23- باب : كلام السباع وغيرها
பாடம் 23

பாடம்: 23. விலங்குகளும் மற்றவையும் பேசுதல்

ஹதீஸ் 142 அத்தியாயம் 2 பாடம் 23

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تُكَلِّمَ السِّبَاعُ الْإِنْسَ وَحَتَّى تُكَلِّمَ الرَّجُلَ عَذَبَةُ سَوْطِهِ وَشِرَاكُ نَعْلِهِ وَتُخْبِرَهُ فَخِذُهُ بِمَا أَحْدَثَ أَهْلُهُ مِنْ بَعْدِهِ . 142

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அ( ந்த ஏக இறை ) வன் மீதாணையாக ! மனிதர்களிடம் விலங்குகள் பேசுகின்ற நாள் வராமல் யுகமுடிவு நாள் ஏற்படாது . மேலும் ஒரு மனிதரிடம் அவரது சாட்டை முனையும் அவரது செருப்பின் வாரும் பேசாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது . அப்போது அவரது தொடை அவர் இல்லாதபோது அவருடைய வீட்டார் செய்ததை அவரிடம் எடுத்துரைக்கும் .

Reference: ( திர்மிதீ : 2107 / 2181). இது ` ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .