20- باب : كتابة الحسنات والسيئات
பாடம் 20

பாடம்: 20. நன்மைகளையும் தீமைகளையும் எழுதுதல்

ஹதீஸ் 55 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنِ ابْنِ عَبَّاسٍ ـ رضى الله عنهما عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم فِيمَا يَرْوِي عَنْ رَبِّهِ عَزَّ وَجَلَّ قَالَ قَالَ ‏ "‏ إِنَّ اللَّهَ كَتَبَ الْحَسَنَاتِ وَالسَّيِّئَاتِ، ثُمَّ بَيَّنَ ذَلِكَ فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ عَشْرَ حَسَنَاتٍ إِلَى سَبْعِمِائَةِ ضِعْفٍ إِلَى أَضْعَافٍ كَثِيرَةٍ، وَمَنْ هَمَّ بِسَيِّئَةٍ فَلَمْ يَعْمَلْهَا كَتَبَهَا اللَّهُ لَهُ عِنْدَهُ حَسَنَةً كَامِلَةً، فَإِنْ هُوَ هَمَّ بِهَا فَعَمِلَهَا كَتَبَهَا اللَّهُ لَهُ سَيِّئَةً وَاحِدَةً ‏"‏‏.‏ 55

இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ( ஒரு முறை ) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் இறைவனைப் பற்றி அறிவிக்கையில் ( பின்வருமாறு ) கூறினார்கள் : அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் ( அவை இன்னின்னவை என நிர்ணயித்து ) எழுதிவிட்டான் . பிறகு அதனை விவரித்தான் . அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என ( மனத்தில் ) எண்ணி விட்டாலே-அதைச் செயல்படுத்தாவிட்டாலும் - அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும்விட்டால் , அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக , எழுநூறு மடங்காக , இன்னும் அதிகமாக அல்லாஹ் பதிவு செய்கிறான் . ஆனால் , ஒருவர் ஒரு தீமை செய்ய எண்ணி , ( அல்லாஹ்வுக்கு அஞ்சி ) அதைச் செய்யாமல் விட்டுவிட்டால் , அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகிறான் . எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்துவிட்டாலோ , அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகிறான் .

Reference: ( புகாரீ : 6491, முஸ்லிம் : 131)
ஹதீஸ் 56 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ "‏ يَقُولُ اللَّهُ إِذَا أَرَادَ عَبْدِي أَنْ يَعْمَلَ سَيِّئَةً فَلاَ تَكْتُبُوهَا عَلَيْهِ حَتَّى يَعْمَلَهَا، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا بِمِثْلِهَا وَإِنْ تَرَكَهَا مِنْ أَجْلِي فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً وَإِذَا أَرَادَ أَنْ يَعْمَلَ حَسَنَةً فَلَمْ يَعْمَلْهَا فَاكْتُبُوهَا لَهُ حَسَنَةً، فَإِنْ عَمِلَهَا فَاكْتُبُوهَا لَهُ بِعَشْرِ أَمْثَالِهَا إِلَى سَبْعِ مِائَةٍ ‏"‏‏.‏ 56

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் ( வானவர்களிடம் ) கூறுகின்றான் : என் அடியான் ஒரு தீமையைச் செய்ய நாடினால் அதை அவன் செய்யாத வரை அவனுக்கெதிராக அதைப் பதிவு செய்யாதீர்கள் . அதை அவன் செய்துவிட்டால் செய்த குற்றத்தை மட்டுமே பதிவு செய்யுங்கள் . அதை அவன் எனக்காக விட்டுவிட்டால் அதை அவனுக்கு ஒரு நன்மையாகப் பதிவு செய்யுங்கள் . அவன் ஒரு நன்மை புரிய எண்ணிவிட்டாலே அதைச் செய்யாவிட்டாலும்கூட அவனுக்கு ஒரு நன்மையை எழுதுங்கள் . அதை அவன் செய்துவிட்டாலோ அதை அவனுக்குப் பத்து நன்மைகளிலிருந்து எழுநூறு நன்மைகளாக எழுதுங்கள் .

Reference: ( புகாரீ : 7501, முஸ்லிம் : 129)
ஹதீஸ் 57 அத்தியாயம் 1 பாடம் 20

عَنْ خُرَيْمِ بْنِ فَاتِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: "الْأَعْمَالُ سِتَّةٌ، وَالنَّاسُ أَرْبَعَةٌ، فَمُوجِبَتَانِ، وَمِثْلٌ بِمِثْلٍ، وَحَسَنَةٌ بِعَشْرِ أَمْثَالِهَا، وَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، فَأَمَّا الْمُوجِبَتَانِ: فَمَنْ مَاتَ لَا يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ الْجَنَّةَ، وَمَنْ مَاتَ يُشْرِكُ بِاللهِ شَيْئًا دَخَلَ النَّارَ، وَأَمَّا مِثْلٌ بِمِثْلٍ: فَمَنْ هَمَّ بِحَسَنَةٍ حَتَّى يَشْعُرَهَا قَلْبُهُ، وَيَعْلَمَهَا اللهُ مِنْهُ كُتِبَتْ لَهُ حَسَنَةً، وَمَنْ عَمِلَ سَيِّئَةً، كُتِبَتْ عَلَيْهِ سَيِّئَةً، وَمَنْ عَمِلَ حَسَنَةً فَبِعَشْرِ أَمْثَالِهَا، وَمَنْ أَنْفَقَ نَفَقَةً فِي سَبِيلِ اللهِ فَحَسَنَةٌ بِسَبْعِ مِائَةٍ، وَأَمَّا النَّاسُ، فَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مَقْتُورٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا مُوَسَّعٌ عَلَيْهِ فِي الْآخِرَةِ، وَمَقْتُورٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمُوَسَّعٌ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ 57

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக குரைம் பின் ஃபாத்திக் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : நல்லறங்கள் ஆறு உள்ளன . மக்கள் நான்கு வகையினர் . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்றவை இரண்டு உள்ளன . பகரத்திற்குப் பகரமும் உண்டு . மேலும் ஒரு நன்மைக்குப் பத்து நன்மைகளும் , ஒரு நன்மைக்கு எழுநூறு ( மடங்கு ) நன்மைகளும் உண்டு . ( சொர்க்கத்தையும் நரகத்தையும் ) கட்டாயமாகத் தேடித் தருகின்ற இரண்டு என்பது , யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்காமல் இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாகச் ) சொர்க்கம் செல்வார் . யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக இறந்துவிடுகிறாரோ அவர் ( நிச்சயமாக ) நரகம் செல்வார் `` என்பதாகும் . பகரத்திற்குப் பகரம் என்பது , யார் ஒரு நன்மை செய்யவேண்டும் என்றெண்ணி அதை அவருடைய உள்ளம் உணர்ந்து , அல்லாஹ்வும் அதனை அவரிடமிருந்து அறிந்து கொள்கின்றானோ ( அதைச் செயல்படுத்தாவிட்டாலும் ) அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு தீமையைச் செய்கிறாரோ ( அதற்குப் பகரமாக ) அவருக்கு ஒரு தீமை பதிவு செய்யப்பட்டுவிடுகிறது . யார் ஒரு நன்மையைச் செய்கிறாரோ அவருக்கு அது போன்று பத்து ( மடங்கு ) நன்மைகள் வழங்கப்படுகின்றன . யார் ஒரு தடவை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்கிறாரோ அவருக்கு ஒரு நன்மை எழுநூறு மடங்காக வழங்கப்படுகிறது . மக்கள் ( நான்கு வகையினர் என்பது ) இவ்வுலகில் அவர் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) மறுமையில் அவர் ஏழையாகவும் இருப்பார் . இவ்வுலகில் ஏழையாகவும் மறுமையில் விசாலமான வாய்ப்புகள் வழங்கப்பட்டவராகவும் ( செல்வராகவும் ) இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் ஏழையாகவே இருப்பார் . இம்மையிலும் மறுமையிலும் செல்வராகவே இருப்பார் .

Reference: ( முஸ்னது அஹ்மத் : 18900). இது ` ஹஸன் ` தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும் .
ஹதீஸ் 58 அத்தியாயம் 1 பாடம் 20

(م) عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ إِنَّ اللَّهَ لاَ يَظْلِمُ مُؤْمِنًا حَسَنَةً يُعْطَى بِهَا فِي الدُّنْيَا وَيُجْزَى بِهَا فِي الآخِرَةِ وَأَمَّا الْكَافِرُ فَيُطْعَمُ بِحَسَنَاتِ مَا عَمِلَ بِهَا لِلَّهِ فِي الدُّنْيَا حَتَّى إِذَا أَفْضَى إِلَى الآخِرَةِ لَمْ تَكُنْ لَهُ حَسَنَةٌ يُجْزَى بِهَا ‏"‏ ‏.‏ 58

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியதாக அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிப்பதாவது : அல்லாஹ் எந்த இறைநம்பிக்கையாளருக்கும் ( அவர் செய்த நற்செயலுக்கான ) நன்மையில் அநீதி இழைப்பதில்லை . அதற்குரிய நன்மை இம்மையிலும் அவருக்கு வழங்கப்படும் . அதற்குரிய நன்மை மறுமையிலும் அவருக்கு வழங்கப்படும் . ( ஏக ) இறைமறுப்பாளர் இறைவனுக்காகச் செய்த நற்செயல்களின் பலனால் இம்மையில் ( மட்டும் ) அவருக்கு உணவளிக்கப்படும் . அவர் மறுமையை அடையும்போது , அவருக்கு வழங்கப்படுவதற்கு நன்மையேதும் இராது .

Reference: ( முஸ்லிம் : 2808 / 5408)
ஹதீஸ் 59 அத்தியாயம் 1 பாடம் 20

(ق) عَنِ ابْنِ مَسْعُودٍ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ ‏ "‏ مَنْ أَحْسَنَ فِي الإِسْلاَمِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ، وَمَنْ أَسَاءَ فِي الإِسْلاَمِ أُخِذَ بِالأَوَّلِ وَالآخِرِ ‏"‏‏.‏ 59

இப்னு மஸ்ஊத் ரளியல்லாஹு அன்ஹு கூறியதாவது : ஒரு மனிதர் , “ அல்லாஹ்வின் தூதரே ! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த (த) வற்றிற்காக ( மறுமையில் ) தண்டிக்கப்படுவோமா ?`` என்று கேட்டார் . நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் , “ யார் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படமாட்டார் . " யார் இஸ்லாத்தில் இணைந்த பிறகு ( மீண்டும் இறைமறுப்பு எனும் ) தீமையைப் புரிகிறாரோ அவர் ( அறியாமைக் காலத்தில் செய்த ) முந்தைய தவறுகளுக்காகவும் , ( இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப் ) பிந்தைய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார் `` என்று கூறினார்கள் .

Reference: ( புகாரீ : 6921, முஸ்லிம் : 120)