2-باب :بدء الخلق
பாடம் 2

பாடம்: 2 படைப்பின் தொடக்கம்

ஹதீஸ் 253 அத்தியாயம் 7 பாடம் 2

(م) عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خُلِقَتْ الْمَلَائِكَةُ مِنْ نُورٍ وَخُلِقَ الْجَانُّ مِنْ مَارِجٍ مِنْ نَارٍ وَخُلِقَ آدَمُ مِمَّا وُصِفَ لَكُمْ . 253

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிப்பதாவது : வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டனர் . " ஜின்`கள் தீப்பிழம்பால் படைக்கப்பட்டனர் . ( ஆதி மனிதர் ) ஆதம் , உங்களுக்கு ( குர்ஆனில் ) கூறப்பட்டுள்ளதைப் போன்று ( களிமண்ணால் ) படைக்கப்பட்டார் .

Reference: ( முஸ்லிம் : 2996 / 5722)
ஹதீஸ் 254 அத்தியாயம் 7 பாடம் 2

(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا صَوَّرَ اللَّهُ آدَمَ فِي الْجَنَّةِ تَرَكَهُ مَا شَاءَ اللَّهُ أَنْ يَتْرُكَهُ فَجَعَلَ إِبْلِيسُ يُطِيفُ بِهِ يَنْظُرُ مَا هُوَ فَلَمَّا رَآهُ أَجْوَفَ عَرَفَ أَنَّهُ خُلِقَ خَلْقًا لَا يَتَمَالَكُ . 254

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்தில் ( களிமண்ணால் ) படைத்து , தான் நாடிய காலம் வரை அப்படியே விட்டுவிட்டான் . இப்லீஸ் அதைச் சுற்றி வந்து அது என்னவென்று உற்றுப் பார்க்கலானான் . வயிறு உள்ளதாக அதைக் கண்டபோது “ தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொள்ள முடியாத ( கட்டுப்பாடற்ற ) படைப்பாகவே அது படைக்கப்பட்டுள்ளது `` என அவன் அறிந்துகொண்டான் .

Reference: ( முஸ்லிம் : 2611 / 5089)
ஹதீஸ் 255 அத்தியாயம் 7 பாடம் 2

(م) عن أَبُو مُوسَى الْأَشْعَرِيُّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ خَلَقَ آدَمَ مِنْ قَبْضَةٍ قَبَضَهَا مِنْ جَمِيعِ الْأَرْضِ فَجَاءَ بَنُو آدَمَ عَلَى قَدْرِ الْأَرْضِ جَاءَ مِنْهُمْ الْأَحْمَرُ وَالْأَبْيَضُ وَالْأَسْوَدُ وَبَيْنَ ذَلِكَ وَالسَّهْلُ وَالْحَزْنُ وَالْخَبِيثُ وَالطَّيِّبُ . 255

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூமூஸா அல்அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் , ( முதல் மனிதர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பூமியின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் எடுத் ( துவரச் செய் )த ஒரு கைப்பிடி மண்ணிலிருந்தே படைத்தான் . ஆகவேதான் , ஆதமின் மக்கள் ( மனிதர்கள் ) பூமியின் தன்மைக்கேற்பவே உள்ளனர் . இதனாலேயே அவர்களில் சிவப்பரும் வெள்ளையரும் கருப்பரும் இவற்றுக்கு இடைப்பட்ட நிறம் கொண்டோரும் , மெல்லிய இயல்பாளரும் முரடரும் நல்லோரும் தீயோரும் இருக்கின்றனர் .

Reference: ( அபூதாவூத் : 4693, திர்மிதீ : 2879 / 2955). இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 256 அத்தியாயம் 7 பாடம் 2

