16- باب :ذكر ابن صياد
பாடம் 16

பாடம்: 16. இப்னு ஸய்யாத் குறித்துக் கூறுதல்

ஹதீஸ் 130 அத்தியாயம் 2 பாடம் 16

(م) عَنْ عَبْدِ اللَّهِ مَسْعُوْدٍ قَالَ : كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَرَرْنَا بِصِبْيَانٍ فِيهِمْ ابْنُ صَيَّادٍ فَفَرَّ الصِّبْيَانُ وَجَلَسَ ابْنُ صَيَّادٍ فَكَأَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَرِهَ ذَلِكَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَرِبَتْ يَدَاكَ أَتَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ فَقَالَ لَا بَلْ تَشْهَدُ أَنِّي رَسُولُ اللَّهِ . 130

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றோம் . அவர்களிடையே இப்னு ஸய்யாதும் இருந்தான் . ( எங்களைக் கண்டதும் ) சிறுவர்கள் ஓடிவிட்டனர் . இப்னு ஸய்யாத் ( மட்டும் ) அப்படியே உட்கார்ந்து கொண்டான் . அதை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெறுத்ததைப் போன்றிருந்தது . ஆகவே , அவனிடம் , “ உன் கரங்கள் மண்ணைத் தழுவட்டும் ! நான் அல்லாஹ்வின் தூதர் என நீ உறுதிமொழி அளிக்கிறாயா ?`` என்று கேட்டார்கள் . அதற்கு அவன் , “ இல்லை ; நான் அல்லாஹ்வின் தூதர் என நீர் சாட்சியமளிக்கிறீரா ?`` என்று கேட்டான் . அப்போது உமர் பின் அல்கத்தாப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! என்னை விடுங்கள் . நான் அவனைக் கொன்றுவிடுகிறேன் `` என்று கூறினார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ நீர் கருதக்கூடிய ஒருவனாக ( தஜ்ஜாலாக ) இவன் இருந்தால் , உம்மால் ஒருபோதும் அவனைக் கொல்ல முடியாது . ( அந்தப் பொறுப்பு கொடுக்கப்பட்டவர் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களே )`` என்று சொன்னார்கள் .

Reference: ( முஸ்லிம் : 2924 / 5604)
ஹதீஸ் 131 அத்தியாயம் 2 பாடம் 16

(م) عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجْنَا حُجَّاجًا أَوْ عُمَّارًا وَمَعَنَا ابْنُ صَائِدٍ قَالَ فَنَزَلْنَا مَنْزِلًا فَتَفَرَّقَ النَّاسُ وَبَقِيتُ أَنَا وَهُوَ فَاسْتَوْحَشْتُ مِنْهُ وَحْشَةً شَدِيدَةً مِمَّا يُقَالُ عَلَيْهِ قَالَ وَجَاءَ بِمَتَاعِهِ فَوَضَعَهُ مَعَ مَتَاعِي فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ فَلَوْ وَضَعْتَهُ تَحْتَ تِلْكَ الشَّجَرَةِ قَالَ فَفَعَلَ قَالَ فَرُفِعَتْ لَنَا غَنَمٌ فَانْطَلَقَ فَجَاءَ بِعُسٍّ فَقَالَ اشْرَبْ أَبَا سَعِيدٍ فَقُلْتُ إِنَّ الْحَرَّ شَدِيدٌ وَاللَّبَنُ حَارٌّ مَا بِي إِلَّا أَنِّي أَكْرَهُ أَنْ أَشْرَبَ عَنْ يَدِهِ أَوْ قَالَ آخُذَ عَنْ يَدِهِ فَقَالَ أَبَا سَعِيدٍ لَقَدْ هَمَمْتُ أَنْ آخُذَ حَبْلًا فَأُعَلِّقَهُ بِشَجَرَةٍ ثُمَّ أَخْتَنِقَ مِمَّا يَقُولُ لِي النَّاسُ يَا أَبَا سَعِيدٍ مَنْ خَفِيَ عَلَيْهِ حَدِيثُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا خَفِيَ عَلَيْكُمْ مَعْشَرَ الْأَنْصَارِ أَلَسْتَ مِنْ أَعْلَمِ النَّاسِ بِحَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ كَافِرٌ وَأَنَا مُسْلِمٌ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ عَقِيمٌ لَا يُولَدُ لَهُ وَقَدْ تَرَكْتُ وَلَدِي بِالْمَدِينَةِ أَوَلَيْسَ قَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلُ الْمَدِينَةَ وَلَا مَكَّةَ وَقَدْ أَقْبَلْتُ مِنْ الْمَدِينَةِ وَأَنَا أُرِيدُ مَكَّةَ . 131

