1-باب : قيام الساعة على شرار الخلق
பாடம் 1

பாடம்: 1. தியோர்கள் மீதே யுகமுடிவு நாள் ஏற்படும்

ஹதீஸ் 153 அத்தியாயம் 3 பாடம் 1

(م) عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ إِلَّا عَلَى شِرَارِ النَّاسِ . 153

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மனிதர்களில் தீயவர்கள் மீதே யுக முடிவு நாள் ஏற்படும் . ( அதற்கு முன்பே நல்லவர்கள் அனைவரும் மறைந்து விடுவர் .)

Reference: ( முஸ்லிம் : 2949 / 5650)
ஹதீஸ் 154 அத்தியாயம் 3 பாடம் 1

(م) عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُقَالَ فِي الْأَرْضِ اللَّهُ اللَّهُ . 154

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : பூமியில் " அல்லாஹ் , அல்லாஹ் ` என்று சொல்லப்படாதபோது தான் மறுமை நாள் நிகழும் .

Reference: ( முஸ்லிம் : 148 / 234)
ஹதீஸ் 155 அத்தியாயம் 3 பாடம் 1

عَنْ حُذَيْفَةَ بْنِ الْيَمَانِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَكُونَ أَسْعَدَ النَّاسِ بِالدُّنْيَا لُكَعُ ابْنُ لُكَعٍ . 155

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக ஹுதைஃபா பின் அல்யமான் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அற்பனுக்குப் பிறந்த அற்பன் இவ்வுலகின் செல்வங்களால் மனிதர்களிலேயே பெரிய ஆளாக ஆகாத வரை யுக முடிவு நாள் ஏற்படாது .

Reference: ( திர்மிதீ : 2135 / 2209). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .