத் செய்தான் . அவன் ( அல்லாஹ்விற்காகப் ) போராடும் பாதையில் அமர்ந்தான் . பொருளையும் உயிரையும் வருத்திக்கொண்டு நீ போராடப் போகின்றாயா ? நீ போராடினால் கொல்லப்படுவாய் . ( உன் ) மனைவி ( வேறொருவனுக்கு ) மணமுடிக்கப்படுவாள் . ( உன்னுடைய ) பொருட்செல்வம் ( உறவினர்களுக்குப் ) பங்கிடப்படும் என்று கூறி ( அச்சமூட்டி ) னான் . ( அப்போதும் ) அவனுக்கு மாறு செய்துவிட்டு ( அல்லாஹ்விற்காக ) ப் போராடினான் . " யார் இவ்வாறு செய்தாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( போரில் கலந்துகொள்ளும்போது ) கொல்லப்பட்டாரோ அவரை மகத்துவமும் வல்லமையும் மிக்க அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யார் ( தண்ணீரில் ) மூழ்கிவிட்டாரோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது . யாரை அவருடைய வாகனம் கீழே தள்ளிவிட்டதோ ( அதன்மூலம் அவர் இறந்துவிட்டாரோ ) அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழையச் செய்வது கடமையாகிவிட்டது .``