24- باب : الدين النصيحة
பாடம் 24

பாடம்: 24. மார்க்கம் (தீன்) என்பது நலம் நாடுவதே

ஹதீஸ் 67 அத்தியாயம் 1 பாடம் 24

(ق) عَنْ جَرِيرِ بْنِ عَبْدِ اللَّهِ، قَالَ بَايَعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَلَى إِقَامِ الصَّلاَةِ، وَإِيتَاءِ الزَّكَاةِ، وَالنُّصْحِ لِكُلِّ مُسْلِمٍ‏.‏ 67

ஷரீர் பின் அப்தில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நான் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தொழுகையை நிலை நாட்டுவதாகவும் , ஸகாத் வழங்குவதாகவும் , ஒவ்வொரு முஸ்லிமுக்கும் நலம் நாடுவதாகவும் உறுதிமொழி ( பைஅத் ) அளித்தேன் .

Reference: ( புகாரீ : 57, முஸ்லிம் : 56)
ஹதீஸ் 68 அத்தியாயம் 1 பாடம் 24

(م) عَنْ تَمِيمٍ الدَّارِيِّ أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ ‏"‏ الدِّينُ النَّصِيحَةُ ‏"‏ قُلْنَا لِمَنْ قَالَ ‏"‏ لِلَّهِ وَلِكِتَابِهِ وَلِرَسُولِهِ وَلأَئِمَّةِ الْمُسْلِمِينَ وَعَامَّتِهِمْ ‏"‏ ‏.‏ 68

தமீமுத் தாரீ ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ மார்க்கம் ( தீன் ) என்பதே " நலம் நாடுவது`தான் `` என்று கூறினார்கள் . நாங்கள் , “ யாருக்கு ( நலம் நாடுவது )?`` என்று கேட்டோம் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அல்லாஹ்வுக்கும் , அவனுடைய வேதத்துக்கும் , அவனுடைய தூதருக்கும் , முஸ்லிம்களின் தலைவர்களுக்கும் , அவர்களில் பொதுமக்களுக்கும் `` என்று பதிலளித்தார்கள் .

Reference: ( முஸ்லிம் : 55 / 95)