6- باب : صفة أَرض المحشر
பாடம் 6

பாடம்: 6. (மக்களை) ஒன்றுதிரட்டுகிற நிலத்தின் தன்மை

ஹதீஸ் 167 அத்தியாயம் 3 பாடம் 6

(ق) عَنْ سَهْلَ بْنَ سَعْدٍ قَالَ : سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ عَلَى أَرْضٍ بَيْضَاءَ عَفْرَاءَ كَقُرْصَةِ نَقِيٍّ قَالَ سَهْلٌ أَوْ غَيْرُهُ لَيْسَ فِيهَا مَعْلَمٌ لِأَحَدٍ . 167

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து தாம் செவியுற்றதாக சஹ்ல் பின் சஅத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( உமியோ தவிடோ கலக்காத ) சுத்தமான மாவினாலான ரொட்டியைப் போன்று தூய வெண்மையான ( சம ) தளத்தின்மீது மறுமை நாளில் மனிதர்கள் ஒன்று திரட்டப்படுவார்கள் . இதன் அறிவிப்பாளரான சஹ்ல் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , அல்லது மற்றொருவர் “ அந்த பூமியில் ( மலை , மடுவு , காடு , வீடு என ) எந்த அடையாளமும் யாருக்கும் இருக்காது `` என்று ( கூடுதலாக ) அறிவித்தார்கள் .

Reference: ( புகாரீ : 6521, முஸ்லிம் : 2790)