5- باب : قوم ارتدوا على أَدبارهم
பாடம் 5

பாடம்: 5. திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்றுவிட்டவர்கள்

ஹதீஸ் 217 அத்தியாயம் 5 பாடம் 5

(خ) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا قَائِمٌ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ فَقُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ وَمَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى ثُمَّ إِذَا زُمْرَةٌ حَتَّى إِذَا عَرَفْتُهُمْ خَرَجَ رَجُلٌ مِنْ بَيْنِي وَبَيْنِهِمْ فَقَالَ هَلُمَّ قُلْتُ أَيْنَ قَالَ إِلَى النَّارِ وَاللَّهِ قُلْتُ مَا شَأْنُهُمْ قَالَ إِنَّهُمْ ارْتَدُّوا بَعْدَكَ عَلَى أَدْبَارِهِمْ الْقَهْقَرَى فَلَا أُرَاهُ يَخْلُصُ مِنْهُمْ إِلَّا مِثْلُ هَمَلِ النَّعَمِ . 217

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான் உறங்கிக் கொண்டிருந்தேன் . அப்போது ( கனவில் ) நான் ( அல்கவ்ஸர் தடாகத்தினருகில் ) நின்று கொண்டிருக்கிறேன் . அப்போது ஒரு குழுவினரை நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்குமிடையே ஒரு ( வான ) வர் தோன்றி ( அந்தக் குழுவினரை நோக்கி ) " வாருங்கள் ` என்று அழைக்கிறார் . உடனே நான் ( அவரிடம் ) “ எங்கே ( இவர்களை அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்கு `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்றேன் . அவர் “ உங்களுக்குப் பின்னால் இவர்கள் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிச் சென்று விட்டார்கள் `` என்றார் . பிறகு மற்றொரு குழுவினரையும் நான் அடையாளம் கண்டுகொள்கிறேன் . எனக்கும் அவர்களுக்கு மிடையே ஒரு ( வான ) வர் தோன்றி , " வாருங்கள் ` என ( அவர்களிடம் ) கூறுகிறார் . நான் “( இவர்களை ) எங்கே ( அழைக்கிறீர்கள் )?`` என்றேன் . அவர் “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நரகத்திற்குத்தான் `` என்றார் . நான் “ இவர்கள் என்ன செய்தார்கள் ?`` என்று கேட்டேன் . அவர் " இவர்கள் உங்களுக்குப் பின்னால் திரும்பிப் பார்க்காமல் வந்த வழியே மதம் மாறிப் போய்விட்டார்கள் `` என்று பதிலளித்தார் . அவர்களில் காணாமல் போன ஒட்டகத்தைப் போன்று ஒரு சிலரைத் தவிர வேறெவரும் தப்பித்துக் கொள்வார்கள் என நான் கருதவில்லை .

Reference: ( புகாரீ : 6587)