பாடம்: 1. சொர்க்கம் சிரமங்களால் மூடப்பட்டுள்ளது
(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ حُجِبَتْ النَّارُ بِالشَّهَوَاتِ وَحُجِبَتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ . 197
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மன இச்சைகளால் நரகம் மூடப்பட்டுள்ளது . சிரமங்களால் சொர்க்கம் மூடப்பட்டுள்ளது .
(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حُفَّتْ الْجَنَّةُ بِالْمَكَارِهِ وَحُفَّتْ النَّارُ بِالشَّهَوَاتِ . 198
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் பின் மாலிக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : சிரமங்களால் சொர்க்கம் சூழப்பெற்றுள்ளது . மன இச்சைகளால் நரகம் சூழப்பெற்றுள்ளது .
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَمَّا خَلَقَ اللَّهُ الْجَنَّةَ وَالنَّارَ أَرْسَلَ جِبْرِيلَ إِلَى الْجَنَّةِ فَقَالَ انْظُرْ إِلَيْهَا وَإِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَجَاءَهَا وَنَظَرَ إِلَيْهَا وَإِلَى مَا أَعَدَّ اللَّهُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهِ قَالَ فَوَعِزَّتِكَ لَا يَسْمَعُ بِهَا أَحَدٌ إِلَّا دَخَلَهَا فَأَمَرَ بِهَا فَحُفَّتْ بِالْمَكَارِهِ فَقَالَ ارْجِعْ إِلَيْهَا فَانْظُرْ إِلَى مَا أَعْدَدْتُ لِأَهْلِهَا فِيهَا قَالَ فَرَجَعَ إِلَيْهَا فَإِذَا هِيَ قَدْ حُفَّتْ بِالْمَكَارِهِ فَرَجَعَ إِلَيْهِ فَقَالَ وَعِزَّتِكَ لَقَدْ خِفْتُ أَنْ لَا يَدْخُلَهَا أَحَدٌ. 199
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் சொர்க்கத்தையும் நரகத்தையும் படைத்துவிட்டு ( வானவர் ) ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி , " அதையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயார் செய்து வைத்துள்ள ( கொடைகள் , இன்பங்கள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று சொன்னான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று சொர்க்கத்தையும் அதில் சொர்க்கவாசிகளுக்காக அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளவற்றையும் பார்வையிட்டுவிட்டுத் திரும்பி வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதனுள் நுழைய ( முயலா ) மல் இருக்க மாட்டார்கள் " என்று கூறினார் . அப்போது அல்லாஹ் சிரமங்களால் சொர்க்கத்தைச் சூழச் செய்யுமாறு உத்தரவிட அவ்வாறே செய்யப்பட்டது . பிறகு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் " நீர் மீண்டும் சொர்க்கத்திற்குச் சென்று அதில் சொர்க்கவாசிகளுக்காக நான் தயாரித்து வைத்துள்ளவற்றைப் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பிச் சென்றபோது சொர்க்கம் சிரமங்களால் சூழப்பெற்றிருந்தது . உடனே அவர்கள் அல்லாஹ்விடம் வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் யாரும் நுழையமாட்டார்கள் என நான் அஞ்சுகிறேன் " என்று சொன்னார்கள் . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , " நீர் நரகத்திற்குச் சென்று , நரகத்தையும் அதில் நரகவாசிகளுக்காக நான் தயாரித்துள்ள ( வேதனைகள் தண்டனைகள் ஆகிய ) வற்றையும் பார்வையிடுவீராக !" என்று கூறினான் . ( ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் சென்று பார்த்தபோது ) நரகத்தின் ஒரு பகுதி மற்றொரு பகுதியின் மீது ஏறிப் பயணித்துக் கொண்டிருந்தது . உடனே அங்கிருந்து திரும்பிய ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதைப் பற்றிக் கேள்விப்படும் யாரும் இதில் நுழையா ( மல் இருக்க முயற்சி செய்யாமல் இருக்க ) மாட்டார்கள் " என்று கூறினார்கள் . பிறகு அல்லாஹ் உத்தரவிட , மன இச்சைகளால் நரகம் சூழச் செய்யப்பட்டது . பிறகு அல்லாஹ் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் , “ நீர் மறுபடியும் செல்வீராக ! ( அதைப் பார்வையிடுவீராக !)" என்று கூறினான் . அவ்வாறே ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் திரும்பி ( ச் சென்று பார்த்துவிட்டு ) வந்து , "( இறைவா !) உன் வல்லமையின் மீதாணையாக ! இதில் நுழையாமல் யாரும் தப்பிக்கப் போவதில்லை என நான் அஞ்சுகிறேன் " என்று கூறினார்கள் .