பாடம்: 24. சொர்க்கத்தில் உள்ளவையும் சொர்க்கவாசிகளும்
عن سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَوْ أَنَّ مَا يُقِلُّ ظُفُرٌ مِمَّا فِي الْجَنَّةِ بَدَا لَتَزَخْرَفَتْ لَهُ مَا بَيْنَ خَوَافِقِ السَّمَوَاتِ وَالْأَرْضِ وَلَوْ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اطَّلَعَ فَبَدَا أَسَاوِرُهُ لَطَمَسَ ضَوْءَ الشَّمْسِ كَمَا تَطْمِسُ الشَّمْسُ ضَوْءَ النُّجُومِ . 246
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஅத் பின் அபீவக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்திலுள்ள அருட்கொடைகளில் ஒரு நகம் சுமக்கும் அளவிலான ( மிகச் சிறிய ) ஒன்று ( இவ்வுலகில் ) வெளிப்பட்டால்கூட , அதனால் வானங்களுக்கும் பூமிக்கும் இடையிலுள்ள பகுதிகள் எழிலாகிவிடும் . ( அவ்வாறே ,) சொர்க்கவாசிகளுள் ஒருவர் ( பூமியை ) எட்டிப்பார்க்க , அவருடைய அணிகலன்கள் தென்படுமானால் , விண்மீன்களின் ஒளியைச் சூரியன் மங்கச்செய்வதைப் போன்று . சூரிய ஒளியையே அவை மங்கச் செய்துவிடும் .
عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْضِعُ سَوْطٍ فِي الْجَنَّةِ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا . 247
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் ஒரு சாட்டையின் அளவு இடம் ( கிடைத்துவிட்டால் ) அது இந்தப் பூமியையும் அதில் உள்ளவற்றையும்விடச் சிறந்தது .
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُبْعَثُ أَهْلُ الْجَنَّةِ عَلَى صُورَةِ آدَمَ فِي مِيلَادِ ثَلَاثَةٍ وَثَلَاثِينَ سَنَةً ، جُرْدًا مُرْدًا مُكَحَّلِينَ ، ثُمَّ يُذْهَبُ بِهِمْ إِلَى شَجَرَةٍ فِي الْجَنَّةِ ، فَيُكْتَبُونَ فِيهَا ، لَا تَبْلَى ثِيَابُهُمْ ، وَلَا يَفْنَى شَبَابُهُمْ . 248
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் ஆதமின் தோற்றத்தில் எழுப்பப்படுவார்கள் . அவர்கள் தம் உடலில் உரோமங்களற்ற , கண்களில் அஞ்சனம் தீட்டப்பெற்ற , முப்பத்து மூன்று வயதுடைய இளவல்களாகச் சொர்க்கத்திற்குள் நுழைவார்கள் . பிறகு அவர்கள் சொர்க்கத்தில் உள்ள ஒரு மரத்தை நோக்கி அழைத்துச் செல்லப்படுவார்கள் . அங்கே “ அவர்களுடைய ஆடைகள் இற்றுப்போகா ; அவர்களுடைய இளமைப்பருவம் முடிந்துபோகாது ” என்று எழுதப்படும் .