28- باب : رفع القرآن
பாடம்
28
பாடம்: 28. குர்ஆன் உயர்த்தப்படுதல்
ஹதீஸ் 152
அத்தியாயம் 2
பாடம் 28
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : يُسْرَى عَلَى كِتَابِ اللَّهِ فَيُرْفَعُ إِلَى السَّمَاءِ ، فَلَا يُصْبِحُ فِي الْأَرْضِ آيَةٌ مِنَ الْقُرْآنِ وَلَا مِنَ التَّوْرَاةِ وَالْإِنْجِيلِ وَلَا الزَّبُورِ ، وَيُنْتَزَعُ مِنْ قُلُوبِ الرِّجَالِ فَيُصْبِحُونَ وَلَا يَدْرُونَ مَا هُوَ . 152
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் வேதம் இரவோடு இரவாக வானத்திற்கு உயர்த்தப்படும் . காலையில் குர்ஆனிலிருந்து ஒரு வசனம் கூடப் பூமியில் இருக்காது . தவ்ராத்தும் இருக்காது ; இன்ஜீலும் இருக்காது ; ஸபூரும் இருக்காது . ஆண்களின் உள்ளங்களிலிருந்து ( அவை ) உருவி எடுக்கப்பட்டுவிடும் . அது என்னவென்றே அவர்கள் அறியாதவர்களாக ஆகிவிடுவார்கள் .
Reference: ( ஹாகிம் : 8544). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப அமைந்த ஹதீஸ் ஆகும் என்று தஹபீ ரஹிமஹுல்லாஹ் கூறியுள்ளார்கள் .