2- باب : قول النار : (هل من مزيد)
பாடம் 2

பாடம்: 2. (இன்னும் இருக்கிறதா என்று) நரகம் கேட்டல்

ஹதீஸ் 213 அத்தியாயம் 5 பாடம் 2

(ق) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزَالُ جَهَنَّمُ تَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ حَتَّى يَضَعَ رَبُّ الْعِزَّةِ فِيهَا قَدَمَهُ فَتَقُولُ قَطْ قَطْ وَعِزَّتِكَ وَيُزْوَى بَعْضُهَا إِلَى بَعْضٍ . 213

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ( நரகவாசிகள் நரகத்தில் போடப்படுவார்கள் . நரகம் வயிறு நிரம்பாத காரணத்தால் ) “ இன்னும் இருக்கிறதா ?`` என்று கேட்டுக்கொண்டேயிருக்கும் . இறுதியில் கண்ணியத்தின் அதிபதி ( யான இறைவன் ) தமது பாதத்தை அதில் வைப்பான் . அப்போது அது “ போதும் ! போதும் ! உன் கண்ணியத்தின் மீதாணையாக !`` என்று கூறும் . நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும் .

Reference: ( புகாரீ : 6661, முஸ்லிம் : 2848) ( புகாரீ : 7384).