20- باب : آخر من يدخل الجنة
பாடம் 20

பாடம்: 20. சொர்க்கத்தில் நுழையும் கடைசி மனிதர்

ஹதீஸ் 240 அத்தியாயம் 6 பாடம் 20

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنِّي لَأَعْلَمُ آخِرَ أَهْلِ النَّارِ خُرُوجًا مِنْهَا وَآخِرَ أَهْلِ الْجَنَّةِ دُخُولًا الْجَنَّةَ رَجُلٌ يَخْرُجُ مِنْ النَّارِ حَبْوًا فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ تَبَارَكَ وَتَعَالَى لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ قَالَ فَيَأْتِيهَا فَيُخَيَّلُ إِلَيْهِ أَنَّهَا مَلْأَى فَيَرْجِعُ فَيَقُولُ يَا رَبِّ وَجَدْتُهَا مَلْأَى فَيَقُولُ اللَّهُ لَهُ اذْهَبْ فَادْخُلْ الْجَنَّةَ فَإِنَّ لَكَ مِثْلَ الدُّنْيَا وَعَشَرَةَ أَمْثَالِهَا أَوْ إِنَّ لَكَ عَشَرَةَ أَمْثَالِ الدُّنْيَا قَالَ فَيَقُولُ أَتَسْخَرُ بِي أَوْ أَتَضْحَكُ بِي وَأَنْتَ الْمَلِكُ قَالَ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ضَحِكَ حَتَّى بَدَتْ نَوَاجِذُهُ قَالَ فَكَانَ يُقَالُ ذَاكَ أَدْنَى أَهْلِ الْجَنَّةِ مَنْزِلَةً . 240

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ( சொர்க்கவாசிகள் மற்றும் நரகவாசிகளின் நிலை குறித்துப் பின்வருமாறு ) கூறினார்கள் : நரகவாசிகளுள் இறுதியாக நரகத்திலிருந்து வெளியேறுபவர் யார் என்பதையும் , சொர்க்கவாசிகளுள் இறுதியாகச் சொர்க்கத்தில் நுழைபவர் யார் என்பதையும் நான் நன்கறிவேன் . நரகத்திலிருந்து தவழ்ந்தபடி வெளியேறுகின்ற ஒரு மனிதரே அவர் . அவரிடம் அல்லாஹ் “ நீ போய் சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்பான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . உடனே அவர் திரும்பி வந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அல்லாஹ் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் `` என்று ( மீண்டும் ) சொல்வான் . அவர் சொர்க்கத்திற்குச் செல்வார் . அது நிரம்பியிருப்பதைப் போன்று அவருக்குத் தோன்றும் . ஆகவே , அவர் திரும்பிவந்து , “ என் இறைவா ! அது நிரம்பியிருக்கக் கண்டேன் `` என்று கூறுவார் . அதற்கு அவன் “ நீ சென்று சொர்க்கத்தில் நுழைந்துகொள் . ஏனெனில் , " உலகம் மற்றும் அதைப் போன்ற பத்து மடங்கு ` அல்லது " உலகத்தைப் போன்று பத்து மடங்கு ` ( இடம் சொர்க்கத்தில் ) உனக்கு உண்டு `` என்று சொல்வான் . அதற்கு அவர் " அரசனாகிய நீ என்னைப் " பரிகாசம் செய்கிறாயா ?` அல்லது " என்னை நகைக்கின்றாயா ?` என்று கேட்பார் . ( இதைக் கூறியபோது ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் கடைவாய்ப்பற்கள் தெரியச் சிரித்ததை நான் பார்த்தேன் . அறிவிப்பாளர்களுள் ஒருவர் கூறுகிறார் : இவரே சொர்க்கவாசிகளுள் குறைந்த அந்தஸ்து உடையவர் ஆவார் என்று கூறப்பட்டு வந்தது .

Reference: ( புகாரீ : 6571, முஸ்லிம் : 186)
ஹதீஸ் 241 அத்தியாயம் 6 பாடம் 20

(م ) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَخْرُجُ مِنْ النَّارِ أَرْبَعَةٌ فَيُعْرَضُونَ عَلَى اللَّهِ فَيَلْتَفِتُ أَحَدُهُمْ فَيَقُولُ أَيْ رَبِّ إِذْ أَخْرَجْتَنِي مِنْهَا فَلَا تُعِدْنِي فِيهَا فَيُنْجِيهِ اللَّهُ مِنْهَا . 241

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் : அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( இறுதிக் கட்டத்தில் ) நான்கு பேர் ( நரக ) நெருப்பிலிருந்து வெளியேறுவார்கள் . அந்நால்வரும் அல்லாஹ்வின்முன் நிறுத்தப்படுவார்கள் . அப்போது அவர்களுள் ஒருவர் ( நரகத்தை நோக்கித் ) திரும்பி , “ இறைவா ! இ( ந்தக் கொடிய நரகத் ) திலிருந்து என்னை நீ வெளியேற்றிய பின் மீண்டும் அதற்குள் என்னை அனுப்பிவிடாதே !`` என்று கூறுவார் . அதையடுத்து அல்லாஹ் அதிலிருந்து அவரைக் காப்பாற்றுவான் .

Reference: ( முஸ்லிம் : 192 / 321)