22- باب : تقارب الزمان
பாடம் 22

பாடம்: 22. காலம் சுருங்குதல்

ஹதீஸ் 141 அத்தியாயம் 2 பாடம் 22

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَتَقَارَبَ الزَّمَانُ فَتَكُونَ السَّنَةُ كَالشَّهْرِ وَيَكُونَ الشَّهْرُ كَالْجُمُعَةِ وَتَكُونَ الْجُمُعَةُ كَالْيَوْمِ وَيَكُونَ الْيَوْمُ كَالسَّاعَةِ وَتَكُونَ السَّاعَةُ كَاحْتِرَاقِ السَّعَفَةِ الْخُوصَةِ . 141

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : காலம் சுருங்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது ஓர் ஆண்டு ஒரு மாதத்தைப் போன்றும் , ஒரு மாதம் ஒரு வாரத்தைப் போன்றும் . ஒரு வாரம் ஒரு நாள் போன்றும் , ஒரு நாள் ஒரு மணி நேரத்தைப் போன்றும் , ஒரு மணி நேரம் தீ பற்றவைக்கும் ( ஒரு நொடி ) நேரத்தைப் போன்றும் மாறிவிடும் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 10943). முஸ்லிம் இமாமின் நிபந்தனைகளுக்கேற்ப இது ‘ ஸஹீஹ் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .