21- باب : من عمل خيرا قبل إسلامه
பாடம்
21
பாடம்: 21. இஸ்லாத்தை ஏற்பதற்குமுன் ஒருவர் செய்த நன்மைகள்
ஹதீஸ் 60
அத்தியாயம் 1
பாடம் 21
(ق) عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ ـ رضى الله عنه ـ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَأَيْتَ أَشْيَاءَ كُنْتُ أَتَحَنَّثُ بِهَا فِي الْجَاهِلِيَّةِ مِنْ صَدَقَةٍ أَوْ عَتَاقَةٍ وَصِلَةِ رَحِمٍ فَهَلْ فِيهَا مِنْ أَجْرٍ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم " أَسْلَمْتَ عَلَى مَا سَلَفَ مِنْ خَيْرٍ ". 60
ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : “ அல்லாஹ்வின் தூதரே ! நான் அறியாமைக் காலத்தில் , இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் முன்பு ‘ தர்மம் செய்தல் , அடிமைகளை விடுதலை செய்தல் , உறவினரைச் சேர் ( ந்து வாழ் ) தல் ’ போன்ற நல்லறங்களைச் செய்துள்ளேன் . அவற்றிற்கு ( மறுமையில் எனக்கு ) நன்மை ஏதும் உண்டா ?`` என்று நான் கேட்டேன் . அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் " நீர் முன்னர் செய்த நற்செயல் ( களுக்குரிய நற்பலன் ) களுடனேயே இஸ்லாத்தைத் தழுவியுள்ளீர் `` என்று பதிலளித்தார்கள் .
Reference: ( புகாரீ : 1436, முஸ்லிம் : 123) புகாரீ , முஸ்லிம் ஆகிய நூல்களில் மற்றோர் அறிவிப்பில் உர்வா பின் ஸுபைர் ரஹிமஹுல்லாஹ் கூறியதாக உள்ளதாவது : ஹகீம் பின் ஹிஸாம் ரளியல்லாஹு அன்ஹு அறியாமைக் காலத்தில் நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள் ; நூறு ஒட்டகங்களையும் அறுத்து தர்மம் செய்தார்கள் . இவ்வாறே , அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியபோது ( ஹஜ் செய்த நேரத்தில் ) நூறு அடிமைகளை விடுதலை செய்தார்கள் . நூறு ஒட்டகங்களை அறுத்து தர்மம் செய்தார்கள் . பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ,... என்று அந்த ஹதீஸ் தொடர்கிறது .
( புகாரீ : 2538)