28- باب : المنافقون وصفاتهم
பாடம் 28

பாடம்: 28. நயவஞ்சகர்களும் அவர்களின் தன்மைகளும்

ஹதீஸ் 76 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ آيَةُ الْمُنَافِقِ ثَلاَثٌ إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ ‏"‏‏.‏ 76

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் அடையாளங்கள் மூன்றாகும் . அவன் பேசும்போது பொய் பேசுவான் ; வாக்களித்தால் அதற்கு மாறு செய்வான் ; அவனிடம் நம்பி ( ஏதேனுமொன்றை ) ஒப்படைத்தால் ( அதில் ) மோசடி செய்வான் .

Reference: ( புகாரீ : 33, முஸ்லிம் : 59) முஸ்லிம் நூலில் கூடுதலாக இடம்பெற்றுள்ளதாவது : “... அவன் நோன்பு நோற்றாலும் , தொழுதாலும் , தன்னை ஒரு முஸ்லிம் என்று கூறிக்கொண்டாலும் சரியே ``
ஹதீஸ் 77 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا، وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنَ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ، وَإِذَا خَاصَمَ فَجَرَ ‏"‏‏.‏ 77

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நான்கு குணங்கள் எவனிடம் குடிகொண்டுள்ளனவோ அவன் அப்பட்டமான நயவஞ்சகன் ( முனாஃபிக் ) ஆவான் . எவனிடம் அவற்றில் ஒரு குணம் குடிகொண்டுள்ளதோ அவன் அதை விட்டொழிக்கும் வரை நயவஞ்சகத்தின் ஒரு குணம் அவனிடம் குடியிருக்கும் . ( ஏதேனுமொன்றை ) நம்பி ஒப்படைக்கப்பட்டால் ( அதில் ) மோசடி செய்வதும் , பேசும்போது பொய் சொல்வதும் , ஒப்பந்தம் செய்து கொண்டால் நம்பிக்கை மோசடி செய்வதும் , வழக்காடினால் அவமதிப்பதும் தான் அவை ( நான்கும் ).

Reference: ( புகாரீ : 34. முஸ்லிம் : 58)
ஹதீஸ் 78 அத்தியாயம் 1 பாடம் 28

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الْمُؤْمِنِ كَمَثَلِ خَامَةِ الزَّرْعِ، يَفِيءُ وَرَقُهُ مِنْ حَيْثُ أَتَتْهَا الرِّيحُ تُكَفِّئُهَا، فَإِذَا سَكَنَتِ اعْتَدَلَتْ، وَكَذَلِكَ الْمُؤْمِنُ يُكَفَّأُ بِالْبَلاَءِ، وَمَثَلُ الْكَافِرِ كَمَثَلِ الأَرْزَةِ صَمَّاءَ مُعْتَدِلَةً حَتَّى يَقْصِمَهَا اللَّهُ إِذَا شَاءَ ‏"‏‏.‏ 78

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும் . காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும் . காற்று ( அடிப்பது ) நின்றுவிட்டால் நேராக நிற்கும் . இவ்வாறுதான் இறைநம்பிக்கையாளரும் சோதனைகளின்போது அலைக்கழிக்கப்படுகின்றார் . ( எனினும் , அவர் பொறுமை காப்பார் .) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும் . தான் நாடும்போது அதை அல்லாஹ் ( ஒரேயடியாக ) உடைத்து ( சாய்த்து ) விடுகின்றான் .

Reference: ( புகாரீ : 7466, முஸ்லிம் : 2809) முஸ்லிம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளதாவது : ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது , ( இளம் ) பயிர் போன்றதாகும் . காற்று அதைச் சாய்த்துக்கொண்டேயிருக்கும் . ( அவ்வாறே ) இறைநம்பிக்ளைகயாளருக்குச் சோதனைகள் ஏற்பட்டுக்கொண்டேயிருக்கும் . நயவஞ்சகனின் நிலை , ( விறைப்பாக நிற்கும் ) தேவதாரு மரத்தைப் போன்றதாகும் . ( பலமாக வீசும் ) காற்று அதை வேரோடு சாய்த்துவிடுகிறது . ( முஸ்லிம் : 5410)
ஹதீஸ் 79 அத்தியாயம் 1 பாடம் 28

(م) عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ مَثَلُ الْمُنَافِقِ كَمَثَلِ الشَّاةِ الْعَائِرَةِ بَيْنَ الْغَنَمَيْنِ تَعِيرُ إِلَى هَذِهِ مَرَّةً وَإِلَى هَذِهِ مَرَّةً ‏"‏ ‏.‏ 79

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும் . ஒரு முறை இதனிடம் செல்கிறது ; மறுமுறை அதனிடம் செல்கிறது .

Reference: ( முஸ்லிம் : 2784)