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَمَّا خَلَقَ اللَّهُ آدَمَ وَنَفَخَ فِيهِ الرُّوحَ عَطَسَ فَقَالَ الْحَمْدُ لِلَّهِ فَحَمِدَ اللَّهَ بِإِذْنِهِ فَقَالَ لَهُ رَبُّهُ يَرْحَمُكَ اللَّهُ يَا آدَمُ اذْهَبْ إِلَى أُولَئِكَ الْمَلَائِكَةِ إِلَى مَلَإٍ مِنْهُمْ جُلُوسٍ فَقُلْ السَّلَامُ عَلَيْكُمْ قَالُوا وَعَلَيْكَ السَّلَامُ وَرَحْمَةُ اللَّهِ ثُمَّ رَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ إِنَّ هَذِهِ تَحِيَّتُكَ وَتَحِيَّةُ بَنِيكَ بَيْنَهُمْ فَقَالَ اللَّهُ لَهُ وَيَدَاهُ مَقْبُوضَتَانِ اخْتَرْ أَيَّهُمَا شِئْتَ قَالَ اخْتَرْتُ يَمِينَ رَبِّي وَكِلْتَا يَدَيْ رَبِّي يَمِينٌ مُبَارَكَةٌ ثُمَّ بَسَطَهَا فَإِذَا فِيهَا آدَمُ وَذُرِّيَّتُهُ فَقَالَ أَيْ رَبِّ مَا هَؤُلَاءِ فَقَالَ هَؤُلَاءِ ذُرِّيَّتُكَ فَإِذَا كُلُّ إِنْسَانٍ مَكْتُوبٌ عُمْرُهُ بَيْنَ عَيْنَيْهِ فَإِذَا فِيهِمْ رَجُلٌ أَضْوَؤُهُمْ أَوْ مِنْ أَضْوَئِهِمْ قَالَ يَا رَبِّ مَنْ هَذَا قَالَ هَذَا ابْنُكَ دَاوُدُ قَدْ كَتَبْتُ لَهُ عُمْرَ أَرْبَعِينَ سَنَةً قَالَ يَا رَبِّ زِدْهُ فِي عُمْرِهِ قَالَ ذَاكَ الَّذِي كَتَبْتُ لَهُ قَالَ أَيْ رَبِّ فَإِنِّي قَدْ جَعَلْتُ لَهُ مِنْ عُمْرِي سِتِّينَ سَنَةً قَالَ أَنْتَ وَذَاكَ قَالَ ثُمَّ أُسْكِنَ الْجَنَّةَ مَا شَاءَ اللَّهُ ثُمَّ أُهْبِطَ مِنْهَا فَكَانَ آدَمُ يَعُدُّ لِنَفْسِهِ قَالَ فَأَتَاهُ مَلَكُ الْمَوْتِ فَقَالَ لَهُ آدَمُ قَدْ عَجَّلْتَ قَدْ كُتِبَ لِي أَلْفُ سَنَةٍ قَالَ بَلَى وَلَكِنَّكَ جَعَلْتَ لِابْنِكِ دَاوُدَ سِتِّينَ سَنَةً فَجَحَدَ فَجَحَدَتْ ذُرِّيَّتُهُ وَنَسِيَ فَنَسِيَتْ ذُرِّيَّتُهُ قَالَ فَمِنْ يَوْمِئِذٍ أُمِرَ بِالْكِتَابِ وَالشُّهُودِ . 256

