பாடம்: 20. ஈஸா அலைஹிஸ்ஸலாம் இறங்கிவருதல்
(ق) عَنْ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَيُوشِكَنَّ أَنْ يَنْزِلَ فِيكُمْ ابْنُ مَرْيَمَ حَكَمًا مُقْسِطًا فَيَكْسِرَ الصَّلِيبَ وَيَقْتُلَ الْخِنْزِيرَ وَيَضَعَ الْجِزْيَةَ وَيَفِيضَ الْمَالُ حَتَّى لَا يَقْبَلَهُ أَحَدٌ . 137
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக ! மர்யமின் புதல்வர் ( ஈஸா ) உங்களிடம் நேர்மையான ( தீர்ப்பு சொல்லும் ) நீதிபதியாக இறங்கவிருக்கிறார் ! அவர் சிலுவையை உடைப்பார் ! பன்றியைக் கொல்வார் ! காப்புவரியை (- ஜிஸ்யா ) நீக்குவார் ! ( அந்நாளில் ) வாங்குவதற்கு ஆளில்லாத அளவிற்குச் செல்வம் பெருக்கெடுத்து ஓடும் .
عَنْ مُجَمِّعَ ابْنَ جَارِيَةَ الْأَنْصَارِيَّ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَقْتُلُ ابْنُ مَرْيَمَ الدَّجَّالَ بِبَابِ لُدٍّ 138
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதைத் தாம் செவியுற்றதாக முஜம்மிஉ பின் ஜாரியா அல்அன்ஸாரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மர்யமின் மைந்தர் ( ஈஸா அலைஹிஸ்ஸலாம் ) தஜ்ஜாலை லுத் எனும் ஊரின் வாசலில் வைத்துக் கொலை செய்வார் .
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ بَيْنِي وَبَيْنَهُ نَبِيٌّ يَعْنِي عِيسَى وَإِنَّهُ نَازِلٌ فَإِذَا رَأَيْتُمُوهُ فَاعْرِفُوهُ رَجُلٌ مَرْبُوعٌ إِلَى الْحُمْرَةِ وَالْبَيَاضِ بَيْنَ مُمَصَّرَتَيْنِ كَأَنَّ رَأْسَهُ يَقْطُرُ وَإِنْ لَمْ يُصِبْهُ بَلَلٌ فَيُقَاتِلُ النَّاسَ عَلَى الْإِسْلَامِ فَيَدُقُّ الصَّلِيبَ وَيَقْتُلُ الْخِنْزِيرَ وَيَضَعُ الْجِزْيَةَ وَيُهْلِكُ اللَّهُ فِي زَمَانِهِ الْمِلَلَ كُلَّهَا إِلَّا الْإِسْلَامَ وَيُهْلِكُ الْمَسِيحَ الدَّجَّالَ فَيَمْكُثُ فِي الْأَرْضِ أَرْبَعِينَ سَنَةً ثُمَّ يُتَوَفَّى فَيُصَلِّي عَلَيْهِ الْمُسْلِمُونَ . 139
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : எனக்கும் அவருக்கும் ( ஈஸா ) இடையே எந்த நபியும் இல்லை . திண்ணமாக அவர் இறங்கி வரக்கூடியவர் ஆவார் . நீங்கள் அவரைக் கண்டால் ( பின்வரும் அடையாளங்களை வைத்து ) அவரை அறிந்து கொள்ளுங்கள் . நடுநிலையான உயரமும் சிவப்பான உடலமைப்பும் கொண்டவர் . மஞ்சள் வண்ணம் கொண்ட இரண்டு ஆடைகள் அணிந்தவராக இருப்பார் . அவருடைய தலையில் ஈரம் இல்லாவிட்டாலும் துளித் துளியாய் நீர் சொட்டுவதைப் போன்று இருக்கும் . இஸ்லாமிய மார்க்கத்திற்காக மக்களிடம் போரிடுவார் . அவர் சிலுவையை உடைப்பார் ; பன்றியைக் கொல்வார் ; காப்புவரியை (- ஷிஸ்யா ) நீக்குவார் . அவருடைய காலத்தில் அல்லாஹ் இஸ்லாத்தைத் தவிர ஏனைய எல்லா மதங்களையும் அழித்துவிடுவான் . மேலும் மஸீஹுத் தஜ்ஜாலைக் கொலை செய்வார் . ( பிறகு ) பூமியில் அவர் நாற்பது ஆண்டுகள் தங்கியிருப்பார் . பிறகு இறந்துவிடுவார் . ஆகவே அவருக்கு முஸ்லிம்கள் ஜனாஸா தொழுகை நடத்துவர் .