பாடம்: 9. சொர்க்கத்தில் விவசாயம் செய்தல்
(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا يُحَدِّثُ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الزَّرْعِ فَقَالَ لَهُ أَوَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلَكِنِّي أُحِبُّ أَنْ أَزْرَعَ فَأَسْرَعَ وَبَذَرَ فَتَبَادَرَ الطَّرْفَ نَبَاتُهُ وَاسْتِوَاؤُهُ وَاسْتِحْصَادُهُ وَتَكْوِيرُهُ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ تَعَالَى دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ يَا رَسُولَ اللَّهِ لَا تَجِدُ هَذَا إِلَّا قُرَشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ زَرْعٍ فَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ زَرْعٍ فَضَحِكَ رَسُولُ اللَّهِ . 227
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு முறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , கிராமவாசி ஒருவர் தம்மிடம் அமர்ந் திருக்க ( பின்வரும் நிகழ்ச்சியை ) எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள் : சொர்க்கவாசிகளுள் ஒரு மனிதர் , தம் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார் . அதற்கு இறைவன் அவரிடம் , “ நீ விரும்பிய ( இன்பமான ) நிலையில் ( இப்போது ) நீ வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா ?`` என்று கேட்பான் . அதற்கு அவர் , “ ஆம் . ( நான் விரும்பியபடியே இன்பமான நிலையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றேன் .) ஆனால் , நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் `` என்று கூறுவார் . ( இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான் .) அந்த மனிதர் விதை தூவி விடுவார் . கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும் ; மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய் விடும் . அப்போது இறைவன் , “ எடுத்துக் கொள் , ஆதமின் மகனே ! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது `` என்று கூறுவான் . ( நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற ) அந்தக் கிராமவாசி , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! அந்த மனிதர் குறைஷியாகவோ ( மக்கா வாசியாகவோ ) அன்ஸாரியாகவோ ( மதீனாவாசியாகவோ ) தான் இருக்க முடியும் . அவர்கள் தாம் விவசாயிகள் . நாங்களோ விவசாயிகள் அல்லர் `` என்று கூறினார் . இதனைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிரித்து விட்டார்கள் .