6- باب : التحذير من النار
பாடம் 6

பாடம்: 6. நரகத்தைக் குறித்து எச்சரிக்கை செய்தல்

ஹதீஸ் 218 அத்தியாயம் 5 பாடம் 6

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ فَقَالَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ أَنْذَرْتُكُمْ النَّارَ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى لَوْ كَانَ فِي مَقَامِي هَذَا لَسَمِعَهُ أَهْلُ السُّوقِ حَتَّى سَقَطَتْ خَمِيصَةٌ كَانَتْ عَلَيْهِ عِنْدَ رِجْلَيْهِ . 218

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக நுஅமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் ; நான் உங்களுக்கு நரகத்தை எச்சரிக்கிறேன் என்று கூறிக்கொண்டே இருந்தார்கள் . ( இப்போது நான் நிற்கிற ) இந்த இடத்தில் அவர்கள் இருந் ( து கூறியிரு ) திருந்தால் அதைச் சந்தையிலுள்ளோர் செவியுற்றிருப்பர் . ( அதைச் சொன்னபோது ) அவர்கள் மீதிருந்த போர்வை அவர்களுடைய காலடியில் விழுந்துவிட்டது .

Reference: ( தாரமீ : 2854). இதன் அறிவிப்பாளர்தொடர் ` தரமானது ’ ஆகும் .