2-باب : نعيم الجنة لم يخطر على قلب بشر
பாடம்
2
பாடம்: 2. மனித உள்ளத்தில் தோன்றிடாத சொர்க்கத்தின் இன்பங்கள்
ஹதீஸ் 220
அத்தியாயம் 6
பாடம் 2
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَعْدَدْتُ لِعِبَادِي الصَّالِحِينَ مَا لَا عَيْنٌ رَأَتْ وَلَا أُذُنٌ سَمِعَتْ وَلَا خَطَرَ عَلَى قَلْبِ بَشَرٍ ذُخْرًا بَلْهَ مَا أُطْلِعْتُمْ عَلَيْهِ ثُمَّ قَرَأَ: فَلَا تَعْلَمُ نَفْسٌ مَا أُخْفِيَ لَهُمْ مِنْ قُرَّةِ أَعْيُنٍ جَزَاءً بِمَا كَانُوا يَعْمَلُونَ . 220
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ உயர்வான அல்லாஹ் , " என் நல்லடியார்களின் சேமிப்பாக எந்தக் கண்ணும் பார்த்திராத , எந்தக் காதும் கேட்டிராத , எந்த மனிதரின் மனத்திலும் தோன்றியிராத இன்பங்களை நான் சொர்க்கத்தில் தயார்படுத்தி வைத்துள்ளேன் . ( சொர்க்கத்தின் இன்பங்கள் குறித்து ) உங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளவை , ( அங்கே கிடைக்கவிருக்கும் இன்பங்களுக்கு முன்னே ) சொற்பமானவையே ஆகும் ` எனக் கூறுகின்றான் `` என்று சொல்லிவிட்டு , பிறகு , “ அவர்கள் செய்துகொண்டிருந்த ( நற் ) செயல்களின் பலனாகக் கண்களைக் குளிரச் செய்யும் எத்தகைய இன்பங்கள் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளன என்பதை யாரும் அறிய மாட்டார்கள் `` எனும் (32:17ஆம்) இறைவசனத்தை ஓதினார்கள் .
Reference: ( புகாரீ : 4780, முஸ்லிம் : 2824)