அபூஸஈத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நாங்கள் ஹஜ்ஜுக்கு , அல்லது உம்ராவுக்குச் சென்றோம் . எங்களுடன் இப்னு ஸாயிதும் இருந்தான் . ( வழியில் ) நாங்கள் ஓரிடத்தில் தங்கினோம் . ( ஓய்வெடுப்பதற்காக ) மக்கள் கலைந்து சென்றபின் நானும் இப்னு ஸாயிதும் மட்டுமே எஞ்சியிருந்தோம் . அவனைப் பற்றிச் சொல்லப்படுகிற விஷயங்களால் அவனருகில் இருப்பதை நான் மிகவும் வெறுத்தேன் . அவன் தனது பயணச் சாமான்களைக் கொண்டுவந்து எனது பயணச் சாமான்களுடன் வைத்தான் . அப்போது நான் , “ வெயில் கடுமையாக உள்ளது . அந்த மரத்திற்குக் கீழே நீ உன் பொருட்களை வைத்தால் நன்றாயிருக்குமே `` என்றேன் . அவ்வாறே அவன் செய்தான் . அப்போது ஆட்டு மந்தை ஒன்று வந்தது . உடனே அவன் சென்று , ஒரு பெரிய கோப்பை ( நிறைய பால் ) உடன் என்னிடம் வந்து , " அபூஸயீதே ! பருகுவீராக `` என்றான் . நான் , “ வெயிலும் கடுமையாக உள்ளது . பாலும் சூடாக உள்ளது ” என்று - அவன் கையிலிருந்து வாங்கி அருந்தப் பிடிக்காமல் , அல்லது அவன் கையிலிருந்து வாங்கப் பிடிக்காமல் - சொன்னேன் . அவன் , “ அபூஸயீதே ! நான் ஒரு கயிற்றை எடுத்துவந்து அதை ஒரு மரத்தில் மாட்டித் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று நினைத்தேன் . என்னைப் பற்றி மக்கள் பேசிக்கொள்கிற செய்திகளே காரணம் . அபூஸயீதே ! யாருக்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய ஹதீஸ் தெரியாவிட்டாலும் , அன்ஸாரிகளே ! உங்களுக்குத் தெரியாமல் போகாது . ( அபூஸயீதே !) நீங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸ்களை நன்கறிந்தவர்களுள் ஒருவரல்லவா ? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , ‘ அவன் ( தஜ்ஜால் ) இறைமறுப்பாளன் ` என்று சொல்லவில்லையா ? நானோ ஒரு முஸ்லிமாக இருக்கிறேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் ( தஜ்ஜால் ) குழந்தை பாக்கியமற்ற மலடன் ` என்று கூறவில்லையா ? நானோ என் குழந்தையை மதீனாவில் விட்டுவந்துள்ளேன் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , " அவன் மதீனாவுக்குள்ளும் மக்காவுக்குள்ளும் நுழைய முடியாது ` என்று கூறவில்லையா ? நானோ , மதீனாவிலிருந்து மக்காவை நாடி வந்துகொண்டிருக்கிறேன் `` என்று சொன்னான் . இதையெல்லாம் கேட்டு அவனை மன்னிக்கும் அளவுக்கு நான் போய்விட்டேன் . பிறகு அவன் , “ அறிந்துகொள்க : அல்லாஹ்வின் மீதாணையாக ! தஜ்ஜாலை நான் அறிவேன் . அவனது பிறப்பையும் , இப்போது அவன் எங்கே இருக்கிறான் என்பதையும் நான் அறிவேன் `` என்றான் . அப்போது நான் “ காலமெல்லாம் உனக்கு நாசமுண்டாகட்டும் `` என்று கூறி ( ச் சபித்து ) விட்டேன் .

Reference: ( முஸ்லிம் : 2927 / 5610)