பாடம்: 30. ஒப்பந்தம் செய்தல்
عَنْ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو ، قَالَ : جَاءَتْ أُمَيْمَةُ بِنْتُ رُقَيْقَةَ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تُبَايِعُهُ عَلَى الْإِسْلَامِ، فَقَالَ : " أُبَايِعُكِ عَلَى أَنْ لَا تُشْرِكِي بِاللَّهِ شَيْئًا، وَلَا تَسْرِقِي، وَلَا تَزْنِي، وَلَا تَقْتُلِي وَلَدَكِ، وَلَا تَأْتِي بِبُهْتَانٍ تَفْتَرِينَهُ بَيْنَ يَدَيْكِ وَرِجْلَيْكِ، وَلَا تَنُوحِي، وَلَا تَبَرَّجِي تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى ". 81
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வது குறித்து ஒப்பந்தம் செய்துகொள்ள உமைமா பின்த் ருகைகா ரளியல்லாஹு அன்ஹா அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . அப்போது நபியவர்கள் , நீ அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கக் கூடாது என்றும் திருடக் கூடாது என்றும் விபச்சாரம் செய்யக்கூடாது என்றும் உன் குழந்தையைக் கொலை செய்யக்கூடாது என்றும் உங்களுடைய கை கால்கள் அறிய ( அதாவது : பொய்யெனத் தெரிந்தே ) கற்பனையாக அவதூறு கூறக்கூடாது என்றும் ஒப்பாரி வைத்து அழக்கூடாது என்றும் அறியாமைக்கால மக்கள் சுற்றித் திரிந்ததைப்போல் ( வீதிகளில் ) சுற்றித் திரியக் கூடாது என்றும் நான் உன்னிடம் ஒப்பந்தம் செய்கிறேன் ” என்று கூறினார்கள் .
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ لَا يُصَافِحُ النِّسَاءَ فِي الْبَيْعَةِ. 82
அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பெண்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்தபோது முஸாஃபஹா ( கைகொடுத்துச் ) செய்ததில்லை .
عَنْ َ عِمْرَانَ بْنَ حُصَيْنٍ ، قَالَ : مَا مَسِسْتُ فَرْجِي بِيَمِينِي مُنْذُ بَايَعْتُ بِهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. 83
இம்ரான் பின் ஹுஸைன் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் ஒப்பந்தம் ( பைஅத் ) செய்ததிலிருந்து எனது வலக்கையால் என் அந்தரங்க உறுப்பைத் தொட்டதில்லை .