பாடம்: 21. சொர்க்கவாசிகள்மீது அல்லாஹ்வின் திருப்தி ஏற்படுதல்
(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْخَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا . 242
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( மறுமையில் ) சொர்க்கவாசிகளை நோக்கி , “ சொர்க்கவாசிகளே !` என்று அழைப்பான் . அதற்கு அவர்கள் “ எங்கள் அதிபதியே ! இதோ கீழ்ப்படியக் காத்திருக்கிறோம் `` என்று பதிலளிப்பார்கள் . அப்போது அல்லாஹ் " திருப்தி அடைந்தீர்களா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர்கள் “ உன் படைப்புகளுள் யாருக்கும் நீ வழங்கியிராத ( அருட்செல்வங்கள் , இன்பங்கள் ஆகிய ) வற்றை எங்களுக்கு நீ வழங்கியுள்ளபோது நாங்கள் திருப்தி அடையாமல் இருப்போமா ?`` என்று கூறுவார்கள் . அப்போது அல்லாஹ் “ அதைவிடச் சிறந்த ஒன்றை உங்களுக்கு நான் வழங்கப்போகிறேன் `` என்பான் . அவர்கள் “ அதிபதியே ! அதைவிடச் சிறந்தது எது ?`` என்று கேட்பார்கள் . அதற்கு அல்லாஹ் “ உங்கள்மீது என் திருப்தியை அருளுகிறேன் . இனி ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் `` என்று கூறுவான் .