22- باب : الاقتصار على الفروض
பாடம் 22

பாடம்: 22. கடமையானவற்றை மட்டும் செய்தல்

ஹதீஸ் 61 அத்தியாயம் 1 பாடம் 22

(ق)عن طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ، يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم مِنْ أَهْلِ نَجْدٍ، ثَائِرُ الرَّأْسِ، يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ، وَلاَ يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا، فَإِذَا هُوَ يَسْأَلُ عَنِ الإِسْلاَمِ فَقَالَ رَسُولُ اللَّهِ ـ صلى الله عليه وسلم ‏"‏ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ ‏"‏‏.‏ فَقَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ وَصِيَامُ رَمَضَانَ ‏"‏‏.‏ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهُ قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم الزَّكَاةَ‏.‏ قَالَ هَلْ عَلَىَّ غَيْرُهَا قَالَ ‏"‏ لاَ، إِلاَّ أَنْ تَطَوَّعَ ‏"‏‏.‏ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لاَ أَزِيدُ عَلَى هَذَا وَلاَ أَنْقُصُ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏"‏ أَفْلَحَ إِنْ صَدَقَ ‏"‏‏.‏ 61

தல்ஹா பின் உபைதில்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : நஜ்த்வாசிகளுள் ஒருவர் தலைவிரி கோலத்துடன் ( பயணம் முடிந்த கையோடு ) அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்தார் . ( தூரத்திலிருந்து ) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது . ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை . அவர் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாத்தைப் பற்றிக் கேட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் ( தாம் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம் )`` என்றார்கள் . அவர் “ இதைத் தவிர வேறு ( தொழுகை ) ஏதாவது என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) தொழுகையைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பதிலளித்தார்கள் . மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . உடனே அவர் , “ இதைத் தவிர வேறு ஏதேனும் ( நோன்பு ) என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` எனக் கேட்க , “ இல்லை , நீ தானாக விரும்பி நோற்கும் ( கூடுதலான ) நோன்பைத் தவிர `` என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் . அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள் . அவர் , “ இதைத் தவிர வேறு ( ஸகாத் ) ஏதும் என்மீது ( கடமையாக்கப்பட்டு ) உள்ளதா ?`` என்று கேட்டார் . அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ இல்லை , நீ தானாக விரும்பிச் செய்யும் ( கூடுதலான ) வேறு தர்மத்தைத் தவிர `` என்றார்கள் . அந்த மனிதர் , “ அல்லாஹ்வின் மீதாணையாக ! நான் இவற்றைவிடக் கூட்டவும் மாட்டேன் ; குறைக்கவும் மாட்டேன் ” என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார் . அப்போது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ அவர் உண்மையாகவே ( இதைக் ) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்துவிட்டார் `` என்று சொன்னார்கள் .

Reference: ( புகாரீ : 46, முஸ்லிம் : 22) புகாரீ , முஸ்லிம் ஆகிய இரண்டு நூல்களிலும் மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது : “ அவர் உண்மையாகவே ( இதைக் ) கூறியிருந்தால் அவர் சொர்க்கத்தில் நுழைவார் .`` ( புகாரீ : 6956)