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் படைத்து அவர்களுக்குள் உயிரை ஊதியபோது ஆதம் அவர்களுக்கு தும்மல் ஏற்பட்டது . அப்போது அவர்கள் , ` அல்ஹம்து லில்லாஹ் ( எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே )` என்று சொல்ல நினைத்தார்கள் . பிறகு அல்லாஹ்வின் உத்தரவின்படியே (` அல்ஹம்து லில்லாஹ் ` என்று ) அவனைப் புகழ்ந்தார்கள் . அப்போது அவர்களுடைய இறைவன் அவர்களிடம் , ` ஆதமே ! அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக . நீர் அந்த வானவர்களிடம் - அதாவது அவர்களில் அமர்ந்திருக்கும் அந்தப் பிரமுகர்களிடம் - சென்று , ` அஸ்ஸலாமு அலைக்கும் ( உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும் )` என்று ( முகமன் ) கூறுவீராக ` என்றான் . ( அவ்வாறே ஆதம் அலைஹிஸ்ஸலாம் சென்று முகமன் கூறினார்கள் .) அப்போது வானவர்கள் , ` வஅலைக்கஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹ் ` ( தங்கள் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும் )` என்று ( பதில் ) சொன்னார்கள் . பிறகு ஆதம் அலைஹிஸ்ஸலாம் தம் இறைவனிடம் திரும்பி வந்தார்கள் . அப்போது அல்லாஹ் , `( ஆதமே !) இதுதான் உமது முகமனும் உம்முடைய சந்ததிகள் தங்களுக்கிடையே கூறும் முகமனும் ஆகும் ` என்று சொன்னான் . பின்னர் அல்லாஹ் தன் இரு கைகளையும் மடக்கி வைத்துக்கொண்டு ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , ` இவ்விரண்டில் நீர் விரும்பியதைத் தேர்வு செய்வீராக ` என்றான் . ஆதம் அவர்கள் , ` நான் என் இறைவனின் வலக்கரத்தைத் தேர்வு செய்துகொண்டேன் ` என்றார்கள் . என் இறைவனின் இரு கரங்களுமே வளமிக்க வலக்கரம் தான் . பிறகு இறைவன் தனது வலக்கரத்தை விரித்தான் . அதில் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தோற்றமும் , அவர்களின் சந்ததிகளுடைய தோற்றங்களும் இருந்தன . ஆதம் அவர்கள் , ` இறைவா ! இவர்களெல்லாம் யார் ?` என்று கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர்களெல்லாம் உம் சந்ததிகளாவார்கள் என்று பதிலளித்தான் . அவர்கள் ஒவ்வொருவரின் இரு கண்களுக்கிடையே அவரது ஆயுட்காலம் எழுதப்பட்டிருந்தது . ` மிகவும் பிரகாசமிக்க ஒருவர் ` அல்லது ` மிகவும் பிரகாசமிக்கோருள் ஒருவர் ` அவர்களில் காணப்பட்டார் . ` இறைவா ! இவர் யார் ?` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கேட்டார்கள் . அதற்கு இறைவன் , ` இவர் உம் மகன் தாவூத் ஆவார் . இவரது ஆயுட்காலம் நாற்பது ஆண்டுகள் என எழுதியுள்ளேன் ` என்று கூறினான் . ` இறைவா ! அவரது ஆயுட்காலத்தை இன்னும் அதிகப்படுத்துவாயாக ` என்று ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள் . அதற்கு இறைவன் , `( இல்லை ;) அதுதான் அவருக்கு நான் எழுதிய அளவாகும் ` என்று கூறிவிட்டான் . ` இறைவா ! ( அப்படியானால் ) எனது ஆயுட்காலத்தில் அறுபது வருடங்களை அவருக்கு நான் கொடுத்துவிட்டேன் ` என ஆதம் அலைஹிஸ்ஸலாம் கூற , `( அப்படியானால் ) அது உனது விருப்பம் ` என இறைவன் பதிலளித்தான் . பின்னர் ஆதம் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் நாடிய காலம் வரை சொர்க்கத்தில் தங்கவைக்கப்பட்டார்கள் . பிறகு அங்கிருந்து ( பூமிக்கு ) இறக்கப்பட்டார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் தமது ஆயுட்காலத்தைக் கணக்கிட்டுக்கொண்டே வந்தார்கள் . ( அவர்களது ஆயுளில் தொள்ளாயிரத்து நாற்பது ஆண்டுகள் முடிவுற்றபோது ) ` மலக்குல் மவ்த் ` ( உயிரைக் கைப்பற்றிச்செல்ல வரும் வானவர் ) ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்தார் . அப்போது ஆதம் அலைஹிஸ்ஸலாம் மலக்குல் மவ்த்திடம் , ` நீங்கள் சீக்கிரமாக வந்துவிட்டீர்கள் ; எனது ஆயுட்காலம் ஆயிரம் வருடம் என எழுதப்பட்டுள்ளது ` என்றார்கள் . அதற்கு அந்த வானவர் , ` ஆம் ! ( நீர் கூறுவது சரிதான் .) எனினும் , நீர் உன் மகன் தாவூதுக்கு அறுபது வருடங்களைக் கொடுத்துவிட்டீர் ` என்று கூறினார் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறுத்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறுத்தார்கள் . ஆதம் அலைஹிஸ்ஸலாம் மறந்தார்கள் . எனவே , அவர்களுடைய சந்ததிகளும் மறந்தார்கள் . அன்றிலிருந்துதான் ( கொடுக்கல் வாங்கலை ) எழுதிவைக்குமாறும் , அதற்குச் சாட்சிகளை ஏற்படுத்துமாறும் ( மக்களுக்கு ) உத்தரவிடப்பட்டது .

Reference: ( திர்மிதீ : 3290 / 3368). இது ` ஹஸன் ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .