19-باب :إخراج الموحدين من النار
பாடம் 19

பாடம்: 19. ஏகத்துவக் கொள்கையுடையோரை நரகத்திலிருந்து வெளியேற்றுதல்

ஹதீஸ் 238 அத்தியாயம் 6 பாடம் 19

(ق) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا دَخَلَ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ يَقُولُ اللَّهُ تَعَالَى : مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ مِنْ إِيمَانٍ فَأَخْرِجُوهُ ، فَيَخْرُجُونَ قَدِ امْتَحَشُوا ، وَعَادُوا حُمَمًا ، فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ ، فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحِبَّةُ فِي حَمِيلِ السَّيْلِ ، أَلَمْ تَرَوْا أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً . 238

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( மறுமை நாளில் விசாரணை முடிந்தபின் ) சொர்க்கவாசிகள் சொர்க்கத்திலும் நரகவாசிகள் நரகத்திலும் நுழைந்துவிட்ட பின் அல்லாஹ் “ எவரது உள்ளத்தில் கடுகளவு ஈமான் ( இறைநம்பிக்கை ) உள்ளதோ அவரை ( நரகத்திலிருந்து ) வெறியேற்றி விடுங்கள் `` என்று கூறுவான் . உடனே அவர்கள் கருகிய நிலையில் வெளியேறுவார்கள் . அப்போது அவர்கள் கரிக் கட்டைகளாகக் காட்சியளிப்பார்கள் . பின்னர் அவர்கள் " நஹ்ருல் ஹயாத் ` எனும் ( ஜீவ ) நதியில் போடப்படுவார்கள் . உடனே அவர்கள் " சேற்று வெள்ளத்தில் ` அல்லது " வெள்ளத்தின் கருப்புக் களி மண்ணில் ` விதை முளைப்பதைப் போன்று ( புதுப் பொலிவுடன் ) நிறம் மாறிவிடுவார்கள் . அந்த வித்து ( விலிருந்து வரும் புற்பூண்டுகள் ) மஞ்சள் நிறத்தில் ( பார்ப்பதற்கு அழகாகவும் , காற்றில் ) அசைந்தாடியதாக ( வும் ) முளைப்பதை நீங்கள் கண்டதில்லையா ?

Reference: ( புகாரீ : 6560, முஸ்லிம் : 184)
ஹதீஸ் 239 அத்தியாயம் 6 பாடம் 19

عَنْ أَبِي سَعِيدٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَلَصَ الْمُؤْمِنُونَ مِنْ النَّارِ يَوْمَ الْقِيَامَةِ وَأَمِنُوا فَمَا مُجَادَلَةُ أَحَدِكُمْ لِصَاحِبِهِ فِي الْحَقِّ يَكُونُ لَهُ فِي الدُّنْيَا بِأَشَدَّ مُجَادَلَةً لَهُ مِنْ الْمُؤْمِنِينَ لِرَبِّهِمْ فِي إِخْوَانِهِمْ الَّذِينَ أُدْخِلُوا النَّارَ . 239

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூசயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மறுமை நாளில் இறைநம்பிக்கையாளர்கள் நரக நெருப்பிலிருந்து காப்பாற்றப்பட்டுப் பாதுகாப்பாக இருந்தால் , இந்த உலகில் சத்தியத்தின் மீதிருந்து நரகத்தில் நுழைந்துவிட்ட தங்கள் சகோதரர்களின் நன்மையை வலியுறுத்தி இறைவனிடம் மிகவும் மன்றாடி வேண்டுபவர்கள் இறைநம்பிக்கையாளர்களைவிட வேறெவருமில்லை . அவர்கள் ( பின்வருமாறு ) கூறுவார்கள் : “ எங்கள் இறைவா ! எங்கள் சகோதரர்கள் எங்களுடன் தொழுதார்கள் , எங்களுடன் நோன்பு நோற்று , எங்களுடன் ஹஜ் செய்தார்கள் , ( அப்படியிருக்கையில் ) நீ ( எவ்வாறு ) அவர்களை நரகத்தில் நுழையச் செய்தாய் ?” அப்போது அவன் சொல்வான் : “ நீங்கள் சென்று உங்களுக்குத் தெரிந்தவர்களை வெளியே அழைத்துச் செல்லுங்கள் ,” அவர்கள் அவர்களிடம் வந்து அவர்களின் தோற்றங்களை அடையாளம் கண்டுகொள்வார்கள் , அவர்களின் தோற்றங்களை நெருப்பு எரிக்காது , அவர்களுள் சிலரை நரக நெருப்பு அவர்களின் கெண்டைக்கால்கள் வரை உண்டிருக்கும் . அவர்களுள் சிலரை அவர்கள்தம் கணுக்கால்கள் வரை உண்டிருக்கும் . எனவே அவர்கள் அவர்களை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு , “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ” என்று சொல்வார்கள் . பின்னர் அவன் கூறுவான் : “ எவரது உள்ளத்தில் தீனார் எடை அளவு ஈமான் இருக்கிறதோ அவர்களை வெளியே எடுங்கள் . பின்னர் யாருடைய உள்ளத்தில் அரை தீனாரின் எடை அளவுக்கு ஈமான் உள்ளதோ ( அவர்களை வெளியே எடுங்கள் ).” இறுதியில் “ எவரது உள்ளத்தில் அணுவின் எடை அளவு ( ஈமான் உள்ளதோ அவர்களை வெளியே எடுங்கள் )” என்று கூறுவான் . அபூசயீத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள் : இதை நம்பாதவர் ( பின்வரும் ) இந்த வசனத்தைப் படிக்கட்டும் : திண்ணமாக அல்லாஹ் அணுவின் எடை அளவுக்கும் அநீதி இழைக்க மாட்டான் , மேலும் ஒரு நல்ல செயல் இருந்தால் , அவன் அதை இரட்டிப்பாக்கிவிடுவான் . அவன் தன்னிடமிருந்து மகத்தான கூலியைக் கொடுக்கிறான் . (4: 40) அறிவிப்பாளர் கூறினார் : “ எங்கள் இறைவா ! நீ எங்களுக்குக் கட்டளையிட்டிருந்தவர்களை நாங்கள் வெளியேற்றி விட்டோம் ; சிறிதளவு நன்மை உள்ள எவரும் நரகத்தில் இல்லை ” என்று சொல்வார்கள் . பின்னர் அல்லாஹ் : “ வானவர்கள் பரிந்துரை செய்தார்கள் ; நபிமார்கள் பரிந்துரை செய்தார்கள் ; இறைநம்பிக்கையாளர்கள் பரிந்துரை செய்தார்கள் ; இரக்கமுள்ளவர்களில் மிகவும் இரக்கமுள்ளவன் ( ஆகிய நான் ) எஞ்சியிருக்கிறேன் என்று கூறியவாறு , நரக நெருப்பிலிருந்து ஒரு கைப்பிடி ( அல்லது இரண்டு கைப்பிடி ) தொகையினரை எடுத்துக்கொள்வான் . அவர்கள் இறைவனுக்காகச் சிறிதளவும் ஒருபோதும் நன்மை செய்யாதவர்கள் , அவர்கள் கரிக்கட்டைகளாக மாறிப்போயிருப்பார்கள் . ஜீவநீர் என்று அழைக்கப்படுகிற தண்ணீருக்கு அவர்கள் கொண்டு வரப்படுவார்கள் , அது அவர்கள்மீது ஊற்றப்படும் . அவர்கள் வெள்ளச் சேற்றில் முளைத்துவிடும் தானிய வித்தைப் போன்று வளர்வார்கள் , அவை முத்துக்கள் போல அவர்களின் உடலிலிருந்து வெளியேறும் , மேலும் அவர்களின் கழுத்தில் ஒரு மோதிரம் இருக்கும் : அவர்கள்தாம் அல்லாஹ்வால் விடுதலை செய்யப்பட்டவர்கள் , மேலும் அறிவிப்பாளர் கூறினார் : “ சொர்க்கத்தில் நுழையுங்கள் ” என்று அவர்களிடம் கூறப்படும் , அப்போது “ நீங்கள் எதை விரும்புகிறீர்களோ அல்லது பார்த்தீர்களோ , அது இதைவிட உங்களுக்குச் சிறந்தது ” என்று அல்லாஹ் கூறுவான் . அதற்கு அவர்கள் , “ எங்கள் இறைவா , இதைவிடச் சிறந்தது என்ன ?” என்று கேட்பார்கள் : “ நான் உங்கள்மீது திருப்தி அடைகிறேன் ; நான் ஒருபோதும் உங்கள்மீது கோபப்பட மாட்டேன் ” என்று அல்லாஹ் கூறுவான் .

Reference: ( நூல் : முஸ்னது அஹ்மத் : 11898) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு இமாம்களின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .