10-باب : أَول زمرة تدخل الجنة
பாடம் 10

பாடம்: 10. சொர்க்கத்தில் நுழையும் முதல் குழுவினர்

ஹதீஸ் 228 அத்தியாயம் 6 பாடம் 10

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ أَوَّلَ زُمْرَةٍ يَدْخُلُونَ الْجَنَّةَ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ ثُمَّ الَّذِينَ يَلُونَهُمْ عَلَى أَشَدِّ كَوْكَبٍ دُرِّيٍّ فِي السَّمَاءِ إِضَاءَةً لَا يَبُولُونَ وَلَا يَتَغَوَّطُونَ وَلَا يَتْفِلُونَ وَلَا يَمْتَخِطُونَ أَمْشَاطُهُمْ الذَّهَبُ وَرَشْحُهُمْ الْمِسْكُ وَمَجَامِرُهُمْ الْأَلُوَّةُ الْأَنْجُوجُ عُودُ الطِّيبِ وَأَزْوَاجُهُمْ الْحُورُ الْعِينُ عَلَى خَلْقِ رَجُلٍ وَاحِدٍ عَلَى صُورَةِ أَبِيهِمْ آدَمَ سِتُّونَ ذِرَاعًا فِي السَّمَاءِ . 228

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சொர்க்கத்தில் நுழையும் முதல் அணியினர் பௌர்ணமி இரவில் ( ஒளி வீசும் ) சந்திரனைப் போன்று ( பிரகாசமாகவும் அழகாகவும் ) தோற்றமளிப்பார்கள் . பிறகு , அவர்களுக்கு அடுத்து வருபவர்கள் விண்ணில் நன்கு பிரகாசிக்கும் நட்சத்திரத்தைப் போன்று தோற்றமளிப்பார்கள் . அவர்கள் மலஜலம் கழிக்கவும் மாட்டார்கள் ; எச்சில் துப்பவும் மாட்டார்கள் ; மூக்குச் சிந்தவும் மாட்டார்கள் . அவர்களுடைய சீப்புகள் தங்கத்தாலானவை . அவர்களுடைய வியர்வை கஸ்தூரி மணம் கமழும் . அவர்களுடைய ( நறுமணப் புகை போடும் ) தூபக் கலசங்கள் அகிலால் எரிக்கப் படும் . அகில் என்பது நறுமணக் குச்சியாகும் . அவர்களுடைய மனைவிமார்கள் அகன்ற விழிகளையுடைய கன்னியராவர் . ( சொர்க்கவாசிகளான ) அவர்கள் ஒரே மனிதனின் அமைப்பில் படைக்கப்பட்டிருப்பார்கள் . அவர்கள் தங்களுடைய தந்தை ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தோற்றத்தில் வானத்தில் ( முட்டும் விதத்தில் ) அறுபது முழம் உயரமிருப்பார்கள் .

Reference: ( புகாரீ : 3327, முஸ்லிம் : 2834)