15-باب : تسبيح أهل الجنة
பாடம் 15

பாடம்: 15. சொர்க்கவாசிகளின் தஸ்பிஹ்

ஹதீஸ் 234 அத்தியாயம் 6 பாடம் 15

(م) عَنْ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ أَهْلُ الْجَنَّةِ فِيهَا وَيَشْرَبُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَمْتَخِطُونَ وَلَا يَبُولُونَ وَلَكِنْ طَعَامُهُمْ ذَاكَ جُشَاءٌ كَرَشْحِ الْمِسْكِ يُلْهَمُونَ التَّسْبِيحَ وَالْحَمْدَ كَمَا تُلْهَمُونَ النَّفَسَ 234

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் உண்பார்கள் ; பருகுவார்கள் . மலம் கழிக்கமாட்டார்கள் . மூக்குச் சிந்தவுமாட்டார்கள் . சிறுநீர் கழிக்கவு மாட்டார்கள் . அவர்கள் உண்ணும் உணவு கஸ்தூரி மணம் கமழும் வியர்வை போன்று ஏப்பமாக வெளியேறும் . மூச்சு விடுமாறு அகத் தூண்டல் ஏற்படுவதைப் போன்று இயல்பாகவே இறைவனைத் துதித்துக்கொண்டும் போற்றிக்கொண்டும் இருக்குமாறு அவர்களுக்கு அகத்தூண்டல் ஏற்படும் .

Reference: ( முஸ்லிம் : 2835 / 5454)