பாடம்: 14. ஹிஷாஸ் நிலத்திலிருந்து நெருப்பு புறப்படுதல்
(ق) عَنْ أَبُو هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى تَخْرُجَ نَارٌ مِنْ أَرْضِ الْحِجَازِ تُضِيءُ أَعْنَاقَ الْإِبِلِ بِبُصْرَى . 126
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஹிஷாஸ் பகுதியிலிருந்து ஒரு நெருப்பு கிளம்பி , ( ஷாம் நாட்டின் ) புஸ்ரா ( ஹவ்ரான் ) எனும் ஊரிலுள்ள ஒட்டகங்களின் பிடரிகளைப் பிரகாசிக்கச் செய்யாத வரை மறுமை நாள் வராது .
عن عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَتَخْرُجُ نَارٌ مِنْ حَضْرَمَوْتَ أَوْ مِنْ نَحْوِ بَحْرِ حَضْرَمَوْتَ قَبْلَ يَوْمِ الْقِيَامَةِ تَحْشُرُ النَّاسَ قَالُوا يَا رَسُولَ اللَّهِ فَمَا تَأْمُرُنَا قَالَ عَلَيْكُمْ بِالشَّامِ . 127
அப்துல்லாஹ் பின் உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ,” யுகமுடிவு நாளுக்கு முன்னால் ` ஹள்ரமவ்த்திலிருந்து , அல்லது ` ஹள்ரமவ்த் கடலின் திசையிலிருந்து ஒரு ( பெரும் ) நெருப்பு கிளம்பி மக்களை ஒன்றுதிரட்டும் ” என்று கூறினார்கள் . மக்கள் , “ அல்லாஹ்வின் தூதரே ! ( அப்போது என்ன செய்ய வேண்டுமென ) எங்களுக்குத் தாங்கள் உத்தரவிடுகின்றீர்கள் ? என்று கேட்டார்கள் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ ஷாம் ( சிரியா ) நாட்டைப் பற்றிக்கொள்ளுங்கள் ” என்று கூறினார்கள் .