பாடம்: 7. மண்ணறைவாசியாக இருக்க ஆவல்கொள்ளுதல்
( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 114
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஒரு மனிதர் மற்றொரு மனிதரின் மண்ணறையை ( கப்ரை ) க் கடந்து செல்லும்போது , ” அந்தோ ! நான் இவரது இடத்தில் ( மண்ணறைக்குள் ) இருக்கக் கூடாதா ?`` என்று ( ஏக்கத்துடன் ) சொல்லும் காலம் வராத வரை மறுமை நாள் வராது .
( ق) عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يَمُرَّ الرَّجُلُ بِقَبْرِ الرَّجُلِ فَيَقُولُ: يَا لَيْتَنِي مَكَانَهُ! . 115
இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : மக்களிடம் ஒரு காலம் வரும் . அக்காலத்தில் ஒரு மனிதர் மண்ணறையிடம் வந்து , அதில் படுத்துக்கொண்டு , இன்னாருடைய இடத்தில் நான் இருந்திருக்கக் கூடாதா ? என்று அங்கலாய்ப்பார் . அ( வ்வாறு சொல்வ ) து அல்லாஹ்வைச் சந்திக்க வேண்டுமென்ற பிரியம் காரணமாக இல்லை ; மாறாக அக்காலத்தில் அவர் காணும் கடுமையான சோதனைக்காகவே ( அவ்வாறு சொல்வார் ).